Showing posts with label Alarm. Show all posts
Showing posts with label Alarm. Show all posts

2009-09-10

உலகத்திலேயே மிகப்பெரிய Alarm மணிக்கூடு.


என்ன கந்தசாமி வந்துட்டாரா என்று புலம்புறீங்களா ?? இல்லை இல்லை

முன்னர் நான் பல்கலையில் படிக்கும் காலங்களில் விதம் விதமான Alarm வைத்து விட்டு தூங்குவதும் பின்னர் அறை நண்பர்கள் அதனை நிட்பாட்டுவதும். எங்கள் கழக வாழ்க்கையில் சாதாரணமான விஷயம் தான். எனது அறையில் கூடிய அளவு Alarm வைப்பது நான்தான். அதிகாலை 3மணி இல்லாட்டி 4 மணி என்று வைத்து எழும்பி படிப்பது வழமை.
இருந்தாலும் முதல் நாள் இரவு ஏற்படும் களைப்பு?? பிந்திய தூக்கம்?? போன்றவற்றால் எனது அறை நண்பர்களே தினமும் பாதிக்கப்படுவது.

இதனை நிவர்த்தி செய்ய இப்போது வழி இருகின்றது.

எப்படியா ?? அதுதான் இப்படி ???

எங்களை மாதிரி ஒரு சில நன்றே குறட்டை விட்டு மணித்தியால கணக்காக தூங்கும் நண்பர்கள் இதனால் கோவம் கொண்டாலும். தேவைப்படும் இடத்து அது தனது சேவையை செய்வதால் தூக்கத்தில் இருந்து எழும்பி சென்று வேலைகளில் ஈடுபட முடிகிறது.
எளிமையான அமைப்பை கொண்டதால் சுலபமாக நீங்கள் உறங்கும் கட்டிலில் பொருத்தி விடலாம்.



பார்த்தால் எதோ குண்டு சரி செய்து வைத்த மாதிரி இருந்தாலும் அது அவ்வாறு இல்லை.

PS1:- கட்டில் உங்களை எந்தகட்டத்திலும் தாங்கவல்லது என்பதை உறுதி செய்யவும் !!!

அதன் இயக்கத்தை பின்வரும் காணொளியில் கண்டு மகிழுங்கள்.

http://www.youtube.com/watch?v=kQ-l5PlDa-k

என்ன கொடுமை சரவணா இது???.!!!


PS2:பல பல Alarm என்னும் போது இப்பவும் ஞாபகம் வருவது எனது நண்பர் ஒருவர் தனது பீட சக மாணவிகளிடம் சொல்லி வைத்து தூங்குவார். அவர்கள் அதிகாலையில் எழுப்பி விடுவார்கள்.
நம்மளுக்கு அப்படி யாரும் உதவவில்லை :(

2009-06-13

அம்மாவும் நானும் Alarm மும்

தினமும் எனது Alarm செய்யும் தொல்லை
சற்று காலமாய் புதுவிதமான மாற்றம்
அதுக்கு இன்னுமொரு காரணம் இருக்கு , பிறகு சொல்லுறன்

அம்மா இம்முறை இங்கு வந்து மூன்று வாரங்கள் நின்றவ .
தினமும் அவவுக்கு என்னுடைய Alarm செய்யும் தொல்லையோ தொல்லை
சொல்லி முடியாது
குறிப்பாக எனக்கு படுக்கும் நேரம் என்பது define பண்ண இல்லை , விரும்பிய நேரம் படுப்பன் , எழும்புவன் மீண்டும் படுப்பன். எந்த வித நேர அட்டவனை இல்லை.
அறையில் இருக்கிற மூன்று Alarmமும் அடிக்கிறது பத்தாது என்று பார்த்தா எனது Mobile செய்யும் தொல்லையோ பெரும் தொல்லை
அடிக்கடி வரும் SMS சத்தம் வேற, ??????????????

அதிகாலையில் ( 2:00 AM , 3.00 AM, 4 A.M )எனதுAlarm நல்லூர் கோவில் மணி மாதிரி அடிக்கும்.

இதுக்கு மேலால Mobile 3 A.M என்றால் காணும் தானும் சேர்ந்து ஓசை எழுப்பும்
இங்கு வந்த அம்மா இரண்டு நாள் பொறுத்து பார்த்தா பொடியன் எதாவது செய்வானா என்று, ஒரு முன்னேற்றமும் இல்லை. அதனால தானா சொன்னா தம்பி நீ உதுகளை நிப்பாட்டி போட்டு படும். எதுவும் உமக்கு கேட்குது இல்லை
உதுகளோட உம்மட ரேடியோ , டிவி, லைட் எல்லாமே 24 மணி நேர சேவை

அப்படி எங்க தாண்டா உந்த பழக்கம் பழகினி??

நான் சொன்னன் 2003 இல இருந்தே இதுதான் செய்யுறம் என்று . என்னுடன் என்றுமே வேலை செய்யும் இடத்துக்கு அம்மா வந்ததே இல்லை , ஒருக்கா வந்து பார்த்து இருந்தா இங்க இந்த பீலிங் வந்து இருக்காது ha ha.

இந்த எல்லா சத்தங்களுக்குள் அம்மாவை வெறுப்பு அடைய செய்தது எனது Mobile Alarm இக்கு வைத்த பாட்டு தான்
கொஞ்சம் கேளுங்க

ஹே வெற்றி வேலா
நம்ம ஆட்டம் தான் எகிறுது தோழா
ஏயி அடி ஜோரா
நாம எப்பவும் ஜெயிக்கணும் தோழா
பள்ளி கூடம் போகமலே First கிளாசில பாசான கூட்டம் இது

இது ஒருக்கா இரண்டு தடவை என்றால் பரவாய் இல்லை . நான் நிப்பாட்டும் மட்டும் அடிக்கும் ..
என்ன கொடுமை இது என்று அவவுக்கே பொறுக்க முடியல
என்னதான் நினைத்தாவோ தெரியாது ha ha..

அவ்வளவு பாசமான அம்மா தான் என்னுடைய அம்மா
இந்த அம்மா ஸ்பெஷல் ஆக்கமாய் இதை வெளி விடுகிறன்
Related Posts Plugin for WordPress, Blogger...