Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

2010-05-07

தற்காலிக பின்னடைவுகள், மனதை உருக்கிய பாடல், சுறா அனுபவங்கள்

தற்காலிக பின்னடைவுகள்:

மலையே ஆடினதாம் மதிலாடினால் என்ன. அதுதான் எனது திருமண வாழ்க்கை, இன்னும் ஒரு இரு நாட்களுக்குள் முற்று புள்ளிக்கு வந்து விடும். நீண்ட நாட்களாக நான் பட்ட துன்பியல் அனுபவங்களுடன் கூடிய விளக்கமான அறிக்கை கொழும்பு மாவட்ட நீதி மன்றம் விவாகரத்து வழங்கப்படுகிறது என்று அறிவித்த பின்னர் தரப்படும். அனுபவங்கள் வாழ்கையின் பாடங்கள்......:)

மனதை உருக்கிய பாடல்:
கடந்த வாரம் 155 இலக்க பஸ்ஸில் மருதானைக்கு சென்று வர வேண்டியதாயிற்று. வெள்ளவத்தையில் ஏறும் போது பஸ்ஸில் சனமே இல்லை, இருந்தாலும் கொஞ்ச சனத்தை தன் சாதுரியத்தால் சேர்த்து போட்டான். முன் ஆசனத்தில் இருந்து பஸ்ஸின் இசைதட்டில் இருந்து ஒலித்து கொண்டு இருந்த அழகான சோக பாடல்களை இரசித்து கொண்டு இருந்தேன். கேட்ட பாடல்களில் எனக்கு பிடித்த, என்னை இரசிக்க வைத்த பாடல் இதுதான்.
நெஞ்சே நெஞ்சே பாவை நெஞ்சே ........................:)



விசேடமாக இந்த பாட்டை ஓட்டுனர் திருப்பி திருப்பி போட்டு பஸ்ஸில் சென்றோருக்கு தன் காதல் "வலி"மையை உணர்த்தி விட்டார். மருதானையில் இறங்கும் போது அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லி போட்டு இறங்கினேன்:).


சுறா அனுபவங்கள்

நீண்ட நாட்கள் வெளிநாட்டில் இருந்து வித்தியாசமான இரசிகர்களுடன் திரைப்படம் பார்த்து வந்த நான் , அண்மையில் விஜய் இன் சுறா படத்தை லோக்கல் பஜாருடன் பார்த்து ரசித்தேன்( ஒரு பொய் சொல்லுறன் ). தமன்னாவுக்காக தான் நான் அந்த படத்தை பார்த்தேன். தமனாவை ரசித்தேன். படம் பரவாய் இல்லை .. இருந்தாலும் விஜய் அடுத்த முறையாவது அடுத்தவன் காசை சுரண்ட முன், கொஞ்சம் கவனமாய் படத்தை எடுத்தால் சரி.

சுறா படம் பற்றி வந்த ஜோக்ஸ் களில் எனக்கு பிடித்தது :

மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனையை விட அதிகபட்ச தண்டனையாக கட்டி வச்சு சுறா திரைப்படம் பார்க்க விடவேண்டும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் இன்று கோரிக்கை விடுத்தார்:)

2010-02-09

எனக்கு பிடித்த அந்த " மலரே "

ஹா ஹா ஒரு பொல்லாப்புமில்லை இது பாட்டை பற்றி சொன்னேன்..

கடும் வேலைக்கு மத்தியில் இரவு வேளையில் இதமான இடைக்கால காதல் தோல்வி ,சுகமான இதமான கானங்களுடன் இணைந்து இருந்த போது எனது பாட்டு பெட்டியில் போன இந்த இரண்டு மலர் பாடல்களும் என்னை முந்தியே பறி/ பற்றி கொண்டு விட்டன. இருந்தாலும் ஓரிரு தடவைகள் கேட்டு அந்த "மலர்" (ரும்) நினைவுகளை மீட்டு கொண்டேன்.

