Showing posts with label பரீட்சை. Show all posts
Showing posts with label பரீட்சை. Show all posts

2010-10-17

"பரீட்சைகள் " சும்மா பெயரைக்கேட்டாலே அதிருதில்ல !!


என்ன அதிருதில்ல என்று ரஜனி வசனம் பேசுறான் என்று யோசிக்காதையுங்க.. :)
கல்விக்குரிய சரஸ்வதி பூஜை நடை பெற்று கொண்டு இருக்கின்றது. கல்வி கற்றாலே பரீட்சை என்ற பதமும் எம்ம்முள்ளே பதிந்து கொள்கின்றது. அதாலே இன்று பரீட்சைகள் பற்றி ஒரு மொக்கை !!!..


 நான் வேலை செய்யும் பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான பீடங்களில் தற்போது  பரீட்சைகள் நடை பெற்று கொண்டு இருகின்றது. நேற்று என்னை ஒரு பரீட்சைக்கு மேற்பார்வையாளராக நியமித்து இருந்தார்கள். கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டிய தொழில். பரீட்சை மண்டபத்தில் பலவிதமான சம்பவங்கள் நடைபெறுவது வழமைதானே.

  • பார்த்து எழுதுதல், 
  • வினாத்தாளை பார்த்தவுடன் மயங்கி விழுதல் (விழுந்தாலும் பரவாய் இல்லை, பிறகு ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி எல்லாம்  இருக்கு.. )
  • மண்டபத்துக்கு பிந்தி  வருதல், கதைத்தல் .. ..
  • மெடிக்கல் குடுத்தோர், வராதோர் விபரம் பற்றி அறிவித்தல் 
இப்படி பல சோழிகள் !!
இதை விட, நேரகாலத்துக்கு எழுதும் விடைத்தாள்களை பகிர்தல், வினாத்தாள்களுக்கு விளக்கம், பரீட்சைகள் முடிய , விடைத்தாள்களை உரிய இடத்துக்கு அவற்றை கொண்டு போய் சேர்த்தல்.


உதவி மேற்பார்வையாளர்களுக்கு தேத்தணி, கோப்பி, வடை , வாழைப்பழம் என்று சொந்த செலவில் வாங்கி கொடுத்தல்..:(
இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்  !!!

நேற்றும் வழமை போல பணிகளை செய்து கொண்டு இருக்கும் போது, பழைய ஞாபகங்கள் ,அதாவது நாங்கள் பரீட்சைகள் எழுதும் அனுபவங்கள் அவ்வப்போது நினைவில்  வந்து வந்து  போனது.

பரீட்சை மண்டபத்தில், பரீட்சை நேரத்தில்,  குற்றம் செய்வோருக்கு 

மேசையில் இருந்த படியே மனசுக்குள் ஒரு கணக்கு போட்டு பார்த்தேன்.நான் இதுவரை ஆகக்குறைந்தது எத்தனை பரீட்சைகள் எழுதி இருப்பேன் என்று. நம்பவே முடியல.. என்ன கொடுமை இது 

ஒரு குத்து மதிப்பு தான் இது :)


Years Terms Subjects Total exams
yr 1- yr 5 5 3 3 45
yr5 2
yr6- yr11 6 3 8 144
O/L 8
yr 12- yr 13 2.5 3 4 30
A/L 4
233
Uni
yr 1 12
yr 2 12
yr3 12
yr 4 12
48
96
329
இதை விட, தனியார் கல்வி நிலையத்தில், நம்மட வேலாயுதம் ஆசிரியரின் மணிக்  கல்வி நிலையத்தில் வாரம் ஒரு முறை கணித பரீட்சை. யப்பா.. நினைக்கவே ஏதோ செய்யுது.

எத்தனை பரீட்சைகள் எழுதுறம் என்பது முக்கியமில்லை, ஒவ்வொரு பரீட்சையையும் எப்புடி சமாளிச்சம் என்பதுதான் முக்கியம்.

இன்னும் science ஹால் இல் படிக்கும் போது இந்த வாத்தியார், அந்த வாத்தியார் என்று ஓடோடிப்படிச்சதால அவையின்ற பரீட்சை, இவையின்ற பரீட்சை  என்று உப்பிடியே ஒரு கணக்கு வழக்கு இல்லாம எழுதி இருக்கிறோம் !!

பரீட்சைகள் என்று வந்து விட்டாலே வீடுகளில் பிள்ளைகளும், பெற்றோரும் படும் பாடுதான் என்ன. கொஞ்சம் சுவையாக.......


