2009-11-29

ஞாயிறை பொழுது போக்கிய தொலைபேசி அழைப்புகள்




இதமான சனி இரவு களைத்து போய் நண்பனின் வீட்டில் இருந்து வந்து சேரும் போது அதிகாலை 1 மணி .... வீட்டை சுத்தம் செய்து போட்டு படுப்பம் என்று .. சொல்லி கொண்டு வந்த களைப்புக்கு தேநீர் அருந்த தண்ணியை கொதிக்க வைத்து கொண்டு இருக்கும் போது, கொழும்பில் இருந்து உற்ற நண்பனின் அழைப்பு; காதல் தோல்வி.. அதுதான் மைய்யக்கருத்து..( இதை சொல்லி முடிக்க ஒரு மணித்தியாலம் போட்டுது )பெண் பகுதி எனக்கு தெரிந்த பகுதி.. எனது உதவி .. தேவை.. எப்படியோ பேசி எதாவது செய்,, என்று .. அழுது புலம்பல் .... எனக்கு இருக்கிற களைப்பு எல்லாமே போயிட்டு .. !!! பேசுகிறேன் என்று சொல்லி அந்த பகுதிக்கு தொலைபேசியை அதிகாலையே ( 2 மணி ஐரோப்பிய நேரம்- இலங்கை நேரம் ஞாயிறு காலை 6:30 மணி ) முறுக்கினால் .... இன்றைய ஞாயிறு நாள் எப்புடி .. போயினது என்று தெரியாது அத்தனை தடவை .. கால் எடுத்தாச்சு.. .,. .. பெண்பகுதியினர் ஏமாற்றி விட்டனரா இல்லை ..பெண்ணுக்கு விருப்பம் இல்லையா.. என்று நான் அறிய இன்று மாலை நான்கு மணி..

நானறிந்த அளவில்..
ஒரு தலைக்காதல் , நான் படித்து ( 4 வருடங்கள் ) முடித்து விட்டு வருகிறேன் அதுவரை wait பண்ணுவியா என்று நண்பன் கேட்டதுக்கு அவள் மௌனமாய் இருந்தது, அதுக்கு பிறகு நண்பன் அவளுடன் பழகிய விதங்கள் என்று எல்லாம்.. அவனை அவளும் ஏற்று க் கொண்டு விட்டாள் என்று கடந்த நான்கு வருடமாக அவனது படிப்பை நன்றே செய்து முடித்து விட்டு வந்த போது அது அவ்வாறு இல்லை என்று .. புரிந்ததும்.. அவனது மனமும் உடைந்தது.. வாழ்வும் பாழாய் போனது என்று புலம்பல்.. ;

சரி பெண் பகுதியினரை ... ஒரு மாதிரி சமாளித்து கதைத்தால் .. சாத்திரம் பார்த்து "சரி" என்றால் திருமணம் செய்து வைக்க தயார் என்று .. சொன்னது கொஞ்சம் ஆறுதல் . அது நடக்காது.. என்று எனக்கு நன்றே தெரியும் . அவர்களுக்கும் தான் .செவ்வாய் குற்றம் தான் .. தடை செய்யுது.. என்று பெண் பகுதியினர் சொல்லி விட்டனர்.. அதால பேசாமல் வேறு பெண்ணை பார்க்கவும் என்று அறுத்து உறுத்து சொல்லி தொலைபேசியை வைத்து விட்டனர்.. எனக்கு கடைசியில் கதைக்க ஒரு chance கூட குடுக்கவில்லை.. :(

பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்று சொன்ன பிறகு .. என்னதான் செய்யலாம்.. பேசாம குடித்து கும்மாளம் போடாமல் வீரமாய் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டியது தானே.. என்று ஒரு உறுதியான ஆறுதல்கள் சொன்னதுதான் ...

ஒன்று போனால் இன்னொன்று .. இனியாவது .. காதலிக்கும் போது confirmation letter ஐயும் சேர்த்து வாங்குங்க பசங்களா.. இல்லாட்டிஇப்படித்தான் .. நடக்கும்..:)

சாத்திரம் உண்மையா .. கடவுள் இருக்காரா .. சாத்திரம் பார்த்து செய்த திருமணம் எல்லாம் சரியான திசையில் குடும்ப வாழ்கையை கொண்டு செல்கின்றனவா.. அல்லது காதல் திருமணங்கள் சரியான திசையில் குடும்ப வாழ்கையை கொண்டு செல்கின்றனவா?? இதுக்கெல்லாம் இருந்து யோசித்தால் ஒரு பெரிய சபையே வைக்கலாம்.. வேணாம் விடுங்க .. இந்த தலைப்புகளில் ஒன்றால் ..நானே நன்றே பாதிக்கப்பட்டு இருக்கின்றேன்.. :)

யப்பாடி கடந்த ஒரு நாள் நான் நித்திரை கூட கொள்ளவில்லை,..இந்த ஆரவாரத்துக்க எனது பாட்டு பெட்டியில் ஒரு பாட்டு போயிச்சு.. அதுவும்.. situation song.. :)
கேளுங்க நீங்களும் ,..



கடைசியில் suriya வரும் காட்சி பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்ப வில்லை


ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே



"True love does not come by finding the perfect person, but by learning to see an imperfect person perfectly."

2009-11-24

நான் அவன் இல்லைங்கோ..




அடியேனிடம் வாசகன் ஒருவன் கேட்ட கேள்விக்கு பதில்

நான் அந்த மாதிரி சுவாமிகள் இல்லை.
நல்லவேளை ஒரு அப்பாவியை கள்ளச்சாமியார் ஆக்காத குறை.