முதலாவது பாடல் : உண்மையிலையே ஒரு காலத்தில் பலருக்கு பிடித்த ஒரு காதல் தோல்வி பாடல் ; மலரே என்னென்ன கோலம்

மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இதுதான் உன்னோடு அழகோ
மலரே என்னென்ன கோலம்
மலரே நலமா...

வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்
வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்

ஏழ்மையின் இலையுதிர்
காலத்தில் இங்கே
பூவேது.. காயேது..
நினைத்தால் எட்டாஆஆஆஆத தூரம்
எனக்கேன் உன் மீது மோகம்
திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே
நீயேங்கே.. நானேங்கே..
திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே
நீயேங்கே.. நானேங்கே..
நீயேங்கே.. நானேங்கே..

மலரே என்னென்ன கோலம்
மலரே நலமா...
மலரே.. ஹநலமா...

நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு
நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு
அழுதிடும் குழந்தையின் அம்புலிப்பருவம்
என்னோடு நான் கண்டேன்



இருக்கும் வர்க்கங்கள் ரெண்டு
உலகில் இப்போதும் உண்டு
சமவெளி மலைகளை
த்ழுவிட.. நினைத்தால்
வழியேது.. முடியாது
சமவெளி மலைகளை
த்ழுவிட நினைத்தால்
வழியேது.. முடியாது..
வழியேது.. முடியாது..

மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இதுதான் உன்னோடு... அழகோ...
மலரே.. என்னென்ன கோலம்



இரண்டாவது வித்யாசாகரின் இதமான மெட்டுகளில் மலரே மௌனமா பாடல் ; ஒரு காதல் டூயட்

மலரே மௌனமா மௌனமே வேதமா?
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? அன்பே
மலரே மௌனமா மௌனமே வேதமா?

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ? ஆ
மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ?
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா?
மார்போடு கண்கள் மூடவா?

மலரே மௌனமா மலர்கள் பேசுமா?







கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு
காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்க்கை தந்த வள்ளலே

மலரே மௌனமா மௌனமே வேதமா?
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? அன்பே
மலரே ம்.. மௌனமா? ம்ம்.. மௌனமே ம்ம்ம்.. வேதமா? ஆஅ

2010-01-17

மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு -

அப்போது பல்கலைக்கழக அனுமதி கிடைத்து விட்டது. கொழும்பில் தனியார் கணணி மையத்தில் இரண்டு வருட டிப்ளோமா முடியும்காலம், முதல் முறையாக சகோதர மொழி மாணவர்களுடன் பழகிய காலங்கள். இன்றும் அவர்கள் எனது நண்பர்களா இருக்கிறார்கள். வார நாட்களில் கணணி மையத்தில் தான் காலத்தை போக்குறது.

யாழ்ப்பாண பிள்ளைகளை, முன்னர் அங்கு இருந்த காலத்தில் ஒரு சிலருடன் கதைத்து ,சில வேளைகளில் கதைக்காமல் தவிர்த்து ரொம்பவே பீல் பண்ணி இருந்த காலத்தில் தான் , இப்படி யான புது அனுபவங்கள் இந்த புது முகங்களுடன்.



நான் படித்த வகுப்பில் ஆறே ஆறு பையன்கள்(மூன்று சகோதர மொழி, நானும் கரனும் மற்றது இன்னொரு கொழும்பில் வளந்த பையன் - கொழும்பு பையன் ). மிச்சம் எல்லாமே ( பதினனைந்து) தமிழ் சகோதரிகள். யாரு என்றெல்லாம் கேட்க கூடாது. அதில பாதி தமிழே கதைக்காம , எதை கேட்டலும் ஆங்கிலத்தில் எங்களையும் கதைக்க வைக்க முயலும் சகோதரிகள். அவங்களை பற்றி சொல்லணும் என்றால் ( கட்டமைப்பை ) , நமீதா மவளிகாவே தோத்து போயிடுற அளவுக்கு ....... அல்லாத பிகர்கள். மீதி சைவப்பழங்கள். பட்டை தீட்டி தான் அங்கேயும் வருவினம். போனால் போகுது ஒரு மகாலட்சுமி மாதிரி என்று சொல்லுவம்.

