2010-02-25

இதமான இரவில் நிறைந்த சுமைகளை இறக்கி வைத்து விட்டு கேட்க கூடிய பாடல்கள் II

குறுகிய பயணமாய் ஊருக்கு வந்த நான் மீண்டும் ஒரு மேற்குலக ஊர்ருக்கு நாளை பயணமாக இருக்கின்றேன். அதுக்கான தயாரிப்புகள், நண்பர்களின் வருகை என்று இரவு ஒன்பது மணி கடந்து விட்டது. சாப்பிட்டு அம்மாவுடன் கடந்த கால கசப்பான அனுபவங்களை உரையாடி விட்டு , ராத்திரி பத்து மணி , வீட்டில் பாயை ( இவ்வளவு காலமும் ஐரோப்பாவில் என்ன buildup எல்லாம் குடுத்து தான் படுத்து எழும்பிறது ) விரித்துப் போட்டு படுக்கும்போது, எனது இணைய வானொலி இதமான இரவில் நிறைந்த சுமைகளை இறக்கி வைத்து விட்டு கேளுங்கள் என்ற தனது வழமையான சேவையை ஆரம்பித்தது.

============விளம்பர இடை வேளை================
கட்டிலில் படுத்தால் உருண்டு புரள ,விழ உடம்பு விடாதாம் என்று அடிக்கடி என்ற ரூமா சொல்லி, கம்பசில படிக்கிற காலத்தில என்னை விட எல்லாருமே பாய் தான் :)
காரணமா :=============>
கட்டாந்தறையில் ஒரு துண்டை விரித்தேன்
கண்ணில் தூக்கம் சொக்குமே அந்து அந்த காலமே
மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லே அது இந்த காலமே
<============================== சொல்லுவினம் .. ரொம்பவே ஓவர் தான் .. :) உண்மையில உடம்பு கூடின ரூமா நான்தான் ..:) இருந்தாலும் எனக்கும் பாய் தான் விருப்பம் .. இவங்கலால double பெட் இல் கடைசியா நான் தான் படுக்கிறது.

============விளம்பர இடை வேளை================


(இந்த பாயிலையும் பனையோலைப்பாய்,.. தான் நல்லமாமே )

தினமும் நள்ளிரவை கடந்த வேளைகளில் ஒலிக்கும் இதமான பாடல்களை இந்த அலைவரிசையில் கேட்பதுவும் அதில் எனக்கு பிடித்த பாடல்களை ஆங்காங்கே தேடிப்பிடித்து போடுவதும் எனது கடந்த கால அனுபவங்கள். இன்றைய நாளில் வந்த பாடல்களில் முத்தான மூன்று பாடல்கள் நான் ஒரு சில தடவைகள் கேட்டு உள்ளேன்...இருந்தாலும் என்னமோ நீண்ட நாட்களுக்கு பின் கேட்கும்போது அதுவும் எங்கட வீட்டில் இருந்து கேட்கும் போது வரும் ஆனந்தம் என்றுமே மிகையாகாது. அம்மாவின் வழமையான ஒடர் : தம்பியவை உதுகளுக்கு கிட்ட படுக்காதையும் , நாங்களும் சொல்லுறது தூரத்தில தான் படுத்து இருக்கேன்,,, என்று.. :) உண்மையாவே ஐரோப்பாவில் இருந்த போது பக்கத்தில தான் பாட்டு பெட்டியும் , லேப்டாப் இம் . தூங்கிட்டே இருக்கும்போது இடைக்கிடை எழும்பி யாருக்காவது அழைப்பு செய்வதும், இல்லாட்டி farmville விளையாடுவதும் ஒரு வழமையான ஒன்றே,



சரி இந்தாங்க இன்றைய பாட்டுகள் :

1) நீ பௌர்ணமி ... ஜேசுதாஸ் ஐயா பாடின மெகா கிட்டான பாடல்:




2) ஆலமரம் மெல்ல வரும்




3) மீரா படத்தில் வந்த ஜேசுதாஸ் பாடின - புது ரோட்டில தான்

2010-02-23

எனக்கு பிடித்த சொக்குதே மனம்

தென் இந்திய தமிழ் தொலைக்காட்சிகள் பெரும்பாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளையே கொண்டு தான் காலத்தை ஓட்டி கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு தொலைக்காட்சியும் வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனது.