வரலாறு :
ஒரு காலத்தில் நான் சுவாமியார் வேடம் போட்டு நடித்ததன் விளைவு தான் இன்றும் என்னுடன் அதே சுவாமியார் பெயர் அடி படுகின்றது. ஒரு நாடகத்தில் ஒரு வேடம் சுவாமியார். அதில் இந்தியாவில் இருக்கும் அட்டகாச சாமியார்கள் மாதிரி நானும் நடிக்கணும். மது, மாது சூதாட்டம் என்று பலவற்றை செய்து காட்ட சொல்லி நாடகத்தை இயக்கிய எனது நண்பன் சொல்லிட்டான். இது எதுவுமே தெரியாத பாலகனாய் இருந்த என்னை நடிக்க சொன்னால் எப்புடி. ஏதோ ஓரிரண்டு சினிமா படத்தை பார்த்து போட்டு நடித்தேன். காவி உடை அணிந்து தாடி எல்லாம் வளர்த்து ஒரு சாக்கு பையுடன் ( பைக்குள் ஒரு அரைப்போத்தல் plain dee, பழைய சிகரெட் பெட்டி, சாம்பிராணி புகை வெளியே வரும் வகையில் ஒரு டப்பாக்குள் தணல் + சாம்பிராணி, ஒரு பாட்டு பெட்டி -" பக்தி பாட்டுகள் " - பாடும் ) வீதி வீதி எல்லாம் அலைந்து தெரியும் சாமியார நாடகத்தில் நான் வந்த பகுதி எல்லாம் சூப்பர் கிட். அதால என்னை கொஞ்சம் decend ஆ சாமியாரை மாத்தி சுவாமியார் என்று அழைக்க தொடங்கியாச்சு. இதை வலுச்சேர்க்க நான் கோவில் குளம் என்று அடிக்கடி மினக்கெடுவதால் இன்னும் பெயரை நிலைக்க செய்தது.

அதுசரி இப்பவும் அப்படி ஒரு ரோல் செய்தால் கட்டாயம் கலக்குவேன். கொஞ்சம் மேலதிகமாக அறிவு வளர்ந்து இருக்கு.


(நன்றி : சஞ்சீவன் )
இருந்தாலும் நான் ரொம்ப நல்லவன். பழகி பாருங்க தெரியும்.

2009-11-21

(புலம்பெயர் நாடுகள் + தமிழர்கள் ) இரசிக்கக்கூடிய அனுபவங்கள்

அண்மையில் நண்பர் ஒருவர் தனது வலையில் "தமிழ் " பற்றி எழுதி இருந்தார்.
கிடுகு வேலி:-வெல்லத்தமிழ் இனி மெல்லச்சாகுமா?

அதை தொடர்ந்து எனக்கும் ஒரு ஆர்வம் அதே தமிழ் பற்றி எழுதினால் என்ன ; கொஞ்சம் வித்தியாசமாய் ஐரோப்பிய புலம்பெயர் நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களுடன் ஒரு அனுபவம் பற்றி எழுதினால் என்ன என்று ஒரு ஆர்வம் , ஆனால் அவர்களை நான் வடிவாக பார்க்க சந்தர்ப்பம் இல்லை. அவ்வாறு தெரிந்த ஓரிரண்டு குடும்பங்களும் வெவ்வேறு நாடுகளில். இருந்தாலும் இரண்டு சந்தர்ப்பங்கள். கோவில் இல்லை போனால் தியட்டர் .!!!ஊர்வலங்களில் , கவரும் ஒன்று கூடல்களில் இது எல்லாம் ஆகாது !!!


எம்மை போன்ற இளைஞர்களுக்கும் புதிய திரைப்படம் அன்று தான் புலம்பெயர் ஈழத்து தமிழரை ( பெரும்பாலும் பெண்களை ) காண முடியும் . வாயால் சொல்ல முடியாத நிலை, இப்படியா என்ன சரவணன் சார் இது என்று கையை நாடியில் வைச்சு சொல்லும் அளவுக்கு அவர்கள்!!!அவர்கள் எங்கயோ போட்டார்கள் ~~~கலாச்சாரம் சரி, உடை நடை பாவனை சரி.. என்ன செய்யுறது அவர்கள் இங்கே பிறந்து வளருவதால் வேற்று மொழி, கலாச்சாரம் , மாறும் காலநிலைகள் என்று எல்லாம் அவர்களின் விதி, இது பொதுவாகவே புலம்பெயர் ஈழத்தமிழரின் விதி.

இதைவிட ஊரில் இருந்து இங்கே திருமணம் செய்ய வந்தவர்கள் பலரும் தங்களை ஐரோப்பிய கலாச்சாரத்துக்கு மாற்றி ஏதோ தாங்கள் தமிழர்கள் இல்லை என்பதால் போலவும் இருக்கிறார்கள். :)

இருந்தாலும் அதுக்குள்ளே ஒன்று இரண்டு பேர் (சிறு பிள்ளைகள்) தமிழில் கதைக்கும் போது உணர்ச்சி உச்சந்தலையில் அடிச்ச மாதிரி இருக்கும். என்ன மாதிரி கதைக்கிறார்கள் என்று. கொழும்பில் பிழங்கும் ஒருவகை தமிழிலும் மேலாக நன்றாக கதைத்தார்கள் என்ற பெருமை இவர்களுக்கு இருக்கு. அது அவர்களின் பெற்றோர்கள் உணர்ந்து படிப்பித்து இருக்கிறார்கள் என்று பொருள் படும்.

இதை விட ஒரு சிலர் கதைத்ததை கேட்டும் இருக்கேன், அவர்கள் தமிழை கொன்றே கதைப்பார்கள், அது வேணும் என்று இல்லை , அவர்களுக்கு சொல்லி கொடுக்க அல்லது போனால் தமிழை பயில பயிற்சி கல்லூரிகள் பெரிதாக இல்லை . அவர்களுக்கு வேற்று மொழி கட்டாயம் பயில வேண்டும் அதனால் அவர்களுக்கு நேரமும் இல்லை மேலதிகமாக தமிழை படிக்க. அதை கொஞ்சம் சொல்லி குடுக்க அவர்கள் பெற்றோர்கள் முன்வருவதும் இல்லை. ஊக்கம் இல்லை என்றே சொல்லலாம்.

இனியென்ன நாங்கள் இங்கால வந்துட்டம் . இனியேன் தமிழ் என்று இருக்கிற சனத்தையும் பார்த்து உள்ளேன். :(

இங்குள்ள பல இளையோர் என்றால் நேரடியா ஈழத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பிரச்சினை இல்லை. அவர்கள் வழமை போல கதைக்கிறார்கள்.