விளம்பர இடைவேளை ஆரம்பம்

வேறு வகுப்பில் படித்த நண்பர் ஒருத்தன் சொன்ன ஞாபகம் இருக்கு.. "டேய் உங்கட வகுப்பில எல்லாமே பெண் பிள்ளைகலாமே " ஆமா நாங்க எப்படி தான் ஆண்பிள்ளைகளாய் இருக்கிறது.. அதுகளே மாத்தி போட்டுதுகள்.. என்று உடனே வெட்கம் , மானம் ,ரோஷம் ,சூடு சுரணை இல்லமல் சொல்லிப்போட்டேன்.:)

விளம்பர இடைவேளை முடிவு


எங்களுக்கும் வகுப்பு போறதென்றால் ஒரே கிளு கிளுப்பு. அதுவும் காலை தொடங்கினால் மாலை 4:00 மணி வரை வகுப்பு., பின்னர் எங்கள் கணணி மையத்துக்கு அருகாமையில் உள்ள , MC இல் இருக்கிற KFC இக்கு போறது ( கூட்டிட்டு இல்ல ,கூட்டி கொண்டு போவினம் )..அப்போ எல்லாம் கோழி விலை குறைவு ..:( இப்ப எல்லாம் அப்படி யாரும் கூட்டிட்டு போக கட்டு படியாகாது ..கோழி 1000 ருபாய்.


இப்படி
இருக்கிற காலத்தில் நம்ம கரனுக்கு ஒரு கொழும்பு பெண் மீனாட்சி என்று சொல்லுவம் சுருக்கமாக, அவள் மீது ஒரு கிக்கு ,லவ்வு ,நாங்க சும்மா இருப்பமோ வாற போற நேரம் எல்லாம் அவளை பார்த்து எங்கட ஸ்டைல் இல் " யாரோ தங்களை லவ் பண்ணினம் போல , நீங்க வர வர புதுசு புதுசா உடுப்பு போடுறீங்க" என்று சொல்லி அவளுக்கும் அலுத்து போச்சு.. மீனாட்சிக்கு எங்கள் மூவரில் யாரு என்று தான் சந்தேகம். அவளும் ஒவ்வொருத்தரா பரீட்சித்து பார்த்தாள். நாங்களும் பரீட்சையில் ஒரே மாதிரி பதில்கள் வழங்கி அவளை குழப்பினோம்.


இருந்தாலும் பொண்ணு மட்டரில நாங்க சறுக்குவம் என்று தெரியாமல் இல்லை அவளுக்கும். இப்படி இருக்கும்போது தான் தென் இலங்கை சுற்று பயணம் , இரண்டு நாட்கள் .வகுப்பில் ஒரு சகோதரியை தவிர எல்லாரும் வர கூடிய தாய் இருந்தது.. நாங்க விடுவமோ. எங்க பஸ் வண்டிக்கையே எங்க சகோதரிகள் , எங்க நல்ல காலத்துக்கு விசிறிகள் வேற பஸ் வண்டிக்க. கொழும்பை தாண்ட முதலே ஆட்டம் பாட்டம் .. சூப்பர்.
என்னட்ட இருந்த ஒரு சில பாட்டுகள் ( அப்போ தான் தேவா என்னை டப்பான் குத்தால் கவர்ந்த நேரம்) அவரின் பாட்டுகள் தான். நாள் முழுக்க ..:) முக்கிய விஷயம் நாங்க ஆட இடமிருக்கவில்லை . இருக்கிற பொண்ணுகள் எல்லாமே ஆட தொடங்கிற்றுதுகள். துப்பட்டாவை இடுப்பில் கட்டி போட்டு ஆட தொடங்க நாங்க முழு நாளும் அங்க விழுந்து இங்க விழுந்து ஓவ்வொரு கோணத்தில் படம் எடுத்த தான் வேலை :) நான் இல்லை .. எல்லாருமாய் ..

