அன்புள்ள ரஜினிகாந்த் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. நடராஜ்( இலங்கை மன்னாரைச் சேர்ந்த "சிலோன்" நடராஜன் - திருட்டு பயலே படத்திலே விவேக் கூட ஒரு காமெடி இல உங்களுக்கு சிலோன் நடராசனை தெரியுமோ என்று கேட்டது போல இருக்கு ) இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் மீனா பின்னாளில் ரஜனிகாந்துடன் ஜோடியாக "வீரா", "எஜமான்" "முத்து" இலும் , ரஜனியின் "குசேலன்" படத்திலும் நடித்திருக்கிறார்.
தீவிர ரஜனி ரசிகன் நான் என்பது என்னுடன் பழகிய நண்பர்களுக்கு தெரியும். ( இது பற்றி பிறகு பதிவில் எழுதுகிறேன்) ஆனாலும் குறை நிறைகளையும் கதைத்து நியாயங்களை ஏற்று கொள்ளும் அளவுக்கு நான் ரஜனி ரசிகன். இப்போ சிலர் ( விடலை பசங்கள் எல்லாம் விரலை தூக்கி, கோலரில வாயை வைக்கிறது எல்லாம் ரஜனி எப்பவோ செய்து விட்டார் அதாவது இருபது வருசத்துக்கு முன்னரே - கண்ணா புதுசா ட்ரை பண்ணுங்க எதாவது அப்போதான் சமுதாயம் உங்களையும் ஏற்று கொள்ளும் -நான் சொல்லல சிவாஜி படத்தில் விவேக் சொன்னது ) தாங்கள் தான் அடுத்த சுப்பர் ஸ்டார் என்று லொள்ளு பண்ணுவது எல்லாம் முடியலப்பா. என்ன செய்யுறது புலம்பிட்டு போகட்டும்.
சரி விஷயத்துக்கு வருவோம் இந்த படத்தில் தான் லதா ரஜனிகாந்த் முதல்முதலாக பின்னணி பாடினார். பாடல் - "கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே".
ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்தாகவே வருகிறார்.
அன்றைய காலங்களில் ரஜனியின் எளிமையான நடிப்பு இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் செதுக்கப்பட்டுள்ளது.
எனக்கு இந்த படத்தில் வந்த இரண்டு பாடல்கள் என்றுமே பிடிக்கும்
1- தேன் பூவே பூவே வா தென்றல் தேட
2-கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே
இரண்டையும் கேட்டு பாருங்கள் மனம் உருகி போடுவீர்கள்.. ராஜா தனது இசையால் பட்டி தொட்டி எல்லாம் போட்டு தாக்கி உள்ளார்.
1-தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பனி விழும் புல்வெளியில் தினம்தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்
(உனை நினைத்தேன்)
இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்
(உனை நினைத்தேன்)
2-கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே
பெ: கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே(2)
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை
குழு: தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை
(கடவுள்)
பெ: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா
குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும்
இறைவா என் இறைவா
பெ: ஜீவன் யாரும் ஒன்று
இங்கு யாரும் சொந்தமே
குழு: ஜீவன் யாரும் ஒன்று
இங்கு யாரும் சொந்தமே
பெ: இது தான் இயற்கை
தந்த பாசபந்தமே
(கடவுள்)
பெ: கண்ணிழந்த பிள்ளை
ஆனால் உன்னை
கண்ணீருக்கும் பேர்கள்
கண்டது இல்லை
ஊருக்கொரு வானம் இல்லையே
இறைவா உன் படைப்பில்
குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே
அது போல் உயிர் பிறப்பில்
பெ: உண்ணும் உணவும் நீரும்
தினம் தந்த தெய்வமே
குழு: உண்ணும் உணவும் நீரும்
தினம் தந்த தெய்வமே
பெ: என்றும் உனக்கே நாம் நன்றி சொல்லுவோம்
(கடவுள்)
முத்து மணி சுடரே வா கூட பிடிக்கும் ; இருந்தாலும் இவையிரண்டும் மேவி விட்டன. பாட்டு சுப்பர் இருந்தாலும் ஒழுங்கு வரிசையில் மூன்றாம் இடம் !!! ஜேசுதாஸ் ஐயா பாடி கலக்கி இருக்கார் !!!1
பாடியவர்: K.J. யேசுதாஸ்
ரஜினி அங்கிள்............
முத்து மணி சுடரே வா...
முல்லை மலர் சரமே வா...
முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே...
கண்ணே என் பொண்ணே தாலேலோ
[முத்து மணி...]
ம்ஹ்ஹூஊம் நான் தூன்க மாட்டேன்...
அங்கிள் நான் ஒளிஞ்சுக்கிறேன்.. என்ன புடிங்க பாக்கலாம்
ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே...
ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே...
அழகாய் நாள் தோறும்
புதுமை கொண்டாடும்
மலரே நீ பேசு...அவளைக் கண்டாயோ...
தானாக தள்ளாடும் பூவண்ணமே...
தானாக தள்ளாடும் பூவண்ணமே...
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்...
ரஜினி அங்கிள்...நான் இங்க இருக்கேன்...இங்க...இங்க...
முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே...
கண்ணே என் பொண்ணே தாலேலோ
காற்றினில் தேர் போல ஓடிடும் மானே...
தன் வழி போனாளே...கனிமொழி எங்கே...
அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு
தனியே பார்த்தாயோ...அவளும் வந்தாளோ...
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி...
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி...
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒளிந்த பதுமை நேரில் வந்தது...
[முத்து மணி...]
நம்முடைய வறு வல்களும் ; சிந்தனைகள் , மனதில செய்ய நினைத்தவை , செய்தவை ,நல்லதாக பார்த்து சுட்டவை ,சுடாமல் சொந்தமாய் தயாரிச்ச தலைப்புக்கள் என்று ஒரு மொக்கை போடும் இடம்
2009-10-06
இலை உதிர் காலமும் ஆரம்பிச்சிட்டுது.
ஐரோப்பாவில் எனக்கு பிடித்த ஒரு அம்சம் நான்கு காலங்களிலும் ஏற்படும் உணரத்தக்க, இரசிக்கத்தக்க சூழ்நிலை மாற்றங்கள்.
அதிலும் குளிர்காலத்துக்கு முந்தைய இலைஉதிர்காலத்தில் மரங்கள் காட்டும் வண்ண ஜாலங்கள் அருமையிலும் அருமை. பச்சை பசலேன இருந்தவை திடீர் என்று தங்கள் நிறங்களை மாற்றி கொள்ளுவது மட்டும் இல்லை, குப்பை கொட்டி எங்கும் சருகும் குச்சியுமாக இருக்கும் காட்சி கூட ஒரு அழகு.( எங்கள் வீடு பலா கொட்டின குப்பை பரவாய் இல்லை) எவ்வளவு துப்பரவு செய்தாலும் திரும்ப கொட்டி கொட்டி கொண்டு இருக்கும். இதுக்குள்ள காத்து வேற. குளிரும் கூட. சில்லென்று இருக்கும் ஒருக்கா நடந்து திரிந்தா. மழை கூட அடிக்கடி பெய்து சங்கடத்துக்குள் இட்டு செல்லும். எல்லாம் ஒரு காலநிலை மாற்றம் தான்.
இருந்தாலும் அழகை ரசிக்கும் எங்களை போன்ற இளம் வாலிபர்களுக்கு புகைப்படம் எடுத்து hard disk ஐ நிரப்புவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை
சரி வங்க ஒன்றிரண்டு தொகுப்பை பார்த்து விட்டு செல்லுங்கள்.
பெரிசா போடுவதற்கு என்னும் காலம் இருக்கு









