2012-08-05

ஆடியில் அம்மன் உற்சவங்கள்


ஆடி என்றாலே அம்மனுக்கு உற்சவம் தான் ! ஆடியில் அம்மனுக்கு ஆடிச்செவ்வாய், மற்றும் ஆடிப்பூரம் இரண்டும் பிரபல்யமானவை! அது மட்டுமல்ல ஆடியில் தான் பெரும்பாலான அம்மன் கோவில்கள் சரி, சிவன் கோவில்களில் உள்ள அம்மன் வாசல் சரி கொடியேறி திருவிழாக்கள் நடை பெறும்.

இந்த ஆடிச் செவ்வாய் தினங்களில் சுமங்கலிப்பெண்கள் அம்மனை வழிபட்டால் தாங்கள் வேண்டும் வரங்கள் எல்லாத்தையும்.. பெற்றுக்கொள்வர் என்பது மரபு. இதைதான் இந்த பல மொழியும் உணர்த்தி நிற்கின்றது.  " ஆடிச்செவ்வாய் தேடிக்குளி அரைச்ச மஞ்சளை பூசிக்குளி " - ஆடியிலே சுமங்கலி பெண்கள் மஞ்சள் பூசி குளித்து அம்மனை சுமங்கலி பூசை செய்து வழிபட்டால் நன்றே வேண்டும் வரங்கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வர்.

இதை விட ஆடிப்பூர தினத்தை தான் அம்மன் ருதுவான ( பெரிய பிள்ளை ஆதல், பூப்பு அடைதல் ) தினமாக கொள்ளுவர். இந்த தினத்தில் பெரும்பாலான ஆலயங்களில் தீர்தோற்சவம் நடைபெறும்.   இரதோற்சவ தினத்தில் இரதத்தில் எழுந்தருளும் இறைவன் ( எந்த இறைவனாகவும் இருக்கலாம் ), அழித்தல் தொழிலைத் தான் மேற்கொள்வார். அதனால்தான் பெரியோர்கள் சொல்லுவார்கள் தேருக்கு கட்டாயம் போகணும் கடவுளை கும்பிடனும் என்று. அன்று தோன்றும் இறைவன் நம்மிடைத்தே உள்ள ஆணவம் அகங்காரம் மற்றும் தீய பழக்கங்களை எல்லாவற்றையும் அழிப்பார் என்பது முன்னையோர் கருத்து.

( அது சரி ஊரில தேர் என்றால் நம்மளுக்கு என்ன , ஒரு சாரார் வீட்டில சீரியலும் சமையலும், மற்றொரு சாரார் கோவிலடியில் குளிர்களியுண்பதுவும், குளிர் காய்தலும் தானே)..

அடுத்த நாளாகிய தீர்த்ததுக்கும் கட்டாயம் ஆலயம் சென்று வழிபடல் வேண்டும். அன்று தான் கடவுள் அருளல் என்ற தொழிலை செய்வதாக ஆலய பூஜை வரலாறுகள் சொல்லுகின்றன.



( முந்தி ஒரு காலத்தில் சுட்டு வைத்து  இருந்தது - எனது புகைப்பட தொகுப்பில் இருந்து )

எங்கட கோவில் இரதோற்சவ புகைப்படங்கள் 2012 July 22


எங்கள் ஆலயத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ சொர்ணாம்பிகா தேவி !! வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய போது


ஆலய வடக்கு வீதியில் 




வடம் இழுக்கும் பெண்கள் 

இணுவையூர் நாதஸ்வர வித்துவான்  சுந்தரமூர்த்தி ஐயா அவர்களின் சேவகம் 


எங்கட கோவிலில் ஆடிப்பூர இரதோற்சவத்தில் வடக்கு வீதியில் இந்த பாட்டை நாதஸ்வர தவில் இசையுடன்  கேட்டேன். 





அண்மையில்..கொழும்பில்  மயூரபதி காவடியிலும்.. பார்த்து ரசித்தேன்.. :

இந்த பாடல் ஒரு சினிமா படத்தில் வந்த அம்மனை நோக்கி வரம் வேண்டும் பாடல் !!

பாட்டை பாருங்க..... உள்ள அம்மன் எல்லாமே இங்க இருக்காங்க.. # #பயமா இருக்கு!!




பாடல் வரிகள் :
கோல விழியம்மா ராஜா காளியம்மா
பளையதாயம்மா பங்காரு மாயம்மா
முத்து மாரியம்மா பத்ர காளியம்மா
முண்டக்கன்னியம்மா எங்க கண்ணியம்மா
குங்கும கோதையே அன்னை யசோதையே
செந்தூர தேவானை சிங்கார ரூபினி
அன்னை விசாலாட்சி சொவ்தாம்பா விருப்பாட்சி
சுந்தர நீலியே சௌந்தர வல்லியே


வல்லியம்மா எங்கள் அல்லியம்மா
தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா
அடி அங்களாம்மா எங்கள் செங்கலம்மா
அருள் முப்பதம்மா அனல் வெப்பதம்மா
சிங்காரி ஓங்காரி சங்கரி உமையத்தா
மண்மாரி பன்னாரி செல்லாயி சிலம்பாயி
மருவத்தூர் அம்மாவே ஓம் சக்தியே


ஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா , வேறு துணை யாரம்மா ?
குதமில்லா ஓரு உத்தம நெஞ்சுக்கு
சோதனைகள் எதுக்கு ? - அவர்
கட்டிய தாலிக்கும் போட்டுக்கும் பூவுக்கும்
காவல் கொடு எனக்கு ..
நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
நீ வந்து மற்றிடம்மா ...
மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா
மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்


காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு
வாதாட சாட்சி ஏதம்மா ?
ஊர் வழ ஆட்சி செய்யும் மீனாக்ஷி தேவியம்மா
நான் வாழ நீதி கூறம்மா
சோதனையை வேதனையை சேர்த்து விட்டேன் உன்னடியில்
சோகங்களை திரோகங்களை தீர்த்துவிடு என் வழியில்
வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கண்ணியம்மா
வாசல் வந்த பிள்ளை மனம் வாடலமா பொன்னியம்மா
அகிலாண்டேஸ்வரி சபை ஏறம்மா
அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா


திருபதூர் கௌமாரி திருவானைக்கா அம்மா
மாங்காட்டு காமாக்ஷி மலையாள பகவதி
தஞ்சாவூர் மாரியே கண்யாகுமரியே
மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம்
கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜகதம்பா
துளுக்கனதம்மாவே துர்க்கை அம்மாவே
முக்குழி அம்மாவே வழங்கி அம்மாவே
எல்லை அம்மாவே கங்கை அம்மாவே
நாச்சியம்மா தங்க பேச்சியம்மா
அன்னை மூகாம்பிகா எங்கள் யோகம்பிகா
அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா
துய தஞ்சையம்மா வீர படவேட்டம்மா
வைரவி பைரவி தேனாட்சி திருபட்சி
அம்மாயி ப்ரம்மாயி அழக்கம்மா கனகம்மா
அதி பராசக்தியே ......


ஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா , வேறு துணை யாரம்மா ?


ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும்
நீதானே பூமி மீதிலே ..
அத்தா நீ கண் திறந்து பத்தாலே வஞ்சனைகள்
வீழாதோ உந்தன் காலிலே ..
பெண்ணினங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே
குங்குமத்தில் நீ இருந்து காக்கணும் என் மங்கலமே
சத்தியத்தை காக்க உந்தன் சக்கரத்தை சுத்தி விடு
உக்கிரத்தில் நீ எழுந்து உண்மைக்கொரு வெற்றி கொடு
உன் நீதி பூமியில் தவறாகுமா ?
என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா ?


தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா
தெப்ப குலதம்மா தேரடி பூவம்மா
மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா
அர்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா
வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி
வேற்காடு மாயம்மா கஸ்துரி தாயம்மா
உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா
உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே
மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி
அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி
சக்தி ஜெகதீச்வரி அன்னை பரமேஸ்வரி
எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி
அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி
மமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ
சோலையூர் மகாமாயி ஓம் சக்தி தாயே


அம்பாள் அருள் எல்லாருக்கும் கிடைக்க பிரார்த்திப்போமாக !!

2011-04-14

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்:((

ஐயே .. ஏதும் கம்பி எண்ணுறானோ என்று.. யோசிச்சிட வேணாம்.. 

தமிழ் பாடகி சித்ராவின் குரலில் புன்னகை மன்னன் படத்தில் வந்த "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்" என்ற அருமையான பாடலில் வரும் வரி தான் இது. 

இந்த பாடல் சித்ராவுக்கு ரெம்பவே பிடிக்கும் என்று அடிக்கடி பல மேடை ,  வானொலி, மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகளில் சொல்லி இருந்தார்.  இது மட்டுமில்லாமல், இந்த பாட்டை அடிக்கடி பாடியும் கண்பித்து இருக்கின்றார். அவர் தனது குழந்தைக்கும் அடிக்கடி பாடி காட்டும் பாடலாக இருந்தும் வந்துள்ளதை ஒரு தடவை நிகழ்ச்சியில் சொன்னதை கேட்டும் பார்த்தும் உள்ளேன். 

இன்று அவர் பாட கேட்கும் அளவுக்கு அந்த எட்டு வயது குழந்தை இல்லை.. அந்த குழந்தை,  அவரிடமிருந்து பிரிந்து இவ்வுலகை விட்டு நீங்கி சென்று விட்டது. அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.


இந்த பாடல் எனக்கு ரொம்பவே பிடிக்கும் !!! இந்த பாட்டை ஒரு மேடை நிகழ்ச்சியில் சித்திராவே பாடி இருக்கின்றார். பாருங்கள்.. எப்புடி... என்று.. 
சூப்பர் ..கிட்டு.. !!!
 இதோ அந்த பாடல் உங்களுக்காக ( வரிகளுடன் )

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் 
உன் கையில் என்னைக் கொடுத்தேன் 
நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானேபண்பாடும் 
பாடகன் நீயே உன் ராகம் நானே

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
 
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
கதை என்ன கூறு பூவும் நானும் வேறு
 



குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா
நீயே அணைக்க வா தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
 
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன் 
எது வந்த போதும் இந்த அன்பு போதும்



தொடர்பு பட்ட செய்தி : http://www.emirates247.com/news/ks-chitra-s-daughter-reportedly-drowned-in-emirates-hills-pool-2011-04-14-1.381037


2011-02-26

எனக்கும் பிடிக்கும் மலேசியா வாசுதேவனை !!!

