Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

2010-09-26

எத்தனை முரட்டுக்காளைகள் வந்தாலும் சூப்பர் ஸ்டாரின் முரட்டுக்காளை தான் ஜெயிக்கும்

வார இறுதி நாட்களில் பெரிதாக தொலைக்காட்சி பார்க்க நேரம் கிடைப்பதில்லை. வீட்டில் வேலைகள் பல இருக்கும். வீட்டு வேலைகளுக்கும்,நண்பர்களுடன் நேரத்தை போக்கல் என வார இறுதி நாட்களை ஒதுக்கி வைப்பது வழமை. வீட்டை சுத்தம் செய்தல், பொருட்கள் வாங்கல், கதிரேசன் கோவில் போகுதல் , நண்பர்களுடன் அரட்டை என்று இரண்டு நாட்களும் போய் விடும்.
வழமை போல் இம்முறையும் இவற்றை செய்தாலும் , கொழும்பில் சினுங்கிய படி இருந்த மழை, என்னை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வில்லை.

வீட்டில் செய்மதி வசதியுடன் கூடிய தொலைக்காட்சி. இருக்கிற தமிழ் சேவைகள் எல்லாமே நாள் முழுக்க சீரியல்களை ஒளி பரப்புவதால் எங்களை போன்ற இளசுகளுக்கு பார்க்க ஒன்றுமே இல்லை. இன்று சும்மா அங்க இங்க என்று மாத்தி மாத்தி பார்க்கும் போது , கொலைஞர் தொலைக்காட்சியில் முரட்டுக்காளை இறுவெட்டு வெளியீடு நடை பெற்றது.


அன்றைய காளை

சுந்தர் சி, சினேகா நடிக்கும் 'முரட்டுக்காளை' படத்தினை ஐங்கரன் இண்டர்நேஷனல் மீடியாஸ் தயாரிக்கின்றது. ஒரு பெரிய நிகழ்வாக ஒளி பரப்பிக்கொண்டு இருந்தது.

எனக்கு இந்த படம் எவ்வளவு கிட் ஆகுதோ தெரியாது. ஆனால் சுந்தர் சி ரஜனியை வைத்தும் படம் எடுத்துள்ளதால் , ஏதோ ஒரு விதத்தில் இப்படத்தையும் ரஜனிக்கு எடுப்பது போல் எடுக்க முயற்சி செய்து இருக்கலாம். இருந்தாலும் இவர் நடிகர் இங்கே. இருந்துதான் பார்ப்போமே. இயக்குனர் செல்வபாரதி என்னதான் செய்ய போறார் பார்ப்போமே.

என்னுடைய , ச்சே ச்சே பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜனியின் முரட்டுக்காளை பார்த்தவர்கள், எதிர்காலத்தில் எத்தனை முரட்டுக்காளைகளை பார்த்தாலும் , அந்த பழைய காளையே சூப்பர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு சூப்பர் கிட் படம்.

'சூப்பர் ஸ்டார்' ரஜினி காந்த் நடிப்பில் 1980-ல் வெளியானது முரட்டுக்காளை.
http://en.wikipedia.org/wiki/Murattu_Kaalai_%281980_film%29

இப்படம் ரஜினியின் 64வது படம், தமிழ்த் திரையுலகில் அவருக்கு மாபெரும் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த, மாபெரும் வெற்றிப் படம். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் அட்டகாசமான பாடல்கள்.

குறிப்பாக பொதுவாக என் மனசு தங்கம் , அந்த கால டப்பான் குத்து. மலேசியா வாசுதேவன் குரலில் ராஜா அங்கிள் இசையோ பிரமாதம்.
இன்றும் எழும்பி ஆடலாம். அப்படி ஒரு இசை. கிராமிய இசை.



பிடிச்ச வரிகள் :


பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
நாலு பேருக்கு நன்மை செய்தா
கொண்டாடுவார்... பண்பாடுவார்
என்னாலும் உழைச்சதுக்கு
பொன்னாக பலமிருக்கு
ஊரோடு சேர்ந்து வாழுங்க
அம்மனருல் சேரும்... தினம் நம்ம துணையாகும்
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
ஹெய்... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே



இன்றைய காளை
இந்த தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜனி தான் , அவருக்கு இணை யாருமில்லை , அவர் நடித்த படங்களில் எத்தனை ரீ மேக்குகள் வந்தாலும் ஒரிஜினலை உடைக்கவும் ஏலாது. நான் அவரின் மிகப்பெரிய ரசிகன், யாவரும் அறிந்த ஒன்றே. ஒரிரு தினங்களில் எந்திரன் வி ஐ பி ஷோ இற்கு காத்து இருக்கின்றோம்.


2010-09-08

நடிகர் அமரர் முரளி அவர்களுக்கு எனது கண்ணீர்அஞ்சலிகள்

இன்று மாரடைப்பால் அகால மரணமான தமிழ் நடிகர், பலருக்கும் பிடித்த நடிகர், காதல் சோகம் என்றால் எப்படி இருக்கும் அதன் வலியை உணர்த்தும் வகையில் பல படங்களில் நடித்து , பலரின் மனதில் இடம்பிடித்த நடிகர் அவர்களுக்கு அடியேனின் ஆழ்ந்த அனுதாபங்கள். நானும் ஒரு விதத்தில் ரசிகன் தான்.
காதலில் தோல்வி என்று எதுவுமில்லை, ஒரு இரசிகன் அவ்வளவுதான்.
காதல் வலி, ஒரு தலைக்காதல் வலி, இது எல்லாம் பற்றி தெட்ட தெளிவாய் விளக்கிய நடிகர். அதனால் தான் ரசிகன். இந்த காதல் எல்லாம் வேணாமப்பா .. என்று எனக்கு உணர்த்தியதால் ரசிகன்.
நடித்த முதல் படமே பூவிலங்கு . நல்ல கிட்டான படம்.


எனக்கு பிடித்த படங்கள்

  • பொற்காலம்
  • பகல் நிலவு
  • ரோஜா மலரே
  • ஆனந்தம்
  • சமுத்திரம்
  • காலமெல்லாம் காதல் வாழ்க
  • இதயம்
  • காதலுடன்
  • சுந்தரா டிராவல்ஸ்
  • உன்னுடன்
  • பூவிலங்கு
பகல் நிலவு படத்தில் எல்லாமே நல்ல பாடல்கள். இருந்தாலும் இந்த பாட்டில் உள்ள வரிகள் கொஞ்சம், இன்னும் பத்து வரிகளை பாடலாசிரியர் எழுதி இருக்கலாம் என்று எனக்கு ஒவ்வொரு முறையும் பாடல் கேட்கும் போது தோன்றும். உங்களுக்கும் அப்படி இருக்கும் என்று நினைக்கின்றேன். அவ்வளவு நல்லதொரு மெட்டு. வாழ்க இசைஞானி . குரலுக்கு சொந்தக்காரர்கள் ஜெயச்சந்திரன் , சுசீலா!!!

பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா

பூவிதழ் போல முல்லை என் பிள்ளை
புன்னகை செய்தால் கண்படும்
கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட
கண்ட என் நெஞ்சம் புண்படும்
அன்னை தந்தை யாவும் அண்ணன் தானடி
அன்பு கொண்டு வாழும் சொந்தம் தானடி
நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும்
வரவும் வேண்டி தினமும் தவமிருக்கும்


பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா





2010-08-03

இதமான இரவில் நிறைந்த சுமைகளை இறக்கி வைத்து விட்டு கேட்க கூடிய பாடல்கள் III

நீண்ட நாட்களுக்கு பிறகு (மூன்று வருடங்களுக்கு பின் )நேற்றிரவு எனது பழைய பாட்டு பெட்டியை தட்டி சுத்தம் செய்து ஏதாவது வேலை செய்யுதா என்று முயற்சி செய்யும் போது , ஒரு தமிழ் எப் எம் கொஞ்சம் கர முரா சத்தத்துடன் வேலை செய்தது. என்னமோ எனக்கு பிடிக்க வில்லை .