  • சில வீடுகளில் பிள்ளைகள்   படிக்கவில்லை என்று அடி போட்டு படிக்க பண்ணுங்கள் !! இது நல்ல அப்பா அம்மா மார் உள்ள குடும்பம்.
  • இன்னும் சில வீடுகளில், பெற்றோர் தங்கள் பாடு, பொடி பொட்டை தங்க பாடு !!! என்னத்தை சொல்ல..
  • இன்னும் சில வீடுகளில் (குறிப்பாக தங்கள் பிள்ளைகளை பற்றி அடுத்தவர்களுக்கு புளுகி வைப்போர் )," டேய் தம்பி நான் உனக்கு  டாக்டர் இற்கு படிக்க  கிடைக்கும் என்று எல்லாருக்கும் சொல்லிபோட்டன் , எழும்பி படியன!!,  ..முடியல..
  • இன்னும் சில வீடுகளில் பெற்றோரும், பிள்ளைகளும் படிப்பார்கள். இது பல வீடுகளில் நடப்பது..
  • இதிலும் சிலர் விழுந்தாலும் மீசையில மண் புரளாத மாதிரி, அது தம்பி செய்தவன் பேப்பர் கஷ்டமாம். அவனுக்கு அடுத்த முறை இன்ஜினியரிங் கிடைக்குமாம். பிறகு கொஞ்ச நாள் போக, தம்பி இங்க இன்ஜினியரிங் செய்ய விருப்பமில்லை என்குறார் அதால அவர் லண்டன் போய் படிக்க போறாராம். நாங்களும் ஒரு ஏழு பரப்பு காணியை விக்க போறம். ( இதுக்கு ஊர் சனம் கதைக்கும்: இவரு இங்க அம்மா அப்பா  தண்ட சோத்தில படிக்க ஏலாதவர் லண்டன் போய்.. படிக்க போறாராம்.. இமம் )- இது தான் இப்போ நடக்குது.... பல இடங்களில் ... 
இப்படி எல்லாம் பல பம்பல்களை காணலாம்.
நான் உயர்தரம், படிக்கும் போதும் சரி, சாதாரண தரம் படிக்கும் போதும் சரி இரவு ஒன்பது மணிக்கு போத்து கட்டிக்கொண்டு படுத்திடுவன். பிறகு அதிகாலை இரண்டு மணி இக்கு ஒருக்கா எழும்பி பார்க்கிறது கள நிலவரம் எப்படி என்று. Alarm ஐ மீண்டும் அதி காலை மூன்று மணிக்கு சரி செய்து போட்டு படுப்பேன், கடைசியாக நான்கு மணிக்கு எழும்பி படிக்க ஆரம்பிப்பேன். ஏதோ வில்லங்கத்துக்கு படிக்கிற மாதிரி இருக்கும், ஏழு மணி மட்டும் படித்து போட்டு திரும்ப நித்திரை.  இப்படியே ஒரு மாதிரி படிச்சு உயர்தரமும் பாஸ் பண்ணி பல்கலைக்கழகம் சென்றடைந்தேன்.
பல்கலையில், புது முகங்கள், புது இடம். இருந்தாலும், எனது நண்பர்கள், அறை நண்பர்களைக்கேட்டால் தெரியும், அதிகாலை இரண்டு மணி ஒரு  alarm அடிக்கவே எழும்பி படிக்க தொடங்கிடுவேன். காலை ஏழுமணி வரை , அறை நண்பர்கள் எழும்பும் வரை படித்து போட்டு படுப்பேன். இப்படித்தான் படித்து பட்டமும் பெற்றேன்.

உயர்கல்வி நிமித்தம் வெளி நாட்டில் இருந்த சமயம், தினமும் நித்திரை, ஓய்வு   இவையாவும்  மூன்று தொடக்கம் நாக்கு மணித்தியாலயங்களே.  முகவலைக்கு அடிமை, farm ville  விளையாடுதல்  போன்றன மனதில் இருந்த அழுத்தங்களை குறைக்க உதவின. அதிலும் விசேடமாக வலைப்பதிவில்  மொக்கை எழுதுதலும் ஒரு வகை அழுத்தத்தை குறைத்து வைக்க உதவியது.

 எப்புடி எல்லாம் விளம்பரம் போடுறாங்கள். (பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு போகும் படிக்கட்டில் கண்டது... அதாலே சுட்டது..

பரீட்சைக்கு படிக்கும் போது , பல விதமான அழுத்தங்களுக்கு இப்போதைய மாணவ சமுதாயம் உள்ளாகின்றது. இதற்கு ஒரு சில காரணங்களை உதாரணமாய் கூறலாம்.

