2010-01-30

முக்கிய செய்தி : மெரீனா கடல் கரையில் நடந்த சோகமான நிகழ்ச்சி


மெரீனா கடல் கரை





தமிழ் நாட்டில் நடந்த மிகத்துயரமான சம்பவம்:
காட்சி :


திடீர் என்று நேற்று முன் தினம் மாலை நேரம் , சென்னை மெரீனாகடல் கரை
அலைகள் ஆக்ரோஷமாக கடற்கரையில் மோதியதை அடுத்து கடற்கரையோரமுள்ள மசூதி, வீடுகள்,கோவில்கள் , பள்ளி கூடங்கள் வரை கடல் நீர் வந்து சென்றது. இதனால் மீனவ குடும்பங்கள் , சுற்றுலா பயணிகள் யாரவது இறந்து இருக்கலாம் என்று நேற்று முழுவதும் ஹெலிகாப்டரில் தேடியும், உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை. விடிய விடிய படகு மூலம் தேடினார்கள். ஆனாலும் உடல்கள் கிடைக்க வில்லை. ஆனால் நடந்தது வேற எதுவோ..

கண்ணுக்கெட்டிய தூரம் வரை விதம் விதமான மீன்கள் செத்து கிடந்தது. உடனடியாகவே முதல்வர், கடல் சார்ந்ததொழில் சங்கங்கள் என்று தகவல் அறிவிக்கப்பட்டது. விசாரணைக்குழுவும் அமைச்சாச்சு.( இது தானே முதலாவதா செய்யுற வேலை )

இதுபற்றி விசாரணைக்குழுவில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


சம்பவம் நடந்த அன்று மெரீனா கடல் கரையில் நடந்த பட ஷூட்டிங் தான் காரணம்...என்றார் .

மேலும் அங்கே நடந்த சம்பவங்களை பார்த்து அதனால் உளவியல் தாக்கம் அடைந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று மிருக வைத்தியர் கூட விஷேட பத்திரிகை யாளர் மகாநாட்டில் சொல்லியிருந்தார் .


என்ன ஷூட்டிங் என்று உடனே பொலிசு உட்பட எல்லாருமே தேடி தேடி பார்த்தால் ...... என்ன யோசிக்ரீங்களா ??



?
???
????
????
???

?
??
??


வேற என்ன நம்ம இளைய தளபதியின் சுறா படத்தின் ஷூட்டிங் ஐ பார்த்திட்டு
தாங்க முடியாமல் தற்கொலை செய்திட்டுதுகள்.. :)



குறிப்பு: சென்னையில் இருந்து தகவல் அனுப்பிய சங்கர் இக்கு வாழ்த்துக்கள்..
படம் மினஞ்சலில் வந்தது உண்மை.. இப்படியெல்லாம் நடந்ததா ..என்று போய்த்தான் பார்க்கணும் :)
ஸ்ஹபாஆஆஆஅ இப்பதான் நிம்மதியா இருக்கு.. :)

2010-01-27

ஜன நாயக நாட்டில் - இராணுவ ஆட்சி வேண்டாம் என்று தீர்ப்பு

தேர்தல் முடிவுகள் வந்து முடியும் தருவாயில் ஏற்கனவே மாண்பு மிகு ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ பதினைந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று கொண்டு இருக்கார்.
தேர்தல் இல் எந்த வித குளறு படியும் நடக்க வில்லை என்று எதிர் கட்சி தலைவர் கூட கூறிய நிலையில் , இந்த வளமான எதிர் காலத்தை உருவாக்க மகிந்தவுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள்.



அதி மதிப்புக்குரிய ஜனாதிபதி பிடிக்கிற விதத்தில் தெரியுது இல்ல..நினைச்சன் அப்பவே இதுதான் அர்த்தம் என்று .." சும்மா பேரை கேட்டாலே அதிருதில .... "

ஆமா ஜனாதிபதி அவர்களே ,அதிர்ந்தது..

எங்கள் ஜனாதிபதி நாட்டையும் வளப்படுத்து வார் என்பதில் ஐயம் இல்லை. அடுத்த ஆறு ஆண்டுகள் உங்கள் ஆட்சியில் இன்னும்பல விடிவுகள் வரணும் என்று வாழ்த்துகிறோம்.

இலங்கையில் இனி மீண்டும் வளமான எதிர்காலம் தொடரும்;தொடங்கும்.


ஜனநாயக நாட்டில் இராணுவ ஆட்சி நடக்க விடுவமா? நாங்கல்லாம் யாரு? மக்கள் தலைவன் மகிந்த வாழ்க..வெற்றியின் சின்னம் வெற்றிலை சின்னம்.

