2010-09-26

எத்தனை முரட்டுக்காளைகள் வந்தாலும் சூப்பர் ஸ்டாரின் முரட்டுக்காளை தான் ஜெயிக்கும்

வார இறுதி நாட்களில் பெரிதாக தொலைக்காட்சி பார்க்க நேரம் கிடைப்பதில்லை. வீட்டில் வேலைகள் பல இருக்கும். வீட்டு வேலைகளுக்கும்,நண்பர்களுடன் நேரத்தை போக்கல் என வார இறுதி நாட்களை ஒதுக்கி வைப்பது வழமை. வீட்டை சுத்தம் செய்தல், பொருட்கள் வாங்கல், கதிரேசன் கோவில் போகுதல் , நண்பர்களுடன் அரட்டை என்று இரண்டு நாட்களும் போய் விடும்.
வழமை போல் இம்முறையும் இவற்றை செய்தாலும் , கொழும்பில் சினுங்கிய படி இருந்த மழை, என்னை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வில்லை.

வீட்டில் செய்மதி வசதியுடன் கூடிய தொலைக்காட்சி. இருக்கிற தமிழ் சேவைகள் எல்லாமே நாள் முழுக்க சீரியல்களை ஒளி பரப்புவதால் எங்களை போன்ற இளசுகளுக்கு பார்க்க ஒன்றுமே இல்லை. இன்று சும்மா அங்க இங்க என்று மாத்தி மாத்தி பார்க்கும் போது , கொலைஞர் தொலைக்காட்சியில் முரட்டுக்காளை இறுவெட்டு வெளியீடு நடை பெற்றது.


அன்றைய காளை

சுந்தர் சி, சினேகா நடிக்கும் 'முரட்டுக்காளை' படத்தினை ஐங்கரன் இண்டர்நேஷனல் மீடியாஸ் தயாரிக்கின்றது. ஒரு பெரிய நிகழ்வாக ஒளி பரப்பிக்கொண்டு இருந்தது.

எனக்கு இந்த படம் எவ்வளவு கிட் ஆகுதோ தெரியாது. ஆனால் சுந்தர் சி ரஜனியை வைத்தும் படம் எடுத்துள்ளதால் , ஏதோ ஒரு விதத்தில் இப்படத்தையும் ரஜனிக்கு எடுப்பது போல் எடுக்க முயற்சி செய்து இருக்கலாம். இருந்தாலும் இவர் நடிகர் இங்கே. இருந்துதான் பார்ப்போமே. இயக்குனர் செல்வபாரதி என்னதான் செய்ய போறார் பார்ப்போமே.

என்னுடைய , ச்சே ச்சே பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜனியின் முரட்டுக்காளை பார்த்தவர்கள், எதிர்காலத்தில் எத்தனை முரட்டுக்காளைகளை பார்த்தாலும் , அந்த பழைய காளையே சூப்பர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு சூப்பர் கிட் படம்.

'சூப்பர் ஸ்டார்' ரஜினி காந்த் நடிப்பில் 1980-ல் வெளியானது முரட்டுக்காளை.
http://en.wikipedia.org/wiki/Murattu_Kaalai_%281980_film%29

இப்படம் ரஜினியின் 64வது படம், தமிழ்த் திரையுலகில் அவருக்கு மாபெரும் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த, மாபெரும் வெற்றிப் படம். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் அட்டகாசமான பாடல்கள்.

குறிப்பாக பொதுவாக என் மனசு தங்கம் , அந்த கால டப்பான் குத்து. மலேசியா வாசுதேவன் குரலில் ராஜா அங்கிள் இசையோ பிரமாதம்.
இன்றும் எழும்பி ஆடலாம். அப்படி ஒரு இசை. கிராமிய இசை.



பிடிச்ச வரிகள் :


பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
நாலு பேருக்கு நன்மை செய்தா
கொண்டாடுவார்... பண்பாடுவார்
என்னாலும் உழைச்சதுக்கு
பொன்னாக பலமிருக்கு
ஊரோடு சேர்ந்து வாழுங்க
அம்மனருல் சேரும்... தினம் நம்ம துணையாகும்
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
ஹெய்... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே



இன்றைய காளை
இந்த தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜனி தான் , அவருக்கு இணை யாருமில்லை , அவர் நடித்த படங்களில் எத்தனை ரீ மேக்குகள் வந்தாலும் ஒரிஜினலை உடைக்கவும் ஏலாது. நான் அவரின் மிகப்பெரிய ரசிகன், யாவரும் அறிந்த ஒன்றே. ஒரிரு தினங்களில் எந்திரன் வி ஐ பி ஷோ இற்கு காத்து இருக்கின்றோம்.


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...