சில இருக்கிற எல்லா சீரியல்களையும் போட்டு காலத்தை ஒட்டி கொண்டு இருக்கின்றன . அந்த சேனல்களை நான் இங்கே கருத வில்லை. அதே போல் சினிமா, டாப் டென் பாடல்கள், திரை விமர்சனம், டாப் டென் திரைப்படங்கள், சமையல் சமையல் ( இது கடுப்பு ஏத்தும் நிகழ்ச்சி ) இவையும் இங்கே நான் கருத வில்லை.

சன் டிவி யில் பெரும்பாலும் அசத்தபோவது யாரு, தயாரித்து வழங்கும் காமெடி டைம் எல்லாரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகள்.

ஜெயா டிவி யில் வரும் ராக மாலிகா, என்னோடு பாட்டு பாடுங்கள் ( இது இப்போது இல்லை) போன்றவையும் ,

அதே போல் கலைஞர் டிவி யில் , பாட்டுக்கு பாட்டு , மானாட மயிலாட போன்றவை பிர பல்யமானவை. ( வேறு ஏதும் இருந்த மன்னியுங்கப்பா)

எனக்கு தெரிந்த நண்பர்களிடம் நான் கேட்பது அடிக்கடி யாரவது சொக்குதே மனம் என்ற இசை நிகழ்ச்சி நடப்பது தெரியுமா என்று ?? யாருமே அதை பார்ப்பதாக சொல்லவுமில்லை. சிலர் அப்படி ஒன்று இருக்கா என்று கூட கேட்டார்கள்.

இதுக்காக எல்லாருக்காகவும் சேர்த்து ஒரு சிறு தொகுப்பை தருகின்றேன்.

சொக்குதே மனம்
இரவு ஒன்பதரை மணி முதல் பத்து மணி முதல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் இந்தவித்தியாசமான நிகழ்ச்சியில் மனதைக் கரைக்கும் அருமையான பழைய ஹிட்பாடல்களை ரீமிக்ஸ் செய்து பாடிக் காட்டி அசத்துகிறார்கள்.

http://www.jayanetwork.in/PgView.asp?ref=௰௪௭

ராத்திரியாச்சுன்னா, மிட் நைட் மசலாக்களைப் பார்த்து விட்டு தூங்கப் போகும் சகலமகா ஜனங்களுக்களையும் நல்ல திசையில் திருப்பும் வகையில், சொக்குதே மனம் என்ற ஒரு அருமையான வித்தியாசமான நிகழ்ச்சியைப் போட்டு வித்தியாசமான விருந்தைப்படைத்து வருகிறது ஜெயா டிவி.



ப்ரியா சுப்ரமணியன்

தொகுத்து வழங்குவதிலும் பார்க்க, பூத்து குலுங்கும்புன்னகை , இனிமையான குரல், அணிந்து இருக்கும் ஆபரணங்கள் , விதம் விதமான சேலைகள் என்று சொல்லி எல்லாரையும் ஆட்டம் காண வைக்கின்றார் பிரியா சுப்ரமணியன்.

மேடையமைப்பு : கலர் கலரான மின்குமிழ்கள், அழாகான ஓவியங்கள், பிரமிக்க வைக்கும் சிற்ப வேலைப்பாடுகள் என்று நீட்டி கொண்டே போகலாம்.


sokuthegthr
Geüpload door facetamil. - Het hele seizoen en gehele afleveringen online.

பாடகர்கள்: யார் குரலிலும் பாடும் வல்லமை கொண்ட பாடகர்கள் , பாடகிகள். அதுவும் பழைய ஆண் குரல்களான ராஜா, சௌந்தராஜன் ,ஸ்ரீநிவாஸ், பிறகு ஜேசுதாஸ் , பாலா , இளையராஜா , ஜெயச்சந்திரன் ,வாசுதேவன் என்று எல்லா குரல்களும் இருக்கும். அதே போல பெண் குரல்களான ஜானகி, ,சுஷீலா என்று நீட்டி கொண்டே போகலாம்.

இசைக்குழு: தரமான குழு , ஒரு இசை நிகழ்ச்சி நடத்த தேவையான எல்லா விதமான இசைக்கருவிகளும் , வித்துவான்கள் போன்ற கலைஞர்களும் இருப்பார்கள்.


Sokkuthe Manam - 28-09-08 - Part-1 - Free videos are just a click away


இந்தியாவில் இந்த நிகழ்ச்சி பெரும் கிட். பழசுகள் சரி, புதுசுகள் சரி விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி.