இந்த சருகுகளால் நிரம்பி கிடக்கும் வீதிகளை, பொது இடங்களை துப்பரவு செய்யும் வாகனங்களும் அதுக்குள்ள மும்முரமாய் சேவையில் ஈடுபடும்.
அதிலும் குளிர்காலத்துக்கு முந்தைய இலைஉதிர்காலத்தில் மரங்கள் காட்டும் வண்ண ஜாலங்கள் அருமையிலும் அருமை. பச்சை பசலேன இருந்தவை திடீர் என்று தங்கள் நிறங்களை மாற்றி கொள்ளுவது மட்டும் இல்லை, குப்பை கொட்டி எங்கும் சருகும் குச்சியுமாக இருக்கும் காட்சி கூட ஒரு அழகு.( எங்கள் வீடு பலா கொட்டின குப்பை பரவாய் இல்லை) எவ்வளவு துப்பரவு செய்தாலும் திரும்ப கொட்டி கொட்டி கொண்டு இருக்கும். இதுக்குள்ள காத்து வேற. குளிரும் கூட. சில்லென்று இருக்கும் ஒருக்கா நடந்து திரிந்தா. மழை கூட அடிக்கடி பெய்து சங்கடத்துக்குள் இட்டு செல்லும். எல்லாம் ஒரு காலநிலை மாற்றம் தான்.
இருந்தாலும் அழகை ரசிக்கும் எங்களை போன்ற இளம் வாலிபர்களுக்கு புகைப்படம் எடுத்து hard disk ஐ நிரப்புவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை
சரி வங்க ஒன்றிரண்டு தொகுப்பை பார்த்து விட்டு செல்லுங்கள்.
பெரிசா போடுவதற்கு என்னும் காலம் இருக்கு