எனக்கு பிடித்த தமிழ் பாடகர்களில், மலேசியாவில் இருந்து தமிழ் நாடு வந்து தனது குரல் மற்றும் நடிப்பு திறமையால் தென் இந்திய திரையுலகத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பெற்று கொண்ட, மலேசியா வாசுதேவன் கடந்த இருபதாம் திகதி இவ்வுலகத்தை விட்டு நீங்கி  சென்றார். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அவரின் ரசிகன் சார்பில் பிரார்த்திக்கின்றேன் !!


நான்  சிறு வயது தொடக்கமே ரஜனி ரசிகன் என்பதால், ரஜனி  படங்களில்  மலேசியா வாசுதேவன் குரலில் ஓன்று அல்லது இரண்டு பாட்டாவது இருக்கும். 

அருணாச்சலம் படத்தில் கூட சிங்கம் ஒன்று புறப்பட்டதே..என்ற சூப்பர் கிட் பாடலை  பாடி இருந்தார். ஊர்க்காவலன் படத்தில் மலேசியா வாசுதேவனின் நடிப்பு சுப்பர்.


நம்ம விஜயின் பத்ரி படத்தில், விஜயின்  காதலியின்(அதுதான் நம்ம கம்பஸ் காலத்தில் பலரின் இரவு தூக்கத்தை கலைத்து சென்ற பூமிக்காவின்   ) தந்தையாராக கூட நடித்து அசத்தியிருந்தார்  !!!

2002 ஆம் ஆண்டில் என்று தான் நினைக்கின்றேன், சூரியன் எப் எம் கண்டியில்  நடத்திய பாபா பூம்பா நிகழ்ச்சியில், கலந்து கொண்டு பலவிதமான பாடல்களை அந்த இரவு வேளையில் பாடி அசத்தி இருந்தார். அவரது ரசிகர் என்ற விதத்தில் அன்றைய இரவை அவரின் நேரடி நிகழ்ச்சியை அவரின் இலங்கை  ரசிகர்களுடன் இருந்து பார்த்து மகிழ்ந்தது இன்றும் ஞாபகம் இருக்கின்றது.

இவரது பல பாடல்கள் ரிமிச்சு செய்து அவரின் அழகான குரலை கெடுத்து வைச்சு இருக்கும் ரிமிச்சு ராஜாக்களுக்கு கடுமையான கண்டனங்கள் !!!


மலேசிய வாசுதேவன் குரலில் வந்த பாடல்களில் எனக்கு பிடித்த ஒரு சில மெட்டுக்கள் !!!

 ரஜனியின் தர்மயுத்தம்

ஒரு  தங்க  ரத்தத்தில் 





ஆகாய கங்கை 



மெகா கிட்... பாடல்  ஆசை நூறுவகை 



மிஸ்டர் பாரத் - என் தாயின் மீது ஆணை 





மாப்ளை-- என்னோட ராசி நல்ல ராசி 





மாவீரன் படத்தில் - நீ கொடுத்ததை ..




படிக்காதவன் படத்தில்-- ஒரு கூட்டு கிளியாக




சிவாஜியின்  முதல் மரியாதை -- இன்றும் இசைப்பிரியர்கள் அடிக்கடி கேட்கும் பாடல் !!




அடி ஆத்தாடி - கடலோர கவிதைகள் 

http://123musiq.com/SOURCE/SPECIAL%20SONGS/Malaysia%20Vasudevan/Adi%20Aathadi%20%20-%20Kadalora%20Kavithaigal.mp3


நிறம் மாறாத பூக்கள் -- ஆயிரம் மலர்களே ..



மண்வாசனையில்  -- ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் 



வேதம் புதிது படத்தில்--- மாடு வண்டி சாலையிலே.. 
(மிக விரைவில் - இறுவெட்டில் இருந்து  தரையேற்றம் செய்கின்றேன்..)

கமலின் படங்களில் இருந்து

கல்யாணராமன் - காதல் வந்திரிச்சி..



