Showing posts with label மெரீனா. Show all posts
Showing posts with label மெரீனா. Show all posts

2010-01-30

முக்கிய செய்தி : மெரீனா கடல் கரையில் நடந்த சோகமான நிகழ்ச்சி


மெரீனா கடல் கரை





தமிழ் நாட்டில் நடந்த மிகத்துயரமான சம்பவம்:
காட்சி :


திடீர் என்று நேற்று முன் தினம் மாலை நேரம் , சென்னை மெரீனாகடல் கரை
அலைகள் ஆக்ரோஷமாக கடற்கரையில் மோதியதை அடுத்து கடற்கரையோரமுள்ள மசூதி, வீடுகள்,கோவில்கள் , பள்ளி கூடங்கள் வரை கடல் நீர் வந்து சென்றது. இதனால் மீனவ குடும்பங்கள் , சுற்றுலா பயணிகள் யாரவது இறந்து இருக்கலாம் என்று நேற்று முழுவதும் ஹெலிகாப்டரில் தேடியும், உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை. விடிய விடிய படகு மூலம் தேடினார்கள். ஆனாலும் உடல்கள் கிடைக்க வில்லை. ஆனால் நடந்தது வேற எதுவோ..

கண்ணுக்கெட்டிய தூரம் வரை விதம் விதமான மீன்கள் செத்து கிடந்தது. உடனடியாகவே முதல்வர், கடல் சார்ந்ததொழில் சங்கங்கள் என்று தகவல் அறிவிக்கப்பட்டது. விசாரணைக்குழுவும் அமைச்சாச்சு.( இது தானே முதலாவதா செய்யுற வேலை )

இதுபற்றி விசாரணைக்குழுவில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


சம்பவம் நடந்த அன்று மெரீனா கடல் கரையில் நடந்த பட ஷூட்டிங் தான் காரணம்...என்றார் .

மேலும் அங்கே நடந்த சம்பவங்களை பார்த்து அதனால் உளவியல் தாக்கம் அடைந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று மிருக வைத்தியர் கூட விஷேட பத்திரிகை யாளர் மகாநாட்டில் சொல்லியிருந்தார் .


என்ன ஷூட்டிங் என்று உடனே பொலிசு உட்பட எல்லாருமே தேடி தேடி பார்த்தால் ...... என்ன யோசிக்ரீங்களா ??



?
???
????
????
???

?
??
??


வேற என்ன நம்ம இளைய தளபதியின் சுறா படத்தின் ஷூட்டிங் ஐ பார்த்திட்டு
தாங்க முடியாமல் தற்கொலை செய்திட்டுதுகள்.. :)



குறிப்பு: சென்னையில் இருந்து தகவல் அனுப்பிய சங்கர் இக்கு வாழ்த்துக்கள்..
படம் மினஞ்சலில் வந்தது உண்மை.. இப்படியெல்லாம் நடந்ததா ..என்று போய்த்தான் பார்க்கணும் :)
ஸ்ஹபாஆஆஆஅ இப்பதான் நிம்மதியா இருக்கு.. :)

Related Posts Plugin for WordPress, Blogger...