இந்த சருகுகளால் நிரம்பி கிடக்கும் வீதிகளை, பொது இடங்களை துப்பரவு செய்யும் வாகனங்களும் அதுக்குள்ள மும்முரமாய் சேவையில் ஈடுபடும்.
இள மனது பல கனவு - செல்வி
யாரும் அடிச்சு பிடிச்சு இது எந்த செல்வி ??? என்று பார்க்காதீங்க. நான் சொன்ன செல்வி படத்தின் பெயர் . வேற எதுவும் இல்ல.
சிலர் இந்த சீரியல் செல்வியோ ( நம்மளுக்கும் உந்த சீரியலுக்கும் ஆகாது பாருங்கோ , இதுவரை எந்த சீரியலும் பார்த்தும் இல்லை, பார்க்க போறதும் இல்லை ) இல்லாட்டி போனால் நம்மட காதலி செல்வியோ இல்ல யாரோ ஒரு பொண்ணு செல்வி என்றோ நினைத்தால் வருத்தம் தெரிவிக்கின்றேன்.
இந்த பாடல் யாழ் இல் உள்ள ஒரு பிரபல்ய குளிர்களி கடையில் (கல்யாணி - பெயரே பிரபல்யம் - பிறகு குளிர்களி , ரோல்ஸ் பிரபல்யமாய் இருக்காதா ??) உயர்தரம் வகுப்புகளுக்கு இடையிலான ( science hall தனியார் கல்வி நிறுவனத்தில் பயிலும் போது) இடைவேளையின் போது உணவருந்தி வர சென்ற போது முதல் முதல் நான் கேட்டேன்.
அந்த நேரம் கேட்டது ( நான் இருந்த மன நிலை நல்லது - வகுப்பில நல்ல குளிர்மையாக பார்த்து போட்டு தானே வந்தது ) என்னமோ என்னை ஒரு கற்பனை உலகத்துக்கு இட்டு சென்று விட்டது , பிறகு யாரோட என்று எல்லாம் கேட்க வேணாம். யாரும் உயர்தரம் 97 இல் பிரபல்யமானவர்கள் யாருடனும் என்று வைச்சு கொள்ளுவம். ஆஹா !!!
உண்மையில் அடுத்த கணமே சூப்பர் ஷோ ரெகார்டிங் பார் சென்று பாட்டை சொல்லி அடிச்சு கொண்டு வந்து வீட்டில் பல தடவை கேட்டு ரசித்தேன். எனது ஹிட் லிஸ்ட் இல் உள்ள இந்த பாடலை நீங்களும் கேளுங்கள்.
ஆகா இப்படி ஒரு கற்பனை என்ன கொடுமை இது . நாயை வைத்தே ஒரு டூயட் பாடல். அந்த காலத்தில் இருந்த வசதிகளை கொண்டு அமைய பெற்ற பாடலை பாலா வும் ஜானகி அம்மாவும் அனுபவித்தே பாடியுள்ளார்கள் போலும்.
ராஜா வும் போட்டு தாக்கி உள்ளார் !!!
பாடல்: இள மனது பல கனவு
திரைப்படம்: செல்வி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
கொடியிடை நாணத்தில் நெளிகிறதோ
கனிகளின் பாரத்தில் வளைகிறதோ
மனமொரு மோகத்தில் விழுகிறதோ
மருவிடும் ஆசைகள் வருகிறதோ
விரல் பட்டு இளமொட்டு விரியட்டுமே
வெட்கம் விலகட்டும் விலகட்டுமே
இரு கண்ணும் இரு கையும் இள நெஞ்சமும்
அன்பை எழுதட்டும் எழுதட்டுமே
புது மலரை முதன் முதலாய் தொடுவதினால் சுடுகிறதோ
புது மலரை முதன் முதலாய் தொடுவதினால் சுடுகிறதே
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
அழகிய வாசல்கள் திறந்திடுமோ
அதிலொரு ஆனந்தம் பிறந்திடுமோ
தலையணை வேதங்கள் விளங்கிடுமோ
தொடங்கிய ராகங்கள் தொடர்ந்திடுமோ
இளமைக்குள் விளைகின்ற எழில் வண்ணமே
இங்கு மலரட்டும் மலரட்டுமே
தனிமைக்குள் எழுகின்ற துயர் வெள்ளமே
இன்று வடியட்டும் வடியட்டுமே
புது உலகம் அதிசயமாய் விழிகளிலே விரிகிறதோ
புது உலகம் அதிசயமாய் விழிகளிலே விரிகிறது
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
சிலர் இந்த சீரியல் செல்வியோ ( நம்மளுக்கும் உந்த சீரியலுக்கும் ஆகாது பாருங்கோ , இதுவரை எந்த சீரியலும் பார்த்தும் இல்லை, பார்க்க போறதும் இல்லை ) இல்லாட்டி போனால் நம்மட காதலி செல்வியோ இல்ல யாரோ ஒரு பொண்ணு செல்வி என்றோ நினைத்தால் வருத்தம் தெரிவிக்கின்றேன்.
இந்த பாடல் யாழ் இல் உள்ள ஒரு பிரபல்ய குளிர்களி கடையில் (கல்யாணி - பெயரே பிரபல்யம் - பிறகு குளிர்களி , ரோல்ஸ் பிரபல்யமாய் இருக்காதா ??) உயர்தரம் வகுப்புகளுக்கு இடையிலான ( science hall தனியார் கல்வி நிறுவனத்தில் பயிலும் போது) இடைவேளையின் போது உணவருந்தி வர சென்ற போது முதல் முதல் நான் கேட்டேன்.
அந்த நேரம் கேட்டது ( நான் இருந்த மன நிலை நல்லது - வகுப்பில நல்ல குளிர்மையாக பார்த்து போட்டு தானே வந்தது ) என்னமோ என்னை ஒரு கற்பனை உலகத்துக்கு இட்டு சென்று விட்டது , பிறகு யாரோட என்று எல்லாம் கேட்க வேணாம். யாரும் உயர்தரம் 97 இல் பிரபல்யமானவர்கள் யாருடனும் என்று வைச்சு கொள்ளுவம். ஆஹா !!!
உண்மையில் அடுத்த கணமே சூப்பர் ஷோ ரெகார்டிங் பார் சென்று பாட்டை சொல்லி அடிச்சு கொண்டு வந்து வீட்டில் பல தடவை கேட்டு ரசித்தேன். எனது ஹிட் லிஸ்ட் இல் உள்ள இந்த பாடலை நீங்களும் கேளுங்கள்.