2011-02-20

இலங்கை அணி + வடிவேலின்ற ஜோக்கு


கிரிக்கட் உலக கிண்ணம் 2011,  இரண்டாம் நாள் போட்டிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தற்போது இலங்கை மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இலங்கை அணிக்கு கனடா அணி என்பது ஒரு தூசு மாதிரி. அவங்களின்ற(கனடாவின்  ) பந்து வீச்சும், field settings இம் பெரிய கஷ்டமாய் இருக்க போறதில்லை இலங்கை அணிக்கு என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால் தான் 300 ஓட்டங்களுக்கு மேல விளாசி தள்ளினாங்க.  இவங்கட பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பால் கனடா அணியே தடுமாறி போய் நிக்குறதை காணக்கூடியதாக உள்ளது. இது எந்த ஒரு சின்ன பிள்ளைக்கும் விளங்குற விஷயம். ஏதோ பெரிய அணியை எதிர்த்து விளையாடுற மாதிரி எங்கட மோட்டு ரசிகர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். பெருமையும் கொள்கிறார்கள்.
எனக்கு அவங்களா பார்த்தா பரிதாபமாகவும் கவலையுமாய் இருக்கு. அவங்களுக்கு ரசிக்கும் படி இந்த காமெடியை சமர்ப்பணம் செய்து விடுகின்றேன் . 




கடந்த வாரம் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சி  போட்டியின் போதும் வென்ற போது என்ன மொக்கு பில்ட் அப்பு கொடுத்தாங்க.. எல்லாத்துக்கும் சேர்த்து இந்தாங்க.. பிரசாதம். :)))
 

 ஒரு வீரனை அடிச்சு வீழ்த்தி இருந்தா கதைக்கலாம்.. இது சின்னபிள்ளைத்தனமாய் இருக்கு :)))))

படியுங்கோ இங்க:

Sri Lanka Hand Netherlands Crushing defeat

Sri Lanka 351-4 (Dilshan 78, Silva 54) beat
Netherlands 195 (de Grooth 76) by 156 runs
ICC Cricket World Cup warm-up, ColomboScorecard

Sri Lanka began their warm-up schedule ahead of the 2011 ICC Cricket World Cup with a thumping 156-run win over the Netherlands.

Batting first, they reached 351 for four before the Netherlands were bowled out for 195 in 47.3 overs having never seriously threatened to overhaul their target.
Four batsmen - Tillakaratne Dilshan (78), Thilan Samaraweera (60), Chamara Silva (54) and Chamara Kapugedera (50 not out) - scored half-centuries as Sri Lanka opted to allow senior players Kumar Sangakkara and Mahela Jayawardene not to bat.
Upul Tharanga also made 47, Angelo Mathews 21 and Nuwan Kulasekara a quickfire 14 in eight balls to steer Sri Lanka past 350.
The Netherlands then struggled badly with the bat, Dilhara Fernando taking four wickets as only Tom de Grooth, who made 76 in 96 balls, impressed.
Captain Bas Zuiderent made 38 - the next best score - before two cheap wickets apiece from Tissara Perera and Rangana Herath closed out the game for the home side.
© Cricket World 2011

2011-02-04

FEB-04--இன்று உலக புற்று நோய் தினம் !!!

இன்று உலகை ஆட்டி படைத்து கொண்டு இருக்கும், உயிரை காவு கொள்ளும் பிரச்சனைகளில் இந்த புற்று நோயும் ஒன்றே. யுத்தம் , உணவு பற்றாக்குறை, இயற்கை அனர்த்தங்கள், பன்றிக்காய்ச்சல்,  பிற உயிர் இழப்புகள் .... போன்றவற்றுடன் இதுவும் இணைகின்றது.


இந்நோயை எதிர்க்கும் எத்தனை விதமான  மருந்துகள் வந்தாலும் முற்று முழுதாக அகற்றி விடுமளவுக்கு ஏதேனும் மருத்துவ உபகரணங்கள்  வசதிகள் இதுவரைக்கும்   இல்லை.

சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றின் பிரகாரம் எண்பத்தி நான்கு மில்லியன் மக்கள், 2005-2015 காலப்பகுதியில் புற்று நோயால் மட்டும் மரணமடைவார்கள் என்று அறுத்து உறுத்து சொல்லப்பட்டுள்ளது. இங்கே காண்க!!!

 
மேலும், சில வேளைகளில்  புற்று நோய் என்பது genetic basis, ஆகவும் உள்ளதாக புள்ளி விபரங்கள், வைத்திய மற்றும் முன்னுதாரங்கள் மூலம் கண்டும் உள்ளனர். 

புற்று நோய் பற்றி  இணையத்தில் சுட்டதில் (ஆங்கில வடிவம் )
 
