2010-05-07

தற்காலிக பின்னடைவுகள், மனதை உருக்கிய பாடல், சுறா அனுபவங்கள்

தற்காலிக பின்னடைவுகள்:

மலையே ஆடினதாம் மதிலாடினால் என்ன. அதுதான் எனது திருமண வாழ்க்கை, இன்னும் ஒரு இரு நாட்களுக்குள் முற்று புள்ளிக்கு வந்து விடும். நீண்ட நாட்களாக நான் பட்ட துன்பியல் அனுபவங்களுடன் கூடிய விளக்கமான அறிக்கை கொழும்பு மாவட்ட நீதி மன்றம் விவாகரத்து வழங்கப்படுகிறது என்று அறிவித்த பின்னர் தரப்படும். அனுபவங்கள் வாழ்கையின் பாடங்கள்......:)

மனதை உருக்கிய பாடல்:
கடந்த வாரம் 155 இலக்க பஸ்ஸில் மருதானைக்கு சென்று வர வேண்டியதாயிற்று. வெள்ளவத்தையில் ஏறும் போது பஸ்ஸில் சனமே இல்லை, இருந்தாலும் கொஞ்ச சனத்தை தன் சாதுரியத்தால் சேர்த்து போட்டான். முன் ஆசனத்தில் இருந்து பஸ்ஸின் இசைதட்டில் இருந்து ஒலித்து கொண்டு இருந்த அழகான சோக பாடல்களை இரசித்து கொண்டு இருந்தேன். கேட்ட பாடல்களில் எனக்கு பிடித்த, என்னை இரசிக்க வைத்த பாடல் இதுதான்.
நெஞ்சே நெஞ்சே பாவை நெஞ்சே ........................:)



விசேடமாக இந்த பாட்டை ஓட்டுனர் திருப்பி திருப்பி போட்டு பஸ்ஸில் சென்றோருக்கு தன் காதல் "வலி"மையை உணர்த்தி விட்டார். மருதானையில் இறங்கும் போது அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லி போட்டு இறங்கினேன்:).


சுறா அனுபவங்கள்

நீண்ட நாட்கள் வெளிநாட்டில் இருந்து வித்தியாசமான இரசிகர்களுடன் திரைப்படம் பார்த்து வந்த நான் , அண்மையில் விஜய் இன் சுறா படத்தை லோக்கல் பஜாருடன் பார்த்து ரசித்தேன்( ஒரு பொய் சொல்லுறன் ). தமன்னாவுக்காக தான் நான் அந்த படத்தை பார்த்தேன். தமனாவை ரசித்தேன். படம் பரவாய் இல்லை .. இருந்தாலும் விஜய் அடுத்த முறையாவது அடுத்தவன் காசை சுரண்ட முன், கொஞ்சம் கவனமாய் படத்தை எடுத்தால் சரி.

சுறா படம் பற்றி வந்த ஜோக்ஸ் களில் எனக்கு பிடித்தது :

மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனையை விட அதிகபட்ச தண்டனையாக கட்டி வச்சு சுறா திரைப்படம் பார்க்க விடவேண்டும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் இன்று கோரிக்கை விடுத்தார்:)

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...