நெதர்லாந்து காற்றாலைகள்

பேசாமல் எனது ஹர்ட் டிஸ்க் இல் இருந்து என்னிடம் உள்ள வீடியோ பாட்டுகளை பார்த்தும் கேட்டும் ரசித்த படி இறுதி வினாத்தாள் தயாரிக்கும் பணிகளை தொடங்கினேன்.
எனக்கு பிடித்த ஒரிரு பாடல்களை இங்கே பகிர்கிறேன்.

ஜேர்மனியின் செந்தேன் மலரே


பேர்லின் Brandenburg Gate

இந்த பாடல் கமல், ரதி ஆகியோர் நடித்து 1980 களில் வெளிவந்த உல்லாச பறவைகள் படத்தில் , பஞ்சு அருணாச்சலம் பாடல்வரிகளுக்கு இசை ஞானி இசை மீட்டினார்.

இந்த பாடல் எனக்கு பிடிக்க பல காரணம். நான் ஐரோப்பாவில் இருந்த காலத்தில், இந்த பாடலை பார்த்து தான் , சில ஊர்களுக்கும் , சுற்றுலா மையங்களுக்கும் சென்று வந்தேன்.
இந்த பாடலில் ,
  • லூவர் நூதன ஆகியன- Paris (தொல் பொருள் களஞ்சியம் )(http://www.louvre.fr/llv/commun/home.jsp?bmLocale=en
  • ஆம்ஸ்டர்டம் டாம் சதுக்கம் ( Dam Square நெதர்லாந்து )
  • பேர்லின் Brandenburg Gate
  • நெதர்லாந்து காற்றாலைகள் (windmills)
ஆகியன படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது.




உனக்கும் எனக்கும் ஆனந்தம்

லூவர் நூதன சாலை அருகில்

இந்த saumiya என்னும் சிறுமி ஆடும் ஆட்டம் ..... என்னத்தை சொல்லுறது. இந்த பாடல் ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் வெளிவந்து இருந்தாலும், இந்த மீள் கலவை பாடல் எனக்கு நனறாகவே பிடிக்கும்.









வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே

திரு.கே.ஏஸ்.ரவிக்குமார் டைரக்ஷனில் வெளிவந்த படம் சேரன் பாண்டியன். குடும்ப காவியம் என்றே சொல்லலாம். என்ன அருமையான பாடல்கள் இந்த படத்தில். எனக்கு இந்த பாடல் ரொம்பவே பிடிக்கும். SA ராஜ்குமார் இன் ஆரம்ப கால இசையில் வெளிவந்த பாடல்கள்.




வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு

வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே

காணும் கனவெல்லாம் எங்கும் நீதானே
என் கனவெல்லாம் நினவாக வா வா கண்மணியே
வீசும் காற்றில் தூசியானேனே
உன்னை எங்கோ மனம் பேச உள்ளம் நொந்தேனே
நாம் ஒன்று சேரும் திருநாளும் உருவாகும்
ஜென்மங்கள் எழேழும் நாம் வாழ்வதை தடுத்திட முடியாது

வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே

காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கிறதே
அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கிறதே
தீயாய் உடலெங்கும் என்னை சுடுகிறதே
உன்னை தேடும் கண்கள் கண்ணீர் வடிக்க்க்கிறதே
உன்னோடு நாளும் என நானே வருவேனே
உடலோடு உயிராக நாம் சேர்ந்தது வேறு யாருக்கும் தெரியாதே

வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு

வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே..ஏஏஏஏ

காதல் கடிதம் வரைந்தேன் வசந்தம் வந்ததா... எனக்கு ரொம்பவே பிடித்த மற்றுமொரு பாடல்
மனோ, ஸ்வர்ணலதா( எனக்கு பிடித்த பாடகி அருமையான பெண் குரல் சோக பாடல்களை பாடுவதில் புகழ் கொண்டவர் ), ஆகியோரின் குரலில் ராஜ்குமாரின் இசையில் சேரன் பாண்டியன் படதில் வெளிவந்தது.
கேட்டு பாருங்களேன்.





காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா


வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா
உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால்
இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்திடும் இனிய சீதனம்

காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே


உயிரின் உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன்
வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையும் போலவே
என்றும் வாழவேண்டுமே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
(காதல்..)

பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில்
உனது பெயர் தான் அதிகம் எனக்கு
வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்துதான்
பெயரில் வர்ணம் தீட்டுவேன்
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
(காதல்..)




2010-07-15

மனதை விட்டு நீங்காத ரெட்டைக்கிளிகள் பாடல்

கடந்த நாட்களில் பல்கலைக்கழகம் மூடப்பட்டு இருந்தாலும், என்னதான் காரணம் என்று கேட்காமலே சொல்லலாம். வேற என்ன ஐந்து சிரேஷ்ட மாணவர்களை பல்கலைப்படிப்பில் இருந்து நீக்கியது தான். இது ஒரு வருஷமா, அல்லது நிரந்தரமாய் என்றா எனக்கு தெரியாது. இப்போது உள்ள கடும் சட்ட திட்டங்களுக்கு, (நாங்கள் படிக்கும் காலங்களில் இருந்தது போல் அல்ல ) யாரவது பகிடிவதையில் ஈடு பட்டால் , ஈடுபடுவோர் எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பும் உரிமை உபவேந்தருக்கு இருக்கு. அப்படித்தான் எங்க கழகத்திலும் நடந்திட்டு.
விடுவாங்களா நம்ம பசங்க , உடனே போராட்டம் தான். போராடுறவன் போராடட்டும் என்று போட்டு , மிச்ச சொச்சம் எல்லாம் வீடுகளுக்கு படை எடுத்திட்டு. ஒரு சிலதுகள் (வீட்டை போயும் வேலை இல்லை என்று சொல்லுறதுகளை சொல்லுறன் ) இங்கயும் அங்கயும் அலைந்து திரியுதுகள். வழமை போல ஜோடிகளுக்கு வசந்த காலம். எதுவித அழுத்தங்களும், தடைகளும் இல்லாமல் தங்கள் இனிய மாலை, இரவுப் பொழுதுகளை "போக்கி" கொண்டு இருக்குதுகள்.
நம்மளை யாரும் கேட்பாரில்லை.. :( எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ். வெளியிடவேண்டிய கணணி சார்ந்த வெளியீடுகளை தயாரித்து கொண்டு இருக்கின்றேன்.
வழமை போல பின்னணி இசை இசைக்க, அடியேன் வேலை செய்து கொண்டு இருக்கும் போது, இணைய வானொலியில் , வந்திச்சு அந்த பாட்டு..
ரொம்பவே நல்ல இருந்திச்சு ஐயா யேசுதாசின் குரலும், சித்ரா அம்மாவின் குரலும் கலந்தொலிக்க ரெட்டை கிளிகள் அன்றாடம் பேசும் ...கட்டில் கதைகள்:) பலதடவை கேட்டு கேட்டு .. களைத்து போயிட்டன். ராஜாவின் இசை ......என்னப்பா .. வார்த்தைகள் இல்லை .. சொல்ல..


எங்கட பல்கலைக்கழகத்துக்கு கொஞ்சம் முன்னால் .. எப்புடி குளிரு ...