திரைப்பட வீடியோ கலவையுடன் தரமான ஒலி, ஒளியமைப்புடன் ஞாயிறு இரவில் சொக்குதே மனம் ரசிகர்களை சொக்க வைத்து விட்டு செல்கின்றது. நான் இந்த நிகழ்ச்சியை நீண்ட நாட்களாக பார்த்து ரசித்து வருகின்றேன்.
அதிலும் குறிப்பாக இறுதியாக ஒரு சூப்பர் கிட் இளையராஜாவின் இசையில் வந்த சூப்பர் கிட் பாட்டை பாடி எல்லாரின் மனதையும் திருடியது மட்டும் இல்லாமல்
வசிகரீத்தும் செல்வார் சிரிப்பழகி ப்ரியா .



Sokkuthe Manam - 19-10-08 - Part-1 - These bloopers are hilarious

ஒரு சில காணொளிகளை இங்கே இணைத்தும் உள்ளேன். உங்கள் மனங்களை இது சொக்கி இருந்தால் எனக்கும் சந்தோசம்.

இறுதியாக வசீகரா ரீலு :




தொகுப்புக்கு செல்ல :
http://www.thamil.org/teledramas/?id=113&programme=Sokkuthe%20Manam

2010-02-19

இதமான இரவில் நிறைந்த சுமைகளை இறக்கி வைத்து விட்டு கேட்க கூடிய பாடல்கள்


தற்போது ஒரு புற நாட்டில் ஏதோ கல்வி சம்பந்தமான வேலையில் வந்து நிக்குறோம். விமான நிலையத்தில் மூன்று மணி நேரம் வெள்ளனவே ஆஜரானதால் ஒரு கரையாக இருந்து ஒருக்கா இந்த ஒரு இரண்டு பாட்டுகளை கேட்டால் ஏதோ இருக்கிற சுமை எல்லாம் இறங்கி ஓடினதாகவே இருக்கும்.. என்று இணையத்தில் எனக்கு பிடித்த ஒரு சில பாட்டுகளை கேட்டு ரசித்தேன்......
அவற்றில் சில உங்களுக்கும்..



கட்டு மஸ்தான மோகினி

முதலாவது சின்னக்குயில் சித்ராவின் குரலில் வந்த சொந்தம் வந்தது வந்தது...
இந்த பாட்டை சித்திரா பாடும் போது பாட்டை ரசித்து கேட்டு ஒரு நிகழ்ச்சியில் அழுத நடிகை கூட இருக்கு.. :) கேட்டு பாருங்க..

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும் ....... பாசங்கள் போகாது மாமா
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது
மாசங்கள் போனாலும் வருசங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது


கண்ணேன்னு சொல்ல வேண்டாம் கிளியேன்னு கிள்ள வேண்டாம்
கண்ணாலே கொஞ்சம் பொறு போதும்
நீ வாழும் வீட்டுக்குள்ளே நீ போடும் கோட்டுக்குள்ளே
நீங்காம இந்த பொண்ணு வாழும்
உன்னையே நானே உசுரா தானே
நினைச்சேன் மாமா நெசந்தான் ஆமா
நான் வாங்கும் மூச்சிக்காத்து உன்னாலதான் உன்னாலதான்
ஓயாம உள்ளஞ்சொல்லும் உன் பேரை தான் உன் பேரை தான்
சொந்தம் பந்தம் நீ.....
(சொந்தம் வந்தது..)

பூப்போல தேகம் தொட்டு சோப்பாலே தேச்சி விட்டு
நீராட்ட நீயும் ஒரு சேய் தான்
வாய்யான்னு உன்னை கொஞ்சி வாயார உன்னை சொல்லி
சோரூட்ட நானும் ஒரு தாய் தான்


இரவா பகலா இருப்பேன் துணையா
கண்ணீர் வடிஞ்சா தடுப்பேன் அணையா
போகாது உன்னை விட்டு என்னாசை தான் என்னாளும்தான்
போனாலும் மண்ணை விட்டு பொட்டோடுதான் பூவோடு தான்
வாழ்வோம் மாமா நாம்....
(சொந்தம் வந்தது..)

இரண்டாவது பாட்டை நான் முக வலையில் இணைத்து இருந்தாலும் அந்த அழகிய குரலில் ராஜா அங்கிள் பாடும் போது என்னமோ தெரியல தொடர்ந்து கேட்டிட்டே இருக்கலாம் மாதிரி.
மோகினி நடிகையின் ஆரம்ப கால நடிப்பில் (1991 இல் ) வந்த நாடோடி பாட்டுக்காரன் படத்தில் ...


