Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

2010-09-26

எத்தனை முரட்டுக்காளைகள் வந்தாலும் சூப்பர் ஸ்டாரின் முரட்டுக்காளை தான் ஜெயிக்கும்

வார இறுதி நாட்களில் பெரிதாக தொலைக்காட்சி பார்க்க நேரம் கிடைப்பதில்லை. வீட்டில் வேலைகள் பல இருக்கும். வீட்டு வேலைகளுக்கும்,நண்பர்களுடன் நேரத்தை போக்கல் என வார இறுதி நாட்களை ஒதுக்கி வைப்பது வழமை. வீட்டை சுத்தம் செய்தல், பொருட்கள் வாங்கல், கதிரேசன் கோவில் போகுதல் , நண்பர்களுடன் அரட்டை என்று இரண்டு நாட்களும் போய் விடும்.
வழமை போல் இம்முறையும் இவற்றை செய்தாலும் , கொழும்பில் சினுங்கிய படி இருந்த மழை, என்னை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வில்லை.

வீட்டில் செய்மதி வசதியுடன் கூடிய தொலைக்காட்சி. இருக்கிற தமிழ் சேவைகள் எல்லாமே நாள் முழுக்க சீரியல்களை ஒளி பரப்புவதால் எங்களை போன்ற இளசுகளுக்கு பார்க்க ஒன்றுமே இல்லை. இன்று சும்மா அங்க இங்க என்று மாத்தி மாத்தி பார்க்கும் போது , கொலைஞர் தொலைக்காட்சியில் முரட்டுக்காளை இறுவெட்டு வெளியீடு நடை பெற்றது.


அன்றைய காளை

சுந்தர் சி, சினேகா நடிக்கும் 'முரட்டுக்காளை' படத்தினை ஐங்கரன் இண்டர்நேஷனல் மீடியாஸ் தயாரிக்கின்றது. ஒரு பெரிய நிகழ்வாக ஒளி பரப்பிக்கொண்டு இருந்தது.

எனக்கு இந்த படம் எவ்வளவு கிட் ஆகுதோ தெரியாது. ஆனால் சுந்தர் சி ரஜனியை வைத்தும் படம் எடுத்துள்ளதால் , ஏதோ ஒரு விதத்தில் இப்படத்தையும் ரஜனிக்கு எடுப்பது போல் எடுக்க முயற்சி செய்து இருக்கலாம். இருந்தாலும் இவர் நடிகர் இங்கே. இருந்துதான் பார்ப்போமே. இயக்குனர் செல்வபாரதி என்னதான் செய்ய போறார் பார்ப்போமே.

என்னுடைய , ச்சே ச்சே பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜனியின் முரட்டுக்காளை பார்த்தவர்கள், எதிர்காலத்தில் எத்தனை முரட்டுக்காளைகளை பார்த்தாலும் , அந்த பழைய காளையே சூப்பர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு சூப்பர் கிட் படம்.

'சூப்பர் ஸ்டார்' ரஜினி காந்த் நடிப்பில் 1980-ல் வெளியானது முரட்டுக்காளை.
http://en.wikipedia.org/wiki/Murattu_Kaalai_%281980_film%29

இப்படம் ரஜினியின் 64வது படம், தமிழ்த் திரையுலகில் அவருக்கு மாபெரும் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த, மாபெரும் வெற்றிப் படம். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் அட்டகாசமான பாடல்கள்.

குறிப்பாக பொதுவாக என் மனசு தங்கம் , அந்த கால டப்பான் குத்து. மலேசியா வாசுதேவன் குரலில் ராஜா அங்கிள் இசையோ பிரமாதம்.
இன்றும் எழும்பி ஆடலாம். அப்படி ஒரு இசை. கிராமிய இசை.



