Showing posts with label Halloween Day. Show all posts
Showing posts with label Halloween Day. Show all posts

2009-10-25

பேய்களின் உலகம் - Halloween Day- Oct 31st



மேற்குலகில் பிரசித்தி பெற்ற விசேட தினங்களில் கலோவின் பண்டிகையும் (Halloween festival) முக்கியம் பெறுகிறது...!October 31 திகதியை பேய்கள் (Halloween)தினம் அது புனித ஆத்மாக்கள் தினம், (எங்கடை ஆடி அமாவாசை மாதிரி) அது கால போக்கிலை இப்ப பேய் மாதிரி உடுப்பு போட்டு தண்ணியடிச்சு ஆடுற தினமாக்கிட்டாங்கள் வியாபார விற்பன்னர்கள்.



வருடம் ஒன்றில் ஒளி தந்த காலப்பகுதியில் (சமர் -summer) இருந்து இருள் சூழும் காலப்பகுதியுள் உலகம் செல்லும் போது (Winter - வின்ரர் ஆரம்பிக்கும் காலம்)
பூவுலகுக்கும் விண்ணுலகுக்கும் இடையே உள்ள தடைகள் தற்காலிகமாக விலக அக்காலப்பகுதியில் பேய்களின் பூவுலக ஊடுருவல்களும் செயற்பாடுகளும் உச்சம் பெறுகின்றனவாம்...அதனாலேயே காத்திகை முதலாம் (November 1 ) திகதியை பேய்கள் உச்சம் பெறும் நாளாகக் கருதி பேய்களைப் போல வேடம் இட்டு தீ மூட்டி
இப்பண்டிகையை கொண்டாடுகிறார்களாம்...! தீ மூட்டி வெளிச்சம் தந்து பேய்களை விரட்டுவதாக நம்பியே இவ்வாறு செய்கின்றார்களாம்...!



என்ன பூசணிக்காய் இக்கு படு கிராக்கி .. Barn BUddy , Farm VIlle இல் தோட்டம் செய்யும் அன்பர்களே கொஞ்சம் பூசணிக்காய் விதையுங்க .. நல்லா உழைக்கலாம்..


விதம் விதமான செதுக்கல்கள்

இதை விட ஆவிகளை போல தங்களை அலங்கரித்து கொண்டு night club , music COncert போய் தண்ணி அடித்து கலாய்ச்சிட்டு வருதல் .. தான் நடக்கும் வழமை..



எனக்கு தெரிந்த விறு விறுப்பான பேய் கதைகள்

பேய்கள் உருவாகின பற்றி கதைகள் பல இருக்கின்றன. இறக்கும் உயிர்கள் (ஆத்மா) ஒழுங்காக இந்த உலகத்தை விட்டு பிரியாது இருப்பது தான் காரணம் , அவர்கள் முன்னர் நடமாடிய இடங்களை சுத்தி சுத்தி வருதல் , அவர்களின் நண்பர்களின் வீடுக்கு சென்று கதவை தட்டல், தொலைபேசியில் உரையாடல், என்று எல்லாம் விறு விறுப்பான கதைகள் இருக்கு. இதுக்காக தான் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வது வழக்கம். இந்த இடத்தில சென்று மன அமைதியாக நின்று பிரார்த்தனை செய்யாதவர்கள் வீட்டுக்கே அந்த பேய்கள் செல்வதாக கூறுபவர்களும் உண்டு. கவனம் எனிமேலாவது கொஞ்சம் பார்த்து...

இரவு வேளையில் சுடு காடு உள்ள வீதி , இருட்டான பாதை , ஆற்றங்கரை , புளியமரம் , போன்ற இடங்களில் உலாவி திரிந்த ஆட்களிடம் சுருட்டுக்கு நெருப்புக் கேட்ட பேயிடம் இருந்து தப்பித்து வந்து காய்ச்சலில் படுத்த ஆட்கள் கூட இருக்கிறதாக கதைகள். இதை விட யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் அடிக்கடி இந்த பேய் கதைகள் கேட்டு உள்ளேன்.

வீட்டிலிருந்து பிணத்தைச் சுடுகாட்டுக்குத் தூக்கிட்டுப் போகும்பொழுது வழிமுழுக்கப் பூக்கள் சிதறிக் கிடக்கும். அவற்றை மிதித்தால் கூடப் பேய்கள் பிடித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையும் இருந்தது. இறுதி ஊர்வலத்தில் வழிமுழுக்கக் கடுகைத் தூவிக்கிட்டே வரணும். அப்பத்தான் சுடுகாட்டில் இருந்து வீட்டுக்குப் பேயாக வர்ற ஆவி, ஒவ்வொரு கடுகாகப் பொறுக்கிவிட்டு வருவதற்குள் பொழுது விடிச்சிடும்; பேயும் பொழுதானால் ஓடிப் போயிடும். சுடுகாட்டில் இருந்து திரும்ப வருகிற ஆட்கள் வாசலில் கிடத்தப்பட்டிருக்கும் உலக்கையைத் தாண்டித்தான் வீட்டுக்குள்ள வரவேண்டும். இல்லாவிடில் பேயும் வீட்டுக்குள்ளே வந்துவிடும்.