அப்புடி இருந்தனான் இப்படி ஆகிட்டேனே :)


மூன்றாவது முத்தான பாட்டு தான் : பனி விழும் இரவு - மௌனராகம்
ரொம்ப நாளாவே ... பிடிக்கும்.. :) ஜானகி எஸ் .பி . ராஜா அங்கிள் போட்டு தாக்கி இருக்கினம்.



நான்காவது :இது சின்ன பூவே மெல்ல பேசு படத்தில் வந்த சின்ன பூவே மெல்ல பேசு பாட்டு..



இறுதியாக கட்ட பொம்மன் படத்தில் வந்த .. ஒ.. ப்ரியா ப்ரியா.. எனக்கு பிடித்த பாட்டு.. எங்க இந்த பாட்டு போனாலும் நின்று கேட்டுட்டு போவேன் ,,, அப்படி ஒரு ஆசை இந்த ப்ரியா வில்
எனக்கும் வீட்டு பேர் ப்ரியா தானே ..:)

2010-02-13

காதல் தோல்விகள் கூட ஒரு சுகம் தான் .. :)

இன்று காதலர் தினம்..

காதலர் தினம் கொண்டாடும் .. ஒரு தலைக்காதல், கண்டதும்காதல், நிண்டதும் காதல், உண்மைக்காதல் , இரு
தலைக்காதல், கள்ளக்காதல் என்று எல்லாக்காதல் நண்பர் களுக்கும் .. அவை எல்லாம் வெற்றி பெறவாழ்த்துக்கள்.

சந்தேகம் ???
இன்று காதல் ஜோடி களுக்கு மட்டும் தானா தினம்? இல்லை காதல் ( அன்பையும் குறிக்கும் ) கொண்ட (பெற்றோர் மீது , படிக்கும் பாடம் மீது, இல்லாட்டி ஒரு பிரபலம் மீது , அரசியல் வாதி மீது ) இவர்களுக்கும்... காதலர் தினம் தானே ???


காதல் ஜோடிகளுக்கு எத்தனையோ பேர் வாழ்த்து தெரிவித்து கொண்டு இருக்கும் நேரத்தில்.. கொஞ்சம்..நான் ... ...

காதலில் தோல்வியுற்றோருக்கு யார்தான் ஆறுதல் சொல்வது. அவர்களையும் இன்று மறக்க கூடாது. அவர்கள் அந்த வலியில் மூழ்கி கிடக்கும் நேரத்தில்..

சரி நாங்கள் ஆறுதல் சொல்லும் அளவுக்கு வளரவில்லை .. இருந்தாலும் என்றோ ஒரு நாள் நீங்களும் ஆறுதல் அடைய வேண்டும்...

பாருங்கள் காதல் தோல்வியால் வந்த வலி செய்யும் வேலைகளை ..


பாருங்க வீட்டில் அம்மா, அப்பா, சகோதரங்கள் , நண்பர்கள் என்று எல்லாரும் அந்தரித்தே போய் விட்டார்கள் ..

என்றையோ ஒரு நாள் சுட்டது:)

காதல் தோல்வியா?
அழு...
வாய்விட்டு அழு...
கதறிக்கதறி அழு...
உன்
கண்ணீரோடு காதலும்
கரைந்து போகும்வரை
அழு...
பின்பு
உலகத்தைப் பார்...
காதலையும் மீறி
எத்தனையோ அழகுகள்...
காதல்தோல்வியும் தாண்டி
எவ்வளவோ பிரச்சனைகள்...
அழகுகளை ரசிக்கக்
கற்றுக்கொள்...
பிரச்சனைகளை தீர்க்க
பழகிக்கொள்...
வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை
புரிந்துகொள்...!

பெற்றவள் இறந்தாலே
கண்ணீர்தான் சிந்துகிறாய்...
காதல் இறந்ததற்கா
உயிரைச் சிந்தத்துணிகிறாய்?
காதல் புனிதமானதுதான்...
புனிதமான தெதுவும்
உயிரை விலையாய் கேட்பதில்லை.
விலங்குகளை பலிகொடுத்து
கடவுளின் புனிதத்தை கெடுக்கிறோம்...
நம்மையே பலிகொடுத்து
காதலின் புனிதத்தை கெடுக்கிறோம்.
நண்பா ...
பாருங்கள் தோல்வியா?
இந்த இந்த
தேடிச்சென்ற காதலை மறந்து
தேடிவரும் காதலை அணைத்துக்கொள்...
காதலையே வெறுத்திருந்தால்
களவைப் போல காதலையும்
கற்று மறந்ததாய் நினைத்துக்கொள்...
வாழ்க்கையென்பது வாழ்வதற்கே
என்பதைப் புரிந்துகொள்...!