ஆகா இப்படி ஒரு கற்பனை என்ன கொடுமை இது . நாயை வைத்தே ஒரு டூயட் பாடல். அந்த காலத்தில் இருந்த வசதிகளை கொண்டு அமைய பெற்ற பாடலை பாலா வும் ஜானகி அம்மாவும் அனுபவித்தே பாடியுள்ளார்கள் போலும்.
ராஜா வும் போட்டு தாக்கி உள்ளார் !!!
பாடல்: இள மனது பல கனவு
திரைப்படம்: செல்வி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
கொடியிடை நாணத்தில் நெளிகிறதோ
கனிகளின் பாரத்தில் வளைகிறதோ
மனமொரு மோகத்தில் விழுகிறதோ
மருவிடும் ஆசைகள் வருகிறதோ
விரல் பட்டு இளமொட்டு விரியட்டுமே
வெட்கம் விலகட்டும் விலகட்டுமே
இரு கண்ணும் இரு கையும் இள நெஞ்சமும்
அன்பை எழுதட்டும் எழுதட்டுமே
புது மலரை முதன் முதலாய் தொடுவதினால் சுடுகிறதோ
புது மலரை முதன் முதலாய் தொடுவதினால் சுடுகிறதே
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
அழகிய வாசல்கள் திறந்திடுமோ
அதிலொரு ஆனந்தம் பிறந்திடுமோ
தலையணை வேதங்கள் விளங்கிடுமோ
தொடங்கிய ராகங்கள் தொடர்ந்திடுமோ
இளமைக்குள் விளைகின்ற எழில் வண்ணமே
இங்கு மலரட்டும் மலரட்டுமே
தனிமைக்குள் எழுகின்ற துயர் வெள்ளமே
இன்று வடியட்டும் வடியட்டுமே
புது உலகம் அதிசயமாய் விழிகளிலே விரிகிறதோ
புது உலகம் அதிசயமாய் விழிகளிலே விரிகிறது
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
2009-10-05
ஆசிரியர்கள் தினம்-மீட்கும் நினைவுகள்
செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம். மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.
'எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.
இந்த ஆசிரியர்களின் அருமையை அவனிக்கு புலப்படுத்தும் நோக்கில்தான் ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது.
முன்னர் ஒரு காலத்தில் எனது கல்லூரியில் ஆசிரியர் தினம் கல்லூரி மண்டபத்தில் பெரிய எடுப்பில் நடை பெறும். அங்கே தங்கள் தங்கள் விருப்பமான ஆசிரியர்களுக்கு மாணவர்கள் ஒழுங்கு வரிசையில் நின்று சென்று மாலை அணிவித்து வாழ்த்துவார்கள்.
எனக்கு தெரிந்த வகையில் நான் ஆண்டு ஒன்பது தொடக்கம் ஆண்டு பன்னிரண்டு வரை ஒரு சில ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து , அவர்கள் திருப்பாதம் வீழ்ந்து வணங்கி உள்ளேன்.
ஆண்டு 9 - சா வே . பஞ்சாட்சரம் - சமயம் / தமிழ்
ஆண்டு 10- சா வே . பஞ்சாட்சரம் - சமயம்
ஆண்டு 11 -சா வே . பஞ்சாட்சரம் - சமயம்
ஆண்டு 12- திரு இலட்சுமணபிள்ளை - தூய கணிதம் , வகுப்பு ஆசான்.
இவர்கள் எனது கல்லூரி வரலாற்றில் பெரிய திருப்பங்களுக்கு உரிய ஆசான்கள்.
சா வே ஆசானிடம் முறையாக தமிழ் மற்றும் சமயம் படித்த காரணம் தான் இன்றும் என்னை சமய ரீதியாகவும் தமிழ் ரீதியாகவும் ஈடு பட செய்தது என்று சொல்லலாம்.
இவர்களை விட எனக்கு பாடம் படிப்பித்த சகல ஆசான்களும் திருப்பு முனைக்கு காரணம் தான் . உள்ளடக்கம் ( எனது தாயாரும்)
!!!வாழ்த்துக்கள் எல்லா ஆசிரியர்களுக்கும் !!!
இதைவிட கொடுமை என்ன என்றால் பாடசாலையில் தான் இப்படி என்றால் மாலை நேரங்களில் கல்வி நிலையங்களிலும் குசும்பு தான்.
ஆசான்களை இதே சாட்டில் வைச்சு கடிச்சு( உண்மையாகவே கடிக்கிறது இல்லை ) துவைச்சு எடுப்பது ஒரு வழமையான காரியம்!!!
இதற்கிடையில் ஆசான் மாருக்கு எங்கட பொம்பிளை பிள்ளைகள் வைச்ச பேர்களை பற்றி ஒரு முறை யாரோ பின்னல் இருந்து சவுண்ட் குடுக்க அதுக்கு அப்புறம் என்ன ஒரு கூ தான். பிறகு என்ன எல்லா பெயர்களும் வெளியில வந்து ஒரு மாதிரி ஆசான்களை நோண்டியடிக்கும் பம்பலும் நினைவில் நின்ற சம்பவங்கள்.
பல்கலை வாழ்க்கையில் எனக்கு தெரிந்த அளவில் ஓரிரு தடவைகள் எல்லா பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், உபவேந்தர் போன்றோர் ஒரு வரிசையில் நிக்க மாணவர்கள் வரிசயில் சென்று வெத்திலை குடுத்து அவர்களின் காலில் வீழ்ந்து வணங்கி வந்த சம்பவங்கள் ஞாபகம் இருக்கு.
நான் விரிவுரியாளர் ஆக பணி புரியும் காலத்தில் நாங்களும் வரிசயில் நிக்க எங்கள் மாணவர்கள் வந்து எங்களிடம் ஆசிர்வாதம் பெற்று செல்லும் போதுதான் எனக்கு இந்த "குரு" வின் மகிமை விளங்கினது. எவ்வளவு புனித மானது என்று.
ஆசிரியர்களுக்கு :-