  1. சக நண்பர்களுக்கிடையே நடக்கும் போட்டி , குறிப்பாக பல்கலை பிரவேசம். அண்மையில் நான், எனது நண்பரின் வீட்டுக்கு சென்ற போது, பிள்ளை medicine கிடைக்கும் என்று படித்து , கிடைக்காததால் மன அழுத்தமடைந்து இருப்பதாக  கூறினார். ஒன்று இல்லாட்டி மற்றொன்று என்ற மனப்பான்மையை வளர்த்து கொள்ளல் வேண்டும். எல்லாம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை . இல்லையா.. நண்பர்களே..
  2. அண்மையில் ஒரு பிரபல்ய வைத்தியரின் மகள் தற்கொலைக்கு முயற்சித்தமை. மகளுக்கு என்ன வயது தெரியுமா. ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் எழுதும் வயதுதான். இங்கவும் போட்டி தான் காரணம். இன்னொரு இடத்தில் இதே போன்ற சம்பவத்தில் அந்த சிறுமி, அழுத்தத்தில் தற்கொலையும் செய்து கொண்ட சம்பவமும் இடம் பெற்றுள்ளது. இதுக்கெல்லாம் பெற்றோரும் காரணம் தான். பக்கத்து வீட்டு  பெற்றோரின் மகள் ஐந்து இடத்துக்கு படிக்க போறதாலே, தங்கள் பிள்ளையை  ஆறு இடத்துக்கு அனுப்பி படிப்பித்தல் போன்ற துன்ப சம்பவங்களும் இடம்பெற்று கொண்டுதான் உள்ளது.  பிள்ளைக்கு படிச்சதை  திருப்பி படிக்க நேரமில்லை தானே. 
  3. போலி விளம்பரங்கள் மூலம் மாணவர்களை கவரும் நிறுவனங்களும் உள்ளன. மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு கொண்டு தான் உள்ளனர். உதாரணமாக அண்மையில்  உயர்தர  IT  பரீட்சையில் பலர் fail  இற்கு  காரணம் ஒரு வித போலி விளம்பரங்களே. ஒரு பிரபல்ய கணணி நிறுவனம் விளம்பரத்தில் , தங்களிடம் படித்த இருபது பெயரின் புகைப்படங்களை போட்டு , அம்மாணவர்கள், அந்த கணணி நிறுவனத்தை புகழ்ந்து பாடி இருந்தனர் . அடுத்த நாள் பலர் அங்கே தங்கள் பணத்தை கொண்டே போட்டு இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. 
  4. இவ்வவளவு  ஏன், மாணவர்கள் தாங்களே மூன்று இடத்துக்கு ஒரே பாடத்துக்கு போகுதல். எனக்கு தெரிந்த பலர் இதைதான் உயர்தரத்தில் செய்தார்கள். இன்னும் பலர் இப்பவும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  ஒரு இடத்தில் திருப்தியுடன் படித்தால் இலகுவில் பரீட்சையில் சித்தியடையலாம். 
  5. ஒரு சிலர், குடி ,கூத்து , விளையாட்டு என்று பல வேலைகளில் ஈடு பட்டு போட்டு இறுதியில் மன அழுத்தம் , பயம் காரணமாக medical கொடுத்து போட்டு அடுத்த வருஷம் எழுதுவம் என்று இருப்பார்கள். மகா மொக்கர்கள் இவர்களே. ஒழுங்கா படிச்சா ஏனிந்த தொல்லை.  அடுத்த வருஷம் என்ன நடக்கும் என்று இப்ப எப்படி சொல்லுறது?? 
  6. இன்னும் சிலர் ஒரு தலைக்காதல் , காதலி என்று வருஷம் முழுக்க திரிந்து போட்டு பரீட்சைக்கு முதல் நாள் புழுதி பிடித்து கிடந்த புஸ்தகத்தை திறந்தால் என்னென்று தான் பாஸ் பண்ணுறது. கையில் வருவது நியாயம் தானே ..:)
பரீட்சைக்கு தயார் படுத்தும் போது, ஒரு நேர அட்டவனையை தயார் படுத்தி அதற்கு ஏற்ப இயங்கினால் இந்த அழுத்தங்களில் இருந்து மீளலாம். அத்துடன் அன்றே படித்ததை அன்றே படித்தல், விளங்காததை ஆசிரியரிடம் அல்லது நண்பனிடம்  கேட்டு படித்தல், என்பனவும் அழுத்தத்தை குறைக்கும் வழிகள்.
ஒரு சிலர் புகைத்து புகைத்து படிப்பார்கள்.  புகைப்பதால் அழுத்தங்கள் குறையுமோ  எனக்கு தெரியாது. ஆனால் குடித்தால், புகைத்தல் ஆகியவற்றின் விளைவால் புற்று நோய் தான் வருமென்பதை அவர்கள் அறியாதவர்களும் அல்ல.

அண்மையில், எனது மாணவரகள்,  11 பேர், பரீட்சைக்கு போகாமல்  medical குடுத்த சம்பவமும் இடம் பெற்றது. இதற்கு நேரடியாக உள்ள காரணமாய் நான் சொல்வது, பயம் தான் காரணம். வாழ்கையில் பயம் இருக்கணும். வாழ்கையே பயம் ஆயிட கூடாது !!
பரீட்சை என்றால் சும்மா அதிருதில்ல.. !!!
Related Posts Plugin for WordPress, Blogger...