2010-01-26

!!!.....குத்துங்க ஐயா குத்துங்க.....!!!

இன்று இலங்கை ஜனாதிபதி தேர்தல், நான் என்றுமே அரசியல் எழுதுறது இல்லை. இங்கவும் அதே தான்.
வாக்களிப்பது கடமை.. கட்டாயம் வாக்களித்து விடுங்கள் . நாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து வாக்களியுங்கள்.

நான் பார்த்து ரசித்த தேர்தல் காமெடிகள் சில.. நீங்களும் ரசியுங்கள்..

1- குறள் அமுதம்

"அடிச்சு சொல்லுறன்... மாற்றம் ஒன்று தேவை..
ஆனால் மாறாது ஐயா மாறாது .. அடிச்சு சொல்லுறன்"


2 - நண்பியின் மூஞ்சி புத்தகத்தில்

கொழக்கட்டையோ மோதகமோ எதுவெண்டாலும் உள்ளுக்க இருக்கிறது ஒண்டுதான். புள்ளடியை பாத்து குத்துங்கப்பா..!


3- வடிவேல் காமெடி




4- விவேக் காமெடி




5- சத்தியராஜ் காமெடி

2010-01-22

பொங்கல் செய்வது எப்புடி.. டமிள் பொங்கள்..!

பொங்கல முடிஞ்சு ஒரு வாரமாகிட்டு. என்னடா இவன் இப்போ பொங்கல் பற்றி சொல்லுறானே .. ஆமா.. நமீதா பொங்கல் ..
சன் டிவி நடத்திய எப்படி பொங்கல் செய்வது நிகழ்ச்சியில் நமீதா கண்ணுக்கு பொங்கல் செய்து காட்டி குடுத்தார்கள் ..

நமீதா ரசிகர்கள் அம்மணி ஓரளவுக்கு முழு ஆடையில் வந்து இருந்ததால் பொங்கல் தினம் ............ தினமா கொண்டாடினதாக சொல்லப்படுகின்றது.

நமீதாவுக்கு பொங்கலென்றால் என்ன ? என்றுகேட்க .டமக்கு என்று வந்த பதில் சாப்பிட தானே.. ..சபாஷ் ... :)


இப்படி எல்லாம் அறிவு படைத்த நமீதா தான் பொங்கல் விருந்தாளி ?? பொங்கலின் வரலாறு கூட தெரியாது. பொங்கல் ஆறு கோடி தமிழர்களின் பெரும் விழா . தமிழ் புத்தாண்டு. தமிழில் கதைக்க தெரிந்த ஒருவரை கூட்ட்டிடு வந்து பொங்கல் விழாவை செய்து இருக்கலாம் .முந்தி எல்லாம் யாரவது ஒரு தமிழ் நடிகர் / நடிகை வீட்டுக்கு சென்று அங்கே நடக்கும் பொங்கல் நிகழ்ச்சியை தான் ஒளி பரப்பி வந்தார்கள். இப்போது இவர்கள் சொல்லி கொள்வது தமிழ் வளர்ப்போம் என்று அரசியலுக்கு மட்டும் .. செய்வது முழுக்க கேவலமான செயல்கள்.
உலகிலே இருக்க கூடிய மகா கொடுமை இந்த நிகழ்சிகளை நம்மவர்கள் நாக்கை தொங்க போட்டு கொண்டு பார்ப்பதுதான். :)

பொங்கலில் சேர்ப்பதற்கு diet ghee இல்லையா என்ற நமீதாவின் கேள்வியில் அதிர்ந்து போனார் சமையல் காரர் . மயக்கம் போடாத குறையாக அப்படி ஒன்றை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறி ஒருவழியாகச் சமாளித்தார்.




சமைக்க வந்தவர் பொங்கல் பற்றி தானே கதைக்கனும். அவரும் நமீதாவின் உடல் பராமரிப்பு , என்ன இது போடு வீங்க, எப்படிபோடுவீங்க என்று தான் கேட்டு கொண்டு இருப்பார்..


பொங்கலுக்கு ஒரு பெயர் வைச்சாங்க பாரு : "பொங்கல் மச்சான் பொங்கல்", நான் நினைக்கிறன் இப்ப இந்த menu வும் இந்தியாவில் உணவகங்களில் வந்து இருக்கும் என்று நினைக்கிறன்.. எங்க நிலவரம் இப்பிடி ..

விளம்பர இடை வேளை ஆரம்பம்

நண்பன் சொன்னது , நமீதா அடுத்த முறை சிக்கென் செய்வது எப்படி நிகழ்ச்சியில் வந்தால் , நமீதா சிக்கென் என்று பெயரும் வைச்சு ஒரு மெனு வந்தாலும் வரும்.. சாமியுங்கோ .. :) இது மட்டுமா.. நமீதா பாயாசம்.. நமீதா வடை எல்லாமே வந்தாலும் வரும்...