நீங்களும் கேட்டு பாருங்களேன்..(situation song pa.... யாருக்கு .. அதுவும் .. இந்த ஜோடிகளுக்கு தான் ) கேட்டு போட்டு சொல்லுங்க.. மாப்பு எப்படி உங்கலால மட்டும் என்று மட்டும் கேட்டு நோகடிச்சுடாதையுங்க..:(

பாடல்: ரெட்டைக்கிளிகள்
திரைப்படம்: ஒரே ஒரு கிராமத்திலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா

ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள்
தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும்
இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ
ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்


RetthaiKiligal by svpriyan

ஈர பூக்களில் தேன் இதழ்களில் விழ
நான் எடுத்தேன்...நான் எடுத்தேன்

ஓர பார்வையில் உன் உணர்ச்சிகள் வர
நான் படித்தேன்...நான் படித்தேன்

இதயத்தை திறந்தாய் நீ இடையினில் விழுந்தேன் நான்
எனக்கென பிறந்தாய் நீ இருப்பதை கொடுத்தேன் நான்
நெஞ்சை தழுவி என் தோளில் சாயும் வெள்ளி அருவி
கண்ணில் எழுதி உன் பேரை பாடும் வண்ண குருவி
சங்கீதம்தான்...சந்தோஷம்தான்
நம் உறவினில் பல சுரங்களும் லயங்களும் எழ


ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள்
தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும்
இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ
ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்

நேற்று ராத்திரி என் உடல் நனைந்திட
நான் விழித்தேன்...நான் விழித்தேன்

காதல் நாயகன் உன் கனவினில் வந்து
நான் கலந்தேன்...நான் கலந்தேன்

இருட்டினில் வரலாமா இருபுறம் தொடலாமா
இலக்கியம் இதுதானே இலக்கணம் கெடலாமா
விட்டுக்கொடுத்தால் கண்ணா உன் வேகம் கட்டுப்படுமா
தொட்டுப்பிடித்தால் கண்ணே உன் பார்வை சுட்டுவிடுமா
அம்மாடி நான் பெண் பாவைதான்
உன் விரல்களும் தொட தலைமுதல் அடிவரை சுட


ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள்
தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும்
இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ
லல்ல லல்லலா லல்லாலா லாலா லல்ல லல்லலா

2010-06-02

இசைஞானி இற்கு பிறந்த நாள் வாழ்த்து : வாழ்க பல்லாண்டு புகழோடும் இசையோடும்

ஒரு தாயின் தாலாட்டை கேட்டது குழந்தை பருவத்தில், அந்த தாலாட்டு நினைவில் திரும்பி வருவதில்லை,ஆனால் ஒவ்வொருவருடைய தாயின் தாலாட்டு இப்படித்தான் இருக்கும் என்று காட்டிய இசையின் இசையே , எனது உள்ளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். தொடரட்டும் உமது இசைப் பயணம், உன் நிழலும் இசை பாட நாங்கள் ரசித்திருப்போம்.



இசைஞானி இசையில் வந்த எந்த பாடலும் எனக்கு பிடிக்கும். எத்தனை என்று போடுறது அதால என்னை கவர்ந்த கொஞ்சம் வித்தியாசமாய் எனது தெரிவுகள் :



ராகங்களின்றி சங்கீதமில்லை .... காதலோவியம் பாட்டு ..



ரேவதியின் மற்றுமொரு காவியம் - புன்னகை மன்னன்




அடி ராக்கம்மா கையத்தட்டு ....



கடைசியா நூறு வருஷம் வாழ்த்தி ...


2010-05-15

எந்த ஊரை சொல்லுறது??

தேசிய அடையாள அட்டை மாற்றனும். இத்தனை வயசாச்சு ( மூன்று கழுதை வயசு) இப்பவும் பாடசாலை மாணவன் என்று போட்டு இருந்தால், அதை பார்த்திட்டு என்னையும் பார்த்திட்டு (எனது வடிவையும் , உடலமைப்பையும் சொன்னேன் ) கட்டி வைச்சு பொல்லால அடிப்பாங்கள் . அதால அட்டையை மாற்றுவம் என்று போட்டு விதானையிட்ட போய் ஒரு பத்திரம் எடுத்து நிரப்ப வெளிக்கிட்டால் கனக்க பிரச்சினை.

இருந்த ஊர்களில் எந்த ஊரை சொந்த ஊர் என்று போடுறது. பிறந்த இடத்தை தான் போடுறது வழமை . இருந்தாலும் பிறந்த ஊரில் நான் ஒரு அல்லது இரண்டு வருடம் தான் இருந்தேன். வவுனியாவில் எட்டு வருடங்கள் , சுன்னாகத்தில் ஒரு வருடம் , யாழ்ப்பாணத்தில் எட்டு வருடங்கள், கொழும்பில் பதினான்கு வருடங்கள் ( இதுக்க கண்டியில் ஐந்து வருடங்கள் , நெதர்லாந்தில் மூன்று வருடங்கள் , வேலை செய்யும் ஊர் ஐந்து வருடங்கள் உள்ளடக்கம்).

விதானை என்னுடைய கதையை கேட்டால் தலை சுத்தி விழுந்தாலும் விழுந்திடுவா. ( அம்மையார் தான் விதானை) . தொழிலை விட்டுட்டு போனாலும் போயிடுவா. ஹா ஹா :)

பிறந்த ஊர், இருந்த ஊர், புகுந்த ஊர், புலம்பெயர்ந்த ஊர் , படித்த ஊர், வேலை செய்யும் ஊர், எத்தனை ஊரையா எம்மளுக்கு ?? நம்மளுக்கு எங்கு இருந்தாலும் எல்லாம் ஒன்று தான்.


(கண்ணனின் யாழ் புகைப்பட தொகுப்பில் இருந்து )

இந்த ஊர் கதை சொல்லும் போது எனக்கு பிடித்த கண்ணதாசனின் வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றது.
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா?

மிகவும் பழைய பாடல் ..கேட்டு ரசித்து பாருங்கள்..

2010-05-07

தற்காலிக பின்னடைவுகள், மனதை உருக்கிய பாடல், சுறா அனுபவங்கள்

தற்காலிக பின்னடைவுகள்:

மலையே ஆடினதாம் மதிலாடினால் என்ன. அதுதான் எனது திருமண வாழ்க்கை, இன்னும் ஒரு இரு நாட்களுக்குள் முற்று புள்ளிக்கு வந்து விடும். நீண்ட நாட்களாக நான் பட்ட துன்பியல் அனுபவங்களுடன் கூடிய விளக்கமான அறிக்கை கொழும்பு மாவட்ட நீதி மன்றம் விவாகரத்து வழங்கப்படுகிறது என்று அறிவித்த பின்னர் தரப்படும். அனுபவங்கள் வாழ்கையின் பாடங்கள்......:)

மனதை உருக்கிய பாடல்:
கடந்த வாரம் 155 இலக்க பஸ்ஸில் மருதானைக்கு சென்று வர வேண்டியதாயிற்று. வெள்ளவத்தையில் ஏறும் போது பஸ்ஸில் சனமே இல்லை, இருந்தாலும் கொஞ்ச சனத்தை தன் சாதுரியத்தால் சேர்த்து போட்டான். முன் ஆசனத்தில் இருந்து பஸ்ஸின் இசைதட்டில் இருந்து ஒலித்து கொண்டு இருந்த அழகான சோக பாடல்களை இரசித்து கொண்டு இருந்தேன். கேட்ட பாடல்களில் எனக்கு பிடித்த, என்னை இரசிக்க வைத்த பாடல் இதுதான்.
நெஞ்சே நெஞ்சே பாவை நெஞ்சே ........................:)



விசேடமாக இந்த பாட்டை ஓட்டுனர் திருப்பி திருப்பி போட்டு பஸ்ஸில் சென்றோருக்கு தன் காதல் "வலி"மையை உணர்த்தி விட்டார். மருதானையில் இறங்கும் போது அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லி போட்டு இறங்கினேன்:).


சுறா அனுபவங்கள்

நீண்ட நாட்கள் வெளிநாட்டில் இருந்து வித்தியாசமான இரசிகர்களுடன் திரைப்படம் பார்த்து வந்த நான் , அண்மையில் விஜய் இன் சுறா படத்தை லோக்கல் பஜாருடன் பார்த்து ரசித்தேன்( ஒரு பொய் சொல்லுறன் ). தமன்னாவுக்காக தான் நான் அந்த படத்தை பார்த்தேன். தமனாவை ரசித்தேன். படம் பரவாய் இல்லை .. இருந்தாலும் விஜய் அடுத்த முறையாவது அடுத்தவன் காசை சுரண்ட முன், கொஞ்சம் கவனமாய் படத்தை எடுத்தால் சரி.

சுறா படம் பற்றி வந்த ஜோக்ஸ் களில் எனக்கு பிடித்தது :

மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனையை விட அதிகபட்ச தண்டனையாக கட்டி வச்சு சுறா திரைப்படம் பார்க்க விடவேண்டும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் இன்று கோரிக்கை விடுத்தார்:)

2010-04-04

பையா - பாடல் - துளி துளி மழையாய் வந்தாளே

எனக்கு பிடித்த பாடல், எனது கைத்தொலைபேசி ரிங் டோன் பாடல் ...என்னுடைய பிடித்த நடிகை தமனாவின் பாடல் ..இப்படியே சொல்லி கொண்டுபோகலாம் .. இதோ உங்களுக்காக( பாட்டு பாதியில் நிக்குறதுக்கு நான் பொறுப்பில்லை)


துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்,
பூபோல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்....