பிடிச்ச வரிகள் :


பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
நாலு பேருக்கு நன்மை செய்தா
கொண்டாடுவார்... பண்பாடுவார்
என்னாலும் உழைச்சதுக்கு
பொன்னாக பலமிருக்கு
ஊரோடு சேர்ந்து வாழுங்க
அம்மனருல் சேரும்... தினம் நம்ம துணையாகும்
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
ஹெய்... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே



இன்றைய காளை
இந்த தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜனி தான் , அவருக்கு இணை யாருமில்லை , அவர் நடித்த படங்களில் எத்தனை ரீ மேக்குகள் வந்தாலும் ஒரிஜினலை உடைக்கவும் ஏலாது. நான் அவரின் மிகப்பெரிய ரசிகன், யாவரும் அறிந்த ஒன்றே. ஒரிரு தினங்களில் எந்திரன் வி ஐ பி ஷோ இற்கு காத்து இருக்கின்றோம்.


2010-09-02

என் இதயத்தை திருடிய " இதயத்தை திருடாதே " பாடல்கள்

வேலை செய்யும் இடத்தில் சகோதர மொழி விரிவுரையாளர் பல தடவை கேட்டும் அவரது வீட்டுக்கு செல்ல முயற்சிக்கும் போதெல்லாம் தடைகள் எதாவது வந்து அந்த குறுகிய பயணத்தை செய்ய முடியாமல் பல முறை கைவிட்டு இருந்தேன். கடைசியாக நேற்று மாலை அந்த பயணத்தை மேற்கொண்டு அவர் வசிக்கும் ஊருக்கு சென்று வந்தேன்.

பாதைகள் தெரியாத காரணத்தால் உதவியாளரும் நானுமாய் சென்றோம்.
வழமை போல பாட்டு பெட்டி தனது வேலையை ஆரம்பித்தது.
மலைகளுக்கு இடையில் செல்வதால், எப் எம் அலைவரிசைகளின் ஒலிபரப்பை தெளிவாக கேட்க முடியாது. இதனால் அண்மையில் எனக்கு ஒரு நண்பர் ( நண்பியாகவும் இருக்கலாம்), தந்த இறுவெட்டுகள் தான் போகும் போதும் வரும் போதும் எங்கட பாட்டு பெட்டியை இயங்க வைத்தது.

வீட்டில் இருந்து வெளிக்கிடும் போது சாரதி, சார் இந்தாங்கோ எந்திரன் பாடல்கள் சீடி , என்று தூக்கி தந்தார். வாகனத்தில் முதலில் அதுதான் கேட்கிறது. பிறகுதான் எதுவென்றாலும். நம்ம சாரதி நிலபரத்தை யோசிச்சு பாருங்க.. :(




பிறகு , ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் போன பின்னர், அன்பளிப்பாக வந்த சீடிக்களை பார்த்தால் , அதில் எல்லாமே ஓடியோ சீடிகள் . அதுவும் எனக்கு பிடித்த இதயத்தை திருடாதே பட பாட்டு சீடியும் கிடந்தது .

உடனடியாகவே ஒரு படப்பாட்டுகள் நிகழ்ச்சி மாதிரி அந்த படத்தில் உள்ள எல்லா பாடல்களையும் கேட்டு இரசித்தேன். ஒரு படத்தில் எல்லா பாடல்களையும் கேட்டு இரசிக்க கூடிய மாதிரி சில படங்களையே சொல்லலாம். அந்த வரிசையில் இந்த படமும் ஒன்று.

கீதாஞ்சலி என்ற பெயரில் தெலுங்கில் சூப்பர் கிட் இயக்குனர் மணிரத்தினம் 1989 இல் இசைஞானியின் இசையில் இயக்கிய படம் தான் தமிழில் இதயத்தை திருடாதே என்று வெளிவந்தது.
நாகர்ஜுன் , கிரிஜா ஷெட்டர் நடித்து , நூறு நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் கிட் வெற்றியை தந்த படம் தான் இது. அதனை பாடல்களும் சூப்பர் கிட்.
நல்ல கதை, ஒருக்கா பாருங்க. படத்தை பலதடவை பார்த்துள்ளேன் .