ஆசிரியர்கள் இளைஞர்களுக்கு நல்ல முன்மாதிரியாக திகழ்ந்து பண்பாடு மற்றும் நாகரீகத்தின் அடிப்படைகளாக விளங்க வேண்டும்.
மீண்டும் ஒரு முறை ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !!!
'எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.
இந்த ஆசிரியர்களின் அருமையை அவனிக்கு புலப்படுத்தும் நோக்கில்தான் ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது.
முன்னர் ஒரு காலத்தில் எனது கல்லூரியில் ஆசிரியர் தினம் கல்லூரி மண்டபத்தில் பெரிய எடுப்பில் நடை பெறும். அங்கே தங்கள் தங்கள் விருப்பமான ஆசிரியர்களுக்கு மாணவர்கள் ஒழுங்கு வரிசையில் நின்று சென்று மாலை அணிவித்து வாழ்த்துவார்கள்.
எனக்கு தெரிந்த வகையில் நான் ஆண்டு ஒன்பது தொடக்கம் ஆண்டு பன்னிரண்டு வரை ஒரு சில ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து , அவர்கள் திருப்பாதம் வீழ்ந்து வணங்கி உள்ளேன்.
ஆண்டு 9 - சா வே . பஞ்சாட்சரம் - சமயம் / தமிழ்
ஆண்டு 10- சா வே . பஞ்சாட்சரம் - சமயம்
ஆண்டு 11 -சா வே . பஞ்சாட்சரம் - சமயம்
ஆண்டு 12- திரு இலட்சுமணபிள்ளை - தூய கணிதம் , வகுப்பு ஆசான்.
இவர்கள் எனது கல்லூரி வரலாற்றில் பெரிய திருப்பங்களுக்கு உரிய ஆசான்கள்.
சா வே ஆசானிடம் முறையாக தமிழ் மற்றும் சமயம் படித்த காரணம் தான் இன்றும் என்னை சமய ரீதியாகவும் தமிழ் ரீதியாகவும் ஈடு பட செய்தது என்று சொல்லலாம்.
இவர்களை விட எனக்கு பாடம் படிப்பித்த சகல ஆசான்களும் திருப்பு முனைக்கு காரணம் தான் . உள்ளடக்கம் ( எனது தாயாரும்)
!!!வாழ்த்துக்கள் எல்லா ஆசிரியர்களுக்கும் !!!
இதைவிட கொடுமை என்ன என்றால் பாடசாலையில் தான் இப்படி என்றால் மாலை நேரங்களில் கல்வி நிலையங்களிலும் குசும்பு தான்.
ஆசான்களை இதே சாட்டில் வைச்சு கடிச்சு( உண்மையாகவே கடிக்கிறது இல்லை ) துவைச்சு எடுப்பது ஒரு வழமையான காரியம்!!!
இதற்கிடையில் ஆசான் மாருக்கு எங்கட பொம்பிளை பிள்ளைகள் வைச்ச பேர்களை பற்றி ஒரு முறை யாரோ பின்னல் இருந்து சவுண்ட் குடுக்க அதுக்கு அப்புறம் என்ன ஒரு கூ தான். பிறகு என்ன எல்லா பெயர்களும் வெளியில வந்து ஒரு மாதிரி ஆசான்களை நோண்டியடிக்கும் பம்பலும் நினைவில் நின்ற சம்பவங்கள்.
பல்கலை வாழ்க்கையில் எனக்கு தெரிந்த அளவில் ஓரிரு தடவைகள் எல்லா பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், உபவேந்தர் போன்றோர் ஒரு வரிசையில் நிக்க மாணவர்கள் வரிசயில் சென்று வெத்திலை குடுத்து அவர்களின் காலில் வீழ்ந்து வணங்கி வந்த சம்பவங்கள் ஞாபகம் இருக்கு.
நான் விரிவுரியாளர் ஆக பணி புரியும் காலத்தில் நாங்களும் வரிசயில் நிக்க எங்கள் மாணவர்கள் வந்து எங்களிடம் ஆசிர்வாதம் பெற்று செல்லும் போதுதான் எனக்கு இந்த "குரு" வின் மகிமை விளங்கினது. எவ்வளவு புனித மானது என்று.
ஆசிரியர்களுக்கு :-
ஆசிரியர்கள் இளைஞர்களுக்கு நல்ல முன்மாதிரியாக திகழ்ந்து பண்பாடு மற்றும் நாகரீகத்தின் அடிப்படைகளாக விளங்க வேண்டும்.
மீண்டும் ஒரு முறை ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !!!
2009-10-04
கண்ணனே நீ வர காத்திருந்தேன்!!!
என்றுமே மறக்க முடியாத இந்த பாடல்1988 இல் நடந்த எனது சின்னம்மாவின் திருமண வைபவத்தில் அமரர் அளவையூர் நாதஸ்வர வித்துவான் N.K. பத்மநாதன், சுந்தர மூர்த்தி & புண்ணியமூர்த்தி குழுவினர் எங்கள் சுன்னாகம் வீட்டில் வைத்து சேவகத்தில் பிளந்து கட்டி இருந்தார்கள். அன்றே இருந்து எனக்கு இந்த பாடல் மீது அப்படி ஒரு ஆசை. என்னமோ தெரியல சின்ன வயசில் பிடிச்ச ஆசை சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களிலும் கேட்டு ரசிப்பேன். ஒருக்கா நீங்களும் ரசித்து பாருங்களேன். பிடிக்க என்னுமொரு ஆசை ஜேசுதாஸ் ஐயாவும் உமா ரமணனும் பாடியதுவும் தான்.
நேரம் இருந்தால் படத்தையும் பாருங்கள் மோகனின் சூப்பர் 25 படங்களில் இதுவும் ஒன்று!!!
படம் : தென்றலே என்னை தொடு
குரல் : ஜேசுதாஸ், உமா ரமணன்
இசை : இளையராஜா
கண்ணனே நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப்பகல்...கண்ணிமையில்...
உன்னருகே...ஹே
கண்மணி நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா
நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா
கள்ளிருக்கும்...பூவிது பூவிது
கையணைக்கும்...நாளிது நாளிது
பொன்னென மேனியில்...மின்னிட மின்னிட
மெல்லிய நூலிடை...பின்னிட பின்னிட
வாடையில் வாடிய...ஆடையில் மூடிய தேன்...நான்
கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பொன்னழகே...பூவழகே...என்னருகே...ஹே
கண்ணனே நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
பெண் மயங்கும்...நீ தொட நீ தொட
கண் மயங்கும்...நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம்...பொங்கிட பொங்கிட
அங்கங்கள் யாவிலும்...தங்கிட தங்கிட
தோள்களில் சாய்ந்திட...தோகையை ஏந்திட யார்...நீ
கண்ணனே நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
அந்திப்பகல்...கண்ணிமையில்...உன்னருகே...ஹே
கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
நேரம் இருந்தால் படத்தையும் பாருங்கள் மோகனின் சூப்பர் 25 படங்களில் இதுவும் ஒன்று!!!
படம் : தென்றலே என்னை தொடு
குரல் : ஜேசுதாஸ், உமா ரமணன்
இசை : இளையராஜா
கண்ணனே நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப்பகல்...கண்ணிமையில்...
உன்னருகே...ஹே
கண்மணி நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா
நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா
கள்ளிருக்கும்...பூவிது பூவிது
கையணைக்கும்...நாளிது நாளிது
பொன்னென மேனியில்...மின்னிட மின்னிட
மெல்லிய நூலிடை...பின்னிட பின்னிட
வாடையில் வாடிய...ஆடையில் மூடிய தேன்...நான்
கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பொன்னழகே...பூவழகே...என்னருகே...ஹே
கண்ணனே நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
பெண் மயங்கும்...நீ தொட நீ தொட
கண் மயங்கும்...நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம்...பொங்கிட பொங்கிட
அங்கங்கள் யாவிலும்...தங்கிட தங்கிட
தோள்களில் சாய்ந்திட...தோகையை ஏந்திட யார்...நீ
கண்ணனே நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
அந்திப்பகல்...கண்ணிமையில்...உன்னருகே...ஹே
கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
2009-10-02
இறுதியில் வென்றது-Brazil (Rio)- ஒலிம்பிக்ஸ்- 2016 ஐ நடத்துவதற்கு!!!
வளர்ந்து வரும் நாடான Brazil (Rio)இறுதியில் வென்றது ஒலிம்பிக்ஸ் 2016 இல் நடத்துவதற்கு!!!!
!!!போட்டியிட்ட நகரங்களும் - நாடுகளும் !!!
http://en.wikipedia.org/wiki/2016_Summer_Olympics
!!!நகரம் பற்றிய தகவல்கள் !!!
http://www.time.com/time/world/article/0,8599,1926094,00.html
மேலதிக தகவல்கள் விரைவில் !!!!
!!!போட்டியிட்ட நகரங்களும் - நாடுகளும் !!!
http://en.wikipedia.org/wiki/2016_Summer_Olympics
!!!நகரம் பற்றிய தகவல்கள் !!!
http://www.time.com/time/world/article/0,8599,1926094,00.html
மேலதிக தகவல்கள் விரைவில் !!!!
2009-10-01
வத்திக்கான் பயணமும் அனுபவங்களும்
ஆசைகள் பல விதம். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு ஆசை. அந்த வகையில் எனக்கும் ஒரு சில ஆசைகள். அதில் ஒன்று தான். வத்திக்கான் செல்வது.
இந்த ஆசை எனக்கு வரக்காரணம், முன்னர் நடந்த சம்பவம் ஒன்றுதான்.
1994 இல் ஏற்பட்ட சமாதான காலத்தில். கிளாலி ஊடாக பயணம் செய்து சாதாரண தரம் முடிந்த காலத்தில் ( டிசம்பர் பிற்பகுதியும் ஜனவரி , மாசி நடுப்பகுதியும் உள்ளடக்கம் ) அம்மாவுடன் நாங்கள் கொழும்பில் தங்கி இருந்தோம். அப்போது அம்மாவுக்கு இடம் மாற்றம் கிடைத்தது. ஆனாலும் செயற்படுத்த முடியாத காரணத்தால் அதனை பின் தள்ளி போட வந்து ஏற்பட்ட தடங்களால் நீண்ட காலம் கொழும்பில் செலவிட வேண்டி வந்தது.
இத கால கட்டத்தில், கொழும்பில் தாராளமாக உலாவலாம். எதுவும் பிரச்சினை இல்லை. போலீஸ் பதிவு கூட இல்லை.
அந்த காலத்தில் இன்றும் ஞாபகம் இருகின்றது, வெள்ளவத்தையில் காலி விதிக்கு குறுக்காக மேலாக பாதையை கடக்கும் இரண்டு பாலங்கள்( மேம் பாலங்கள் கிடந்தது).
தை மாசம் பிறந்த நேரம் கொழும்பே களை கட்டினது. காரணம் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் (Pope John Paul II )கொழும்பு வாராராம்.[1] அவர் அருள் கிடைக்க எல்லாரும் வரட்டுமாம் என்று நாங்களும் ஒரு மாதிரி Galle Face வந்து சேர்ந்தோம். என்ன சனம். ஆங்காங்கே இலங்கை போலீசார் கடமையில். நீண்ட நேரம் அவர் அருள் பாலித்து விட்டு சென்றார்.