ஒரு முறை நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்று இருந்தேன். நீண்ட நேரம் உரையாடி கொண்டு இருக்கும் போது அவர்கள் பிள்ளைகள் வந்தார்கள் . எட்டு, பத்து வயசில் பிள்ளைகள். தமிழே தெரியுமா என்று கேட்டேன். " கொஞ்சம் கொஞ்சம் தெரியும் " என்று சொன்னார்கள். அந்த நேரம் எனக்கு ஞாபகம் வந்தது 95 இல் யாழ்ப்பாணம் அரசாங்க கட்டுப்பாட்டில் வந்த போது அங்கு நின்ற சீருடையினர் எங்களை போன்றோரிடம் கதைக்கும் போது கேட்பது "கொஞ்சம் கொஞ்சம் சிங்களம் தெரியுமா " என்று.. நாங்களும் " கொஞ்சம் கொஞ்சம் தெரியும்" என்று போட்டு அப்பி யனவா ( இது எங்கட பௌதீகவியல்- ரவி ஆசான் குப்பியில் சொல்லி தந்த ஒன்று) என்று சொல்லி கொண்டு போறது .. அதே மாதிரி மாறி போச்சு .. இப்போ.. இங்கே ..:(

மனசில் இப்பவும் நிக்குற கசப்பான சம்பவங்களில் இதுவும் ஒன்று:-
கொழும்பில் நான் நேரில் கண்ட அனுபவம் ":-இரண்டு தமிழ் நண்பிகள் மாதிரி எனக்கு முதலில் பட்டிச்சு. மட்டக்குளிய 155 பஸ் வண்டிக்குள் , தமிழே வராது மாதிரி , ஆங்கிலத்தில் விக்கி தக்கி கதைப்பார்களாம், ஏனிப்படி ??? ஒன்றில் தமிழை பாவிக்க பயப்பிடலாம் அல்லது ஆங்கிலத்தில் புலமை தேவை என்பதற்காக ஒரு முயற்சி என்று தான் நினைத்தேன். பிறகு கொஞ்சம் காதை கொடுத்து பார்த்தால் அவர்கள் இருவரும் தங்கள் MC போய் செய்ய இருக்கும் ஷாப்பிங் பற்றி பேசுறாங்கள் ஆங்கிலத்தில். இதை விட கொடுமை அவர்கள் ஒரு குடும்பத்தை சேர்ந்த அக்கா தங்கை மார். இதை மருதானையில் வண்டியை மறித்து அடையாள அட்டை பார்க்கும் போது எனக்கு பின்னுக்கு நின்றார்கள் என்பதால் அறிந்து கொண்டேன். இதை விட நம்பர் ஒன்று காமெடி என்ன வென்றால் ஓடுற பஸ்வண்டி தமிழில் பாட்டு போட்டு கொண்டு ஓடுது. அப்ப ஏனிந்த பில்ட் டப் ?? நான் பக்கத்தில இருக்கேன் என்றதுக்காக வா ?? சீ சீ .. இது இப்போ ஒரு கலாச்சாரமாய் வந்து கொண்டு இருக்கு. நான் ஆத்திரப்படவில்லை. கதைக்கலாம், குறை சொல்ல வில்லை , இது எல்லாம் ஒரு கலர்ஸ் இக்கு செய்யுற வேலை. அதாவது தங்களுக்கும் ஆங்கிலம் தெரியும் என்பதற்காக ..:)



புரட்டாதி சனியில் எள்ளு எண்ணெய் எரிக்கும் அடியார்கள். புலம்பெயந்தால் போல சமய நடவடிக்கைகளை மறக்கவில்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டல்.



கொழும்பில் இப்போது எல்லாம் கற்பூரம் தடை. சூழல் மாசடைவதை காரணம் சொல்ல்கிறார்கள் .. ஆனால் எமது கலாச்சாரத்தில் அது அன்று தொட்டே கற்பூர தீபம் மூலம் பூசை செய்வது வழமை, அதனையே இங்கேயும் செய்கிறார்கள், பார்க்க பிரமிக்க வைக்கின்றது. இங்கு சூழல் மாசடைய வில்லையா ???


சிவ சுப்பிர மணியார் கோவில் நெதெர்லாந்து

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் முருகன் கோவில் செல்வது வழக்கம், அங்கே பார்த்தால் தான் தெரியும் , எப்படி எங்கள் சமூகம் எவ்வாறு கலாச்சாரம் பேணுகிறார்கள் என்று. பெண்கள், கலாசார உடை என்று சொல்லப்படக்கூடிய, சேலை அணிந்து,( வயது வந்தோர்), சிறுமிகள் சுடிதார் போட்டு,பொட்டு வைத்து கொண்டு வந்து இருப்பார்கள்.( வருத்தம்- இதை கொழும்பில் உள்ள ஆலயங்களில் காண முடியவில்லை.முக்கிய குறிப்பாக பேராதனையில் உள்ள குறிஞ்சிக்குமரனில் பெண்கள் என்றுமே கலாசார ஆடை அணிந்தே வருவார்கள். ) சுவாமி தூக்கும் போது வேட்டி அணிய வேணும் என்று ஒரு வழமை இருக்கு. கொழும்பில் அவ்வாறு செய்வதை நான் காணவே இல்லை. வேட்டி வாங்க வசதி இல்லை என்று நினைக்க வேண்டாம்.. இது எல்லாம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டியது. சரி நீங்க வேட்டி கட்டாவிட்டால் ஒதுங்கி இருங்க. அதுவே உத்தமம், யாரோ ஒருத்தன் உணர்ந்து வேட்டி கட்டி கொண்டு முன்னுக்கு வருவான். நிச்சயம் அது நடக்கும்.


சிவசுப்பிரமணியார் கோவில் நெதெர்லாந்து - அடியேன்


ஜுரிச் முருகன் ஆலயம்

நெதர்லாந்தில் உள்ள முருகன் கோவில் ஒன்றில், பூசைகளை தொடர்ந்து நடை பெறும் பஜனைகளை பெண்களே நடத்தி வைப்பார்கள். முறையாக சங்கீதம் பயில பயிற்சி பாசறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆலயத்திலும் அது அமைக்கப்பட்டுள்ளது. புலம் பெயர் தமிழர்களும் இன்று வரை தங்கள் கலாச்சாரத்தை , தங்கள் வரலாறுகளை பேணி பாதுகாத்து வருகிறார்கள் என்று எனக்கு உறுதிப்படுத்தப்பட்டது அண்மையில் சூரிச் சென்று இருந்த போது ஏற்பட்ட அனுபவங்கள் தான். அங்கே முருகன் மற்றும் சிவன் ஆலயங்கள் சென்றேன். அதை விட தமிழர் வாழும் பிரதேசங்களுக்கும் சென்று வந்தேன். அவர்கள் நூலகம்,தமிழ் மன்றம், சங்கீதசபை, விவேகானந்தர் சபை, திருவள்ளுவர் மன்றம், நடன சபை, திருமண சேவை எல்லாம் அமைத்து கலாசாரங்களை பேணியும் புலம்பெயர் சமூகங்களுக்கு புகட்டியும் வருகிறார்கள்.அவர்களுக்கு உரிய ஆர்வம் நாட்டில் இருக்கும் எங்களிடம் இல்லை என்றே சொல்லலாம்.