விதம் விதமான செதுக்கல்கள்

இருந்தாலும் நம்மில் பலருக்கு பேய் நம்பிக்கை இருக்கின்றது என்பதற்கு ஒரு சில சான்றுகள்

-தாயத்துக்கட்டுதல், விபூதி பூசுதல்( தூங்கும் போது விசேடமாக), சிலுவை அணிதல், வாசலில் எலுமிச்சை-காய்ந்தமிளகாய் -உப்பு கட்டுதல், சாந்தி செய்தல்

- இதை விட பிரமாதம் நாடெங்கும் தோன்றியுள்ள சுவாமிகள் மார் (எந்த மதத்துக்கும் பொருந்தும் ) -- ( பெயரை குறிப்பிடாமல்) பேயை விரட்டுகின்றேன், ஆவியை ஓட்டுகின்றேன் என்று ஒருபக்கத்தில் வேறு…இதற்கு எடுக்கும் பணமோ ரொம்ப அதிகம் (10 000/--20000/-)

இப்படியெல்லாம் இருக்க இவர்கள் ஏன் பேயுடன் விளையாடுகின்றனர்? நாம் பேயை விரட்ட படாத பாடுபட்டுக்கொண்டிருக்கும் போது, இவர்கள் பேயை பிடித்து வீட்டில் வைத்து கொண்டாடுகின்றனர்!???

எனக்கும் ஒரு நாள் ஆசை அவரை / அவவை பார்க்க ... விளைவுகள் என்னாகுமோ..

சரி பேயை பார்த்தவர்கள் / பேய் நம்பிக்கை இருப்பின் இந்த கேள்விகளுக்கு விடை தாங்க..

1- எப்புடி பார்த்தீங்க , கதைதீங்களா, என்ன உருவம், அழகானதா( நம்ம நடிகைகளை விடவா ?) , காலை பார்த்தீர்களா?
2- என்ன காரணம் பேய்கள் குளியலறை , சமையலறை, கிணற்றடி , புளியமரம் போன்ற இடங்களுக்கு தான் வருமா.. ஏன் கட்டில் , படுக்கை அறை, இருக்கை அறை , இடங்களுக்கு வாறதில்லை.


சின்ன புள்ள தனமாய் கேட்க வில்லை .. உண்மையா ஒரு ஆர்வத்தில்தான்....

பேய்கள் பற்றி எழுதிய வலைப்பதிவுகள்

  1. http://loshan-loshan.blogspot.com/2009/03/blog-post_05.html
  2. பேய்களும், பேயர்களும், பேய்க்காட்டுதல்களும் http://chummaah.blogspot.com/2009/07/blog-post_08.html
  3. பேய்களும், பேயர்களும், பேய்க்காட்டுதல்களும் II http://chummaah.blogspot.com/2009/07/ii.html

Hollywood திரை படங்களில் சூப்பர் கிட் ஆன படங்கள் ;
1-Drag Me to Hell -2009
2-Evil Dead- 1987
ஒரு முறை பாருங்கள் .. சவுண்ட் system நல்லா இருந்தா தூள் பறக்கும்.. இந்த இரண்டு படங்களையும் Sam Raimi என்ற பிரபல்யமான இயக்குனர் (Spider Man I, II,III) இயக்கி இருக்கின்றார்.

Drag Me to Hell -2009- Trailer...

எனக்கு தெரிந்த அளவில் தமிழ் திரை யில் ஆங்கில படங்கள் போன்ற விறு விறுப்பான பேய் அம்சமான படங்கள் இல்லை , இருந்தாலும் ரஜனியின் சந்திரமுகி கொஞ்சம் விறு விறுப்பாக இருக்கும்.


பேய் இருக்கா இல்லையா - சந்திரமுகி காமெடி



ரா ரா பாடல்


நண்பி சொல்லுறா எங்கட நடிகைகளை முகத்துக்கு cream போடாமல் நடிக்க விட்டா பேயையும் பார்த்தா இருக்குமாம் .. காமெடியாவும் இருக்குமாம்..
இன்னொருத்தி சொல்லுறா நீங்க வீட்லையே பேயை பார்க்கலாமே; எப்புடி .. அதுதான் உங்க மனைவிக்கு சொல்லுங்க இன்றைக்கு என்னால சமைக்க , தோய்க்க , கடைக்கு போக ஏலாது என்று .........:) ஆஹா அப்புறம் நான் ஓவர் டைம் வேலை செய்து குசினி பாத்திரங்கள் எல்லாம் வாங்கணும் .. ஹா .,..:)

இதையும் ஒருக்கா...


Related Posts Plugin for WordPress, Blogger...