விளம்பர இடை வேளை முடிவு

ஒருவழியாகப் பொங்கல் வைத்து முடித்தவுடன் அதை ஸ்பூனில் எடுத்து அனைவரும் சியர்ஸ் சொல்லிச் சாப்பிட்டார்கள். என்ன கொடுமை என்ன இது கள்ளு கொட்டிலா அல்லது music பார் ஆ ?? சியர்ஸ் சொல்ல??



நிகழ்ச்சியின் முடிவில் தன்னைத் திருமணம் செய்துகொள்ள propose செய்யுமாறு தமிழ்நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் நமீதா விடுத்த அழைப்பு இருக்கே .. இதனால் உங்க கன பேருக்கு தபால் சிலவு வந்து இருக்கும். இப்படி எல்லாம் நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள் என்ன கொடுமை.. :)

குறிப்பு: பொங்கல் மச்சான் பொங்கல் எல்லாரையும் ட்ரை பண்ண சொல்லி இருக்காங்க..

நமீதா வாழ்க! டமிள் பொங்கல் வாழ்க! .. டமிள் வாழ்க ..!

ஒம்க்ரீம் நமீதா நமக
நமீதா சரணம்

2010-01-19

தூக்கத்தை கெடுத்த " எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி , உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி "


ராத்திரி படுப்பம் என்று போனால் ஒரு பாட்டு என்னை தூங்காமல் பண்ணி போட்டு.. எனக்கு பிடிச்ச பாட்டு.. ஒருக்கா நீங்களும் கேளுங்கள் :)

டி
ஆர் ராஜேந்திரர் இரண்டு வேடங்களில் நடித்த ( யாரோ சொன்னாங்கள் ஒரு வேடமே கொடுமை . .....இரண்டு முகத்தையா.. ஆமா... வில்லில் வந்த அப்பா விஜய் கொடுமை போல ..தங்கிக்குங்க) படம் தான் உறவை காத்த கிளி. அந்த படத்தில் வந்த ஒரு பாட்டு .. ஜேசுதாஸ், சசிரேகா பாடினது. இரவு வேளையில் winter நேரத்தில் ஜேசுதாசின் பாடல்கள் கேட்டாலே .. ஒரு வித்தியாச மான அனுபவம் தான் :)

எனக்கு ஏலுமான வரை என்னிடம் இருந்த தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி கதையுடன் கூடிய பாடலாக தருகின்றேன்..
( யார் நித்திரையை குழப்பினது என்று கேட்க வேணாம் .. அது யாருமே இல்லப்பா # SG )




கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே
நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி

தீம்தன தீம்தன தீம்தனா....தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா....தீம்தன தீம்தன தீம்தனா

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே
ஹோ..நிலவதன் தங்கை என
உன் ஜொலிப்பு சொல்லுதடி வைர சிலையே

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
வசந்தமென்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை
வசந்தமென்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை

பப பாப்ப... பாப்பா... பா பா... பபபா.பாப்பா... பா பா... பபபா......
தீம்தன தீம்தன தீம்தனா...தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா....தீம்தன தீம்தன தீம்தனா

பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா
பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா
பொய்கை வண்டாய் உன் கை மாற
மங்கை நாண செய்கை செய்தாய்
வைகைபோல் நாணத்தில் வளைகின்றேனே
வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராவிடில் நித்தம் உறங்கா விழி

தீம்தன தீம்தன தீம்தனா....தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா......தீம்தன தீம்தன தீம்தனா

பச்சை அரிசி என பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம் வேகிறது உன் நினைப்பு
பச்சை அரிசி என பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம் வேகிறது உன் நினைப்பு
வார்த்தை தென்றல் நீ வீசும்போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் ஜில் என்று நனைகின்றது
சிந்தும் தேன் கூட சிந்தொன்று புனைகின்றது

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே
ஹோ..நிலவதன் தங்கை என
உன் ஜொலிப்பு சொல்லுதடி வைர சிலையே
வசந்தமென்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை
வசந்தமென்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை



2010-01-18

படம் சொல்லும் கதை: உலகின் மிகப்பெரிய கட்டிடமான பர்ஜ் கலீபா-மீது மின்னல் தாக்கிய போது

160 மாடிகள் கொண்ட( 828m) இந்த கட்டிடம் அண்மையில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான வேளையில் எடுத்த சில புகைப்படங்கள்.


