Showing posts with label பகிடிவதை. Show all posts
Showing posts with label பகிடிவதை. Show all posts

2011-01-01

பகிடிவதையால் மூடப்படும் பல்கலைக்கழகங்கள்

நள்ளிரவும் கடந்து விட்டது.. தொலைபேசிகள் ஒரு புறம் அலறுகின்றன. புது வருட வாழ்த்துக்கள்  சொல்ல எவனாவது எடுப்பானா??.. பல்கலைக்கழகம் பூட்டிய செய்தியால் முதலாம் வருட மாணவர்களின் பெற்றோர்கள், அவர்களிடம் வழங்கப்பட்ட தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் வரிசையில் எனது கைத்தொலைபேசி எண்ணும் இருந்ததால், தொடர்ந்து அழைத்த வண்ணமே இருந்தார்கள் .. ஒன்றுமே செய்ய முடியவில்லை.. கடந்த இரண்டு நாட்களாக  பல்கலைக்கழகம் அல்லுலோகப்பட்டு கொண்டு இருந்தது.  இறுதியாக உயர் கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலும் வந்து சேர்ந்தது. உடனடியாக பல்கலைக்கழகத்தை மூடி விட்டாச்சு. நாளை காலை பத்து மணிக்கு பிற்பாடு யாரும் பல்கலை வளவில் நிக்க கூடாது. நின்றால்  சட்டத்தை மதிக்க வில்லை என்று சொல்லி தூக்கி கொண்டு போடுவாங்கள்.

பகிடிவதை என்பதை நிறுத்த எத்தனையோ சட்டங்கள் இருந்தும், இன்னும் இதனை நிறுத்த முயலாமல் போய் விடுகின்றதை நினைக்கும் போது , ஒரு பல்கலையில் வேலை செய்யும் சிரேஷ்ட  விரிவுரையாளர் என்ற வகையில் மிகவும் வருத்தமே.
உயர்தரத்தில் போட்டிக்கு படித்து பல்கலை வருவது  ஒரு சிறிய கூட்டம்  மட்டும் தான். அவர்கள் அரசாங்கம் வழங்கும் வசதிகளை கொண்டு படித்து கொண்டு போக வேண்டியது தானே.  புது முகங்களுடன் பழக பல்வேறு சந்தர்ப்பங்கள் உள்ளன. ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது, அல்லது ஒரு ஒன்று கூடல் நடக்கும் போது பழகலாம் தானே.  "நாங்கள் பழகுவதில் எந்த தடையும் விதிக்க்கவுமில்லை, விதிக்க போவதும்மில்லை". ஆனால் அவர்கள் பழகுவதாக சொல்லிக்கொண்டு என்னத்தை செய்கின்றார்கள் என்பதை நினைத்தால் தான் வேதனை.

குறிப்பாக நானும் ஒரு  மாணவ போதகராக நான் வேலை  செய்யும் பல்கலைக்கழகத்தில் கடமை செய்கின்றேன். இரவு பகல் பாராது, உணவு கூட உண்ணமால்  நாள் முழுக்க இந்த பகிடி வதையை நிறுத்த பாடு பட்டு கொண்டு இருக்கின்றேன்.  ஆனால் இதையும் தாண்டி இவர்கள் இந்த பகிடி வதையை செய்யத்தான் காரணம் என்ன.  ஏற்கனவே பல மாணவர்களை இழந்து இருக்கின்றோம்.  இதை இவர்கள் அறியாதவர்கள் அல்ல.

நேற்று காலை, போலீஸ் ஸ்டேஷன் இல் வைத்து, எங்களை (நானும் ஒருத்தன் ) நாயிலும் கேவலமாய் பேசி விட்டு அந்த சிரேஷ்ட மாணவ தலைவன் சென்றதை நின்ற பொலிசாரும், சக சிரேஷ்ட விரிவுரையாளர்களும் பார்த்ததை என்ன சொல்ல. அதுக்கு பதில் வெகு விரைவில் வழங்கவுள்ளோம்.  உயர் கல்வி அமைச்சர் நேற்று மாலை தொடர்பு கொண்டு பேசும் போது, நாட்டின் ஞானாதிபதி  கொண்டு எல்லாரும் இந்த விடயம் தொடர்பான பல்கலையின் முடிவை கேட்பதாக சொன்னார். இன்று அதிகாலை அவர் மீண்டும் தொடர்பு கொண்டு, உடனடியாக பல்கலையை மூடி விடுமாறு சொன்னார். சொன்ன படி  மூடி விட்டோம்.  அத்துடன், மாணவர்கள் பலருக்கு இரண்டு ஆண்டு தடையை வழங்க  இருப்பதும் தற்போது முடிவாகி உள்ளது.

