2009-11-24

நான் அவன் இல்லைங்கோ..




அடியேனிடம் வாசகன் ஒருவன் கேட்ட கேள்விக்கு பதில்

நான் அந்த மாதிரி சுவாமிகள் இல்லை.
நல்லவேளை ஒரு அப்பாவியை கள்ளச்சாமியார் ஆக்காத குறை.

வரலாறு :
ஒரு காலத்தில் நான் சுவாமியார் வேடம் போட்டு நடித்ததன் விளைவு தான் இன்றும் என்னுடன் அதே சுவாமியார் பெயர் அடி படுகின்றது. ஒரு நாடகத்தில் ஒரு வேடம் சுவாமியார். அதில் இந்தியாவில் இருக்கும் அட்டகாச சாமியார்கள் மாதிரி நானும் நடிக்கணும். மது, மாது சூதாட்டம் என்று பலவற்றை செய்து காட்ட சொல்லி நாடகத்தை இயக்கிய எனது நண்பன் சொல்லிட்டான். இது எதுவுமே தெரியாத பாலகனாய் இருந்த என்னை நடிக்க சொன்னால் எப்புடி. ஏதோ ஓரிரண்டு சினிமா படத்தை பார்த்து போட்டு நடித்தேன். காவி உடை அணிந்து தாடி எல்லாம் வளர்த்து ஒரு சாக்கு பையுடன் ( பைக்குள் ஒரு அரைப்போத்தல் plain dee, பழைய சிகரெட் பெட்டி, சாம்பிராணி புகை வெளியே வரும் வகையில் ஒரு டப்பாக்குள் தணல் + சாம்பிராணி, ஒரு பாட்டு பெட்டி -" பக்தி பாட்டுகள் " - பாடும் ) வீதி வீதி எல்லாம் அலைந்து தெரியும் சாமியார நாடகத்தில் நான் வந்த பகுதி எல்லாம் சூப்பர் கிட். அதால என்னை கொஞ்சம் decend ஆ சாமியாரை மாத்தி சுவாமியார் என்று அழைக்க தொடங்கியாச்சு. இதை வலுச்சேர்க்க நான் கோவில் குளம் என்று அடிக்கடி மினக்கெடுவதால் இன்னும் பெயரை நிலைக்க செய்தது.

அதுசரி இப்பவும் அப்படி ஒரு ரோல் செய்தால் கட்டாயம் கலக்குவேன். கொஞ்சம் மேலதிகமாக அறிவு வளர்ந்து இருக்கு.


(நன்றி : சஞ்சீவன் )
இருந்தாலும் நான் ரொம்ப நல்லவன். பழகி பாருங்க தெரியும்.

1 comment:

கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

சாமி!
தங்கள் திருவிளையாடல் அந்த மாமிக்கு தெரியுமா?

Related Posts Plugin for WordPress, Blogger...