இந்த படத்தில் உள்ள பாடல்கள்

ஆத்தாடி அம்மாடி பாடல்

சித்ராவின் இனிமையான குரலுக்கு இந்த பாடலும் சான்று . சின்னக்குயில் நீங்க தான்

ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையும்
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஹே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே



வானமும்... வையமும்...
கரங்களை இணைப்பதே மழையில்தான்
செடிகளும்... கொடிகளும்...
ஈரமாய் இருப்பதே அழகுதான்
மழையின் சாரலும் கிள்ளாமல் கிள்ளவும்
அழகும் ஆசையும் ஆடாமல் ஆடவும்
துள்ளுகின்ற உள்ளமென்ன
தத்தளிக்கும் மேனியென்ன
வஞ்சியெந்தன் கண்கள் கண்ட
தேவலோகம் பூமிதான்

(ஆத்தாடி)

என்னவோ... எண்ணியே...





இளையவள் இதயமே ததும்புதா
சிறுசிறு... மழைத்துளி...
சிதறிட சபலம்தான் அரும்புதா
வானதேவனே சொல்லாமல் செய்திட
வாயுதேவனே முத்தாட வந்திட
நீறு பூத்த கூந்தலோடு ஊதக்காத்து தழுவும்போது
துள்ளும் பெண்ணின் உள்ளம் நூறு
கவிதை சொல்லும் ஓஹொஹோ

(ஆத்தாடி)
ப்ரியா.. ப்ரியா

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல் - எங்கு பாடினாலும் நின்று கேட்டு போட்டு போறது .அப்படி ஆசை.. ஏன் தெரியுமா.. நானும் ப்ரியா தானே ..:)
மனோ, சித்ரா நீங்க பல்லாண்டு காலம் வாழ்க.

ஒ ப்ரியா ப்ரியா

என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் மாறுமோ

இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓரோரம்
கானல் நீரால் தாகம் தீராது

ஒ ப்ரியா ப்ரியா

உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ

வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் நமது
தேவன் நீதான் போனால் விடாது

தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி

அன்பு கொண்ட கண்களும்

ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜ மங்கை கண்களே

என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காட்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா







ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

காளிதாசன் ஏடுகள்

கண்ணன் ராச லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே
ஷாஜஹானின் காதலி

தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே
அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெட்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா


ஒ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா
ஒ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா

ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மண்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்


பாப்பா லாலி

மனோவின் மற்றுமொரு இனிமையான குரல்






காவியம்
பாடவா தென்றலே

மனோவின் குரலில் இனிமையான பாடல்

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில்
மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே
காவியம் பாடவா தென்றலே

விளைந்ததோர் வசந்தமே
புதுப்புனல் பொழிந்திட
மனத்திலோர் நிராசையே
இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாட்களே
சோகங்கள் எனபதை
கண்ணீரில் தீட்டினேன்
கேளுங்கள் என்கதை
கலைந்து போகும் கானல் நீரிது

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ



புலர்ந்ததோ பொழுதிதுவோ
புள்ளினத்தின் மகோத்ஸவம்
இவை மொழி இசைத்ததும்
சுரங்களின் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே
மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்கம்தான்
முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
காவியம் பாடவா தென்றலே





ஓம்
நமக



காட்டுக்குள்ளே




2010-06-02

இசைஞானி இற்கு பிறந்த நாள் வாழ்த்து : வாழ்க பல்லாண்டு புகழோடும் இசையோடும்

ஒரு தாயின் தாலாட்டை கேட்டது குழந்தை பருவத்தில், அந்த தாலாட்டு நினைவில் திரும்பி வருவதில்லை,ஆனால் ஒவ்வொருவருடைய தாயின் தாலாட்டு இப்படித்தான் இருக்கும் என்று காட்டிய இசையின் இசையே , எனது உள்ளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். தொடரட்டும் உமது இசைப் பயணம், உன் நிழலும் இசை பாட நாங்கள் ரசித்திருப்போம்.



இசைஞானி இசையில் வந்த எந்த பாடலும் எனக்கு பிடிக்கும். எத்தனை என்று போடுறது அதால என்னை கவர்ந்த கொஞ்சம் வித்தியாசமாய் எனது தெரிவுகள் :



ராகங்களின்றி சங்கீதமில்லை .... காதலோவியம் பாட்டு ..



ரேவதியின் மற்றுமொரு காவியம் - புன்னகை மன்னன்




அடி ராக்கம்மா கையத்தட்டு ....



கடைசியா நூறு வருஷம் வாழ்த்தி ...