ஜுரிச் முருகன் கோவில்; சு .பி : ச்விச்ஸ் பிரான்க் )


அங்கே ஒரு சில சிறுவர்களுடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களிடம் கேட்டேன் , யாழ்ப்பாணம் தெரியுமா ? நல்லூர் தெரியுமா ? திருகோணமலை தெரியுமா என்று? தெரியாது என்று பதில் வந்தது. சேர்ந்து யாழ்ப்பாணத்தில் இந்த தமிழரசன் ஆட்சி செய்தான் என்று பதிலை கூட சொல்லி முடித்தார்கள். கேட்கும் போது எனக்கே ஒரு அவமானம் மாதிரி. எத்தினை பேருக்கு பதில்தெரியும்? இப்படி எல்லாம் எங்கள் வரலாறுகளை படித்து இருகின்றார்கள் என்று கேட்கும் போது பிரமிக்க வைக்கின்றது.





சிவன் கோவில் - Zurich

சிங்கிலா சிங்கம்

இவ்வாறு இவர்களின் முயற்சிக்கு யார்தான் காரணம்; ஒன்று பெற்றோர்கள். மற்றது புலம்பெயர் நாடுகளில் ஈழத்து கலாசாரங்களை பேணி பாதுகாத்து வரும் விதத்தில்,பிரபல்யமான புலம்பெயர் பதிவுகளாக புலம்பெயர் சஞ்சிகைகள் விளங்குகின்றன. இவற்றில் ,கலை இலக்கியம் சார்ந்தனவே அதிகம். அவை கவிதை, சிறுகதை, தொடர்கதை, நூல் மதிப்பீடு, நூல் அறிமுகம், விமர்சனம், கட்டுரை, வாசகர் கருத்து, அரசியல், மாற்றுக்கருத்து, எதிர்வினை, ஆகியவற்றை பிரதானமாகவும் வேறும் சில விடயங்களை உபபிரிவுகளாகவும் கொண்டு வெளி வருகின்றன.
உண்மையாகவே குடுத்து வாங்கும் விலைக்கு ஏற்ற அளவு அவை தகவல்களை பகிர்கின்றன என்பது உறுதி.

எனக்கு வாங்கி படிக்க சந்தர்ப்பம் கிடைத்தவை.
உறவுகள்,தமிழ் முரசு, தமிழ்த் தென்றல், தாயகம், தேடல், பள்ளம், பாரிஸ் ஈழநாடு,தமிழ் ஏடு,சுவடுகள்,செய்திக்கதிர்.

இதை விட நாடுகளில் நல்ல பதிவர்களும் உருவாகி வருகிறார்கள், இணைய வசதிதானே இங்கே பிரச்சனை இல்லை அதனால் தேடியும் பயில கூடிய வசதி இருக்கு. இவற்றை எல்லாம் இந்த சமூகத்தில் இப்போது இருக்கின்ற நம்மை போன்றோர் வழி நடத்தினால் தான் எதிர் காலத்தில் தமிழை மட்டும் அல்ல எங்கள் கலாச்சாரத்தையும் சேர்த்து பாதுகாக்க முடியும் என்பதில் ஐயம் இல்லை.

மேலதிகமாக ஊடகத்துறை ; தமிழ் தனியார் ஊடகங்கள் பல இப்போது உலகெங்கும் பல உருவெடுத்து வருகின்றது. அவை பல சினிமாவை வைத்துதான் இயங்குகின்றன. சினிமா மூலம் தான் இயங்கலாம். உண்மை . இருந்தாலும் அறிவியல் , மொழி, கலாச்சாரம் சம்மந்தமாக கொஞ்சம் கூடுதலாக ரசிகர்களிடையே பகிரலாம் என்று நான் நினைக்கின்றேன்.

இறுதியாக, அண்மையில் நடைபெற்ற ஒரு கலாச்சார நிகழ்ச்சிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அங்கே நடை பெற்ற நிகழ்ச்சிகளில் கலாச்சாரத்தை கட்டி காக்கும் கூத்து, நடன நிகழ்ச்சி, இசையமுதம் என்னையே மறந்து போய் இருந்து ரசிக்கும் விதத்தில் இருந்தது.

குறிப்பாக, நாட்டு கூத்தும் , கீழைத்தேய இசையமுதமும் பெண்களே செய்தார்கள். நன்றாகவே இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ( பல்கலைக்காலத்துக்கு பின்னர் என்றே சொல்லலாம்) நல்ல ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன் ரசித்தேன்.

ஒரு புறம் இப்படி இருக்க....மறு புறம் ...மிகவும் கொடுமையான கலாச்சார சீரழிவுகளில் ( நைட் கிளப், மது பாவனை, புகைப்பிடித்தல் , அறம் புறம்பான தகாத உறவுகள் ) புலம்பெயர் நாடுகளில் எமது பெண்களே கொண்டு இருக்கிறார்கள் (இதுக்கேன் இங்கே வரணும் இப்போ தமிழர் வாழும் கொழும்பிலையே அரங்கேறி வருவதாகவும் ) நண்பர்கள் கூற கேட்டு உள்ளேன்.

நாங்கள் தான் எதிர்கால சந்ததியினர்; எதிர் காலத்தை உருவாக்கும் சந்ததியினர். நாங்கள் ஒவ்வொருவரும் எடுக்கும் ஆர்வம் தான் எங்களின் பின் எங்கள் மொழி எங்கள் கலாச்சாரம் எல்லாவற்றையும் பாதுகாக்கும் என்பது உறுதி.

கொஞ்சம் சிந்தியுங்கள் தோழர்களே. இனியாவது களத்தில் இறங்குங்கள்.