கடல் பகுதியில் இருந்து :





கடல் பகுதியில் இருந்து :


]
கடல் பகுதியில் இருந்து :



நகரப்பகுதியில் இருந்து:




தூர நோக்கில் :



கட்டிடத்துக்கு அண்மையில் இருந்து:



கட்டிடத்துக்கு அண்மையில் இருந்து:


கட்டிடத்துக்கு அண்மையில் இருந்து:



கட்டிடத்துக்கு அண்மையில் இருந்து:

2010-01-17

சிட்னியை கலக்கிய ரகுமானின் இலவச இசையமுதம்

தை மாதம் 16 ஆம் திகதி சிட்னி -ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் குடுத்து வைச்சவர்கள். இசைப்புயல் A.R.Rahuman நடத்திய இலவச இசை விருந்து தான் ..

திருட்டு காணொளிகள் பல இணையத்தில் உலாவ தொடங்கினாலும்.. ஒரிஜினல் வரும் வரை பொறுக்க முடியாது.. எனக்கு தெரிந்த வரையில் முழுமையாக உள்ளடக்கப்பட்டு இருக்குது.



காட்சி 1




காட்சி 2





காட்சி 3



காட்சி 4



காட்சி 5



காட்சி 6



காட்சி 7


காட்சி 8



காட்சி 9


காட்சி 10


காட்சி 11


காட்சி 12




காட்சி 13


காட்சி 14

மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு -

அப்போது பல்கலைக்கழக அனுமதி கிடைத்து விட்டது. கொழும்பில் தனியார் கணணி மையத்தில் இரண்டு வருட டிப்ளோமா முடியும்காலம், முதல் முறையாக சகோதர மொழி மாணவர்களுடன் பழகிய காலங்கள். இன்றும் அவர்கள் எனது நண்பர்களா இருக்கிறார்கள். வார நாட்களில் கணணி மையத்தில் தான் காலத்தை போக்குறது.

யாழ்ப்பாண பிள்ளைகளை, முன்னர் அங்கு இருந்த காலத்தில் ஒரு சிலருடன் கதைத்து ,சில வேளைகளில் கதைக்காமல் தவிர்த்து ரொம்பவே பீல் பண்ணி இருந்த காலத்தில் தான் , இப்படி யான புது அனுபவங்கள் இந்த புது முகங்களுடன்.



நான் படித்த வகுப்பில் ஆறே ஆறு பையன்கள்(மூன்று சகோதர மொழி, நானும் கரனும் மற்றது இன்னொரு கொழும்பில் வளந்த பையன் - கொழும்பு பையன் ). மிச்சம் எல்லாமே ( பதினனைந்து) தமிழ் சகோதரிகள். யாரு என்றெல்லாம் கேட்க கூடாது. அதில பாதி தமிழே கதைக்காம , எதை கேட்டலும் ஆங்கிலத்தில் எங்களையும் கதைக்க வைக்க முயலும் சகோதரிகள். அவங்களை பற்றி சொல்லணும் என்றால் ( கட்டமைப்பை ) , நமீதா மவளிகாவே தோத்து போயிடுற அளவுக்கு ....... அல்லாத பிகர்கள். மீதி சைவப்பழங்கள். பட்டை தீட்டி தான் அங்கேயும் வருவினம். போனால் போகுது ஒரு மகாலட்சுமி மாதிரி என்று சொல்லுவம்.

விளம்பர இடைவேளை ஆரம்பம்

வேறு வகுப்பில் படித்த நண்பர் ஒருத்தன் சொன்ன ஞாபகம் இருக்கு.. "டேய் உங்கட வகுப்பில எல்லாமே பெண் பிள்ளைகலாமே " ஆமா நாங்க எப்படி தான் ஆண்பிள்ளைகளாய் இருக்கிறது.. அதுகளே மாத்தி போட்டுதுகள்.. என்று உடனே வெட்கம் , மானம் ,ரோஷம் ,சூடு சுரணை இல்லமல் சொல்லிப்போட்டேன்.:)

விளம்பர இடைவேளை முடிவு


எங்களுக்கும் வகுப்பு போறதென்றால் ஒரே கிளு கிளுப்பு. அதுவும் காலை தொடங்கினால் மாலை 4:00 மணி வரை வகுப்பு., பின்னர் எங்கள் கணணி மையத்துக்கு அருகாமையில் உள்ள , MC இல் இருக்கிற KFC இக்கு போறது ( கூட்டிட்டு இல்ல ,கூட்டி கொண்டு போவினம் )..அப்போ எல்லாம் கோழி விலை குறைவு ..:( இப்ப எல்லாம் அப்படி யாரும் கூட்டிட்டு போக கட்டு படியாகாது ..கோழி 1000 ருபாய்.