போட்ட பாட்டுகளில் ஒரு சிலவற்றை அப்பப்போ இங்கே இணைத்துள்ளேன்.

முதல் நாள் கதிர்காமம் , மலை ஏறினது ; முருகன் என்று போய் முடியவே இருட்டிட்டு.

இரவு ஒரு நல்ல சாப்பாடு ( என்ன ...குக்குள் மஸ் , பொல் சம்போல், பத், கங்குன் ) . ஒரு விசிறி மாணவனின் வீட்டில் தான். அனுபவம் அவங்கட சாப்பாடு சாப்பிட்டு.. இப்போ எல்லாம் அதுதான் கூட சாப்பிடுறது. செலவும் இல்லை .. :)

இரண்டாம் நாள் மாத்தறை ,காலி என்று போனாலும் கூட நேரம் பஸ் பயணம் தான். பாட்டு பெட்டிக்கு ஒய்வு இல்லை. பொண்ணுங்க ஆட்டமும் தொடர்கிறது.

நாங்களும் எப்படியாவது இந்த லவ் மட்டரை சொல்லியே ஆகணும் என்று , தொடங்கியாச்சு. முதலில தூரவா (பஸ் இக்க போய் நின்றுகொண்டு தம்பி பாட்டை போடுடா என்றதும் போட்டேன் அந்த பாட்டை )



அதுதான் மீனாட்சி மீனாட்சி .. ஆனந்த பூங்காற்றே .. அதோட எல்லாரும் எங்க மற்றைய சகோதரிகளும் சேர்ந்து மீனாட்சி அப்படி என்ன தான் காதல் என்று சொல்ல .. பின்னுக்க இருந்த நான் கரன் என்னவாம் என்றேன்.. ஒருக்கா சப் என்று போச்சு.. பிறகென்ன ட்ரிப் எப்படி இருக்கும் என்று தெரியும்தானே ..
மீனாட்சி அழ தொடங்க , எல்லாரும் என்னை பேச, கரன் உவங்கள் போய் என்று சொல்ல ,, நான் தனியவே நின்று வேண்டி கட்டினது தான் .. ( இது வழமை தானே - வடிவேலு ஸ்டைல் இல் .ம்ம்ம்ம்ம்ம்......................)

ஒரு இரண்டு மணி நேரம் பஸ் டிரைவர் நிம்மதியா பஸ் ஒட்டி இருப்பான். அப்புறம் மாலை பேருவல கடல் கரையில் ஒரு சில மணி நேரம் .. அதுக்கு பிறகு எல்லாருமா சேர்ந்து வந்த trip ஐ முதலில் முடித்து போட்டு பிறகு கதைப்பம்..

அதுக்கு பிறகு எங்கே தேவா .. எல்லாமே .. எங்கட சோகமான ஆட்டம் தான்.. அப்போது தான் நாங்கள் ஆடினது.. நிம்மதியா .. :)




அதிலும் முக்கியமாய் அஞ்சலியை மடிக்கலாம் என்ற பாட்டுக்கு ..எங்களை மறந்து ஆடினது மறக்க முடியாது..




அஞ்சலியை மடிக்கலாம் :)

ஒரு மாதிரி அந்த பொண்ணுகளும் எங்கட ஏதோ ஆடினதை பார்த்தோ தெரியல .. கொஞ்சம் வெளிப்பாய் இருந்ததை காண கூடியதை இருந்தது ..



போதிக்கின்னு.. :)

இப்படியே வந்து சேர்ந்திட்டம் .. சந்தோஷமான ஆரம்பம் பெரிய வெற்றி இல்லாமல் முடிஞ்சு போச்சு .. ஹா ஹா ..