2009-11-20

இந்த வாரத்தை கலக்கிய சோகமான உதைபந்தாட்ட போட்டி முடிவுகள்

தென் ஆபிரிக்காவில் வரும் 2010ல்(ஜூன் 11-ஜூலை 11) 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்க உள்ளது. இதற்கான இரண்டாவது லீக் போட்டிகள் தற்போது நடை பெற்று முடிந்தன.
இதில் இறுதியாக இந்த வாரம் நடந்த போட்டிகளில் ( இறுதிப்போட்டி அல்ல )

  1. விறு விறுப்பாக்கிய பிரான்ஸ் -அயர்லாந்து FIFA உலக கோப்பை


இந்த போட்டியை வென்றால் தான் தென்னாபிரிக்கா செல்லலாம் என்று இருந்த பிரான்சுக்கு அயர்லாந்தின் Robbie Keane 32வது நிமிடத்தில் அடித்த கோல் பிரஞ்சு ரசிகர்களை ஒரு கணம் ஆட செய்தது.
Robbie Keane

திறமையான, முதல் தரமான பல வீரர்களை தனகத்தே கொண்ட பிரான்ஸ் இறுதி வரை போராடிய போதும் , வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் இறுதி நிமிடத்தில் வெளியே சென்ற பந்தை ஹென்றி யின் கை மறித்தது மட்டும் இன்றி ஹென்றியே அதே பந்தை வில்லியம் காலாஸ் இக்கு பாஸ் செய்ய வில்லியம் காலாஸ் அடித்த கோலுடன் பிரான்ஸ் இம் தகுதி கண்டது.



நடுவர் ஹென்றியின் கையில் பந்து பட்டத்தை கவனிக்கவில்லை யாதலால் பெரும் சர்ச்சை போட்டி முடிந்த பிறகு ;

இதற்கிடையில் பிரெஞ்சு கேப்டன் ஹென்றி திரும்ப போட்டி நடத்தினால் அதை தான் ஆமோதிப்பதாக கூறிய செய்திகளும் பரவி வருகின்றன. இருந்தாலும் நடை பெறும் வாய்ப்பு அரிது என்று பலர் கூறு கின்றனர்.

ஹென்றியின் கையில் பந்து படும் போது நடுவர் கவனிக்க வில்லையாதலால் இது நடுவரின் தவறே தவிர வேறு யாரும் எதுவும் செய்ய முடியாது என்று FIFA ம் அயர்லாந்தின் கோரிக்கையை கால வாரி விட்டது.

அவர்கள் வழங்கிய அறிக்கையின் ஒரு பகுதி ஆங்கிலத்தில்:

FIFA said in a statement: "FIFA has replied to the request made by the Football Association of Ireland to replay the 2010 FIFA World Cup play-off match held on 18 November 2009 between France and the Republic of Ireland in Paris.

"In the reply, FIFA states that the result of the match cannot be changed and the match cannot be replayed. As is clearly mentioned in the Laws of the Game, during matches, decisions are taken by the referee and these decisions are final."


உண்மையும் அதுதானே நடுவர்கள் சிலவேளைகளில் விடும் தவறால் பாரிய இழப்புகள் எந்த விளையாட்டிலும் இடம்பெறுதல் வழமை. :)


2.ரஷியாவை வீழ்த்திய ஸ்லோவானியா

வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ரஷ்யா ச்லோவானியா விற்கு எதிராக களமிறங்கியது. கடந்த 2002ல் தென் கொரிய அணியை உலக கோப்பை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற Guus Hiddink , இம்முறை ரஷ்யாவின் பயிற்சியாளராக இருந்தார். இதனால் எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 44வது நிமிடத்தில் ஸ்லோவேனிய வீரர் ஸ்லாட்கோ டெடிக், ஒரு சூப்பர் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். இதற்கு ரஷ்யாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இறுதியில் ஸ்லோவேனிய அணி 1-0 என வெற்றி பெற்று உலக கோப்பை தொடருக்கு முன்னேறியது. கால்பந்து ரேங்கிங் பட்டியலில் தற்போது 12வது இடத்தில் உள்ள ரஷ்யா, கடந்த 1994, 2002ல் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. 2006ல் தகுதி பெறாத இந்த அணி, மீண்டும் ஏமாற்றம் அளித்துள்ளது.


தென்னாபிரிக்கா FIFA 2010 செல்ல தகுதியான அணிகள்

ஆபிரிக்கா :
ஆசியா :
ஐரோப்பா:

வட, மத்திய அமெரிக்காவும் கரிபியன் தீவுகளும் :

ஓசானியா :
தென்னமெரிக்கா :

இறுதியாக உலகக்கோப்பையை நடத்தும் நாடு :

மொத்தமாக 32 நாடுகள்:)





2009-11-19

மறக்க முடியாத " பாபா " படம் பார்த்த அனுபவம் ..

தெரிஞ்சது கையளவு தெரியாதது உலகளவு.




அப்போது நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடம் முடியும் வேளை. பல்கலை வாழ்க்கையை ரொம்பவே ரசித்திட்டு இருந்த காலம். போடுற படங்கள், நிகழ்ச்சிகள், ஒன்று கூடல்கள், உள்ளூர் பிரயாணங்கள் என்று மிகவும் களை கட்டி கொண்டு இருந்த நேரம் தான் இந்த துன்பியல் சம்பவம் இடம் பெற்றது.

ஏற்கனவே பல்கலை மட்டத்தில் தமிழ் மாணவர்களுக்கு இடையில் ஓரளவுக்கு என்னை தெரிந்து இருந்தாலும் ; குறிப்பாக நான் ரஜனி ரசிகன் மன்னிக்கவும் "தீவிர ரசிகன்" என்று சொல்லும் அளவுக்கு தெரிந்து இருக்கவில்லை.

என்னுடைய நண்பர்களுக்கு தெரியும். அடிக்கடி ரஜனி பஞ்ச் வைத்து கதைத்தல், ரஜனி போஸ்டர்களை எல்லாம் அறையில் ஒட்டி வைத்து இருத்தல்( வீட்டில் இப்பவும் அண்ணாமலை , தளபதி , பாஷா ,சிவாஜி போஸ்டர்கள் சுவருடன் பதிக்கபட்டுள்ளது). அப்படி ஒரு ரசிகன். அடிக்கடி ரஜனி படங்களை பார்ப்பதும் பாடல்களை தான் கேட்பதாலும் எனது அறை நண்பர்கள் என்னில் அப்படி ஒரு வெறுப்பு. ஏதும் கதைத்தால் ரஜனி ஸ்டைலில் சொல்லி கலாயித்து விடுதல் வழமையான ஒன்று என்பதால் காலப்போக்கில் அவர்களே கண்டு கொள்ளுற இல்லை. இதை விட ரஜனி ரசிகன் என்பதிற்கு introduction தேவை இல்லை:)




அவரது பிறந்த தினத்தில் நாங்கள் ( என்னுடன் இன்னும் தீவிரமான மூன்று பேர் இருக்காங்கள்) ஏழைகளுக்கு உணவு கொடுத்து உதவுதல் வழமை. இது கடந்த எட்டு ஒன்பது வருடங்களாக நடக்கும் உண்மை.