இப்படி
இருக்கிற காலத்தில் நம்ம கரனுக்கு ஒரு கொழும்பு பெண் மீனாட்சி என்று சொல்லுவம் சுருக்கமாக, அவள் மீது ஒரு கிக்கு ,லவ்வு ,நாங்க சும்மா இருப்பமோ வாற போற நேரம் எல்லாம் அவளை பார்த்து எங்கட ஸ்டைல் இல் " யாரோ தங்களை லவ் பண்ணினம் போல , நீங்க வர வர புதுசு புதுசா உடுப்பு போடுறீங்க" என்று சொல்லி அவளுக்கும் அலுத்து போச்சு.. மீனாட்சிக்கு எங்கள் மூவரில் யாரு என்று தான் சந்தேகம். அவளும் ஒவ்வொருத்தரா பரீட்சித்து பார்த்தாள். நாங்களும் பரீட்சையில் ஒரே மாதிரி பதில்கள் வழங்கி அவளை குழப்பினோம்.


இருந்தாலும் பொண்ணு மட்டரில நாங்க சறுக்குவம் என்று தெரியாமல் இல்லை அவளுக்கும். இப்படி இருக்கும்போது தான் தென் இலங்கை சுற்று பயணம் , இரண்டு நாட்கள் .வகுப்பில் ஒரு சகோதரியை தவிர எல்லாரும் வர கூடிய தாய் இருந்தது.. நாங்க விடுவமோ. எங்க பஸ் வண்டிக்கையே எங்க சகோதரிகள் , எங்க நல்ல காலத்துக்கு விசிறிகள் வேற பஸ் வண்டிக்க. கொழும்பை தாண்ட முதலே ஆட்டம் பாட்டம் .. சூப்பர்.
என்னட்ட இருந்த ஒரு சில பாட்டுகள் ( அப்போ தான் தேவா என்னை டப்பான் குத்தால் கவர்ந்த நேரம்) அவரின் பாட்டுகள் தான். நாள் முழுக்க ..:) முக்கிய விஷயம் நாங்க ஆட இடமிருக்கவில்லை . இருக்கிற பொண்ணுகள் எல்லாமே ஆட தொடங்கிற்றுதுகள். துப்பட்டாவை இடுப்பில் கட்டி போட்டு ஆட தொடங்க நாங்க முழு நாளும் அங்க விழுந்து இங்க விழுந்து ஓவ்வொரு கோணத்தில் படம் எடுத்த தான் வேலை :) நான் இல்லை .. எல்லாருமாய் ..

போட்ட பாட்டுகளில் ஒரு சிலவற்றை அப்பப்போ இங்கே இணைத்துள்ளேன்.

முதல் நாள் கதிர்காமம் , மலை ஏறினது ; முருகன் என்று போய் முடியவே இருட்டிட்டு.

இரவு ஒரு நல்ல சாப்பாடு ( என்ன ...குக்குள் மஸ் , பொல் சம்போல், பத், கங்குன் ) . ஒரு விசிறி மாணவனின் வீட்டில் தான். அனுபவம் அவங்கட சாப்பாடு சாப்பிட்டு.. இப்போ எல்லாம் அதுதான் கூட சாப்பிடுறது. செலவும் இல்லை .. :)

இரண்டாம் நாள் மாத்தறை ,காலி என்று போனாலும் கூட நேரம் பஸ் பயணம் தான். பாட்டு பெட்டிக்கு ஒய்வு இல்லை. பொண்ணுங்க ஆட்டமும் தொடர்கிறது.

நாங்களும் எப்படியாவது இந்த லவ் மட்டரை சொல்லியே ஆகணும் என்று , தொடங்கியாச்சு. முதலில தூரவா (பஸ் இக்க போய் நின்றுகொண்டு தம்பி பாட்டை போடுடா என்றதும் போட்டேன் அந்த பாட்டை )



அதுதான் மீனாட்சி மீனாட்சி .. ஆனந்த பூங்காற்றே .. அதோட எல்லாரும் எங்க மற்றைய சகோதரிகளும் சேர்ந்து மீனாட்சி அப்படி என்ன தான் காதல் என்று சொல்ல .. பின்னுக்க இருந்த நான் கரன் என்னவாம் என்றேன்.. ஒருக்கா சப் என்று போச்சு.. பிறகென்ன ட்ரிப் எப்படி இருக்கும் என்று தெரியும்தானே ..
மீனாட்சி அழ தொடங்க , எல்லாரும் என்னை பேச, கரன் உவங்கள் போய் என்று சொல்ல ,, நான் தனியவே நின்று வேண்டி கட்டினது தான் .. ( இது வழமை தானே - வடிவேலு ஸ்டைல் இல் .ம்ம்ம்ம்ம்ம்......................)