அடுத்த நாள் வகுப்புக்கு போகும்போது மீனாட்சி நெருப்பு எடுத்ததை பார்த்த போது ,,.. காளி வேஷம் தெரிஞ்சது.. எப்படி.. சமாளிக்க முடியுமோ.. அப்படி எல்லாம் சமாளிச்சு பார்த்தேன்,.. முடியவே இல்ல ..
இருந்தாலும்.. எங்கட tune எல்லாமே அந்த மீனாட்சி பாடல்தான்.. " அடி அடிச்சால் அம்மியும் நகரும் " என்று எங்கட சங்கத்தின் திருநாமம் ,.,,. முயற்சி செய்து செய்து ,, மீனாட்சி ஒரு கட்டத்தில்( ஏறத்தாள இரண்டு ஆண்டுகள் மேலான காதல் .. முடிவுக்கு வந்தது..) ..

விளமபர இடைவேளை ஆரம்பம்

அதாவது நான் பல்கலைக்கழகம் போற காலத்தில்,( இங்கே ஒன்றை சொல்லணும் .. எங்கட கம்பஸ் இல் போய் படிக்க தொடங்கின பிறகு) , யாரோ ஒருத்தன் என்னை கொழும்பில் கேட்டன் மச்சான் . உனக்கு ராசிடா... கொழும்பில இவளவை ,, கம்பஸ் இல் அவளவை... நான் சொன்னேன் " தேரான தேரெல்லாம் தெருவில் ஓட , தேவாங்குகள் மட்டும் கம்பஸ் வருமாம் " இப்போ இதை தத்துவம் மாதிரி .. ... எடுத்து வைச்சு இருக்கானாம் .. அவன்.. இது பத்து வருஷத்துக்கு பின்னர் சொன்னான் .. எனக்கு:)
)


விளமபர இடைவேளைமுடிவு


ஒரு நாள் கரன் எனக்கு " தொல்லை" பேசியில் மச்சான் மீனாட்சி என்னை வரட்டாம் KFC இக்கு ..தானும் ஏதோ கதைக்க வேணுமாம். அப்ப எனது அறிவுரை தம்பி தனியே போயிடாதே ,,, அடியாள் வைச்சு அடிக்க போறாளோ ..அல்லது ... காதலை சொல்ல போறாளோ.. இல்லை ... நான் வேறை யாரையோ காதலித்து விட்டேன் ,,, என்று.. சொல்ல ..போறாளோ .,.. என்ற ஏக்கத்துடன் கூடிய அறிவுரையை சொன்னேன்..

அங்கே ..நடந்தது என்ன.. கரனின் நிலைமை என்ன.. அடுத்த வாரம் தொடரும்.,.

(சீரியல் எல்லாம் பார்த்து பொறுமையா இருக்குறவர்களுக்கு.. பரவாய் இல்லை மற்றையோர் மன்னிக்கணும்.. நேரம் இல்லை எழுதி முடிக்க ... :)

2009-11-29

ஞாயிறை பொழுது போக்கிய தொலைபேசி அழைப்புகள்




இதமான சனி இரவு களைத்து போய் நண்பனின் வீட்டில் இருந்து வந்து சேரும் போது அதிகாலை 1 மணி .... வீட்டை சுத்தம் செய்து போட்டு படுப்பம் என்று .. சொல்லி கொண்டு வந்த களைப்புக்கு தேநீர் அருந்த தண்ணியை கொதிக்க வைத்து கொண்டு இருக்கும் போது, கொழும்பில் இருந்து உற்ற நண்பனின் அழைப்பு; காதல் தோல்வி.. அதுதான் மைய்யக்கருத்து..( இதை சொல்லி முடிக்க ஒரு மணித்தியாலம் போட்டுது )பெண் பகுதி எனக்கு தெரிந்த பகுதி.. எனது உதவி .. தேவை.. எப்படியோ பேசி எதாவது செய்,, என்று .. அழுது புலம்பல் .... எனக்கு இருக்கிற களைப்பு எல்லாமே போயிட்டு .. !!! பேசுகிறேன் என்று சொல்லி அந்த பகுதிக்கு தொலைபேசியை அதிகாலையே ( 2 மணி ஐரோப்பிய நேரம்- இலங்கை நேரம் ஞாயிறு காலை 6:30 மணி ) முறுக்கினால் .... இன்றைய ஞாயிறு நாள் எப்புடி .. போயினது என்று தெரியாது அத்தனை தடவை .. கால் எடுத்தாச்சு.. .,. .. பெண்பகுதியினர் ஏமாற்றி விட்டனரா இல்லை ..பெண்ணுக்கு விருப்பம் இல்லையா.. என்று நான் அறிய இன்று மாலை நான்கு மணி..