என்னுடைய மாணவர்கள், சக மாணவர்களை பகிடிவதை செய்த குற்றத்துக்காக கைது செய்த காரணத்தால் , பொல்லு தடியுடன் என்னை அடிக்க வாறதை யாரு தான் ஏற்பீங்க??  அதுக்கு உங்கள் பதில் தான் என்ன??  கடந்த திங்கள் அதிகாலை எங்களை சூழ்ந்த சிரேஷ்ட மாணவர்கள், வெடி கொளுத்தி போட்டும், மின்சாரத்தை நிறுத்தியும், தண்ணீர் ஊற்றியும், கதிரை மேசைகளை உடைத்தும், கூக்குரல் இட்டும், கொண்டு இருந்த போது, உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்ற காரணத்தால், மாணவ விடுதியில் நின்ற, உப வேந்தர் உட்பட்ட ஆறு சிரேஷ்ட விரிவுரையாளர்களும், உடனையே போலீசுக்கும், உயர்கல்வி அமைச்சர்  கௌரவ எஸ் பி திசநாயக்கவையும் தொடர்பு கொண்டு விஷயத்தை விளங்கப்படுத்தி, எங்களுக்கு ஏதும் நடந்து விடாதவாறு பார்த்து கொள்ளுமாறு கேட்ட சம்பவத்தை பற்றி என்ன நீங்க நினைக்கின்றீர்கள் ???  நானும் அந்த சம்பவத்தில் நின்ற ஆறில் ஒரு சிரேஷ்ட விரிவுரையாளர். ஒரேடியா தூக்கி இருப்பாங்க. என்னமோ நல்ல காலம் இன்னும் தொடர்கின்றது போல இருக்கு .

இன்னும் முதலாம் வருட மாணவர்களை வெருட்டி, நீங்கள் "சிரேஷ்ட மாணவர்களை கைது செய்தால், குரல் கொடுக்க வேணும் "என்று சொல்லு கிறார்கள். இதை பல கனிஷ்ட மாணவர்கள் எங்களுக்கு அறிவித்தும் உள்ளார்கள்,  அத்துடன்  உயர் கல்வி அமைச்சர்,  நீதியமைச்சு, ஜனாதிபதி
யின் செயலாளர் என்று சொல்லி பலருக்கும் அறிவித்துள்ளார்கள்.  பொலிஸ் பாதுகாப்புடன் மாணவர்களை வெளியேற்றும் நடவடிக்கை இடம் பெறுகின்றது.

 பெரும்பாலும் நாளை காலையுடன் வெளியேற்றி முடிக்கலாம் என்று நம்பி இருகின்றோம்.  விஷேட பொலிஸ் படையணிகள் பல்கலையை சுற்றி பாது காப்பில் ஈடுபடுகின்றன.  (காணொளிகள் நாளை தரப்படும் ).


இந்த சிரேஷ்ட மாணவர்கள் , இன்னும் பல்கலை வந்து பதினொரு மாதங்கள் ஆக வில்லை. இவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் வந்தவர்கள். அதுக்குள்ள இப்படி சட்டங்களை எல்லாம் மீறி பகிடிவதை செய்ய துணிந்து விட்டனர். இதை எப்பிடி கையாள போகின்றோம் என்பது தான் பிரச்சினை.