செல் செல் அவளுடன் செல்
என்றே காள்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...
அழகாய் மனதை பறித்து விட்டாளே.......

துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...


தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுத்தான்
பூக்களும் பூக்குமோ!

நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும், பார்வை ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறதோன்றும்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே....



செல் செல் அவளுடன் செல் என்றே காள்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோழ்களில் சாயுவேன்..
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன்,
நெஞ்சிலே தாங்குவேன்,





காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள்,
காயமின்றி வெட்டி போட்டாள்..
உயிரை ஏதோ செய்தாள்...
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டாள்...
கனவில் கூச்சல் போட்டாள்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே...

செல் செல் அவளுடன் செல்
என்றே காள்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...




முன்னைய பதிவில் : எனக்கும் பிடிக்கும் தமனாவை http://svpriyan.blogspot.com/2009/12/blog-post_05.html

ஓசை - ஒரு பாடல் நான் கேட்டேன்

இந்த பாடல் எஸ் பி பாலா வும் வாணி ஜெயராமும் ஓசை படத்துக்காக பாடியது.
இது ஒரு டூயட் பாடல். சோகப்பாட்டும் இருக்கு அதை பிறகு போட்டு விடுகிறேன்.


பெண் : ம்.. ம்.. ம்.. ம்....
ஒரு பாடல் நான் கேட்டேன்....
உன் பாசம் அதில் பார்த்தேன் ,
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்

லா ல லா ல லா லா லா

நான் பார்க்கும் இடம் எல்லாம்
கண்ணில் நீ இன்றி வேறில்லை
என் வாழ்க்கையின் ஆதாரம்
எந்த நாளிலும் நீயாகும்
நீ அன்பெனும் ஜீவநதி
என் ஆலய தீபம் நீ

ஆண் : வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும்

நீ பாயும் நதி ஆனாய்
உன்னை தாங்கும் கரை ஆனேன்
என் வாழ்க்கையில் நீ பாதி
உன் வாழ்க்கையில் நான் பாதி

என் கண்களில் சமுத்திரங்கள்
அதில் காண்பது நம்பிக்கைகள்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்..



என் கண்கள் உறங்காது
உன் பூமுகம் காணாது
பெண்: நான் வாழ்வதும் உன்னாலே
ஆண்: நீ காத்திடும் அன்பாலே
பெண்:என் ஆயிரம் ஜென்மங்களும்

ஆண் : உன் அன்பினை நான் கேட்பேன்


Oru Paadal Naan Keten by svpriyan


பெண்: வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும்

இருவரும் :ஒரு பாடல் நான் கேட்டேன்
உன் பாசம் அதில் பார்த்தேன்..
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும்
ஒரு பாடல் நான் கேட்டேன்.................

2010-04-02

ஆரோமலே - விண்ணைத்தாண்டி வருவாயா

விண்ணைத்தாண்டி வருவாயா பாட்டு வந்த காலத்தில் இருந்து எனக்கு இந்த பாட்டும் மெட்டும் ரொம்பவே பிடிச்சு போச்சு..
நேற்று இந்த பாட்டை பாடிய அல்போன்சு நேரடியாக ஒரு நிகழ்ச்சியில் பாடியதை பார்த்து உள்ளம் உருகி விட்டது.

உங்களுக்கும் இந்த பாட்டு பிடிக்கும் என்று நினைகின்றேன்.





மாமலை ஏறி வரும் தென்னல்
புது மணவாளன் தென்னல் , ...
பள்ளி மேடையே தொட்டு தலோடி குருசில் தொழுது வரும்போல்,
வரவேல்பினு மலையாளகர மனசம்மதம் சொரியும் ,

ஆரோமலே.. , ஆரோமலே....... , ஆரோமலே.. , ஆரோமலே .......
ஆரோமலே............. , ஆரோமலே....... ,

ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி
ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி

ஷ்யாம ராத்திரி தன் அரமனையில் ,
மாரி நில்கயோ தாரகமே ,
புலரி மன்சில்லே கதிரொளியாய் ,
அகலே நில்கயோ பெண்மனமே,

சஞ்சு நிலக்கும சில்லையில் நீ , சில சிலம்பியோ பூங்குயிலே
மன்சிரகிலே , மரயோலியே தேடியதியோ பூரனகள்

ஆரோமலே............. , ஆரோமலே.......(பின்னணியில் )

ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி

ஆரோமலே............. , ஆரோமலே.......


கடலினே , கரயோடினியும் படான் ஷ்நேஹம் உண்டோ...... ?
மேழுகுதுரிகலாய் உருகான் இனியும் ப்ரணயம் மனசில் உண்டோ........ ?

ஆரோமலே ........... ஆரோமலே.................. .. ஆரோமலே..................
ஆரோமலே .. ஓஓ . ஹோ............ !


ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி
ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி


ஷ்யாம ராத்திரி தன் அரமனையில் ,
மாரி நில்கயோ தாரகமே ,
புலரி மன்சில்லே கதிரொளியாய் ,
அகலே நில்கயோ பெண்மனமே,


சாயு நில்குமா சில்லையில் நீ , சில் சிலம்பியோ பூங்குயிலே
மஞ்சிராகிலே! , மரயோலியே தேடியதியோ பூரணங்கள்...





ஆரோமலே............. , ஆரோமலே.......(பின்னணியில் )

ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி

ஆரோமலே............. , ஆரோமலே....... ஓஓஓஒ ...

2010-03-11

திரைப்படங்களில் மேடைகளில் இசைக்கச்சேரி போல் பாடி அல்லது நாட்டியமாடி பிரபல்யமான பாடல்கள்

கடந்த ஒரிரு நாட்களாக , ஊருக்கு போகணுமே .. என்று ஒரே வேலை , அதற்கு இடையில் ஒரு குறுகிய பயணமாய் வேறு ஊரில் தற்போது நிற்கின்ற போதும், எப்பிடியாவது , சினி திரைகளில் வந்த பாடல்களில் , ஒரு மேடையில் மட்டுமே பாடி ஆடி அசத்திய பாடல்களின் தொகுப்பை போட்டே தீரனும் என்று ஒரு முடிவுடன்................


பொதுவாக கர்நாடக இசைக் கச்சேரி மேடைகளில் பாடப்படும் கீர்த்தனைகள் சரி , கதாநாயகிகள் மேடைகளில் ஆடும் நாட்டிய பாடல்கள் சரி திரைப்படங்களில் இடம்பெறும்போது, அவை நிஜ மேடைகளில் எந்த ராகத்தில் இசைக்கப் படுகிறதோ அல்லது எப்படி ஆடப்படுகிறதோ அதே மாதிரி தான் சினிமா படங்களிலும் இடம் பெறுகின்றது.

ஒரு காலத்தில் மேடை அமைத்து அதில் நாயகி சரி நாயகன் சரி ஒரு பாட்டு பாடும் போது அதை சபையோர் இருந்து ரசித்தல்(இதில் நாயகனோ நாயகியோ சபையில் இருந்து ரசிக்கலாம் , இதுவும் உள்ளடக்கம் ), அல்லது நாயகியும் நாயகனும் போட்டிக்கு பாடுதல் போன்றவையே ஒரு காலத்தில் டூயட் , அல்லது காதல் வளர்க்கும் , காதல் தோல்வி பாடல் காட்சிகளாக வந்து ரசிகர்கள் மனதில் பிரபல்யம் அடைந்தது.

இந்த வகை இன்று அருகி விட்டது . இன்று கதாநாயகியும் நாயகனும் வீட்டில் சந்தித்து அல்லது எங்கையாவது தோட்டத்தில் , ஆற்றில் குளிக்கும் போது , அல்லது படிக்கும் கூடத்தில் , வகுப்பறையில் சந்தித்து கதைத்தால், உடனே வரும் டூயட் பாடல் அமெரிக்காவிலோ , அல்லது வேறு எந்த ஒரு நாட்டிலையோ எடுத்து விட்டு அதன் மூலம் ரசிகர்களையும், வசூலையும் அள்ளி கொள்வார்கள் இந்த சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்.



