2010-09-28

எந்திரன் VIP ஷோ பார்ப்பது உறுதி

இந்திய திரையுலமே எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் மற்றுமொரு முக்கிய நாள் , அதுதான் அக்டோபர் ஒன்று. எல்லாரும் அறிந்த ஒரு செய்திதான், அதுதான் எந்திரன் திரைக்கு வருகின்றான்.

இயக்குனர் சங்கரின் கனவு நனவாகும் நாள். சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் கனவு நனவாகும் நாள்.

 இலங்கையில் வி ஐ பி ஷோ முதல் நாள் இரவு காண்பிக்கப்படுகின்றது.  எப்படியாவது வழமை போல் வி ஐ பி காட்சியை பார்த்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அது அவ்வாறே அமைகின்றது.
ஏற்கனவே கொழும்பில் வி ஐ பி டிக்கட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.

ODC 1750/= , பல்கனி: 2500/=

விலை கொஞ்சம் கூடத்தான். இருந்தாலும் வி ஐ பி ஆச்சே.. பார்த்திடுவோம்ல.
ரஜனியின் தீவிர ரசிகன்.  பல நண்பர்கள் என்னுடன் வாக்கு வாதம் செய்தார்கள்.
இப்படத்தை கலைஞர் சார்ந்த கூட்டம் தயாரித்ததால் , ஈழ மக்களின்  துரோகிகள் அவர்கள், அவர்களின் படத்தை பார்ப்பதா என்று.  நான் என்னுடைய பூரண விளக்கத்தை அளித்தேன். சின்னப்பிள்ளை தனமாய் இருக்கிறார்கள் என்றும் அவர்களைப்பார்த்து சொல்லியுள்ளேன். கோவப்படுபவர்கள் படட்டும். அதைப்பற்றி அதிகம் கவனம் கொள்ள விரும்பவில்லை.

உலகம் முழுக்க 2000  திரையரங்குகளில் திரையிடும் அளவுக்கு ஒரு படம் வந்துள்ளது என்றால் , அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பங்கு  உண்டு.  அவ்வளவுதான்.


 ஒஸ்லோவில் உள்ள கொலோசியத்தில் வி ஐ பி ஷோ 
எந்திரன் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

ஆகக்குறைந்தது 500 நாள் ஆவது ஓடும் என்பதில் ஐயமில்லை !!!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...