Q. Why did my child get cancer?
A. In most cases, it is not known how a child gets cancer.   We do know that it is not caused by anything you did as a parent.  In some cases, the cancer has a genetic basis, but most often the cause is unknown
Q. How long has the cancer been there?
A. It’s not possible to determine when the cancer started. 
Q. Do my other children need to be checked for cancer?
A. This is almost never necessary.  Your family history and evaluation of the cancer will determine whether there is any risk to other family members.  If there is any suspicion of this, you may be referred to the Cancer Clinic.
Q. When do we start treatments? And how long will treatment last?
A. Treatments start after the diagnosis and stage of the disease are determined. From this information, a multidisciplinary team will determine the recommended treatment plan.  The length of treatment varies upon the diagnosis and stage of disease.
Q. What is chemotherapy and how often will my child need it?
A. Chemotherapy refers to medications that kill or control cancer cells.  Most chemotherapy is given by intravenous injection.  Other chemotherapy is given by mouth, by intramuscular injection (into the muscle), by subcutaneous injection (under the skin), or by spinal injection (into the spine).  The treatment schedule varies depending upon the diagnosis and stage of disease.
Q. What is a central line?
A. A central line is a device that assists in the process of administering chemotherapy and other medications and fluids, and blood sampling. A  tube is surgically placed into a blood vessel. This device avoids the need for separate needle insertions for each infusion or blood test. Examples of these devices include Hickman or Broviac catheters, PICC lines and ports.  Hickman or Broviac catheters are placed in the upper chest, and there is an external portion that protrudes from the skin.  PICC lines are placed in the arm, and also have an external portion.  Ports are placed in the chest but are implanted below the skin, so that nothing shows externally.  When a Broviac, Hickman or PICC line are accessed, a syringe is attached to the external portion in a painless procedure.  When a port is accessed, the needle is inserted through the skin causing a brief moment of discomfort, minimized with the use of a special cream (EMLA) applied to the skin.
Q. What is radiation therapy?
A. Also called radiotherapy and irradiation.  It uses high-energy radiation beams to kill cancer cells and shrink tumors.  Radiation may come from a machine outside the body or it may come from radioactive material placed in the body near cancer cells. Systemic radiation therapy uses a radioactive substance that travels in the blood to tissues throughout the body.
Q. Will my child lose his/her hair?
A. If your child receives chemotherapy, he or she will probably lose hair, temporarily.  Children and teens deal with this in different ways.  Some kids wear hats or scarves.  Some wear wigs.  Others do not attempt to hide the baldness.  In any case, our team members will counsel you and assist you, so you have a solution that fits your child's needs.
Q. Will my child need to stay in the hospital? 
A. The need for hospitalization varies with diagnosis and treatment plan.  Some chemotherapy administration requires short hospitalization, while others can be done as an outpatient in the clinic or at home
.
Q. Will my child be okay?
A. Having a diagnosis of cancer and receiving chemotherapy are both associated with a risk of death. Fortunately, the success rate for treatment of childhood cancer is very good. It is appropriate to ask your doctor what the success rate is for your child’s diagnosis.
Q. What happens when the treatment is finished?
A. A monitoring program begins when the treatment is finished.  The schedule and the type of tests depends on the diagnosis.  The goals of the program are to monitor for any signs of recurrence of the cancer and to look for any signs of a delayed side effect of the treatment. 
Q. What if the cancer comes back?
A. In some ways, this means starting over.  As in the beginning at initial diagnosis, tissue samples are needed to verify the diagnosis, tests are performed to determine the extent of disease, and a new treatment plan is devised.

இலங்கையில் மகரகம புற்று நோய் வைத்திய சாலை மிகவும் பிரபல்யமானது. தனியார் வைத்திய சாலைகள் இருந்தாலும், அறவிடும் கட்டணங்களோ ஒரு தொகை, எல்லாராலும் அந்த அளவுக்கு முடியா விட்டாலும், ஒரு சிலரே தனியார் வைத்திய சாலைகளில் இதற்குரிய சிகிச்சைகளை பெறுகின்றனர்.  

வசதி படைத்த நெஞ்சங்கள், உறவுகளுக்கு உதவ வேண்டி நிற்பவர்கள், யாழ்ப்பாண போதானா வைத்திய சாலை, தெல்லிப்பளை புற்று நோய் பிரிவு போன்றவற்றுக்கு சென்று, அங்குள்ள நோயால் பாதிக்கப்பட்ட இளையவர்கள் , முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றோருக்கு தேவையான பால்மா, மருந்துகள் வாங்க பண வசதி,  என்று  உதவுங்கள். தனியாக நேரடியாக சென்று உதவலாம். அங்குள்ள வைத்தியரை நாடவும். யாருமூடாக எல்லாம் செல்ல தேவை இல்லை. நீங்களே உங்கள் கைகளால், நீங்கள் செய்யும் உதவிகளை வைத்திய சிகிச்சை  பெறும் நோயாளிகளிடம் கையளிக்கலாம்.
மேலதிகமாக தொடர்புகளை பெற்று தர வேண்டுமாயின் அதற்கான உதவிகளை செய்து தருவதில் அடியேனுக்கு எந்த விதமான பிரச்சனையுமில்லை. 

இந்நோயுடையவர்கள் சுகமடைய, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக!!!








2011-01-15

மாடாய் உழைப்போருக்கு உரிய நாள் ஜனவரி 16

எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு


இது திருவள்ளுவர் தாத்தா என்றோ  சொன்னது. இதை அடிக்கடி எங்கட வாத்தியார் கூட சொல்லி இருக்கின்றார்.  அதாவது  கொஞ்சம் கீழ போய் விளக்கமாய் பார்த்தால்

"எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை."

அதுதான் நானும் சொல்லுறன்.. மாடாய் உழைக்குற உங்க எல்லாருக்கும் வருஷா வருஷம் நாங்கள் ஒரு நாள் வைச்சு இருக்குறம் அதுதான் இந்த பட்டி பொங்கல். நாளைக்கு வருது.