இந்த தொகுப்பில் எனக்கு பிடித்த ஒரு சில காதல் தோல்வி பாடல்கள் ,.. காணொளியாகவும், ஒலி வடிவிலும் தருகின்றேன்..
சோகங்கள் கூட சுமையாக உள்ள போது அதில் உள்ள ஆனந்தம் வேறு.. கொஞ்சம் நினைத்து பாருங்கள்..

1)
காதல் ராணி இல்லை : இது எனக்கு நீண்ட நாளாய் பிடித்த பாடல்

Kaadhal Raniyilleye by svpriyan





2)
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது சோகம் கூட சுகமாகும் ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே ...

யப்பா என்ன பாடல்.. நம்ம தளபதி ஒழுங்க நடிச்ச காலத்தில் வந்த பூவே உனக்காக பாடல் ...





3)மோகனின் இதயக்கோவில் .. யார்தான் மறக்கலாம்.. எண்பதுகளில் அந்த சின்ன வயசில் நான் பார்த்த முதலாவது காதல் தோல்வி தொடர்பான கதையுள்ள படம்..
சூப்பர் படம்.. அதுக்கு பிறகு எத்தனையோ தடவைகள் .. பார்த்து ..விட்டேன் ..

காதலை சேர்வு மூலம் ( அலைகள் ஓய்வதில்லை ) வாழ வைத்தார் பாரதி ராஜா.
அதே காதலை பிரிவு (சாவு) மூலம் வாழ வைத்தார் இந்த இதயக்கோவில் ... மணி ரத்தினம் வாழ்க....:)

காதலியை இழந்தாலும் (அம்பிகா ) உண்மைக்காதலுக்காக வேறு ஒருத்தரையும் (ராதா) ஏற்க மறுக்கும் ஷங்கர் எனும் மோகன் .. இறுதியில் இந்த படத்தில் வரும் காட்சி.. ஷாபா,, நெஞ்சு அடைத்து மூச்சு திணற வைக்கின்றது.. பார்க்க தவறிய எவரும் இருந்தால் பார்த்து விட்டு சொல்லுங்கள் எப்புடி படம் என்று .. :)




இந்த கொடுமையோ என்னவோ தெரியல.. இன்னொரு படமான மெல்ல திறந்த கதவில் இரண்டாவது காதலை இறுதியில் சோக முடிவு வரும்போது கிளைமாக்ஸ் காட்சியில் வைத்து காப்பாற்றி காதலையும் வாழ வைக்குறார்.

காதல் தோல்வி படம் என்றால் வேற என்ன நம்ம முரளி இருக்காரே .. அவற்ற எந்த படம் தான் அப்படி இல்லை..
எனக்கு பல படங்களில் வந்த காதல் தோல்வி பாட்டுகள் பிடித்து இருந்தாலும் காலமெல்லாம் காதல் வாழ்கவில் வரும் ஒரு மணி அடித்தால் பாடல் உண்மையாவே ஹரிஹரனின் குரலில் உள்ளதை கிள்ளி எறிந்தது.



கண்மணி நில்லு காரணம் சொல்லு..ஊமை விழிகள் படத்தில் வந்த இதமான இனிய மெட்டு: எனக்கு தெரிந்த காலத்தில் இருந்து என்ன்டுடைய பாட்டு பெட்டியில் நான் கேட்கும்பாடல்.. ( பிறகு யாரும் பிழையாக நினைக்க வேண்டாம்.. என்ன தங்களுக்கு காலம் முழுக்க தோல்வியோடா தம்பி என்று.. ஹஹா )

மலர் ஒன்று எடுத்து சரம் ஒன்று தொடுத்து
தேவி உன் பூஜைக்கு நான் கொடுத்தேன்
மலர்ச்சரம் பிரித்து மலர்வளை தொடுத்து
ஏழையென் காதலை நீ புதைத்தாய்
புதைத்தது மீண்டும் மலராகும்
உன் பூஜையை நினைத்தே சரமாகும்
எஸ் என் சுரேந்தர் பின்னிட்டார்.. குரலில் ..