2010-03-01

"பா " படமும் இளையராஜாவின் இனிமையான மெட்டும்




நீண்ட நாட்களுக்கு பின் ஒரு படம் பார்க்கலாம் என்று போட்டு கணனி முன்னால் இருந்து எந்த படத்தை பார்க்கலாம் என்று தேடினால் .. தமிழில் தல படம் திரையரங்கு நிறைந்த கூட்டத்துடன் பார்த்தாச்சு. தீராத விளையாட்டு பிள்ளை , தமிழ்ப்படம் எல்லாமே இணையத்தில் வலம் வருகின்றன .. அவையும் பார்த்தாச்சு போன வாரம்.

"பா" படம் நல்ல படம் என்று யாரோ எல்லாம் சொல்லி இருந்தாங்க... சரி போய் இணையமூடகவே DVD தரத்தில் இருக்கின்ற இந்த படத்தை பார்த்தேன்.
ஆரம்பத்தில் எழுத்து ஓட்டத்தை skip பண்ணி போட்டு பார்த்து கொண்டு இருக்கும்போது எனக்கு கொஞ்சம் பிடிச்ச படமாய் தோன்றியது.

மகன் அபிஷேக் பட்சானின் நான் பார்த்த இரண்டாவது படம் இது.முதல் படம் குரு. அப்பா ( அந்த மேக்கப் செய்த விதம் குறித்து எனக்கு ஒருமின்னஞ்சல் வந்தது .. எங்கையோ விட்டுடன் ....), மகன் இருவரின் நடிப்பும் எனக்கு பிடிச்சு கொண்டுது.
இப்படியே படம் பார்த்து கொண்டு இருக்கும்போது இருந்தால் போல ஒரு பாட்டு




இந்த பாட்டை கேட்டவுடனே எனக்கு இது இளையராஜா மெட்டாச்சே.. அவருக்கு பிடித்த மெட்டு இது என்று எனக்கு தெரியும்... அவர் அதை ஒரு நிகழ்ச்சியில் கூட சொல்லி இருந்தார். பின்னோக்கி உடனே போய் மிஸ் பண்ணின எழுத்தோட்டத்தில் பார்த்தால் அடே கொக்கா மக்கா எங்கட ராஜா சார் தானே இசை ..சுப்பரா இருக்கே .. உடனே என்னுடையே தேடல் ஆரம்பம் :

இது இளையராஜா வைத்த One Man Show இல் இருந்து :




இந்த மெட்டை கொண்டு ..... அவர் இசை வரலாற்றில் சூப்பர் கிட் ஆன பாடல்கள்.


மூலப்பாடல் தும்பி வா என்ற பாடல் ஓலங்கள் என்ற மலையாளம் படத்தில் 1982 இல் வெளி வந்தது.



இந்த தும்பி வாவும் நன்றாகவே இருக்கு




தெலுங்கில் இதே மெட்டில்:



இந்த மெட்டை கொண்டு , தமிழ் படமான ஆட்டோ ராஜா வில் ( திரைக்கு வந்த ஆண்டு - 1982)



இதை விட என்னால் கண்டு பிடிக்க முடியாமல் போன பாடல்

கண்ணே கலை மானே என்ற படத்தில் வந்த " நீர்வீழ்ச்சி தீமூட்டுதே ...தீ கூட குளிர் காயுதே " ஒளி வடிவம் இல்லாட்டி என்ன இரசிக்க ஒலி வடிவம் இருக்கு .. .. கேட்டு இரசியுங்கள்...






சரி வந்தனீங்க இந்த பொண்ணு போடும் இசையையும் பார்த்திட்டு போங்க



இத்தனை வருடங்கள் (28 வருடங்கள் ) ஆகியும் அந்த மெட்டும் அதே இசையும் இன்றும் என்றும் மக்கள் மனதில் வாழ்கின்றதுக்கு இது ஒரு உதாரணம்...