அடிக்கடி அடுத்தவன் வீட்டில கதைக்கிறதை செவி மடுத்தும் இருக்கின்றேன் . அவனொருத்தன்   மாடாய் வெளிநாட்டில உழைச்சு அனுப்ப இவங்க இங்க சட்டலைட் சானலும் சீரியலுமாய் இருக்குதுகள். அவன்ட காசை எல்லாம் வீணாக்கி தள்ளுதுகள் என்று எல்லாம் கதைப்பதை நீங்கள் கூட கேட்டும் இருப்பீர்கள். அந்த மாட்டு நண்பர்கள், எல்லாருக்கும் நாளைக்கு புனித விழா.

உங்க எல்லாரையும் விடியவே கிணத்தடியில கட்டி வைச்சு.. தண்ணியால (மோட்டாரில இருந்து வாற  தண்ணியை நேர பிடிக்கணும், அப்பதான் கொஞ்சமாவது வெளிக்கும் )கழுவி (போச்சு போட்டு தேய்க்கணும்- ரொம்ப முக்கியமான வேலை..  ) பிறகு சாம்பிராணி எல்லாம் கட்டாயம் காட்டனும். இல்லாட்டி புதைந்து கிடந்த "புதையலை" பப்ளிக் இற்கு எடுத்து விட்ட மாதிரி... மணக்காமல் இருக்கத்தான்.
பிறகென்ன வழமை போல பொங்கி படைச்சு விட, மூச்சு திணறி மயங்கி விழும் வரைக்கும் திண்டு போட்டு படுக்க வேண்டியதுதான். மீண்டும் அடுத்த  நாளைக்கு மாடாய் உழைக்க.. களத்துக்கு திரும்ப வேண்டியதுதான்.. :)
 
இப்படி இந்த மாடு மாடு என்று சொல்லுறவையை நாங்கள் கட்டாயம் கவனித்தே ஆகணும்.  உண்மையில் மிருகங்கள் மீது அன்பு வைத்திருத்தல் என்பது கட்டாய கடமை .

இந்து சமயத்தை எடுத்து பார்த்தால்,  வாய் பேசாத இந்த சிற்றினங்களை நமக்குச் சமமாக மட்டுமின்றி, மேலானவையாகவும் நாம் கருத வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான தெய்வங்களின் வாகனங்கள் மிருகங்களாகவே, பறவைகளாகவே இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக , எனக்கு தெரிந்த அறிவதுடன்.. 

 - விநாயகன் யானைத்தலையன்
- அவன் ஆட்கொண்டு அமர்ந்திருப்பது மூஞ்சூறு(எலி என்றும் சொல்லுவர் )
- தம்பி முருகன் மகிழ்ந்து வருவது மயிலில்
- அவன் தந்தையார்   சிவன் அணிந்திருப்பது நாகம், வருவது பசுவில்
- காளி வருவது சிங்கத்தில்
- மாமன் திருமால் படுப்பது பாம்பணையில்
- தர்மதேவன் வருவது எருமையின் மீது
- நம்ம நண்பன்---  சனீஸ்வரனை சுமப்பது காகம்

இப்படி சொல்லிக்கொண்டே  போகலாம். இவற்றில் இருந்தாவது தெரிந்து கொள்ளலாம் நாங்கள் வழிபடும் கடவுளுக்கு மேலாக இம்மிருகங்கள் மீது அன்பு காட்டல் வேண்டும். அத்துடன் நன்றியாகவும் இருக்கணும்.


பசுமாடு செய்யும் உதவிகளை பாருங்கள், உதாரணமாக பசுப்பாலை எடுகின்றோம். தயிர்,  நெய் தயாரிக்கின்றோம்.  இதை விட சாணம் கொண்டு வீபுதி தயாரிக்கின்றோம். மேலதிகமாக, மாடுகளை பயன்படுத்தி நெல் வயலை உழுகின்றோம். நெல் அறுவடை செய்ய கூட மாடுகள் தான் உதவி செய்கின்றன. இவற்றுக்கு நன்றி தெரிவிக்க நாங்கள் என்னதான் செய்கின்றோம்? நெற்பயிர் அறுவடைக்குப் பின் நாங்கள் வைக்கோலை மாட்டு பிள்ளைகளுக்கு உணவாக  போடுகின்றோம். எடுத்த அரிசியை உணவாக்கும் போது கழிவான கஞ்சியை உணவாக குடுக்கின்றோம். இப்படி நாங்கள் இந்த ஜீவன்களுக்கு எதுவுமே உருப்படியான ஈடான மாற்றீடுகளை செய்வதில்லை. அத்துடன்  வேறு சிலர் பசுவின் பெருமையை மஹிமையை அறியாமல் (கறவையற்ற)பசுக்களை துன்புறுத்துகிறார்கள், வதைக்கவும் செய்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம், இது மிகவும் வருந்தத்தக்கது:(.