ஒரு இரண்டு மணி நேரம் பஸ் டிரைவர் நிம்மதியா பஸ் ஒட்டி இருப்பான். அப்புறம் மாலை பேருவல கடல் கரையில் ஒரு சில மணி நேரம் .. அதுக்கு பிறகு எல்லாருமா சேர்ந்து வந்த trip ஐ முதலில் முடித்து போட்டு பிறகு கதைப்பம்..

அதுக்கு பிறகு எங்கே தேவா .. எல்லாமே .. எங்கட சோகமான ஆட்டம் தான்.. அப்போது தான் நாங்கள் ஆடினது.. நிம்மதியா .. :)




அதிலும் முக்கியமாய் அஞ்சலியை மடிக்கலாம் என்ற பாட்டுக்கு ..எங்களை மறந்து ஆடினது மறக்க முடியாது..




அஞ்சலியை மடிக்கலாம் :)

ஒரு மாதிரி அந்த பொண்ணுகளும் எங்கட ஏதோ ஆடினதை பார்த்தோ தெரியல .. கொஞ்சம் வெளிப்பாய் இருந்ததை காண கூடியதை இருந்தது ..



போதிக்கின்னு.. :)

இப்படியே வந்து சேர்ந்திட்டம் .. சந்தோஷமான ஆரம்பம் பெரிய வெற்றி இல்லாமல் முடிஞ்சு போச்சு .. ஹா ஹா ..

அடுத்த நாள் வகுப்புக்கு போகும்போது மீனாட்சி நெருப்பு எடுத்ததை பார்த்த போது ,,.. காளி வேஷம் தெரிஞ்சது.. எப்படி.. சமாளிக்க முடியுமோ.. அப்படி எல்லாம் சமாளிச்சு பார்த்தேன்,.. முடியவே இல்ல ..
இருந்தாலும்.. எங்கட tune எல்லாமே அந்த மீனாட்சி பாடல்தான்.. " அடி அடிச்சால் அம்மியும் நகரும் " என்று எங்கட சங்கத்தின் திருநாமம் ,.,,. முயற்சி செய்து செய்து ,, மீனாட்சி ஒரு கட்டத்தில்( ஏறத்தாள இரண்டு ஆண்டுகள் மேலான காதல் .. முடிவுக்கு வந்தது..) ..

விளமபர இடைவேளை ஆரம்பம்

அதாவது நான் பல்கலைக்கழகம் போற காலத்தில்,( இங்கே ஒன்றை சொல்லணும் .. எங்கட கம்பஸ் இல் போய் படிக்க தொடங்கின பிறகு) , யாரோ ஒருத்தன் என்னை கொழும்பில் கேட்டன் மச்சான் . உனக்கு ராசிடா... கொழும்பில இவளவை ,, கம்பஸ் இல் அவளவை... நான் சொன்னேன் " தேரான தேரெல்லாம் தெருவில் ஓட , தேவாங்குகள் மட்டும் கம்பஸ் வருமாம் " இப்போ இதை தத்துவம் மாதிரி .. ... எடுத்து வைச்சு இருக்கானாம் .. அவன்.. இது பத்து வருஷத்துக்கு பின்னர் சொன்னான் .. எனக்கு:)
)


விளமபர இடைவேளைமுடிவு


ஒரு நாள் கரன் எனக்கு " தொல்லை" பேசியில் மச்சான் மீனாட்சி என்னை வரட்டாம் KFC இக்கு ..தானும் ஏதோ கதைக்க வேணுமாம். அப்ப எனது அறிவுரை தம்பி தனியே போயிடாதே ,,, அடியாள் வைச்சு அடிக்க போறாளோ ..அல்லது ... காதலை சொல்ல போறாளோ.. இல்லை ... நான் வேறை யாரையோ காதலித்து விட்டேன் ,,, என்று.. சொல்ல ..போறாளோ .,.. என்ற ஏக்கத்துடன் கூடிய அறிவுரையை சொன்னேன்..

அங்கே ..நடந்தது என்ன.. கரனின் நிலைமை என்ன.. அடுத்த வாரம் தொடரும்.,.