நீண்ட நாட்கள் படங்கள் ஏதும் நடிக்காமையால் நாங்களும் வருத்தம் தான். இப்படியாக இருக்கும் போது தான் பாபா படம் எடுக்கபோறதாக வெளியில கதை பரவவே ..எனக்கு வீட்டில் இணைய வசதி(வார இறுதி நாட்களில் ); ஏற்கனவே பல்கலையில் கணணி விஷேட துறை அதால இரவு எட்டு மணி வரை எங்களுக்கு என்று விசேடமாக ஒதுக்கபட்ட lab இல் இருந்து தேடுதல் வேட்டை தான். அப்பப்போ வரும் செய்திகளை நண்பர்களுக்கு SMS, ஈமெயில் ஓடு நிண்டு விடாமல் எங்கள் தீவிர ரசிகர்களுக்கு call பண்ணி கூட சொன்னதுண்டு. அவர்கள் கூட சில வேலைகளில் call பண்ணி எனக்கு தகவல் சொல்லி இருக்கார்கள்.அப்படி ஒரு நெட்வொர்க்.
இப்பவும் இயந்திரன் பற்றி கதைத்து கொண்டு தான் இருக்கோம்.



தமிழ் நாடு தமிழ் நாடு என் உயிர் நாடு


பாபா இசைத்தட்டு வந்தவுடன் ஓடி திரிந்து ஒரு மாதிரி இணையத்தில் கேட்டும் பிறகு எனது வால்க்மேன் இனுள் எப்பவும் பாட்டை கேட்க ஆரம்பிக்கும் போது அதுவே முதல் பாடலாக வரும் அளவுக்கு செய்தும் வைத்து கொண்டு தான் இருந்தது. அப்படி ஒரு அவா.
பாடல்கள்களில் அப்பவே ஷக்தி கொடு பாடல் கேட்டதும் என்னமோ எல்லாம் ஆகிடுவேன். இதை விட தனியார் வானொலிகள் கூட உதாரணமாக ஷக்தி சூரியன் இரண்டுமே அடிக்கடி அந்த பாடலின் அந்த பகுதியை போட்டிக்கு ஒலி பரப்பி ரசிகர்களிடையே பாட்டை பிர பல்யப்படுதியது வரலாறு.



இப்படி எல்லாம் ஆராவரத்தில் இருக்கும் போது தான்.. படமும் வெளியாகும் திகதி அறிவிக்கபட்டது. எனக்கு முதல் ஷோ பார்ப்பதில் எந்தவித பிரச்னையும் இருக்காது என்பது எங்கள் கூட்டத்துக்கே தெரியும். ஏனெனில் ஒரு காலத்தில் நானும் திரைப்படங்களை தருவித்தவனே, ( பல்கலைக்கழகத்தில் உள்ள சங்கங்கள் அடிக்கடி ரீல்ஸ் படங்கள் போடும் போது அடிக்கடி என்னாலான உதவிகள் செய்து இருக்கின்றேன்).



இது எப்புடி என்று கேட்க கூடாது ; எல்லாம் அரசியல் தான். படையப்பா , பாஷா , அருணாச்சலம், முத்து, தளபதி,அண்ணாமலை எல்லாமே என்னால் , எனது பீடம் நடத்தும் வருடாந்த தமிழ் தின நிகழ்ச்சிகள் தொடக்கம் பல்கலை சங்கங்களுக்கு வருவித்து காட்டபட்ட ரஜனி படங்கள்.இதை விட குஷி, காதலுக்கு மரியாதை, friends, இந்தியன் ,தெனாலி , பஞ்சதந்திரம் , காசி,ஆளவந்தான்,துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே ,ஆனந்த பூங்காற்றே ,Kutch Kuth Kotakai, என்று ஒரு நீண்ட பட்டியல். ...கூட பழகிய என் நண்பர்களுக்கு தெரிந்து இருக்கும் என்ன என்ன படங்கள் என்று.
அது ஒரு காலம். இப்படி எல்லாம் தருவிக்கும் அளவுக்கு எனக்கு வேண்டியவர்கள் இருந்ததால் செய்தேன். அவர்கள் உதவி என்றுமே மறக்க முடியாது. அவர்களின் உதவியால் காட்சி படுத்த முடிந்தது.

அவர்களின் உதவியால் எனக்கு ஐந்து டிக்கெட்கள் எடுத்தாச்சு பாபா பார்க்க.



அடுத்த நாள் படம் வருது கொன்கோர்ட் இக்கு.முதல் நாள் மாலையில் கூட ஒரு பதற்றம் வெளியிடுவார்களா என்று. தமிழ் நாட்டில் அரசியல் இல் மாற்றம் வரும் என்று சொல்ல போறதா ஒரு கதையை கட்டி விட்டு ராமதாஸ் ஐயா தனது ஆட்களுடன் எதிர் பேரணிகள். ஜெயா அம்மா புகைத்தால் பிடித்து உள்ளுக்கே போட்டுடுவேன் என்று புலம்பல் , இத்தனையையும் தலை என்னென்று சமாளிக்க போகுதோ என்று எங்களுக்கு வியப்பு. எங்களுக்கு தெரியும் தலை பாஷா ஸ்டைலில் அல்லது அண்ணாமலை ஸ்டைலில் எதாவது ஒரு வழி பண்ணும் என்று. எங்களுக்கு என்ன கொழும்பில் யார்தான் ரஜனிக்கு எதிரா கொடி பிடிப்பாங்க. படம் ஓடும் என்று தெரியும்.

