2011-01-15

மாடாய் உழைப்போருக்கு உரிய நாள் ஜனவரி 16

எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு


இது திருவள்ளுவர் தாத்தா என்றோ  சொன்னது. இதை அடிக்கடி எங்கட வாத்தியார் கூட சொல்லி இருக்கின்றார்.  அதாவது  கொஞ்சம் கீழ போய் விளக்கமாய் பார்த்தால்

"எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை."

அதுதான் நானும் சொல்லுறன்.. மாடாய் உழைக்குற உங்க எல்லாருக்கும் வருஷா வருஷம் நாங்கள் ஒரு நாள் வைச்சு இருக்குறம் அதுதான் இந்த பட்டி பொங்கல். நாளைக்கு வருது.

அடிக்கடி அடுத்தவன் வீட்டில கதைக்கிறதை செவி மடுத்தும் இருக்கின்றேன் . அவனொருத்தன்   மாடாய் வெளிநாட்டில உழைச்சு அனுப்ப இவங்க இங்க சட்டலைட் சானலும் சீரியலுமாய் இருக்குதுகள். அவன்ட காசை எல்லாம் வீணாக்கி தள்ளுதுகள் என்று எல்லாம் கதைப்பதை நீங்கள் கூட கேட்டும் இருப்பீர்கள். அந்த மாட்டு நண்பர்கள், எல்லாருக்கும் நாளைக்கு புனித விழா.

உங்க எல்லாரையும் விடியவே கிணத்தடியில கட்டி வைச்சு.. தண்ணியால (மோட்டாரில இருந்து வாற  தண்ணியை நேர பிடிக்கணும், அப்பதான் கொஞ்சமாவது வெளிக்கும் )கழுவி (போச்சு போட்டு தேய்க்கணும்- ரொம்ப முக்கியமான வேலை..  ) பிறகு சாம்பிராணி எல்லாம் கட்டாயம் காட்டனும். இல்லாட்டி புதைந்து கிடந்த "புதையலை" பப்ளிக் இற்கு எடுத்து விட்ட மாதிரி... மணக்காமல் இருக்கத்தான்.
பிறகென்ன வழமை போல பொங்கி படைச்சு விட, மூச்சு திணறி மயங்கி விழும் வரைக்கும் திண்டு போட்டு படுக்க வேண்டியதுதான். மீண்டும் அடுத்த  நாளைக்கு மாடாய் உழைக்க.. களத்துக்கு திரும்ப வேண்டியதுதான்.. :)
 
இப்படி இந்த மாடு மாடு என்று சொல்லுறவையை நாங்கள் கட்டாயம் கவனித்தே ஆகணும்.  உண்மையில் மிருகங்கள் மீது அன்பு வைத்திருத்தல் என்பது கட்டாய கடமை .

இந்து சமயத்தை எடுத்து பார்த்தால்,  வாய் பேசாத இந்த சிற்றினங்களை நமக்குச் சமமாக மட்டுமின்றி, மேலானவையாகவும் நாம் கருத வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான தெய்வங்களின் வாகனங்கள் மிருகங்களாகவே, பறவைகளாகவே இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக , எனக்கு தெரிந்த அறிவதுடன்.. 

 - விநாயகன் யானைத்தலையன்
- அவன் ஆட்கொண்டு அமர்ந்திருப்பது மூஞ்சூறு(எலி என்றும் சொல்லுவர் )
- தம்பி முருகன் மகிழ்ந்து வருவது மயிலில்
- அவன் தந்தையார்   சிவன் அணிந்திருப்பது நாகம், வருவது பசுவில்
- காளி வருவது சிங்கத்தில்
- மாமன் திருமால் படுப்பது பாம்பணையில்
- தர்மதேவன் வருவது எருமையின் மீது
- நம்ம நண்பன்---  சனீஸ்வரனை சுமப்பது காகம்

இப்படி சொல்லிக்கொண்டே  போகலாம். இவற்றில் இருந்தாவது தெரிந்து கொள்ளலாம் நாங்கள் வழிபடும் கடவுளுக்கு மேலாக இம்மிருகங்கள் மீது அன்பு காட்டல் வேண்டும். அத்துடன் நன்றியாகவும் இருக்கணும்.