இப்படி மூடி திறந்து பின்னர் மூடி திறந்து .. வேலை எதுவுமே ஆகப்போவதில்லை. பேசாமல் தண்டனையை கொடுங்கள், மீண்டும் திறவுங்கள், மீறுபவர்களுக்கு தண்டனையை கொடுங்கள், பகிஷ்கரித்தால் மீண்டும் மீறுபவர்களுக்கு தண்டனையை கொடுங்கள், இப்படி  ஒரு வருடம் சென்றாலும் பரவாய் இல்லை. இந்த பகிடிவதையை நிறுத்தியே ஆகணும் என்பதில் - நாட்டின் ஜனாதிபதி, உயர் கல்வி அமைச்சர், நாட்டின் பிரதமர், பல்கலை மானியங்கள் ஆணைக்குழு தலைவர் ஆகியோர் முடிவெடுத்து, பாராளுமன்றில் சமர்ப்பித்து, அங்கும் அது ஏற்று கொள்ள பட்டுமுள்ளது..  இதை எப்பதான் நடைமுறைக்கு கொண்டு வரப்போகிறார்களோ தெரியாது. ஒரு சில பாகங்கள் வந்தாலும், முழுமையாக வரவில்லை. வர வாழ்த்துக்கள்..

2009-09-26

பகிடிவதையில் -அனுபவங்கள் பாகம் 3

பகிடிவதையில் -அனுபவங்கள் பாகம் 1
http://svpriyan.blogspot.com/2009/09/blog-post_17.html

பகிடிவதையில் -அனுபவங்கள் பாகம் 2 - விரைவில் !!!!

எத்தனை தரம் தான் மாட்டுவது. தப்பி பிழைக்கலாம் என்றால் எங்கள் உடைகளே காட்டி கொடுத்து விடும்.

பல்கலை நேரங்களில் :- ஆடைகள் அணியலாம் அல்லது எங்களுடன் வைச்சு இருக்கலாம் என்று அனுமதிக்கபட்டவை

1- பாட்டா செருப்பு
2- கறுப்பு கலர் ஜீன்ஸ் ( டெனிம் தடை)
3- வெள்ளை கலர் shirt - half sleeve (வேறு கலர்கள் சந்தர்ப்பங்களை பொறுத்து)
4- ஒரு file மட்டை + ஒரு சில தாள்கள்
5 ஒரு பேனை
6 - பணப்பை ( உள்ளே :- அப்போ நமீதா இல்லை அதனால் ரம்பாவின் ஒரு item படம்)

வேறு எதுவும் இல்லாமல் இதை வைத்தே நாங்க யாரு என்று பார்க்கிரவங்கள் எல்லாருமே இடை போடுவது மட்டும் இல்லாமல் தங்கள் தங்கள் நேரங்களுக்கு ஏற்ற மாதிரி எங்களை புளிந்தே எடுத்து கொள்ளுவார்கள்.


Super Economy காலம்



Ground

பல்கலை வாழ்க்கையிலே சூப்பர் economy ஆ வாழ்ந்த காலம் என்றால் இந்த 3-4 மாதங்கள் தான் !!

breakfast:- பாண் + பருப்பு தண்ணீர் (இதுக்குள் பருப்பை தேடி பிடிக்க முடியாது)+ பொல்சம்பல்

Lunch :
சாபிடுறது சோறு + குளத்து மீன் ( சூப்பர் தான் )( சிவாஜி பாரதிராஜாவின் படத்தில் மீனை சாப்பிட்ட விதம் போலவே ரசித்து ருசித்து சாப்பிட்டேன்).

இரவு : பெரும்பாலும் ஒரு நல்ல நிறைவான சாப்பாடு குறுந்துவத்தை கடையில்


செவ்வாய் வெள்ளி சைவப்பழமாக இருந்த நான் எவ்வளவு அழுதும் விபரத்தை சொல்லியும் முடியாமல் கடவுள் மன்னிப்பாராக என்று சாப்பிட தொடங்கியது இந்த காலத்தில் தான்.


அனுபவித்ததில் பிடித்தவை



என்ன சத்தம் இந்த நேரம்

இந்த பாட்டை பாட சொல்லி ஒருமுறை யாரோ ஒரு சீனியர் சொன்னதிற்கு. எங்கள் பெண்கள் கூட்டத்தை சேர்ந்தவள் பாடியதால். நாங்கள் தான் மாட்டி கொண்டோம்.
அதன் ரீமிக்ஸ் version, fast forward version, slow version,வேறு மொழியில் பாடுதல்( நான் ஜப்பான் மொழியில் பாடியது இன்னும் ஞாபகம் இருக்கு)