அதிகாலை திட்ட மிட்ட படி நான் , இன்னும் இரு தீவிர ரஜனி ரசிகர்கள் ஆன இயந்திரவியல் பீட அண்ணன் மார்கள்( ஒருவர் தற்போது கொழும்பில் SLT il வேலை செய்கின்றார், அடுத்தவர் நியூயார்க் இல் வேலை செய்யும் செல்லமான அண்ணாவும் - இருவருமே யாழ் இந்துவின் மைந்தர்கள் ) ; மூவரும் மாத்தறை நோக்கி புறப்படும் புகை வண்டியில் அதிகாலை 5 :00 மணிக்கு பயணம் ஆரம்பம். எங்களுக்குள் ஏதோ பொண்ணு பார்க்க போற மாதிரி த்ரில். காலை 8:30 மணி கொழும்பில் தரை இறக்கம். நேரவே எங்கள் வீட்டில் காலை உணவு. சரியாக பத்து மணி கொன்கோர்ட் வாசலில் ஆஜர். சனமோ சனம். ஆட்டோ காரன் தொடக்கம் high லெவல் வரை , ஒரு புறம் முட்டியடிக்கும் ரசிகர்கள் ,மறுபுறம் கொன்கோர்ட் வாசலில் விஷேட பாதுகாப்பு. எங்களுக்கு வாசலுக்கு சென்று எங்கள் அடையாளங்களை சொல்லவே நேரம் சரியா வந்துட்டுது. ஒரு மாதிரி உள்ளே போனால் எல்லாரும் விசில் அடிகிறாங்கள். Ginger பீரும் கடலயும் வாங்கி கொண்டு பலகணி இல் இருந்தால். அங்கே கொழும்பில் இப்போ பிரபல்யாமாகி கொண்டு இருக்கும் கட்டிட கட்டுனர் இவரும் பேராதனை தான் , எங்கள் நண்பர் தான் - இந்துவின் மைந்தன் தான் வருகை தந்தார். எல்லாருமாக ஒரு மாதிரி இருந்து ஆயத்தம்.



ஒரு மணி நேரம் பிந்தி படம் ஆரம்பம்; வழமை போல் வரும் ரஜனியின் சூப்பர் ஸ்டார் sound ஏ கேட்கவில்லை. அடிச்சாங்கள் பாருங்க விசில் கூ .. இன்றைக்கும் ஞாபகம் இருக்கு எங்களுக்கு முன் இருந்த ஒரு வயதான மனிதர் எழும்பி விசில் அடிச்சது. எனக்கு திரையே தெரியவில்லை அந்த அளவுக்கு எல்லாரும் எழும்பி நின்று என்னமோ ரஜனி கீழே நிக்குறாரு என்ற மாதிரி ஆரவாரம்.


Blaze in அறிமுகம் இதில் தான் என்று நம்புகிறேன்( பிழை என்றால் திருத்தி விடவும்)


திப்பு திப்பு குமாரா பாடலில் வாழ்கை ஒரு சினிமா என்று அழகாக சொல்லி இருக்கார் :)

ரஜனி வரும் போது கான்கார்ட் அதிர்ந்தது.. இது மாதிரி பிறகு சிவாஜி பார்க்கும் போது தான் அதிர்ந்தது என்று சொல்லுவன். கேட்க வேணாம் இடைக்க படமே பார்க்கவில்லையா என்று. பல படம் பார்த்தேன் 2nd ஷோ கூட பார்த்து இருக்கேன். அப்படி ஒரு அதிர்வு இல்லை.



படமும் ஆரம்பிச்சிட்டு .. ஓட்டிடு இருக்கு .........சுரேஷ் கண்ணா மீண்டும் ஒரு பாஷா எடுப்பார் என்ற கனவு மெல்ல மெல்ல தகர தொடங்கியது. எங்களுக்குள் ரசனை இருந்தாலும் படம் பட்டம் விடுமளவுக்கு வந்துடுத்தே என்று ஒரு கவலை. இருந்தாலும் இடை வேளை வரை விசிலும் கூவுமாக இருந்தது. பிறகு என்னடா எல்லாரும் எழும்பி போகலை என்று படையப்பா வேஷத்தில் ரஜனி வரும் போது மகா ரசிகர்கள் அடிச்ச விசிலில் உறுதி செய்து கொண்டேன்:)



படத்தில் ஒரு கட்டத்தில் கடவுள் இல்லையே என்று சொன்ன ரஜனி பிறகு கடவுள் இல்லை ஏதோ ஷக்தி இருக்கு என்று ஏற்று கொள்வதும் படத்தின் உள்கருத்து போல கிடந்திச்சு.


அதிர வைத்த காட்சிகளில் இதுவும் ஒன்று


என்னடா வேற ஏதோ படத்தின் ஒரு பகுதியை கொண்டு வந்து போட்டுடான்களோ என்று கூட தோன்றிச்சு. அப்படி இல்லை என்று சொல்லும் அளவுக்கு இடைக்கிடை ரஜனியின் பஞ்ச், action இருக்கும், அதுவே எங்களுக்கு ஒரு விசில் அடிக்க சொல்லும். ஒரு மணி நேரம் கொஞ்சம் சோர்வாக இருந்தாலும் இறுதி மணித்தியாலம் எப்படி போனதென்றே தெரியாது, அந்த அளவுக்கு மீண்டும் விசில், கூ, அதுவும் ஷக்தி கொடு காட்சி,பாடல்கள் எல்லாமே ஒரே பரபரப்பு.. ரஜனி அரசியலுக்கு வருவாரா இல்லையா என்று.





"உப்பிட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் .வாழ்ந்தாலும் இங்கேதான் ஓடி விட மாட்டேன்" "கட்சிகள் பதவிகளை நான் விரும்ப மாட்டேன் காலத்தின் கட்டளையை நான் மறக்க மாட்டேன்" என்று சொன்னது ஓரளவுக்கு ரஜனி தமிழக அரசியலில் கால் வைப்பார் என்று இருந்தாலும், என்னும் வைக்க வில்லை. என்னை பொறுத்த வரை ,அவர் வைக்க மாட்டார். மேலும் ஈழ தமிழர்கள் இக்கு கூட குரல் கொடுத்தவர்.




நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசை யாவும் பயந்தோட வேண்டும் .
..
தீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக்க சக்தி கொடு
வறுமைக்கு பிறந்தவரை வாழ்விக்க சக்தி கொடு

முடிவெடுத்த பின்னால் நான் தடம்மாற மாட்டேன்
முன்வைத்த காலை நான் பின்வைக்க மாட்டேன்
...
எனை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்
ஏணியாய் நானிருந்து ஏமாற மாட்டேன் !!!
...

"உப்பிட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் .
வாழ்ந்தாலும் இங்கேதான் ஓடி விட மாட்டேன்"
கட்சிகள் பதவிகளை நான் விரும்ப மாட்டேன்
காலத்தின் கட்டளையை நான் மறக்க மாட்டேன்

சக்தி கொடு இந்த பாடலுடன் வரும் காட்சி ஒரு த்ரில் தான்!!