முதல் வகையில் எனக்கு

பிடித்த பல பாடல்கள் இருந்தாலும் , மிகவும் பிடித்த பாடல்களை இங்கே தருகின்றேன். உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

1-முதலாவது மற்றும் இரண்டாவது பாடல்கள் , சிந்து பைரவியில் இடம்பெற்ற கலைவாணியே( யேசுதாஸ்) மற்றும் பாடறியேன் படிப்பறியேன்(சித்திரா ) பாடல்கள். இவை எந்த நேரத்திலும் கேட்டு ரசிக்க கூடியவை .


கலைவாணியே




பாடறியேன் படிப்பறியேன்
இது மேடை நிகழ்ச்சியில் சித்ரா பாடியது இதைப்பாருங்கள்



2- ஆடல் கலையே தேவன் தந்தது.. ரஜனியின் 100 ஆவது படம் : ஸ்ரீ ராகவேந்திரா
அதில் அம்பிகா ஆட, ரஜனி பாட ( உண்மையில் ஜேசுதாசின் அந்த இனிமையான குரல்தான் இந்த பாட்டை பிர பல்யப்படுத்தி விட்டது) சபையோர் ரசிப்பதை பார்த்தால் என்ன ஒரு சுகம்...:)



3- சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் வேண்டும்.. இந்த பாட்டை என்னவோ தெரியவில்லை எனக்கு ரொம்பவே பிடிக்கும்..
அதுவும் ஷோபனா படத்தில் தூள் நடிப்பு..காமெடி .. இந்த படத்தில் சூப்பர் கிட் பாடல்கள் இன்னும் இருக்கு... பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள்.. இளம் வயது சிவமணி ட்ரம்ஸ் வாசிச்சு கலக்கி இருக்கார். இசை ஒரு பெருங்கடல் அதை ஞானத்தால் பாடுவதா அல்லது கேள்வி ஞானம் போதுமா என்று பாலா வும் வாணி ஜெயராமும் வரிந்து கட்டி கொண்டு பாடுவதை பார்த்தால் உண்மையிலே புல்லரிக்குது...:)




4- சலங்கை ஒலி படம் இருபது வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் விடாத ஒரு மாபெரும் பிரமிப்பு. எத்தனை முறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. இசைஞானிக்கு தேசிய விருதை வாங்கித் தந்த படம்!
கமல்ஜெயப்பிரதா .. நடிப்பு.. நாட்டியம் பற்றி சொல்லி முடிக்க ஏலாது. ,

எஸ் .பிசைலஜாவின் அருமையான நாட்டியம்.. சொல்ல முடியாத வார்த்தைகள்.. பாடல் மட்டுமாபாடுவேன் .. ஆடவும் தெரியும் என்று ஆடிக்காட்டி படத்தையே அசத்தியவர் இவர்.


இந்த படத்தில் வந்த எல்லா பாடல்களும் ரொம்பவே பிடிக்கும். ஆனால் இங்கே நான் மேடையில் ஆடிய பாடல்கள் வரிசையில் இந்த பாட்டை மட்டும் தரு கின்றேன்.



சலங்கையின் ஒலி என் காதுகளில் இன்னும் பல வருடங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்!


சலங்கை ஒலியை தொடர்ந்து சலங்கையிட்டாள் ஒரு மாதுவும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். :)


6- சங்கீத ஜாதி முல்லை ... என்ன படமையா.. காதல் ஓவியம்.. இப்படி என்னொரு படம் இப்ப எடுத்தால் நான் முதல் ஷோ பார்க்க முதல் நாள் இரவே போய் நிற்பேன் ..

பிடித்த வைரவரிகள் .. எஸ் பியின் பழைய குரல்...

விழி இல்லை என்னும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்



பூவில் ஒரு வண்டு, வெள்ளிச்சலைங்கைகள், நதியில் ஆடும் பாடல்கள் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை...

7- தில்லான மோகனாம்பாள் - பத்மினி .. ஸ்ஹபாஆஆ என்ன வென்று எல்லாம் சொல்லுறது. நலந்தானாவைப்பாருங்கள் .. ரசியுங்கள்





8- கங்கைக்கரை மன்னனடி- வருஷம் 16 . குஷ்புவின் அறிமுகம்.. படத்தில் மேடையில் ஆடி அசத்தும் அருமையான பாடல் .. ஜேசுதாஸ் குரலில்.. இனிமைதான்:)




ஆமா எனக்கு ஒரு சந்தேகம் .. இப்ப நடிக்கிற நடிகைகளுக்கு இந்த பரத நாட்டியம் தெரியாதாமே .. அல்லாட்டி ஒரு பரத நாட்டியம் ஆடின கட்சியை அங்கே இங்க .... வைத்து இருக்கலாமே ,... :)

எப்புடி இருந்தாலும் எங்கட ஜோதிகா அசத்திய ரா ரா நாட்டியம் இன்றைக்கும் வியக்க வைக்கும் ஒன்றே எனக்கு ..

2010-03-01

"பா " படமும் இளையராஜாவின் இனிமையான மெட்டும்




நீண்ட நாட்களுக்கு பின் ஒரு படம் பார்க்கலாம் என்று போட்டு கணனி முன்னால் இருந்து எந்த படத்தை பார்க்கலாம் என்று தேடினால் .. தமிழில் தல படம் திரையரங்கு நிறைந்த கூட்டத்துடன் பார்த்தாச்சு. தீராத விளையாட்டு பிள்ளை , தமிழ்ப்படம் எல்லாமே இணையத்தில் வலம் வருகின்றன .. அவையும் பார்த்தாச்சு போன வாரம்.

"பா" படம் நல்ல படம் என்று யாரோ எல்லாம் சொல்லி இருந்தாங்க... சரி போய் இணையமூடகவே DVD தரத்தில் இருக்கின்ற இந்த படத்தை பார்த்தேன்.
ஆரம்பத்தில் எழுத்து ஓட்டத்தை skip பண்ணி போட்டு பார்த்து கொண்டு இருக்கும்போது எனக்கு கொஞ்சம் பிடிச்ச படமாய் தோன்றியது.

மகன் அபிஷேக் பட்சானின் நான் பார்த்த இரண்டாவது படம் இது.முதல் படம் குரு. அப்பா ( அந்த மேக்கப் செய்த விதம் குறித்து எனக்கு ஒருமின்னஞ்சல் வந்தது .. எங்கையோ விட்டுடன் ....), மகன் இருவரின் நடிப்பும் எனக்கு பிடிச்சு கொண்டுது.
இப்படியே படம் பார்த்து கொண்டு இருக்கும்போது இருந்தால் போல ஒரு பாட்டு




இந்த பாட்டை கேட்டவுடனே எனக்கு இது இளையராஜா மெட்டாச்சே.. அவருக்கு பிடித்த மெட்டு இது என்று எனக்கு தெரியும்... அவர் அதை ஒரு நிகழ்ச்சியில் கூட சொல்லி இருந்தார். பின்னோக்கி உடனே போய் மிஸ் பண்ணின எழுத்தோட்டத்தில் பார்த்தால் அடே கொக்கா மக்கா எங்கட ராஜா சார் தானே இசை ..சுப்பரா இருக்கே .. உடனே என்னுடையே தேடல் ஆரம்பம் :

இது இளையராஜா வைத்த One Man Show இல் இருந்து :




இந்த மெட்டை கொண்டு ..... அவர் இசை வரலாற்றில் சூப்பர் கிட் ஆன பாடல்கள்.


மூலப்பாடல் தும்பி வா என்ற பாடல் ஓலங்கள் என்ற மலையாளம் படத்தில் 1982 இல் வெளி வந்தது.