பசுமாடு செய்யும் உதவிகளை பாருங்கள், உதாரணமாக பசுப்பாலை எடுகின்றோம். தயிர்,  நெய் தயாரிக்கின்றோம்.  இதை விட சாணம் கொண்டு வீபுதி தயாரிக்கின்றோம். மேலதிகமாக, மாடுகளை பயன்படுத்தி நெல் வயலை உழுகின்றோம். நெல் அறுவடை செய்ய கூட மாடுகள் தான் உதவி செய்கின்றன. இவற்றுக்கு நன்றி தெரிவிக்க நாங்கள் என்னதான் செய்கின்றோம்? நெற்பயிர் அறுவடைக்குப் பின் நாங்கள் வைக்கோலை மாட்டு பிள்ளைகளுக்கு உணவாக  போடுகின்றோம். எடுத்த அரிசியை உணவாக்கும் போது கழிவான கஞ்சியை உணவாக குடுக்கின்றோம். இப்படி நாங்கள் இந்த ஜீவன்களுக்கு எதுவுமே உருப்படியான ஈடான மாற்றீடுகளை செய்வதில்லை. அத்துடன்  வேறு சிலர் பசுவின் பெருமையை மஹிமையை அறியாமல் (கறவையற்ற)பசுக்களை துன்புறுத்துகிறார்கள், வதைக்கவும் செய்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம், இது மிகவும் வருந்தத்தக்கது:(.

இவர்களுக்கு நன்றி செய்வதுக்கு ஏற்ற நாளாய் உழவர்  திருநாளாம் பொங்கலுக்கு அடுத்த நாளில், அந்த  உழவர்கள் சந்தோஷமாய் உழவர் திருநாளை கொண்டாட காரணமாய் இருந்த இந்த பசுக்கள், மாட்டு பிள்ளைகள் எல்லாரையும், கௌரவ படுத்தி கொண்டாடும் நாளாக உள்ளது மகிழ்ச்சிக்கு உரிய விடயமே. நாங்களும் எங்கள் வீட்டில் இருக்கின்ற இந்த ஜீவன்களை நாளைய தினத்தில் கௌரவபடுத்தி கொண்டாடுவோமாக.

மாடாய் உழைக்கும்  எல்லோருக்கும் மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் !!!

பிற்குறிப்பு : நாளைக்கு தமிழ் திரையுலகத்தில் மாடாய் உழைக்கும் நமீதா வின் வணக்கம் டமிழகம் காலை எட்டு மணிக்கு ஏதோ ஒரு டிவியில  இடம்பெறுமென்பதை நமீதா ரசிகர்களுக்கு இத்தால் அறிவித்து கொள்கின்றேன்.























 

2011-01-01

பகிடிவதையால் மூடப்படும் பல்கலைக்கழகங்கள்

நள்ளிரவும் கடந்து விட்டது.. தொலைபேசிகள் ஒரு புறம் அலறுகின்றன. புது வருட வாழ்த்துக்கள்  சொல்ல எவனாவது எடுப்பானா??.. பல்கலைக்கழகம் பூட்டிய செய்தியால் முதலாம் வருட மாணவர்களின் பெற்றோர்கள், அவர்களிடம் வழங்கப்பட்ட தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் வரிசையில் எனது கைத்தொலைபேசி எண்ணும் இருந்ததால், தொடர்ந்து அழைத்த வண்ணமே இருந்தார்கள் .. ஒன்றுமே செய்ய முடியவில்லை.. கடந்த இரண்டு நாட்களாக  பல்கலைக்கழகம் அல்லுலோகப்பட்டு கொண்டு இருந்தது.  இறுதியாக உயர் கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலும் வந்து சேர்ந்தது. உடனடியாக பல்கலைக்கழகத்தை மூடி விட்டாச்சு. நாளை காலை பத்து மணிக்கு பிற்பாடு யாரும் பல்கலை வளவில் நிக்க கூடாது. நின்றால்  சட்டத்தை மதிக்க வில்லை என்று சொல்லி தூக்கி கொண்டு போடுவாங்கள்.