அப்போது தான் நானும் இந்த அருளப்பர் யார் என்று ஆராய்ந்த போது கத்தோலிக்க சமயம் பற்றிய அறிவு சாடையாக ( எனது சமயம் பற்றியே சரியாய் தெரியாது இது வேற கதை) தெரிந்தது. அப்போது சொன்னார்கள் இந்தியா இலங்கையில் இருக்கின்ற சமயம் பரப்பும் இந்து குருமார்கள், குரவர்கள், ஆலயங்கள் போல இத்தாலியில் உள்ள ரோம் நகரில் உள்ள வத்திக்கானும்[2][3][4] ஒரு பெரிய சமய சம்மந்த மான இடம். சென்று வாருங்கள் கிடைத்தால் என்று. அங்கு போவது என்றால் எப்படி.
கனவில் இதை எல்லாம் சுமந்த படி ( இதை விட என்னும் பல பல ... ) வாழ்கையை ஓட்டி கொண்டு இருக்கும் போதுதான், உயர் கல்வி படிக்க ஐரோப்பா பயணம் கிடைத்தது. கிடைத்தவுடன் போட்ட திட்டங்கள் பல.
அதில் சில
* வத்திக்கான் செல்வது
* Venice செல்வது- (ஆண்டு எட்டில் Anne & Padmini discussion செய்தவை இப்பவும் ஞாப்கம் இருக்கு. ஒன்று சொல்ல வேணும், இப்போ அந்த Anne & Padmini எல்லாம் எடுத்து போட்டினமாம். நியூ syllabus இப்போ )
* Pizza செல்வது - ஜீன்ஸ் படம் தான் என்னை உசுப்பேத்தியது
* Eiffel Tower உச்சிக்கு ஏறுவது. - (ஜீன்ஸ் படம் தான் என்னை உசுப்பேத்தியது - வேறு ஒரு பதிவில் அது வரும் :) )
* ஒஸ்லோ பயணம் - நாட்டில் சமாதானம் நடந்த காலம் இந்த பிரதேசம் பிரபல்யம்.
என்ன ஐஸ்வர்யாவும் சங்கரும் தான் போகலாமா நாங்க போனா என்ன என்று ஒரு திமிர்.( சும்மா )
ஜீன்ஸ் பாடல்
இவை என் மனதில் இருந்த ஆசைகள். அப்படியும் நிறைவேற்றாமல் வர மாட்டேன் என்று முடிவுடன் ஐரோப்பா பயணம் ஆனேன்.
இத்தாலி பயணம்
ஒரு மாதிரி நாளும் குறித்து வைத்து விட்டு கழகத்தில் படித்து கொண்டு இருந்தேன். நாள் வந்தது. விமானம் மூலம் பயணம். இத்தாலியின் வட பகுதியில் உள்ள Milan நரகத்தில்(மாடலிங் இக்கு பிரபல்யமான நகரம் மாடல் போல தான் இதை பெண்கள் கூட ஒரு விதத்தில், அழகாய் இருப்பார்கள்) இறங்கி புகை வண்டி மூலம் தொடர் பயணம் ரோம் நகரத்தை நோக்கி. அதிகாலையில் சிங்கம் சில நண்பர் கூட்டத்துடன் ரோமாபுரியில் கால் பதிப்பு. உடனேயே தங்க இருந்த hotel சென்று குளித்து விட்டு. காலை உணவை உண்ட பின், மேலதீக உணவுடன் (நீண்ட நேரம் வரிசையில் காத்து இருக்க வேண்டியதால்) தயார்.
காலை 9:00 மணி வத்திக்கான் நரகத்தில் கால் பதிப்பு. ஒரு கணம் ஆடியே போனேன். என்ன கலையமைப்பு. என்ன அமைதி. எல்லாம் பார்க்கவே எதோ நல்லூரில் நின்று முருகா என்று கூபிடுற மாதிரி ஒரு feeling.இங்கே முருகனை கூப்பிட ஏலாது:)எங்கும் கடவுள் இருந்தால் கூப்பிடலாம் !!!அல்லது ஒரு கடவுள் தான் உள்ளார் என்றால் ??? .
வரிசையில் நின்றோம் உள்ளே செல்ல. நிக்க போக எல்லாம் படம் எடுத்த படி நீண்ட வரிசை மூண்டு மணி நேரம் காவலில் இருந்து ஒரு மாதிரி உள்ளே சென்றேன், அன்று ஞாயிறு ஆதலால் உள்ளே prayers நடந்து கொண்டு இருந்த்து. எல்லாமே நிஜமா என்று யோசிக்க முடியல. எதோ கனவில் வாற மாதிரி இருந்தாலும் ஏறத்தாள இரண்டு மணி நேரம் உள்ளே பிரார்த்தனையில் கலந்து கொண்டு விட்டு வெளியே வரும் போது அளவிலா சந்தோசம். என்றோ போட்ட கணக்கு இன்று சரியாயிருச்சு. சாதித்து காட்டி போட்டேன் என்ற பெரு மிதத்துடன் ரோமா புரியின் மிகுதி இடங்களை பார்த்து ரசிக்க தயாரானேன்.
அப்புறம் Venice பற்றி ஆண்டு எட்டில் படித்து சோதனை கூட pass பண்ணினனான். இதே சந்தர்ப்பத்தில் அங்கேயும் சென்று வந்தேன். உண்மையில் நல்ல பிரதேசம்.
வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இதுவும் ஒன்றுதான்.
" கனவுகள் மெய்ப்பட வேண்டும் " - அது நல்ல கனவாய் இருந்தால் என்றும் மெய்ப்படும் - புரியும் என்று நினைக்கின்றேன்!!!!
Reference :
[1] http://en.wikipedia.org/wiki/List_of_pastoral_visits_of_Pope_John_Paul_II_outside_Italy)
[2] http://en.wikipedia.org/wiki/Roman_Empire
[3] Vatican Temple: http://www.vatican.va/
[4]Vatican State:http://www.vaticanstate.va/EN/homepage.htm
எடுத்த பல படங்களில்( பல கோணங்களில் ) ஒரு சில உங்கள் பார்வைக்கு !!!