நானறிந்த அளவில்..
ஒரு தலைக்காதல் , நான் படித்து ( 4 வருடங்கள் ) முடித்து விட்டு வருகிறேன் அதுவரை wait பண்ணுவியா என்று நண்பன் கேட்டதுக்கு அவள் மௌனமாய் இருந்தது, அதுக்கு பிறகு நண்பன் அவளுடன் பழகிய விதங்கள் என்று எல்லாம்.. அவனை அவளும் ஏற்று க் கொண்டு விட்டாள் என்று கடந்த நான்கு வருடமாக அவனது படிப்பை நன்றே செய்து முடித்து விட்டு வந்த போது அது அவ்வாறு இல்லை என்று .. புரிந்ததும்.. அவனது மனமும் உடைந்தது.. வாழ்வும் பாழாய் போனது என்று புலம்பல்.. ;

சரி பெண் பகுதியினரை ... ஒரு மாதிரி சமாளித்து கதைத்தால் .. சாத்திரம் பார்த்து "சரி" என்றால் திருமணம் செய்து வைக்க தயார் என்று .. சொன்னது கொஞ்சம் ஆறுதல் . அது நடக்காது.. என்று எனக்கு நன்றே தெரியும் . அவர்களுக்கும் தான் .செவ்வாய் குற்றம் தான் .. தடை செய்யுது.. என்று பெண் பகுதியினர் சொல்லி விட்டனர்.. அதால பேசாமல் வேறு பெண்ணை பார்க்கவும் என்று அறுத்து உறுத்து சொல்லி தொலைபேசியை வைத்து விட்டனர்.. எனக்கு கடைசியில் கதைக்க ஒரு chance கூட குடுக்கவில்லை.. :(

பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்று சொன்ன பிறகு .. என்னதான் செய்யலாம்.. பேசாம குடித்து கும்மாளம் போடாமல் வீரமாய் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டியது தானே.. என்று ஒரு உறுதியான ஆறுதல்கள் சொன்னதுதான் ...

ஒன்று போனால் இன்னொன்று .. இனியாவது .. காதலிக்கும் போது confirmation letter ஐயும் சேர்த்து வாங்குங்க பசங்களா.. இல்லாட்டிஇப்படித்தான் .. நடக்கும்..:)

சாத்திரம் உண்மையா .. கடவுள் இருக்காரா .. சாத்திரம் பார்த்து செய்த திருமணம் எல்லாம் சரியான திசையில் குடும்ப வாழ்கையை கொண்டு செல்கின்றனவா.. அல்லது காதல் திருமணங்கள் சரியான திசையில் குடும்ப வாழ்கையை கொண்டு செல்கின்றனவா?? இதுக்கெல்லாம் இருந்து யோசித்தால் ஒரு பெரிய சபையே வைக்கலாம்.. வேணாம் விடுங்க .. இந்த தலைப்புகளில் ஒன்றால் ..நானே நன்றே பாதிக்கப்பட்டு இருக்கின்றேன்.. :)

யப்பாடி கடந்த ஒரு நாள் நான் நித்திரை கூட கொள்ளவில்லை,..இந்த ஆரவாரத்துக்க எனது பாட்டு பெட்டியில் ஒரு பாட்டு போயிச்சு.. அதுவும்.. situation song.. :)
கேளுங்க நீங்களும் ,..



கடைசியில் suriya வரும் காட்சி பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்ப வில்லை


ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே



"True love does not come by finding the perfect person, but by learning to see an imperfect person perfectly."