பகிடிவதை என்பதை நிறுத்த எத்தனையோ சட்டங்கள் இருந்தும், இன்னும் இதனை நிறுத்த முயலாமல் போய் விடுகின்றதை நினைக்கும் போது , ஒரு பல்கலையில் வேலை செய்யும் சிரேஷ்ட  விரிவுரையாளர் என்ற வகையில் மிகவும் வருத்தமே.
உயர்தரத்தில் போட்டிக்கு படித்து பல்கலை வருவது  ஒரு சிறிய கூட்டம்  மட்டும் தான். அவர்கள் அரசாங்கம் வழங்கும் வசதிகளை கொண்டு படித்து கொண்டு போக வேண்டியது தானே.  புது முகங்களுடன் பழக பல்வேறு சந்தர்ப்பங்கள் உள்ளன. ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது, அல்லது ஒரு ஒன்று கூடல் நடக்கும் போது பழகலாம் தானே.  "நாங்கள் பழகுவதில் எந்த தடையும் விதிக்க்கவுமில்லை, விதிக்க போவதும்மில்லை". ஆனால் அவர்கள் பழகுவதாக சொல்லிக்கொண்டு என்னத்தை செய்கின்றார்கள் என்பதை நினைத்தால் தான் வேதனை.

குறிப்பாக நானும் ஒரு  மாணவ போதகராக நான் வேலை  செய்யும் பல்கலைக்கழகத்தில் கடமை செய்கின்றேன். இரவு பகல் பாராது, உணவு கூட உண்ணமால்  நாள் முழுக்க இந்த பகிடி வதையை நிறுத்த பாடு பட்டு கொண்டு இருக்கின்றேன்.  ஆனால் இதையும் தாண்டி இவர்கள் இந்த பகிடி வதையை செய்யத்தான் காரணம் என்ன.  ஏற்கனவே பல மாணவர்களை இழந்து இருக்கின்றோம்.  இதை இவர்கள் அறியாதவர்கள் அல்ல.

நேற்று காலை, போலீஸ் ஸ்டேஷன் இல் வைத்து, எங்களை (நானும் ஒருத்தன் ) நாயிலும் கேவலமாய் பேசி விட்டு அந்த சிரேஷ்ட மாணவ தலைவன் சென்றதை நின்ற பொலிசாரும், சக சிரேஷ்ட விரிவுரையாளர்களும் பார்த்ததை என்ன சொல்ல. அதுக்கு பதில் வெகு விரைவில் வழங்கவுள்ளோம்.  உயர் கல்வி அமைச்சர் நேற்று மாலை தொடர்பு கொண்டு பேசும் போது, நாட்டின் ஞானாதிபதி  கொண்டு எல்லாரும் இந்த விடயம் தொடர்பான பல்கலையின் முடிவை கேட்பதாக சொன்னார். இன்று அதிகாலை அவர் மீண்டும் தொடர்பு கொண்டு, உடனடியாக பல்கலையை மூடி விடுமாறு சொன்னார். சொன்ன படி  மூடி விட்டோம்.  அத்துடன், மாணவர்கள் பலருக்கு இரண்டு ஆண்டு தடையை வழங்க  இருப்பதும் தற்போது முடிவாகி உள்ளது.