இருட்டு அறைக்குள்
அடிக்கடி இருட்டு அறைக்கு செல்வது முதல் வாரத்தில் இருந்து நடந்ததால் எனக்கும் அலுத்து போச்சு.
இவன் ரொம்ப 'தைரியசாலி'னு யாரும் பார்த்தா சொல்லுவாங்கள்.
ஒரு முறை எதாவது பகிடி ஒற்றை சொல்ல சொன்னதிற்கு, நான் சிரிச்சாலே பகிடி என்று நானும் சொன்னதாலே அந்த அறைக்குள் இருந்த sunlight soap இன் பாதியை வாயுக்குள் புகுத்தி என்னை ஒரு முறை திணற செய்தது என்றுமே மறக்க முடியாத துன்பியல் சம்பவம். அன்று எடுத்த வாந்தி போல என்றும் எடுக்கவில்லை.

மேலும்: இருட்டு அறைக்குள் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று முன்னர் யாரோ கேட்டதிற்கு ; வேற என்ன மாதிரி இருப்போம் சகோதரா??

Marks போடும் முறைகள்
இது எல்லாரும் மாட்டி கொள்வது வழமை. என்னை பார்த்து யாரோ ஒரு அம்மையாருக்கு marks போட சொல்லி என்னையே கடுப்பு எத்தி போட்டாங்கள். இவங்கள் எல்லாம் ...................!!!
கனக்க கதைச்சா இருட்டு அறை. சரி எத்தினை தரம் தான் அங்க போறது. போனால் போகட்டும் என்று ஒரு marks போட்டேன், படு பாவிகள் அதுக்கு விளக்கம் கேட்டு போட்டாங்கள். என்ன பிறவிகளோ.
சரி சொல்லி தொலைச்சம். அதுக்குள்ள ஒருத்தர் எனக்கு feedback வேற தாரார். தூ.....!!!!



பேராதனை சந்தியில் ஒரு இரவு
எங்கயோ தப்பினம் பிழைத்தோம் என்று வந்த நானும் என் ரூமாவையும் பிடிச்சு போட்டாங்கள். இரவு எட்டு மணி இருக்கும். இது வேற பீட சீனியர் மார்.
அப்புறம் என்ன அவங்கள் Panideniya வில் கொண்டு போய் வைச்சு வறுத்து எடுத்து போட்டு கடைசியா இரவு 12 மணிக்கு துரத்தி விட்டாங்கள். வழமையான அழு மூஞ்சி . களைப்பு தாகத்துடன் மீண்டும் கம்பளை வீதியில் நடை !!!! அங்கே இருந்து உள்ளாடைகள் எல்லாம் ஜீன்ஸ் பொக்கட்டுக்க கவனமா வைச்சு கொண்டு, நடந்து குருந்து வத்தை வந்தால் அன்று இரவு தொடர் தாக்குதல்கள். அதிகாலை 4 மணி வரை எதோ ஒரு வீட்டு அண்ணன் மாருக்கு நாங்கள் தான் இரவு ராணிகள் (ராஜாக்கள்) . ஆட்டமோ ஆட்டம். இடைக்கிடை எங்களுக்கும் பருக்கோ பருக்கோ என்று பருக்கி போட்டு ஆட விட்டு பார்த்திட்டு நின்றாங்கள் பாருங்கோ அதை விட கொடுமை வேற இல்லை. அதோடதான் நானும் டப்பான் குத்து ரசிகனாக வந்தது.

குறிஞ்சியில் தைப்பொங்கல்
இரவு இரவாக ground இல உடல் பயிற்சிகள் முடித்து விட்டு அதிகாலை இரண்டு மணிக்கு தோய்ந்து போட்டு பொங்கல் பாணைக்க தண்ணியும் நிரப்பி கொண்டு அருணாசலத்தில் இருந்து எங்களை நடக்க பண்ணின கொடுமை. பானையை தூக்க கூட பலன் இல்லை. மார்கழி குளிர் தேனிர் குடிக்காமல், நித்திரை தூக்கத்தில் கோவில் ஏறி சென்ற பெருமை எங்களுக்கு இருக்கு. முருகனுக்கே இது தாங்காது.



( நேரம் உள்ள போது -தொடரும்)
Related Posts Plugin for WordPress, Blogger...