இந்த தும்பி வாவும் நன்றாகவே இருக்கு




தெலுங்கில் இதே மெட்டில்:



இந்த மெட்டை கொண்டு , தமிழ் படமான ஆட்டோ ராஜா வில் ( திரைக்கு வந்த ஆண்டு - 1982)



இதை விட என்னால் கண்டு பிடிக்க முடியாமல் போன பாடல்

கண்ணே கலை மானே என்ற படத்தில் வந்த " நீர்வீழ்ச்சி தீமூட்டுதே ...தீ கூட குளிர் காயுதே " ஒளி வடிவம் இல்லாட்டி என்ன இரசிக்க ஒலி வடிவம் இருக்கு .. .. கேட்டு இரசியுங்கள்...






சரி வந்தனீங்க இந்த பொண்ணு போடும் இசையையும் பார்த்திட்டு போங்க



இத்தனை வருடங்கள் (28 வருடங்கள் ) ஆகியும் அந்த மெட்டும் அதே இசையும் இன்றும் என்றும் மக்கள் மனதில் வாழ்கின்றதுக்கு இது ஒரு உதாரணம்...

2010-02-25

இதமான இரவில் நிறைந்த சுமைகளை இறக்கி வைத்து விட்டு கேட்க கூடிய பாடல்கள் II

குறுகிய பயணமாய் ஊருக்கு வந்த நான் மீண்டும் ஒரு மேற்குலக ஊர்ருக்கு நாளை பயணமாக இருக்கின்றேன். அதுக்கான தயாரிப்புகள், நண்பர்களின் வருகை என்று இரவு ஒன்பது மணி கடந்து விட்டது. சாப்பிட்டு அம்மாவுடன் கடந்த கால கசப்பான அனுபவங்களை உரையாடி விட்டு , ராத்திரி பத்து மணி , வீட்டில் பாயை ( இவ்வளவு காலமும் ஐரோப்பாவில் என்ன buildup எல்லாம் குடுத்து தான் படுத்து எழும்பிறது ) விரித்துப் போட்டு படுக்கும்போது, எனது இணைய வானொலி இதமான இரவில் நிறைந்த சுமைகளை இறக்கி வைத்து விட்டு கேளுங்கள் என்ற தனது வழமையான சேவையை ஆரம்பித்தது.

============விளம்பர இடை வேளை================
கட்டிலில் படுத்தால் உருண்டு புரள ,விழ உடம்பு விடாதாம் என்று அடிக்கடி என்ற ரூமா சொல்லி, கம்பசில படிக்கிற காலத்தில என்னை விட எல்லாருமே பாய் தான் :)
காரணமா :=============>
கட்டாந்தறையில் ஒரு துண்டை விரித்தேன்
கண்ணில் தூக்கம் சொக்குமே அந்து அந்த காலமே
மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லே அது இந்த காலமே
<============================== சொல்லுவினம் .. ரொம்பவே ஓவர் தான் .. :) உண்மையில உடம்பு கூடின ரூமா நான்தான் ..:) இருந்தாலும் எனக்கும் பாய் தான் விருப்பம் .. இவங்கலால double பெட் இல் கடைசியா நான் தான் படுக்கிறது.

============விளம்பர இடை வேளை================


(இந்த பாயிலையும் பனையோலைப்பாய்,.. தான் நல்லமாமே )

தினமும் நள்ளிரவை கடந்த வேளைகளில் ஒலிக்கும் இதமான பாடல்களை இந்த அலைவரிசையில் கேட்பதுவும் அதில் எனக்கு பிடித்த பாடல்களை ஆங்காங்கே தேடிப்பிடித்து போடுவதும் எனது கடந்த கால அனுபவங்கள். இன்றைய நாளில் வந்த பாடல்களில் முத்தான மூன்று பாடல்கள் நான் ஒரு சில தடவைகள் கேட்டு உள்ளேன்...இருந்தாலும் என்னமோ நீண்ட நாட்களுக்கு பின் கேட்கும்போது அதுவும் எங்கட வீட்டில் இருந்து கேட்கும் போது வரும் ஆனந்தம் என்றுமே மிகையாகாது. அம்மாவின் வழமையான ஒடர் : தம்பியவை உதுகளுக்கு கிட்ட படுக்காதையும் , நாங்களும் சொல்லுறது தூரத்தில தான் படுத்து இருக்கேன்,,, என்று.. :) உண்மையாவே ஐரோப்பாவில் இருந்த போது பக்கத்தில தான் பாட்டு பெட்டியும் , லேப்டாப் இம் . தூங்கிட்டே இருக்கும்போது இடைக்கிடை எழும்பி யாருக்காவது அழைப்பு செய்வதும், இல்லாட்டி farmville விளையாடுவதும் ஒரு வழமையான ஒன்றே,



சரி இந்தாங்க இன்றைய பாட்டுகள் :

1) நீ பௌர்ணமி ... ஜேசுதாஸ் ஐயா பாடின மெகா கிட்டான பாடல்:




2) ஆலமரம் மெல்ல வரும்




3) மீரா படத்தில் வந்த ஜேசுதாஸ் பாடின - புது ரோட்டில தான்

2010-02-23

எனக்கு பிடித்த சொக்குதே மனம்

தென் இந்திய தமிழ் தொலைக்காட்சிகள் பெரும்பாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளையே கொண்டு தான் காலத்தை ஓட்டி கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு தொலைக்காட்சியும் வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனது.

சில இருக்கிற எல்லா சீரியல்களையும் போட்டு காலத்தை ஒட்டி கொண்டு இருக்கின்றன . அந்த சேனல்களை நான் இங்கே கருத வில்லை. அதே போல் சினிமா, டாப் டென் பாடல்கள், திரை விமர்சனம், டாப் டென் திரைப்படங்கள், சமையல் சமையல் ( இது கடுப்பு ஏத்தும் நிகழ்ச்சி ) இவையும் இங்கே நான் கருத வில்லை.

சன் டிவி யில் பெரும்பாலும் அசத்தபோவது யாரு, தயாரித்து வழங்கும் காமெடி டைம் எல்லாரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகள்.

ஜெயா டிவி யில் வரும் ராக மாலிகா, என்னோடு பாட்டு பாடுங்கள் ( இது இப்போது இல்லை) போன்றவையும் ,

அதே போல் கலைஞர் டிவி யில் , பாட்டுக்கு பாட்டு , மானாட மயிலாட போன்றவை பிர பல்யமானவை. ( வேறு ஏதும் இருந்த மன்னியுங்கப்பா)

எனக்கு தெரிந்த நண்பர்களிடம் நான் கேட்பது அடிக்கடி யாரவது சொக்குதே மனம் என்ற இசை நிகழ்ச்சி நடப்பது தெரியுமா என்று ?? யாருமே அதை பார்ப்பதாக சொல்லவுமில்லை. சிலர் அப்படி ஒன்று இருக்கா என்று கூட கேட்டார்கள்.

இதுக்காக எல்லாருக்காகவும் சேர்த்து ஒரு சிறு தொகுப்பை தருகின்றேன்.

சொக்குதே மனம்
இரவு ஒன்பதரை மணி முதல் பத்து மணி முதல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் இந்தவித்தியாசமான நிகழ்ச்சியில் மனதைக் கரைக்கும் அருமையான பழைய ஹிட்பாடல்களை ரீமிக்ஸ் செய்து பாடிக் காட்டி அசத்துகிறார்கள்.

http://www.jayanetwork.in/PgView.asp?ref=௰௪௭

ராத்திரியாச்சுன்னா, மிட் நைட் மசலாக்களைப் பார்த்து விட்டு தூங்கப் போகும் சகலமகா ஜனங்களுக்களையும் நல்ல திசையில் திருப்பும் வகையில், சொக்குதே மனம் என்ற ஒரு அருமையான வித்தியாசமான நிகழ்ச்சியைப் போட்டு வித்தியாசமான விருந்தைப்படைத்து வருகிறது ஜெயா டிவி.



ப்ரியா சுப்ரமணியன்

தொகுத்து வழங்குவதிலும் பார்க்க, பூத்து குலுங்கும்புன்னகை , இனிமையான குரல், அணிந்து இருக்கும் ஆபரணங்கள் , விதம் விதமான சேலைகள் என்று சொல்லி எல்லாரையும் ஆட்டம் காண வைக்கின்றார் பிரியா சுப்ரமணியன்.