இவர்களுக்கு நன்றி செய்வதுக்கு ஏற்ற நாளாய் உழவர்  திருநாளாம் பொங்கலுக்கு அடுத்த நாளில், அந்த  உழவர்கள் சந்தோஷமாய் உழவர் திருநாளை கொண்டாட காரணமாய் இருந்த இந்த பசுக்கள், மாட்டு பிள்ளைகள் எல்லாரையும், கௌரவ படுத்தி கொண்டாடும் நாளாக உள்ளது மகிழ்ச்சிக்கு உரிய விடயமே. நாங்களும் எங்கள் வீட்டில் இருக்கின்ற இந்த ஜீவன்களை நாளைய தினத்தில் கௌரவபடுத்தி கொண்டாடுவோமாக.

மாடாய் உழைக்கும்  எல்லோருக்கும் மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் !!!

பிற்குறிப்பு : நாளைக்கு தமிழ் திரையுலகத்தில் மாடாய் உழைக்கும் நமீதா வின் வணக்கம் டமிழகம் காலை எட்டு மணிக்கு ஏதோ ஒரு டிவியில  இடம்பெறுமென்பதை நமீதா ரசிகர்களுக்கு இத்தால் அறிவித்து கொள்கின்றேன்.























 

2011-01-01

பகிடிவதையால் மூடப்படும் பல்கலைக்கழகங்கள்

நள்ளிரவும் கடந்து விட்டது.. தொலைபேசிகள் ஒரு புறம் அலறுகின்றன. புது வருட வாழ்த்துக்கள்  சொல்ல எவனாவது எடுப்பானா??.. பல்கலைக்கழகம் பூட்டிய செய்தியால் முதலாம் வருட மாணவர்களின் பெற்றோர்கள், அவர்களிடம் வழங்கப்பட்ட தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் வரிசையில் எனது கைத்தொலைபேசி எண்ணும் இருந்ததால், தொடர்ந்து அழைத்த வண்ணமே இருந்தார்கள் .. ஒன்றுமே செய்ய முடியவில்லை.. கடந்த இரண்டு நாட்களாக  பல்கலைக்கழகம் அல்லுலோகப்பட்டு கொண்டு இருந்தது.  இறுதியாக உயர் கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலும் வந்து சேர்ந்தது. உடனடியாக பல்கலைக்கழகத்தை மூடி விட்டாச்சு. நாளை காலை பத்து மணிக்கு பிற்பாடு யாரும் பல்கலை வளவில் நிக்க கூடாது. நின்றால்  சட்டத்தை மதிக்க வில்லை என்று சொல்லி தூக்கி கொண்டு போடுவாங்கள்.

பகிடிவதை என்பதை நிறுத்த எத்தனையோ சட்டங்கள் இருந்தும், இன்னும் இதனை நிறுத்த முயலாமல் போய் விடுகின்றதை நினைக்கும் போது , ஒரு பல்கலையில் வேலை செய்யும் சிரேஷ்ட  விரிவுரையாளர் என்ற வகையில் மிகவும் வருத்தமே.
உயர்தரத்தில் போட்டிக்கு படித்து பல்கலை வருவது  ஒரு சிறிய கூட்டம்  மட்டும் தான். அவர்கள் அரசாங்கம் வழங்கும் வசதிகளை கொண்டு படித்து கொண்டு போக வேண்டியது தானே.  புது முகங்களுடன் பழக பல்வேறு சந்தர்ப்பங்கள் உள்ளன. ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது, அல்லது ஒரு ஒன்று கூடல் நடக்கும் போது பழகலாம் தானே.  "நாங்கள் பழகுவதில் எந்த தடையும் விதிக்க்கவுமில்லை, விதிக்க போவதும்மில்லை". ஆனால் அவர்கள் பழகுவதாக சொல்லிக்கொண்டு என்னத்தை செய்கின்றார்கள் என்பதை நினைத்தால் தான் வேதனை.

குறிப்பாக நானும் ஒரு  மாணவ போதகராக நான் வேலை  செய்யும் பல்கலைக்கழகத்தில் கடமை செய்கின்றேன். இரவு பகல் பாராது, உணவு கூட உண்ணமால்  நாள் முழுக்க இந்த பகிடி வதையை நிறுத்த பாடு பட்டு கொண்டு இருக்கின்றேன்.  ஆனால் இதையும் தாண்டி இவர்கள் இந்த பகிடி வதையை செய்யத்தான் காரணம் என்ன.  ஏற்கனவே பல மாணவர்களை இழந்து இருக்கின்றோம்.  இதை இவர்கள் அறியாதவர்கள் அல்ல.

நேற்று காலை, போலீஸ் ஸ்டேஷன் இல் வைத்து, எங்களை (நானும் ஒருத்தன் ) நாயிலும் கேவலமாய் பேசி விட்டு அந்த சிரேஷ்ட மாணவ தலைவன் சென்றதை நின்ற பொலிசாரும், சக சிரேஷ்ட விரிவுரையாளர்களும் பார்த்ததை என்ன சொல்ல. அதுக்கு பதில் வெகு விரைவில் வழங்கவுள்ளோம்.  உயர் கல்வி அமைச்சர் நேற்று மாலை தொடர்பு கொண்டு பேசும் போது, நாட்டின் ஞானாதிபதி  கொண்டு எல்லாரும் இந்த விடயம் தொடர்பான பல்கலையின் முடிவை கேட்பதாக சொன்னார். இன்று அதிகாலை அவர் மீண்டும் தொடர்பு கொண்டு, உடனடியாக பல்கலையை மூடி விடுமாறு சொன்னார். சொன்ன படி  மூடி விட்டோம்.  அத்துடன், மாணவர்கள் பலருக்கு இரண்டு ஆண்டு தடையை வழங்க  இருப்பதும் தற்போது முடிவாகி உள்ளது.