நண்பர்களுடன்

சிங்கம் சிங்கிளாக !!!

Venice Water

Colosseum - Rome city

Venice - From the Boat

Inside Colosseum - Rome city

Romanian Cultural Village

Milan Church

Vatican Church Walls

பாப்பரசர் தோன்றும் ஜன்னல் இதனூடாகத்தான் உலகத்துக்கு அருள்

பாப்பரசர் பத்திரிக்கையுடன்

வத்திக்கான் வளாகம்

உள்ளிருந்து வெளியேறிய படி

வத்திக்கான் வளாகம்

வத்திக்கான் வளாகம் -சிங்கம் சிங்கிளாக

உள்ளே பிரமிக்கும் அலங்காரங்கள்-- எல்லாமே சிற்பவேலைகள்

மேல நின்றபடி

உள்ளே பிரமிக்கும் அலங்காரங்கள்-- எல்லாமே சிற்பவேலைகள்

உள்ளே பிரமிக்கும் அலங்காரங்கள்-- எல்லாமே சிற்பவேலைகள்

உள்ளே பிரமிக்கும் அலங்காரங்கள்-- எல்லாமே சிற்பவேலைகள்

உள்ளே பிரமிக்கும் அலங்காரங்கள்-- எல்லாமே சிற்பவேலைகள்

நீண்டு பரந்து இருக்கும் தூண்கள்
இந்த ஆசை எனக்கு வரக்காரணம், முன்னர் நடந்த சம்பவம் ஒன்றுதான்.
1994 இல் ஏற்பட்ட சமாதான காலத்தில். கிளாலி ஊடாக பயணம் செய்து சாதாரண தரம் முடிந்த காலத்தில் ( டிசம்பர் பிற்பகுதியும் ஜனவரி , மாசி நடுப்பகுதியும் உள்ளடக்கம் ) அம்மாவுடன் நாங்கள் கொழும்பில் தங்கி இருந்தோம். அப்போது அம்மாவுக்கு இடம் மாற்றம் கிடைத்தது. ஆனாலும் செயற்படுத்த முடியாத காரணத்தால் அதனை பின் தள்ளி போட வந்து ஏற்பட்ட தடங்களால் நீண்ட காலம் கொழும்பில் செலவிட வேண்டி வந்தது.
இத கால கட்டத்தில், கொழும்பில் தாராளமாக உலாவலாம். எதுவும் பிரச்சினை இல்லை. போலீஸ் பதிவு கூட இல்லை.
அந்த காலத்தில் இன்றும் ஞாபகம் இருகின்றது, வெள்ளவத்தையில் காலி விதிக்கு குறுக்காக மேலாக பாதையை கடக்கும் இரண்டு பாலங்கள்( மேம் பாலங்கள் கிடந்தது).
தை மாசம் பிறந்த நேரம் கொழும்பே களை கட்டினது. காரணம் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் (Pope John Paul II )கொழும்பு வாராராம்.[1] அவர் அருள் கிடைக்க எல்லாரும் வரட்டுமாம் என்று நாங்களும் ஒரு மாதிரி Galle Face வந்து சேர்ந்தோம். என்ன சனம். ஆங்காங்கே இலங்கை போலீசார் கடமையில். நீண்ட நேரம் அவர் அருள் பாலித்து விட்டு சென்றார்.
அப்போது தான் நானும் இந்த அருளப்பர் யார் என்று ஆராய்ந்த போது கத்தோலிக்க சமயம் பற்றிய அறிவு சாடையாக ( எனது சமயம் பற்றியே சரியாய் தெரியாது இது வேற கதை) தெரிந்தது. அப்போது சொன்னார்கள் இந்தியா இலங்கையில் இருக்கின்ற சமயம் பரப்பும் இந்து குருமார்கள், குரவர்கள், ஆலயங்கள் போல இத்தாலியில் உள்ள ரோம் நகரில் உள்ள வத்திக்கானும்[2][3][4] ஒரு பெரிய சமய சம்மந்த மான இடம். சென்று வாருங்கள் கிடைத்தால் என்று. அங்கு போவது என்றால் எப்படி.
கனவில் இதை எல்லாம் சுமந்த படி ( இதை விட என்னும் பல பல ... ) வாழ்கையை ஓட்டி கொண்டு இருக்கும் போதுதான், உயர் கல்வி படிக்க ஐரோப்பா பயணம் கிடைத்தது. கிடைத்தவுடன் போட்ட திட்டங்கள் பல.
அதில் சில
* வத்திக்கான் செல்வது
* Venice செல்வது- (ஆண்டு எட்டில் Anne & Padmini discussion செய்தவை இப்பவும் ஞாப்கம் இருக்கு. ஒன்று சொல்ல வேணும், இப்போ அந்த Anne & Padmini எல்லாம் எடுத்து போட்டினமாம். நியூ syllabus இப்போ )
* Pizza செல்வது - ஜீன்ஸ் படம் தான் என்னை உசுப்பேத்தியது
* Eiffel Tower உச்சிக்கு ஏறுவது. - (ஜீன்ஸ் படம் தான் என்னை உசுப்பேத்தியது - வேறு ஒரு பதிவில் அது வரும் :) )
* ஒஸ்லோ பயணம் - நாட்டில் சமாதானம் நடந்த காலம் இந்த பிரதேசம் பிரபல்யம்.
என்ன ஐஸ்வர்யாவும் சங்கரும் தான் போகலாமா நாங்க போனா என்ன என்று ஒரு திமிர்.( சும்மா )
ஜீன்ஸ் பாடல்
இவை என் மனதில் இருந்த ஆசைகள். அப்படியும் நிறைவேற்றாமல் வர மாட்டேன் என்று முடிவுடன் ஐரோப்பா பயணம் ஆனேன்.
இத்தாலி பயணம்
ஒரு மாதிரி நாளும் குறித்து வைத்து விட்டு கழகத்தில் படித்து கொண்டு இருந்தேன். நாள் வந்தது. விமானம் மூலம் பயணம். இத்தாலியின் வட பகுதியில் உள்ள Milan நரகத்தில்(மாடலிங் இக்கு பிரபல்யமான நகரம் மாடல் போல தான் இதை பெண்கள் கூட ஒரு விதத்தில், அழகாய் இருப்பார்கள்) இறங்கி புகை வண்டி மூலம் தொடர் பயணம் ரோம் நகரத்தை நோக்கி. அதிகாலையில் சிங்கம் சில நண்பர் கூட்டத்துடன் ரோமாபுரியில் கால் பதிப்பு. உடனேயே தங்க இருந்த hotel சென்று குளித்து விட்டு. காலை உணவை உண்ட பின், மேலதீக உணவுடன் (நீண்ட நேரம் வரிசையில் காத்து இருக்க வேண்டியதால்) தயார்.
காலை 9:00 மணி வத்திக்கான் நரகத்தில் கால் பதிப்பு. ஒரு கணம் ஆடியே போனேன். என்ன கலையமைப்பு. என்ன அமைதி. எல்லாம் பார்க்கவே எதோ நல்லூரில் நின்று முருகா என்று கூபிடுற மாதிரி ஒரு feeling.இங்கே முருகனை கூப்பிட ஏலாது:)எங்கும் கடவுள் இருந்தால் கூப்பிடலாம் !!!அல்லது ஒரு கடவுள் தான் உள்ளார் என்றால் ??? .
வரிசையில் நின்றோம் உள்ளே செல்ல. நிக்க போக எல்லாம் படம் எடுத்த படி நீண்ட வரிசை மூண்டு மணி நேரம் காவலில் இருந்து ஒரு மாதிரி உள்ளே சென்றேன், அன்று ஞாயிறு ஆதலால் உள்ளே prayers நடந்து கொண்டு இருந்த்து. எல்லாமே நிஜமா என்று யோசிக்க முடியல. எதோ கனவில் வாற மாதிரி இருந்தாலும் ஏறத்தாள இரண்டு மணி நேரம் உள்ளே பிரார்த்தனையில் கலந்து கொண்டு விட்டு வெளியே வரும் போது அளவிலா சந்தோசம். என்றோ போட்ட கணக்கு இன்று சரியாயிருச்சு. சாதித்து காட்டி போட்டேன் என்ற பெரு மிதத்துடன் ரோமா புரியின் மிகுதி இடங்களை பார்த்து ரசிக்க தயாரானேன்.
அப்புறம் Venice பற்றி ஆண்டு எட்டில் படித்து சோதனை கூட pass பண்ணினனான். இதே சந்தர்ப்பத்தில் அங்கேயும் சென்று வந்தேன். உண்மையில் நல்ல பிரதேசம்.
வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இதுவும் ஒன்றுதான்.
" கனவுகள் மெய்ப்பட வேண்டும் " - அது நல்ல கனவாய் இருந்தால் என்றும் மெய்ப்படும் - புரியும் என்று நினைக்கின்றேன்!!!!
Reference :
[1] http://en.wikipedia.org/wiki/List_of_pastoral_visits_of_Pope_John_Paul_II_outside_Italy)
[2] http://en.wikipedia.org/wiki/Roman_Empire
[3] Vatican Temple: http://www.vatican.va/
[4]Vatican State:http://www.vaticanstate.va/EN/homepage.htm
எடுத்த பல படங்களில்( பல கோணங்களில் ) ஒரு சில உங்கள் பார்வைக்கு !!!

நண்பர்களுடன்

சிங்கம் சிங்கிளாக !!!

Venice Water

Colosseum - Rome city

Venice - From the Boat

Inside Colosseum - Rome city

Romanian Cultural Village

Milan Church

Vatican Church Walls

பாப்பரசர் தோன்றும் ஜன்னல் இதனூடாகத்தான் உலகத்துக்கு அருள்

பாப்பரசர் பத்திரிக்கையுடன்

வத்திக்கான் வளாகம்

உள்ளிருந்து வெளியேறிய படி

வத்திக்கான் வளாகம்
வத்திக்கான் வளாகம் -சிங்கம் சிங்கிளாக

உள்ளே பிரமிக்கும் அலங்காரங்கள்-- எல்லாமே சிற்பவேலைகள்

மேல நின்றபடி

உள்ளே பிரமிக்கும் அலங்காரங்கள்-- எல்லாமே சிற்பவேலைகள்

உள்ளே பிரமிக்கும் அலங்காரங்கள்-- எல்லாமே சிற்பவேலைகள்

உள்ளே பிரமிக்கும் அலங்காரங்கள்-- எல்லாமே சிற்பவேலைகள்

உள்ளே பிரமிக்கும் அலங்காரங்கள்-- எல்லாமே சிற்பவேலைகள்

நீண்டு பரந்து இருக்கும் தூண்கள்
Subscribe to:
Posts (Atom)