மேடையமைப்பு : கலர் கலரான மின்குமிழ்கள், அழாகான ஓவியங்கள், பிரமிக்க வைக்கும் சிற்ப வேலைப்பாடுகள் என்று நீட்டி கொண்டே போகலாம்.


sokuthegthr
Geüpload door facetamil. - Het hele seizoen en gehele afleveringen online.

பாடகர்கள்: யார் குரலிலும் பாடும் வல்லமை கொண்ட பாடகர்கள் , பாடகிகள். அதுவும் பழைய ஆண் குரல்களான ராஜா, சௌந்தராஜன் ,ஸ்ரீநிவாஸ், பிறகு ஜேசுதாஸ் , பாலா , இளையராஜா , ஜெயச்சந்திரன் ,வாசுதேவன் என்று எல்லா குரல்களும் இருக்கும். அதே போல பெண் குரல்களான ஜானகி, ,சுஷீலா என்று நீட்டி கொண்டே போகலாம்.

இசைக்குழு: தரமான குழு , ஒரு இசை நிகழ்ச்சி நடத்த தேவையான எல்லா விதமான இசைக்கருவிகளும் , வித்துவான்கள் போன்ற கலைஞர்களும் இருப்பார்கள்.


Sokkuthe Manam - 28-09-08 - Part-1 - Free videos are just a click away


இந்தியாவில் இந்த நிகழ்ச்சி பெரும் கிட். பழசுகள் சரி, புதுசுகள் சரி விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி.

திரைப்பட வீடியோ கலவையுடன் தரமான ஒலி, ஒளியமைப்புடன் ஞாயிறு இரவில் சொக்குதே மனம் ரசிகர்களை சொக்க வைத்து விட்டு செல்கின்றது. நான் இந்த நிகழ்ச்சியை நீண்ட நாட்களாக பார்த்து ரசித்து வருகின்றேன்.
அதிலும் குறிப்பாக இறுதியாக ஒரு சூப்பர் கிட் இளையராஜாவின் இசையில் வந்த சூப்பர் கிட் பாட்டை பாடி எல்லாரின் மனதையும் திருடியது மட்டும் இல்லாமல்
வசிகரீத்தும் செல்வார் சிரிப்பழகி ப்ரியா .



Sokkuthe Manam - 19-10-08 - Part-1 - These bloopers are hilarious

ஒரு சில காணொளிகளை இங்கே இணைத்தும் உள்ளேன். உங்கள் மனங்களை இது சொக்கி இருந்தால் எனக்கும் சந்தோசம்.

இறுதியாக வசீகரா ரீலு :




தொகுப்புக்கு செல்ல :
http://www.thamil.org/teledramas/?id=113&programme=Sokkuthe%20Manam

2010-02-19

இதமான இரவில் நிறைந்த சுமைகளை இறக்கி வைத்து விட்டு கேட்க கூடிய பாடல்கள்


தற்போது ஒரு புற நாட்டில் ஏதோ கல்வி சம்பந்தமான வேலையில் வந்து நிக்குறோம். விமான நிலையத்தில் மூன்று மணி நேரம் வெள்ளனவே ஆஜரானதால் ஒரு கரையாக இருந்து ஒருக்கா இந்த ஒரு இரண்டு பாட்டுகளை கேட்டால் ஏதோ இருக்கிற சுமை எல்லாம் இறங்கி ஓடினதாகவே இருக்கும்.. என்று இணையத்தில் எனக்கு பிடித்த ஒரு சில பாட்டுகளை கேட்டு ரசித்தேன்......
அவற்றில் சில உங்களுக்கும்..



கட்டு மஸ்தான மோகினி

முதலாவது சின்னக்குயில் சித்ராவின் குரலில் வந்த சொந்தம் வந்தது வந்தது...
இந்த பாட்டை சித்திரா பாடும் போது பாட்டை ரசித்து கேட்டு ஒரு நிகழ்ச்சியில் அழுத நடிகை கூட இருக்கு.. :) கேட்டு பாருங்க..

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும் ....... பாசங்கள் போகாது மாமா
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது
மாசங்கள் போனாலும் வருசங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது


கண்ணேன்னு சொல்ல வேண்டாம் கிளியேன்னு கிள்ள வேண்டாம்
கண்ணாலே கொஞ்சம் பொறு போதும்
நீ வாழும் வீட்டுக்குள்ளே நீ போடும் கோட்டுக்குள்ளே
நீங்காம இந்த பொண்ணு வாழும்
உன்னையே நானே உசுரா தானே
நினைச்சேன் மாமா நெசந்தான் ஆமா
நான் வாங்கும் மூச்சிக்காத்து உன்னாலதான் உன்னாலதான்
ஓயாம உள்ளஞ்சொல்லும் உன் பேரை தான் உன் பேரை தான்
சொந்தம் பந்தம் நீ.....
(சொந்தம் வந்தது..)

பூப்போல தேகம் தொட்டு சோப்பாலே தேச்சி விட்டு
நீராட்ட நீயும் ஒரு சேய் தான்
வாய்யான்னு உன்னை கொஞ்சி வாயார உன்னை சொல்லி
சோரூட்ட நானும் ஒரு தாய் தான்


இரவா பகலா இருப்பேன் துணையா
கண்ணீர் வடிஞ்சா தடுப்பேன் அணையா
போகாது உன்னை விட்டு என்னாசை தான் என்னாளும்தான்
போனாலும் மண்ணை விட்டு பொட்டோடுதான் பூவோடு தான்
வாழ்வோம் மாமா நாம்....
(சொந்தம் வந்தது..)

இரண்டாவது பாட்டை நான் முக வலையில் இணைத்து இருந்தாலும் அந்த அழகிய குரலில் ராஜா அங்கிள் பாடும் போது என்னமோ தெரியல தொடர்ந்து கேட்டிட்டே இருக்கலாம் மாதிரி.
மோகினி நடிகையின் ஆரம்ப கால நடிப்பில் (1991 இல் ) வந்த நாடோடி பாட்டுக்காரன் படத்தில் ...


அப்புடி இருந்தனான் இப்படி ஆகிட்டேனே :)


மூன்றாவது முத்தான பாட்டு தான் : பனி விழும் இரவு - மௌனராகம்
ரொம்ப நாளாவே ... பிடிக்கும்.. :) ஜானகி எஸ் .பி . ராஜா அங்கிள் போட்டு தாக்கி இருக்கினம்.



நான்காவது :இது சின்ன பூவே மெல்ல பேசு படத்தில் வந்த சின்ன பூவே மெல்ல பேசு பாட்டு..



இறுதியாக கட்ட பொம்மன் படத்தில் வந்த .. ஒ.. ப்ரியா ப்ரியா.. எனக்கு பிடித்த பாட்டு.. எங்க இந்த பாட்டு போனாலும் நின்று கேட்டுட்டு போவேன் ,,, அப்படி ஒரு ஆசை இந்த ப்ரியா வில்
எனக்கும் வீட்டு பேர் ப்ரியா தானே ..:)

2010-02-13

காதல் தோல்விகள் கூட ஒரு சுகம் தான் .. :)

இன்று காதலர் தினம்..

காதலர் தினம் கொண்டாடும் .. ஒரு தலைக்காதல், கண்டதும்காதல், நிண்டதும் காதல், உண்மைக்காதல் , இரு
தலைக்காதல், கள்ளக்காதல் என்று எல்லாக்காதல் நண்பர் களுக்கும் .. அவை எல்லாம் வெற்றி பெறவாழ்த்துக்கள்.

சந்தேகம் ???
இன்று காதல் ஜோடி களுக்கு மட்டும் தானா தினம்? இல்லை காதல் ( அன்பையும் குறிக்கும் ) கொண்ட (பெற்றோர் மீது , படிக்கும் பாடம் மீது, இல்லாட்டி ஒரு பிரபலம் மீது , அரசியல் வாதி மீது ) இவர்களுக்கும்... காதலர் தினம் தானே ???


காதல் ஜோடிகளுக்கு எத்தனையோ பேர் வாழ்த்து தெரிவித்து கொண்டு இருக்கும் நேரத்தில்.. கொஞ்சம்..நான் ... ...