இப்படியே எழுதி கொண்டு போனால் ஜேசுதாஸ் தொடக்கும் இன்று வரை உள்ள எல்லா பாடகர்களும் பாடிய சோகப்பாட்டுகளை இங்க தரலாம்.. பிறகு உண்மையாவே இந்த சுவாமிகளுக்கும் பட்ட காதல் தோல்வி போல என்று உறுதி பட நினைத்தே போடுவியள்.
அதால காதல் தோல்வி பாட்டு கேட்கணும் என்றால் இங்கே கொஞ்ச இணைப்புகளை தரு கின்றேன்.. நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும்..

  1. http://mp3.tamilwire.com/category/sad-love-songs

ஆட்டோக்ராபில் வந்த ஒரு பாடல் :ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே




வரிகள் - பா.விஜய்
படம் - Autograph


ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!

மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ நீ மோதிவிடு!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!


மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!


இப்படி ஒரு பாடல் எவ்வளவு அழகாக சொல்லுது .. வலிகளை தாங்கும் உள்ளமே வாழும் உள்ளம்....

ஒன்று மட்டும் சொல்ல விரும்புவது. இது காதலில் ஒரு தற்காலிக பின்னடைவே தவிர வேறொன்றுமில்லை .. காலப்போக்கில் எல்லாமே சரியாக அமையும்..

இறுதியாக ...இது என் நண்பன் சோமனுக்கு ஏற்ற பாடல்.. யார் சோமன் என்று மட்டும் கேட்க கூடாது .. அவருக்காக இதை இங்கே பகிர்கிறேன்..
Kalyanam enbathu by svpriyan

2010-02-09

எனக்கு பிடித்த அந்த " மலரே "

ஹா ஹா ஒரு பொல்லாப்புமில்லை இது பாட்டை பற்றி சொன்னேன்..

கடும் வேலைக்கு மத்தியில் இரவு வேளையில் இதமான இடைக்கால காதல் தோல்வி ,சுகமான இதமான கானங்களுடன் இணைந்து இருந்த போது எனது பாட்டு பெட்டியில் போன இந்த இரண்டு மலர் பாடல்களும் என்னை முந்தியே பறி/ பற்றி கொண்டு விட்டன. இருந்தாலும் ஓரிரு தடவைகள் கேட்டு அந்த "மலர்" (ரும்) நினைவுகளை மீட்டு கொண்டேன்.

முதலாவது பாடல் : உண்மையிலையே ஒரு காலத்தில் பலருக்கு பிடித்த ஒரு காதல் தோல்வி பாடல் ; மலரே என்னென்ன கோலம்

மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இதுதான் உன்னோடு அழகோ
மலரே என்னென்ன கோலம்
மலரே நலமா...

வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்
வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்

ஏழ்மையின் இலையுதிர்
காலத்தில் இங்கே
பூவேது.. காயேது..
நினைத்தால் எட்டாஆஆஆஆத தூரம்
எனக்கேன் உன் மீது மோகம்
திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே
நீயேங்கே.. நானேங்கே..
திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே
நீயேங்கே.. நானேங்கே..
நீயேங்கே.. நானேங்கே..

மலரே என்னென்ன கோலம்
மலரே நலமா...
மலரே.. ஹநலமா...

நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு
நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு
அழுதிடும் குழந்தையின் அம்புலிப்பருவம்
என்னோடு நான் கண்டேன்



இருக்கும் வர்க்கங்கள் ரெண்டு
உலகில் இப்போதும் உண்டு
சமவெளி மலைகளை
த்ழுவிட.. நினைத்தால்
வழியேது.. முடியாது
சமவெளி மலைகளை
த்ழுவிட நினைத்தால்
வழியேது.. முடியாது..
வழியேது.. முடியாது..

மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இதுதான் உன்னோடு... அழகோ...
மலரே.. என்னென்ன கோலம்



இரண்டாவது வித்யாசாகரின் இதமான மெட்டுகளில் மலரே மௌனமா பாடல் ; ஒரு காதல் டூயட்

மலரே மௌனமா மௌனமே வேதமா?
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? அன்பே
மலரே மௌனமா மௌனமே வேதமா?

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ? ஆ
மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ?
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா?
மார்போடு கண்கள் மூடவா?

மலரே மௌனமா மலர்கள் பேசுமா?







கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு
காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்க்கை தந்த வள்ளலே

மலரே மௌனமா மௌனமே வேதமா?
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? அன்பே
மலரே ம்.. மௌனமா? ம்ம்.. மௌனமே ம்ம்ம்.. வேதமா? ஆஅ
Related Posts Plugin for WordPress, Blogger...