2010-02-19

இதமான இரவில் நிறைந்த சுமைகளை இறக்கி வைத்து விட்டு கேட்க கூடிய பாடல்கள்


தற்போது ஒரு புற நாட்டில் ஏதோ கல்வி சம்பந்தமான வேலையில் வந்து நிக்குறோம். விமான நிலையத்தில் மூன்று மணி நேரம் வெள்ளனவே ஆஜரானதால் ஒரு கரையாக இருந்து ஒருக்கா இந்த ஒரு இரண்டு பாட்டுகளை கேட்டால் ஏதோ இருக்கிற சுமை எல்லாம் இறங்கி ஓடினதாகவே இருக்கும்.. என்று இணையத்தில் எனக்கு பிடித்த ஒரு சில பாட்டுகளை கேட்டு ரசித்தேன்......
அவற்றில் சில உங்களுக்கும்..



கட்டு மஸ்தான மோகினி

முதலாவது சின்னக்குயில் சித்ராவின் குரலில் வந்த சொந்தம் வந்தது வந்தது...
இந்த பாட்டை சித்திரா பாடும் போது பாட்டை ரசித்து கேட்டு ஒரு நிகழ்ச்சியில் அழுத நடிகை கூட இருக்கு.. :) கேட்டு பாருங்க..

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும் ....... பாசங்கள் போகாது மாமா
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது
மாசங்கள் போனாலும் வருசங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது


கண்ணேன்னு சொல்ல வேண்டாம் கிளியேன்னு கிள்ள வேண்டாம்
கண்ணாலே கொஞ்சம் பொறு போதும்
நீ வாழும் வீட்டுக்குள்ளே நீ போடும் கோட்டுக்குள்ளே
நீங்காம இந்த பொண்ணு வாழும்
உன்னையே நானே உசுரா தானே
நினைச்சேன் மாமா நெசந்தான் ஆமா
நான் வாங்கும் மூச்சிக்காத்து உன்னாலதான் உன்னாலதான்
ஓயாம உள்ளஞ்சொல்லும் உன் பேரை தான் உன் பேரை தான்
சொந்தம் பந்தம் நீ.....
(சொந்தம் வந்தது..)

பூப்போல தேகம் தொட்டு சோப்பாலே தேச்சி விட்டு
நீராட்ட நீயும் ஒரு சேய் தான்
வாய்யான்னு உன்னை கொஞ்சி வாயார உன்னை சொல்லி
சோரூட்ட நானும் ஒரு தாய் தான்


இரவா பகலா இருப்பேன் துணையா
கண்ணீர் வடிஞ்சா தடுப்பேன் அணையா
போகாது உன்னை விட்டு என்னாசை தான் என்னாளும்தான்
போனாலும் மண்ணை விட்டு பொட்டோடுதான் பூவோடு தான்
வாழ்வோம் மாமா நாம்....
(சொந்தம் வந்தது..)

இரண்டாவது பாட்டை நான் முக வலையில் இணைத்து இருந்தாலும் அந்த அழகிய குரலில் ராஜா அங்கிள் பாடும் போது என்னமோ தெரியல தொடர்ந்து கேட்டிட்டே இருக்கலாம் மாதிரி.
மோகினி நடிகையின் ஆரம்ப கால நடிப்பில் (1991 இல் ) வந்த நாடோடி பாட்டுக்காரன் படத்தில் ...


அப்புடி இருந்தனான் இப்படி ஆகிட்டேனே :)


மூன்றாவது முத்தான பாட்டு தான் : பனி விழும் இரவு - மௌனராகம்
ரொம்ப நாளாவே ... பிடிக்கும்.. :) ஜானகி எஸ் .பி . ராஜா அங்கிள் போட்டு தாக்கி இருக்கினம்.



நான்காவது :இது சின்ன பூவே மெல்ல பேசு படத்தில் வந்த சின்ன பூவே மெல்ல பேசு பாட்டு..



இறுதியாக கட்ட பொம்மன் படத்தில் வந்த .. ஒ.. ப்ரியா ப்ரியா.. எனக்கு பிடித்த பாட்டு.. எங்க இந்த பாட்டு போனாலும் நின்று கேட்டுட்டு போவேன் ,,, அப்படி ஒரு ஆசை இந்த ப்ரியா வில்
எனக்கும் வீட்டு பேர் ப்ரியா தானே ..:)

Related Posts Plugin for WordPress, Blogger...