காதலில் தோல்வியுற்றோருக்கு யார்தான் ஆறுதல் சொல்வது. அவர்களையும் இன்று மறக்க கூடாது. அவர்கள் அந்த வலியில் மூழ்கி கிடக்கும் நேரத்தில்..

சரி நாங்கள் ஆறுதல் சொல்லும் அளவுக்கு வளரவில்லை .. இருந்தாலும் என்றோ ஒரு நாள் நீங்களும் ஆறுதல் அடைய வேண்டும்...

பாருங்கள் காதல் தோல்வியால் வந்த வலி செய்யும் வேலைகளை ..


பாருங்க வீட்டில் அம்மா, அப்பா, சகோதரங்கள் , நண்பர்கள் என்று எல்லாரும் அந்தரித்தே போய் விட்டார்கள் ..

என்றையோ ஒரு நாள் சுட்டது:)

காதல் தோல்வியா?
அழு...
வாய்விட்டு அழு...
கதறிக்கதறி அழு...
உன்
கண்ணீரோடு காதலும்
கரைந்து போகும்வரை
அழு...
பின்பு
உலகத்தைப் பார்...
காதலையும் மீறி
எத்தனையோ அழகுகள்...
காதல்தோல்வியும் தாண்டி
எவ்வளவோ பிரச்சனைகள்...
அழகுகளை ரசிக்கக்
கற்றுக்கொள்...
பிரச்சனைகளை தீர்க்க
பழகிக்கொள்...
வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை
புரிந்துகொள்...!

பெற்றவள் இறந்தாலே
கண்ணீர்தான் சிந்துகிறாய்...
காதல் இறந்ததற்கா
உயிரைச் சிந்தத்துணிகிறாய்?
காதல் புனிதமானதுதான்...
புனிதமான தெதுவும்
உயிரை விலையாய் கேட்பதில்லை.
விலங்குகளை பலிகொடுத்து
கடவுளின் புனிதத்தை கெடுக்கிறோம்...
நம்மையே பலிகொடுத்து
காதலின் புனிதத்தை கெடுக்கிறோம்.
நண்பா ...
பாருங்கள் தோல்வியா?
இந்த இந்த
தேடிச்சென்ற காதலை மறந்து
தேடிவரும் காதலை அணைத்துக்கொள்...
காதலையே வெறுத்திருந்தால்
களவைப் போல காதலையும்
கற்று மறந்ததாய் நினைத்துக்கொள்...
வாழ்க்கையென்பது வாழ்வதற்கே
என்பதைப் புரிந்துகொள்...!






இந்த தொகுப்பில் எனக்கு பிடித்த ஒரு சில காதல் தோல்வி பாடல்கள் ,.. காணொளியாகவும், ஒலி வடிவிலும் தருகின்றேன்..
சோகங்கள் கூட சுமையாக உள்ள போது அதில் உள்ள ஆனந்தம் வேறு.. கொஞ்சம் நினைத்து பாருங்கள்..

1)
காதல் ராணி இல்லை : இது எனக்கு நீண்ட நாளாய் பிடித்த பாடல்

Kaadhal Raniyilleye by svpriyan





2)
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது சோகம் கூட சுகமாகும் ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே ...

யப்பா என்ன பாடல்.. நம்ம தளபதி ஒழுங்க நடிச்ச காலத்தில் வந்த பூவே உனக்காக பாடல் ...





3)மோகனின் இதயக்கோவில் .. யார்தான் மறக்கலாம்.. எண்பதுகளில் அந்த சின்ன வயசில் நான் பார்த்த முதலாவது காதல் தோல்வி தொடர்பான கதையுள்ள படம்..
சூப்பர் படம்.. அதுக்கு பிறகு எத்தனையோ தடவைகள் .. பார்த்து ..விட்டேன் ..

காதலை சேர்வு மூலம் ( அலைகள் ஓய்வதில்லை ) வாழ வைத்தார் பாரதி ராஜா.
அதே காதலை பிரிவு (சாவு) மூலம் வாழ வைத்தார் இந்த இதயக்கோவில் ... மணி ரத்தினம் வாழ்க....:)

காதலியை இழந்தாலும் (அம்பிகா ) உண்மைக்காதலுக்காக வேறு ஒருத்தரையும் (ராதா) ஏற்க மறுக்கும் ஷங்கர் எனும் மோகன் .. இறுதியில் இந்த படத்தில் வரும் காட்சி.. ஷாபா,, நெஞ்சு அடைத்து மூச்சு திணற வைக்கின்றது.. பார்க்க தவறிய எவரும் இருந்தால் பார்த்து விட்டு சொல்லுங்கள் எப்புடி படம் என்று .. :)




இந்த கொடுமையோ என்னவோ தெரியல.. இன்னொரு படமான மெல்ல திறந்த கதவில் இரண்டாவது காதலை இறுதியில் சோக முடிவு வரும்போது கிளைமாக்ஸ் காட்சியில் வைத்து காப்பாற்றி காதலையும் வாழ வைக்குறார்.

காதல் தோல்வி படம் என்றால் வேற என்ன நம்ம முரளி இருக்காரே .. அவற்ற எந்த படம் தான் அப்படி இல்லை..
எனக்கு பல படங்களில் வந்த காதல் தோல்வி பாட்டுகள் பிடித்து இருந்தாலும் காலமெல்லாம் காதல் வாழ்கவில் வரும் ஒரு மணி அடித்தால் பாடல் உண்மையாவே ஹரிஹரனின் குரலில் உள்ளதை கிள்ளி எறிந்தது.



கண்மணி நில்லு காரணம் சொல்லு..ஊமை விழிகள் படத்தில் வந்த இதமான இனிய மெட்டு: எனக்கு தெரிந்த காலத்தில் இருந்து என்ன்டுடைய பாட்டு பெட்டியில் நான் கேட்கும்பாடல்.. ( பிறகு யாரும் பிழையாக நினைக்க வேண்டாம்.. என்ன தங்களுக்கு காலம் முழுக்க தோல்வியோடா தம்பி என்று.. ஹஹா )

மலர் ஒன்று எடுத்து சரம் ஒன்று தொடுத்து
தேவி உன் பூஜைக்கு நான் கொடுத்தேன்
மலர்ச்சரம் பிரித்து மலர்வளை தொடுத்து
ஏழையென் காதலை நீ புதைத்தாய்
புதைத்தது மீண்டும் மலராகும்
உன் பூஜையை நினைத்தே சரமாகும்
எஸ் என் சுரேந்தர் பின்னிட்டார்.. குரலில் ..



இப்படியே எழுதி கொண்டு போனால் ஜேசுதாஸ் தொடக்கும் இன்று வரை உள்ள எல்லா பாடகர்களும் பாடிய சோகப்பாட்டுகளை இங்க தரலாம்.. பிறகு உண்மையாவே இந்த சுவாமிகளுக்கும் பட்ட காதல் தோல்வி போல என்று உறுதி பட நினைத்தே போடுவியள்.
அதால காதல் தோல்வி பாட்டு கேட்கணும் என்றால் இங்கே கொஞ்ச இணைப்புகளை தரு கின்றேன்.. நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும்..

  1. http://mp3.tamilwire.com/category/sad-love-songs

ஆட்டோக்ராபில் வந்த ஒரு பாடல் :ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே




வரிகள் - பா.விஜய்
படம் - Autograph


ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!

மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ நீ மோதிவிடு!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!


மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!


இப்படி ஒரு பாடல் எவ்வளவு அழகாக சொல்லுது .. வலிகளை தாங்கும் உள்ளமே வாழும் உள்ளம்....

ஒன்று மட்டும் சொல்ல விரும்புவது. இது காதலில் ஒரு தற்காலிக பின்னடைவே தவிர வேறொன்றுமில்லை .. காலப்போக்கில் எல்லாமே சரியாக அமையும்..

இறுதியாக ...இது என் நண்பன் சோமனுக்கு ஏற்ற பாடல்.. யார் சோமன் என்று மட்டும் கேட்க கூடாது .. அவருக்காக இதை இங்கே பகிர்கிறேன்..
Kalyanam enbathu by svpriyan
Related Posts Plugin for WordPress, Blogger...