ரகுமான் நன்றே இசை அமைத்திருக்கார் என்று பாடல்களை கேட்கும் போதே தெரியும்.. சண்டை காட்சிகளில் கூட திரையரங்கு அதிறும் விதத்தில் இசைந்திருக்கார்.
make up ai ரஜனி மறந்திட்டார் என்று விமர்சனங்கள் இருந்தாலும். இப்போ அதை எல்லாம் அலச தேவை இல்லை


எல்லாமே மாயா சாயா:)

ஒருமாதிரி விறு விறுப்புடன் படம் பார்த்து முடிஞ்சாச்சு.உண்மையாவே ரஜனியின் பிழையா இல்லை இயக்குனர் பிழையா என்று எல்லாம் எங்களுக்குள் குமுறல்.

தீவிர ரசிகனான நான் வெளிய வரும் போது முகமே இருட்டின மாதிரி இருந்திச்சு,. சீ இவ்வளவு பின்னடைவு ஏனிந்த படத்திற்கு.. என்னமா மாதிரி படம் எடுத்து இருக்கலாம் அவசரப்பட்டு போட்டார் போல என்று எங்களுக்குள் ஒரே discussion.

"தெரிஞ்சது கையளவு தெரியாதது உலகளவு "என்றுதானே சொல்லிட்டாரு பிறகென்ன கனக்கவே மிஸ் பண்ணுறாரு என்று சொல்லி இருக்காரு என்று நாங்களே தீர்மானம் எடுத்தபடி( விழுந்தும் மீசையில் மண் பிரளவில்லை மாதிரி)வீடு நோக்கி பயணம்.

இதுக்கிடையில் நாங்கள் பாபா படம் முதல் ஷோ பார்க்க வந்த கதை பரவீற்று. திரும்பி இரவு பல்கலைக்கழகம் சென்றதும் ஒரே ஆரவாரம். மற்றவர்கள் போல் இல்லாமல் உடனேயே சொல்லிட்டம் படம் பெரிசா வாய்ப்பு இல்லை என்று.மும்மூர்த்திகளும் ஒரே மாதிரி அறிக்கை விட்டதால், அதை எல்லாருமே ஏற்று கொண்டார்கள்."நாங்கள் தீவிர ரசிகர்கள் பாபா படம் தோல்வியில் செல்லும்" என்று நாங்களே வரிந்து கட்டி சொன்னது கூட எங்களுக்கு பெருமையை பெற்று தந்தது.

அந்த வாரம் தான் வலிகாமம் ஒன்று கூடல், இந்துவின் ஒன்று கூடல் என்று அடுத்தடுத்து வந்தது. அதில் மும்மூர்த்திகளையும் எழுப்பி வைத்து போட்டு அறு அறு என்று அழாத குறையா வாங்கி வித்தே போட்டார்கள், நாங்களும் இல்லாத பொல்லாத எல்லாம் சொல்லி கலாயித்து கொண்டே இருந்த ஞாபகங்கள் இருக்கு.

போற வாற இடம் எல்லாம் எனக்கு நோட்டீஸ் அடிச்ச மாதிரி நீங்களே அந்த பாபா படம் போய் பார்த்தனியல் என்று சொல்லி கேட்டு நையாண்டி செய்தளவுக்கு பிரபல்யமாக்கி விட்டது ரஜனியின் பாபா.

அதே படத்தை நாங்கள் மூவருமாக ஓரிரு தடவைகள் கொழும்பில் மன நிறைவுக்காக பார்த்து மகிழ்ந்த வரலாறும் உண்டு.

பாபா வை ரஜனி தயாரித்து இருந்தததால் படமும் ஓடாததால் நல்ல மனம் கொண்ட ரஜனி ( அரசியல் நோக்காக இருந்து இருக்கலாம் - விமர்சனங்களும் காரணம் - தியட்டர்) உரிமையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து வரலாற்றில் இடம் பிடித்து கொண்டது இங்க கவனிக்க வேண்டியது ஒன்று . இப்போ இருக்கும் நடிகர்களில் யாரவது அப்படி செய்தார்கள் என்று எனக்கு தெரிந்த அளவில் இல்லை.

அதுவும் மூன்றெழுத்து குஷியமான நடிகரின் மலேசியா போய் வந்த படத்தை போட்டுட்டு தியட்டர் உரிமையாளரும் அவர் சொந்தங்களும் இலவச இணைப்பு மாதிரி இலவச காட்சி நடத்தி நாட்களை ஒட்டியதாக கோடம்பாக்கம் தகவல்கள் சொல்கின்றது.
இதை பத்து முறை பார்த்து எங்களை எல்லாம் வியப்பில் ஆழ்த்திய அவரது ரசிகர்கள் இருக்கார்கள்.


கதம் கதம் :முடிஞ்சது முடிஞ்சு போட்டு

என்ன இருந்தாலும் தோல்விகளே வெற்றியின் முதல்படி ; தொடர்ந்து வந்த சந்திரமுகி , சிவாஜி எல்லாமே அதிரும் படி செய்திருகின்றன. ரஜனி கௌரவ படமான குசேலன் அவ்வளவு வெற்றியை தராத போதும், வர இருக்கும் இயந்திரன் தூள் பறக்க வைக்கும் என்பதில் ஐயம்இல்லை.

தனியார் வானொலியில் வேலை செய்யும் பிரபல்யமான வானொலி அறிவிப்பாளரை கடந்த முறை கொழும்பில் சந்தித்த போது அவர் சொன்ன கதை ஞாபகம் இருக்கு " அவர் தம்பியார் இப்பவும் ரஜனியின் பாபா தோல்வி இல்லை என்றே சொல்லுவாராம்" எங்களை போல இன்னுமொருவன் இருக்கான் என்ற பிரமிதம் அன்றே அடைந்தேன்.


மீண்டும் இன்னுமொரு ரஜனியின் பட அனுபவத்தில் சந்திக்கும் வரை ..



நான் ரஜனியின் பெரும்பாலான படங்களை பார்த்தது மட்டும் இல்லை , என்னுடன் DVD இல் வைத்து இருக்கேன். ஏறத்தாள 150 படங்களின் ஒரிஜினல் DVD என்னிடம் இருக்கு. தேவை ஏற்படின் போட்டு பார்த்து ரசிப்பேன். :)


ரஜனியின் பெயரை வைத்து உழைக்கும் ஒரு சின்ன விளம்பரம் :
Related Posts Plugin for WordPress, Blogger...