2009-11-04

எனக்கு பிடித்த "இதயம்" சொல்லில் ஆரம்பிக்கும் "இதயம் வலிக்கும் " பாடல்கள்

இந்த தலைப்பில் எழுத எந்த பின் காரணங்களும் இல்லை. எனக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கும் அதனால் இந்த பாட்டுகளை விரும்புகிறேன் என்று நினைக்க வேண்டாம். பின்னடைவுகள் தான் பிறகு பாரிய வெற்றியை தரும் என்ற நம்பிக்கையில் ... !!!


ராத்திரி இணைய வசதி இல்லை அதனால் இருந்த காணொளி பாடல்களை வரிசைப்படுத்தி பார்த்தேன்.
அதில் ஒரு சில என்னை எப்பவோ கவர்ந்தவை. அதில் இதயம் என்று ஆரம்பிக்கும் பாடல்கள் மூன்று .
ஒருக்கா நீங்களும் கேளுங்கள். நிச்சயம் பிடிக்கும் என்று நம்புறேன்





பாடல் ஒன்று :-


மோகனின் சூப்பர் கிட் படங்களில் ஒன்று தான் தான் இந்த இதயக் கோவில், எத்தனை முறையும் பார்த்து கொண்டு இருக்கலாம். பாடல்கள், கௌண்டமணி பகிடிகள், காதலின் வலி என்று எல்லாமே நிறைந்த ஒரு நிறைவான படம். ஒரு சோகமான முடிவு.. என்ன செய்வது காதல் தோல்வி என்று வந்துவிட்டால் இது எல்லாம் விளைவுகள் தான் என்பதை புரிய வைத்த படம்.

படம்:- இதயக் கோவில்
பாடியோர்:- எஸ் பி பாலசுப்ரமணியம்,இளையராஜா
இசைஅமைத்தவர்:-இளையராஜா


இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்


(டூயட் )

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்

ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல
எனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்


(சோகம் )

காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதத்தால்
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்


பாடல் இரண்டு

நான் பிறந்த ஆண்டில் வந்து இன்று வரை இல்லை என்றுமே இந்த பாடல் மெகா ஹிட் தான். ஈழத்து வானொலிகளில் ராத்திரி வேளையில் நடக்கும் பழைய மெட்டுகளை மீட்டி தரும் நிகழ்ச்சிகளில் இந்த பாட்டு எப்படியும் ஒலிக்கும். எனக்கு அங்கே கேட்டு தான் விளைவால் தேடி பிடித்து வைத்து இருக்கேன்.

படம் : புதிய வார்ப்புகள்
பாடல் : பஞ்சு அருணாசலம்
பாடியவர் : ஜென்சி
இசை : இளையராஜா
வெளியான ஆண்டு : 1979
பாரதிராஜா, பாக்யராஜ், ரத்தி அக்னி ஹோத்ரி


இதயம் போகுதே
இதயம் போகுதே எனையே பிரிந்து
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ
இதயம் போகுதே

மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று
கைகள் தட்டிய காலை சென்றதெங்கே
அரும்பான என் காதல் மலராகுமோ
மலராகி வாழ்வில் மனம் வீசுமோ
இதயம் போகுதே எனையே பிரிந்து



லாலல லாலல லாலல லாலல
லால லால லால லால.....

சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன்போல்
தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா
குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ
வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ
இதயம் போகுதே எனையே பிரிந்து

மலைசாரல் ஓரம் மயிலாடும் நேரம்
பாடல் சொல்லவும் தேவன் இல்லையம்மா
நிழல் போல உன்னோடு நான் சங்கமம்
தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்

இதயம் போகுதே எனையே பிரிந்து
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ
இதயம் போகுதே

பாடல் மூன்று

எல்லாருக்கும் தெரிந்த முரளியின் இதயம் படத்தில் இடம் பெற்ற இதயமே இதயமே பாடல் .

காட்சியும் அதன் பின் பாடலும்



சரிங்க இப்போ பாடல்


இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே



பனியாக உருகி நதியாக மாறி
அலை வீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர்க் காதல் உறவாடிக் கலந்தேன் இன்றே
இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்

இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே

என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சைத் தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்

இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே
Related Posts Plugin for WordPress, Blogger...