(சீரியல் எல்லாம் பார்த்து பொறுமையா இருக்குறவர்களுக்கு.. பரவாய் இல்லை மற்றையோர் மன்னிக்கணும்.. நேரம் இல்லை எழுதி முடிக்க ... :)

2010-01-13

என் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

என் இனிய நண்பர்களுக்கு : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ; தைப்பொங்கல் வாழ்த்துக்கள்;

மலரும் புத்தாண்டில் வாழ்க்கையில் அனுபவித்த மனக் கவலைகள், கஷ்டங்கள் யாவும் நீங்கி இன்பம் பிறக்க வேண்டும் :)


சும்மா கீறி விளையாடினது

புத்தாண்டில் பார்த்தவை :

பொது நடை முறையில் :

இனிய புத்தாண்டில், தமிழர் வாழும் பிரதேசங்களில் பெரும்பாலும் கடைகள் பூட்டு. வீடுகளில் குடும்பமாக தங்கி இருக்காமல் வேலை நிமித்தம், அல்லது தொழில் நிமித்தம் வந்து கடைச்சாப்பாட்டை நம்பி இருப்போர் இக்கு பட்டினி நாள் ;
பல்கலையில் படித்தால் அங்கே கோவில் இருந்தால் அங்கே தஞ்சம் , இல்லாட்டி எங்கட கொழும்பு பிள்ளையார் அவருக்கு பக்கத்தில இருக்கிற கடை எப்புடியும் மத்தியானம் மட்டும் திறந்து வைச்சு இருப்பாங்கள்.. backup எடுத்து கொண்டு போனால் சரி.

வீட்டில் :

சீரியல் பார்க்கும் அக்கா தங்கை அம்மா அம்மாம்மா மற்றும் மாமி மார்களுக்கு தலையிடி நாள் :
  • வீட்டுக்கு வரும் விருந்தினருடன் உரையாடுவதால் அன்றைய ஒளி பரப்பை பார்க்க முடியாது போகல்.
  • விருந்தினர் வீட்டுக்கு போவதாலும் ( சில வேலைகளில் அங்கே போய் , ஒரு கூட்டாக பார்க்கலாம் ).
  • வீட்டில் கணவன் பிள்ளைகள் எல்லாரும் நிற்பதால் அவர்கள் விருப்பப்படியே தொலைக்காட்சி இயங்கும். அதனால் நாள் முழுக்க மூஞ்சியை தொங்க போட்டு கொண்டு இருத்தல்.

தைப்பொங்கல் 2009
இது இவர்களுக்கு, இனி பொதுவாக சட்டலைட் உள்ள வீடுகளில் , தெனிந்தியா திரை நிகழ்ச்சிகள் களை கட்டும்.

அவற்றுள் பார்க்க கூடியவை :

அதிகாலையில் ஒளிபரப்பபடும் இசைகச்சேரி , எதாவது சுவையான விவாத அரங்கு, கொமெடி நிகழ்ச்சிகள். சில பழைய திரைப்படங்கள்

சகிக்க முடியாதவை:
  • 'தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முதலாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன (வந்த முதல் நாளே காணாமல் போன! படங்கள் போட்டால்
  • தமிழே தெரியாத நடிகைகளின் பேட்டிகளையும் ( அதுவும் நெத்தியில் நிக்கும்முடியை 100 தரம் இழுத்து இழுத்து பேட்டி குடுக்கும் ) ..
  • நிகழ்ச்சிகளுக்கு இடையில் போடப்படும் விளம்பர ...இடை வேளை.
இத்தனையும் பொறுத்து தான் இந்த நாளை கழிக்க வேண்டி இருக்கும். இருந்தாலும் இது எங்கள் புத்தாண்டு .. இனிதாய் கொண்டாடி மகிழ்வோம்.

தைப்பொங்கல் வரும் போது "தை"யைக் குறிக்கும் பாடல்களும் நினைப்புக்கு வரும். எனக்கு விருப்பமான பாட்டு இதுதான். மற்றைய பாடல்கள் தை என்று தொடங்கினாலும் உள்ளே காதல் ரசம் கொட்டும் விதத்தில் அமைந்து இருக்கும். உதாரணமாக பூப்புக்கும் மாதம் தை மதம் , மஜா படத்தில் வரும் தை மாதம்...




மறக்காமல் பட்டி பொங்கல் பற்றியும் சொல்ல வேண்டும். உழவு தொழிலுக்கு
உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும் "மரியாதை' செய்யும் விழாவாக
"மாட்டு பொங்கல்' அல்லது "பட்டி பொங்கல்' இருக்கின்றது. ஒரு காலத்தில் மாடுகளுடன் வாழ்ந்தனான்.. இப்போது இல்லை .. கவலை தான்..:)

2010-01-10

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ; டாக்டர் கே,ஜே .ஜேசுதாஸ்



இன்று தை 10. தெனிந்திய இசையுலகத்தின் முத்தான பாடகர் டாக்டர் கே.ஜே ,ஜேசுதாஸ் தனது எழுபதாவது வயசில் காலடி எடுத்து வைக்குறார்..



எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இந்த வாரமே ஒரே பிரபல்யமான பெருந்தலைகள் பிறந்த நாள்கள் தான் ..
ரகுமான், ஹரிஷ் ஜெயராஜ் .. மற்றும்... ..:)

Kattassery Joseph யேசுதாஸ் என்ற தனது இயற்பெயரையே சுருக்கி அழகாக ஒரு ராசியான பெயருடன் கொச்சி கேரளாவில் பிறந்து இற்றைக்கு இவர் கடந்த தசாப்தங்கள் பல. இன்றும் இவரது பாடல்களை ரசிக்கலாம்.குறிப்பாக எந்த நேரத்திலும்.. :)

இவரின் இசைத்துறையில் இவருக்கு கிடைத்த ஒரு சில மதிப்புக்கள்:

ஆங்கிலத்திலே தருகின்றேன் ; மொழி பெயர்க்க நேரம் இல்லை

1965- Invited by the then Soviet government to perform music concerts in various cities of USSR.
1969- Best play back singer Malayalam. Starting from its inception in 1969 he got this award for a record number of times so from 1987 to 1991 he opted out of the race to facilitate opportunities for fresh talents.
1972 -National Award for the Best Playback SingerSong-Manushyan Mathangale Srishtichu (Achanum Bappayum-Malayalam )
1973-National award for Best Playback SingerSong - Padmatheerthame (Gayatri-Malayalam)
1973 -Padma Shri
1974 -Sangeetha Raja
1979 -National Award for the Best Playback Singer.Song-Gori Tera (Chit Chor-Hindi )
1985-National Award for the Best Playback Singer.Song-Akashadeshamu (Meghasandesham-Telugu)
1987-National Award for the Best Play back singer Song-Unnikale Oru Kathaparayam (Unnikale Oru Kathaparayam-Malayalam)
1988 -'Sangeetha Chakravarthy'
1989 -'Sangeetha Sagaram'
1988 -Best play back singer for the year from TamilNadu and Andhra Pradesh
1989 -Annamalai university honored him with a doctorate
1991- National Award for the Best Play back SingerSong-Ramakatha Ganalayam (Bharatham-Malayalam)
1992 -Sangeeta Nataka academy conferred the title of 'Aashtana Gayakan '
1992- Madhya Pradesh government gave the annual ' Latha Mangeshkar award'
1992 -Tamil Nadu state Government award for the Best playback singer .
1992 -He received the distinguished honor of "Star of Cochin" from the citizens of Cochin.
1993-National Award for the Best Playback Singer Film Sopanam-Malayalam
1994- For his unique contribution in the field of music, on World Peace Day, 1994, Mother Theresa of Calcutta honored him with the ' NATIONAL CITIZENS AWARD'
2002 -'Swati Ratnam' by the Malayalee club
2002 -'Padma bhushan'
2002 -'Lifetime Achievement Award' given by the Zee-Gold Bollywood Music Awards
2002 -`Ranjani Sangeetha Kalasagara' Ranjani Trust in Chennai gave him the title 'Bhakti Sangita Geetha Sironmani' jointly by the Thirupoonthuruthy Sri Narayana Tirtha Swamigal Trust and Saraswathi Vaggeyakara Trust.
2003- D.Litt from the the University of Kerala for his outstanding contributions in music
2003 -Has been nominated for this year's J C Daniel award, the highest honour given by the Kerala State Government to those in the field of Malayalam பிளம்ஸ்

தமிழ் சினிமாவே பெரும்புள்ளிகளை ஓரங்கட்டி வைத்து விட்டு சகிக்க முடியாத பாடகர்கள் மூலம் தான் பாடல்களை உருவாக்குது.

எனக்கு பிடித்த பாடகர்களில் இவர் தான் முதல் இடம்.. இன்றும் மறக்க முடியாத பாடல்களில் ஒரு சில இங்கே தருகின்றேன்.


எனக்கு சோகப்பாடல்கள் என்றால் இவரின் பாடல்கள் தான் முதல் இடம் :)


வாழ்வே மாயம் :



கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல் :



மறக்கமுடியாத ரசிகன் ஒரு ரசிகை படத்தில் ஏழிசை கீதமே :
http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.5231/


அதிசய ராகம் ;




அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே




ஒரு பெண் புறா :




இந்தியன் ; பச்சைக்கிளிகள் தோளோடு





மூன்றாம் பிறை :




முத்து மணி சுடரே வா...:




முரளியின் மிட் நைட் மசாலா :





இராகோழி இரண்டும் முழிச்சு இருக்கு



இப்படியே அடுக்கி கொண்டு போகலாம்;


இறுதியாக அவர் மகள் :




இவர் இசைப்பயணம் தொடர வாழ்த்துக்கள் :

தகவல்கள் :http://en.wikipedia.org/wiki/K._J._Yesudas_discography
Related Posts Plugin for WordPress, Blogger...