2010-11-06

தீபாவளி -கந்த சஷ்டி -சூரன் போர்- கார்த்திகை விளக்கீடு - ஒரு மசாலா

தீபாவளி :

தீபாவளி பற்றி வாதங்களுடன் கூடிய ஒரு பதிவு ஏற்கனவே இருப்பதால் , இங்கே விட்டு விடுகின்றேன்.


கந்த சஷ்டி: சூரன் போர்

இன்று கந்த சஷ்டி ஆரம்பமாகின்றது.  முருகப் பெருமானை ஆராதிக்கும் விரதங்களில் கந்த சஷ்டி , கார்த்திகை முக்கியமானவை. மாதக்கார்த்திகை  அன்று முருக ஆலயங்களில் சிறப்பாக முருகப்பெருமானுக்கு விஷேட அபிஷேகங்கள் ,பூசைகள் நடை பெறும். கந்த சஷ்டி, வருடத்தில் ஐப்பசி மாதம் சுக்கில பட்ச பிரதமை முதல் சட்டி ஈறாக உள்ள ஆறு நாட்கள் - கந்த சஷ்டி காலம். இந்த ஆறு நாட்களையும் சைவ மக்கள் விரத நாட்களாக கொள்ளுவர். ஆறாம் நாள் சூரன் போர்.

சூரன் போர் : தொடர்பான பதிவில் இருந்து:http://svpriyan.blogspot.com/2009/10/sooran.html

பேராதனையில் குடி கொண்டுள்ள  குறிஞ்சிக்குமரன் சூரன் போரின் போது 

முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கடற்கரையில், சூரபத்மனுடன் முருகப் பெருமான் போரிட்டு சூரனை வென்றதாகவும், முருகப்பெருமான் சூரபத்மனுடன் போரிட்டு வென்றதை கந்த சஷ்டி விரதமாக பக்தர்கள் மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபடுவதாகவும், சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதத்தை நிறைவேற்றியதாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
பேராதனையில் குடி கொண்டுள்ள  குறிஞ்சிக்குமரன் சூரன் போரின் போது 

முருக அடியார்களின் வசதி கருதி , கந்த சஷ்டி கவசத்தை காணொளி மூலம் இங்கே இணைத்துள்ளேன். கண்டு மகிழுங்கள். 
பாகம் ஒன்று
 
 பாகம் இரண்டு 
 


திருக்கார்த்திகை விளக்கீடு : 

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும். இத் திருநாள் இந்த வருடம் 21.11.2010 ஞாயிற்றுக் கிழமை அன்று வருகின்றது .இன்றே தமிழரின் தீப ஒளி நாள் ! 

தமிழரின் தீபத்திருநாள் தொடர்பாக சம்பந்தர் திருமயிலாப்பூரில் அருளிய பாடலில் 
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகை நாள் 
தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும் 
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
பொருள்: 
 
வளைகள் அணிந்த கைகளுடைய பெண்கள் வாழும் மா மயிலாப்பூரின்
அழகான வீதிகளில், கலக்கமற்ற திருக்கபாலீச்சரத்து இறைவனின் 
தொன்மையான விழாவான திருக்கார்த்திகை நாளில் சந்தனம்
அணிந்த இளமுலை மாதர்கள் கொண்டாடும் விளக்கேற்றுதலைக்
காணாமல் போகலாமோ, பூம்பாவையே! 
 
இந்த தொன்மையான நாள் பற்றி பலர் பல விதமான கருத்துக்களை சொல்லுவார்கள்.
  • ஆறு குழந்தைகளையும் ஒன்றாக இணைத்த நாள்
  • சிவராத்திரி நாளில் பிரமவிஷ்ணுக்களுக்குத் தமது சோதிவடிவை இறைவன் காட்டிய பொழுதுஅவ்வடிவைத் தமக்கு என்றும் காட்டியருள வேண்டுமென அவர்கள் வேண்டினர். அதற்கு இறைவன் திருக்கார்த்திகை நாளில் மீண்டும் இவ்வரவை காட்டுவோம் என்றார். அதனை நினைவு கூறுமாக என்றும் சொல்லுவார்.
    
பேராதனையில் குடி கொண்டுள்ள  குறிஞ்சிக்குமரன் திருக்கார்த்திகையின் போது 
மேலும், தீபங்களால் புறச்சூழலை விளக்கீட்டு வைத்தால் , அடிக்கடி ஒளிமயமான பிரதேசத்துக்கு இறைவன் வருவான் என்றும் சொல்லுவார்கள். இந்த பாடலில்,  



அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி
ஆயிரம் ஆயிரங்கோடி அணிவிளக் கேற்றிடுக
தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்
திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும் 
இருளேது காலைவிளக் கேற்றிட வேண்டுவதோ
என்னாத மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
மருளேல் அங்கவர்மேனி விளக்கமதென் கடந்த
மதிகதிர் செங்கனல் கூடிற்றென்னினும் சாலாதே 
 
இறைவனின் வருகையின் போது, ஆயிரமாயிரம் விளக்கேற்றி இறைவனை 
வரவேற்கணும் என்றும், அத்துடன் பசு நெய் கொண்டு தான் ஏற்றணும் என்றும்
 இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பசு நெய் மூலம் விளக்கேற்றினால், 
அந்த சூழலுக்கு தீய சக்திகள், விஷ வாயுக்கள் வராது என்றும், அவ்வாறு
 வந்தாலும் வந்த தீய சக்திகளை அழிக்கும் வல்லமையை பசு நெய் 
கொண்டுள்ளதாக வரலாறுகள் சொல்லுகின்றன. மேலும் கோவில்களில் 
யாகம் வளர்க்கும்  போதும் பசு நெய் பாவிக்கப்படுகின்றன ,
இதற்கும் இதுவே காரணம் என்றும் சொல்லப்படுகின்றது.  
 
எனவே திருக்கார்த்திகை அன்று வீடுகளில் நெய் விளக்கேற்றி தீப திருநாளை 
கொண்டாடுவோமாக.   
 
 கடந்த வருடம் விளக்கீடு தொடர்பான பதிவு:

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...