என்னுடைய மாணவர்கள், சக மாணவர்களை பகிடிவதை செய்த குற்றத்துக்காக கைது செய்த காரணத்தால் , பொல்லு தடியுடன் என்னை அடிக்க வாறதை யாரு தான் ஏற்பீங்க??  அதுக்கு உங்கள் பதில் தான் என்ன??  கடந்த திங்கள் அதிகாலை எங்களை சூழ்ந்த சிரேஷ்ட மாணவர்கள், வெடி கொளுத்தி போட்டும், மின்சாரத்தை நிறுத்தியும், தண்ணீர் ஊற்றியும், கதிரை மேசைகளை உடைத்தும், கூக்குரல் இட்டும், கொண்டு இருந்த போது, உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்ற காரணத்தால், மாணவ விடுதியில் நின்ற, உப வேந்தர் உட்பட்ட ஆறு சிரேஷ்ட விரிவுரையாளர்களும், உடனையே போலீசுக்கும், உயர்கல்வி அமைச்சர்  கௌரவ எஸ் பி திசநாயக்கவையும் தொடர்பு கொண்டு விஷயத்தை விளங்கப்படுத்தி, எங்களுக்கு ஏதும் நடந்து விடாதவாறு பார்த்து கொள்ளுமாறு கேட்ட சம்பவத்தை பற்றி என்ன நீங்க நினைக்கின்றீர்கள் ???  நானும் அந்த சம்பவத்தில் நின்ற ஆறில் ஒரு சிரேஷ்ட விரிவுரையாளர். ஒரேடியா தூக்கி இருப்பாங்க. என்னமோ நல்ல காலம் இன்னும் தொடர்கின்றது போல இருக்கு .

இன்னும் முதலாம் வருட மாணவர்களை வெருட்டி, நீங்கள் "சிரேஷ்ட மாணவர்களை கைது செய்தால், குரல் கொடுக்க வேணும் "என்று சொல்லு கிறார்கள். இதை பல கனிஷ்ட மாணவர்கள் எங்களுக்கு அறிவித்தும் உள்ளார்கள்,  அத்துடன்  உயர் கல்வி அமைச்சர்,  நீதியமைச்சு, ஜனாதிபதி
யின் செயலாளர் என்று சொல்லி பலருக்கும் அறிவித்துள்ளார்கள்.  பொலிஸ் பாதுகாப்புடன் மாணவர்களை வெளியேற்றும் நடவடிக்கை இடம் பெறுகின்றது.

 பெரும்பாலும் நாளை காலையுடன் வெளியேற்றி முடிக்கலாம் என்று நம்பி இருகின்றோம்.  விஷேட பொலிஸ் படையணிகள் பல்கலையை சுற்றி பாது காப்பில் ஈடுபடுகின்றன.  (காணொளிகள் நாளை தரப்படும் ).


இந்த சிரேஷ்ட மாணவர்கள் , இன்னும் பல்கலை வந்து பதினொரு மாதங்கள் ஆக வில்லை. இவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் வந்தவர்கள். அதுக்குள்ள இப்படி சட்டங்களை எல்லாம் மீறி பகிடிவதை செய்ய துணிந்து விட்டனர். இதை எப்பிடி கையாள போகின்றோம் என்பது தான் பிரச்சினை.

இப்படி மூடி திறந்து பின்னர் மூடி திறந்து .. வேலை எதுவுமே ஆகப்போவதில்லை. பேசாமல் தண்டனையை கொடுங்கள், மீண்டும் திறவுங்கள், மீறுபவர்களுக்கு தண்டனையை கொடுங்கள், பகிஷ்கரித்தால் மீண்டும் மீறுபவர்களுக்கு தண்டனையை கொடுங்கள், இப்படி  ஒரு வருடம் சென்றாலும் பரவாய் இல்லை. இந்த பகிடிவதையை நிறுத்தியே ஆகணும் என்பதில் - நாட்டின் ஜனாதிபதி, உயர் கல்வி அமைச்சர், நாட்டின் பிரதமர், பல்கலை மானியங்கள் ஆணைக்குழு தலைவர் ஆகியோர் முடிவெடுத்து, பாராளுமன்றில் சமர்ப்பித்து, அங்கும் அது ஏற்று கொள்ள பட்டுமுள்ளது..  இதை எப்பதான் நடைமுறைக்கு கொண்டு வரப்போகிறார்களோ தெரியாது. ஒரு சில பாகங்கள் வந்தாலும், முழுமையாக வரவில்லை. வர வாழ்த்துக்கள்..
Related Posts Plugin for WordPress, Blogger...