என்னுடைய மாணவர்கள், சக மாணவர்களை பகிடிவதை செய்த குற்றத்துக்காக கைது செய்த காரணத்தால் , பொல்லு தடியுடன் என்னை அடிக்க வாறதை யாரு தான் ஏற்பீங்க??  அதுக்கு உங்கள் பதில் தான் என்ன??  கடந்த திங்கள் அதிகாலை எங்களை சூழ்ந்த சிரேஷ்ட மாணவர்கள், வெடி கொளுத்தி போட்டும், மின்சாரத்தை நிறுத்தியும், தண்ணீர் ஊற்றியும், கதிரை மேசைகளை உடைத்தும், கூக்குரல் இட்டும், கொண்டு இருந்த போது, உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்ற காரணத்தால், மாணவ விடுதியில் நின்ற, உப வேந்தர் உட்பட்ட ஆறு சிரேஷ்ட விரிவுரையாளர்களும், உடனையே போலீசுக்கும், உயர்கல்வி அமைச்சர்  கௌரவ எஸ் பி திசநாயக்கவையும் தொடர்பு கொண்டு விஷயத்தை விளங்கப்படுத்தி, எங்களுக்கு ஏதும் நடந்து விடாதவாறு பார்த்து கொள்ளுமாறு கேட்ட சம்பவத்தை பற்றி என்ன நீங்க நினைக்கின்றீர்கள் ???  நானும் அந்த சம்பவத்தில் நின்ற ஆறில் ஒரு சிரேஷ்ட விரிவுரையாளர். ஒரேடியா தூக்கி இருப்பாங்க. என்னமோ நல்ல காலம் இன்னும் தொடர்கின்றது போல இருக்கு .

இன்னும் முதலாம் வருட மாணவர்களை வெருட்டி, நீங்கள் "சிரேஷ்ட மாணவர்களை கைது செய்தால், குரல் கொடுக்க வேணும் "என்று சொல்லு கிறார்கள். இதை பல கனிஷ்ட மாணவர்கள் எங்களுக்கு அறிவித்தும் உள்ளார்கள்,  அத்துடன்  உயர் கல்வி அமைச்சர்,  நீதியமைச்சு, ஜனாதிபதி
யின் செயலாளர் என்று சொல்லி பலருக்கும் அறிவித்துள்ளார்கள்.  பொலிஸ் பாதுகாப்புடன் மாணவர்களை வெளியேற்றும் நடவடிக்கை இடம் பெறுகின்றது.

 பெரும்பாலும் நாளை காலையுடன் வெளியேற்றி முடிக்கலாம் என்று நம்பி இருகின்றோம்.  விஷேட பொலிஸ் படையணிகள் பல்கலையை சுற்றி பாது காப்பில் ஈடுபடுகின்றன.  (காணொளிகள் நாளை தரப்படும் ).


இந்த சிரேஷ்ட மாணவர்கள் , இன்னும் பல்கலை வந்து பதினொரு மாதங்கள் ஆக வில்லை. இவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் வந்தவர்கள். அதுக்குள்ள இப்படி சட்டங்களை எல்லாம் மீறி பகிடிவதை செய்ய துணிந்து விட்டனர். இதை எப்பிடி கையாள போகின்றோம் என்பது தான் பிரச்சினை.

இப்படி மூடி திறந்து பின்னர் மூடி திறந்து .. வேலை எதுவுமே ஆகப்போவதில்லை. பேசாமல் தண்டனையை கொடுங்கள், மீண்டும் திறவுங்கள், மீறுபவர்களுக்கு தண்டனையை கொடுங்கள், பகிஷ்கரித்தால் மீண்டும் மீறுபவர்களுக்கு தண்டனையை கொடுங்கள், இப்படி  ஒரு வருடம் சென்றாலும் பரவாய் இல்லை. இந்த பகிடிவதையை நிறுத்தியே ஆகணும் என்பதில் - நாட்டின் ஜனாதிபதி, உயர் கல்வி அமைச்சர், நாட்டின் பிரதமர், பல்கலை மானியங்கள் ஆணைக்குழு தலைவர் ஆகியோர் முடிவெடுத்து, பாராளுமன்றில் சமர்ப்பித்து, அங்கும் அது ஏற்று கொள்ள பட்டுமுள்ளது..  இதை எப்பதான் நடைமுறைக்கு கொண்டு வரப்போகிறார்களோ தெரியாது. ஒரு சில பாகங்கள் வந்தாலும், முழுமையாக வரவில்லை. வர வாழ்த்துக்கள்..
Related Posts Plugin for WordPress, Blogger...