2009-04-06

Future of Cricket Accessories in Pakistan



Future of Cricket Accessories in Pakistan

இது தேவையா

2009-03-18

Dupping /Copy அடிச்சு படம் நடிக்கும் விஜய், ரசிகர்களை பார்த்து பேசிய கேவலம் நியாயமா

என்னமோ தெரியல கொஞ்ச நாளா ப்லோக், பேப்பர், வீடியோ என்று எல்லாம் ஓடோடி கொண்டு இருக்குது உந்த விஜய் என்ற ஒரு கிறுக்கு நடிகனால(??)

எதோ ஒரு காலத்தில் ஒரு இரு நல்ல படம் குடுத்த மூலம் ரசிகர்களை தன்னகத்தே வசப்படுதிக்கொண்டதால அவர் பெரிய நடிகரோ .. என்னத்தை நடிச்சவர் .. பெரிசா கிளிச்சவர் ....
சும்மா போட்டு இருக்கிற shirt இண்ட காலரை தூக்கி பிடிச்சு சிங்கம் என்றா பெரிய நடிப்பா ?? திருநீறை நெற்றியில பூசி போட்டு அருவா கத்திய தூக்கினா பெரிய நடிகனா ? இல்லாட்டி போனா பெரிய வில்லனோ ?
எடுக்கிற படம் முழுக்க சொதப்பல் படம் , கொஞ்ச நாளா தொடர் தோல்வி படத்துக்கு பிறகு கில்லி இல கிட் ஆனதால வந்த திடீர் கொழுப்பு என்னும் குறையல போல கிடக்கு.
எனக்கும் ஒரு சந்தேகம் கில்லியில பிரகாஷ் ராஜ் யோட ஓட தொடங்கினது இப்போ வில்லு வரைக்கும் ஓடிட்டே ( ஓட்டிட்டே ) இருக்கான்.

சரி அதைத்தான் விடுவம் .. இசை அமைச்ச பாடல்கள் தான் சொந்தமாய் இசை அமைச்சதா என்று பார்த்தா .. கேவலம் தெலுங்கில் இருந்து நேரடியா Copy அடிச்சதுதான்

Over all ஆ எதாவது புதுசா முயற்சி செய்து பார்க்கலாம் , அதை விட்டுட்டு காசு குடுத்து பார்த்த சனத்தை போய் பேசின .....ஒரு லூசு பயலா இருப்பான் போல ...சரியான டென்ஷன் பார்ட்டி போல ..lol

இப்பவே கண்ணை கட்டுதே.. சப சப...சப...

நம்ம தலை ரஜினி யும் குசேலன், பாபா படம் தோல்வியலா கலங்கி போனாரா ,,?? இல்லையே ..அவரை மாதிரி இருக்க வேணுமுங்கோ ..

இல்லை நம்ம விஜ்யகாந்துதான் எதாவது ...செய்தாரா ..lol (வடிவேலுடன் தான் செய்தார் தவிர )

சரி சரி நான் இதுக்கு மேல டென்ஷன் ஆனால் கூடாது BP ஏறிடும் .. நிப்பாட்டுறன் இங்க ..

இவ்வளவு நேரம் வாசிச்சனியல் ஒரிஜினல் தெலுங்கு பாடல்களை பார்த்து விட்டு போகவும் .. அந்த இசையமைப்பாளருக்கு வாழ்த்துக்கள் .. உங்க பாட்டுக்கு ..

1- Sa Ri Ga Ma Pa Da Ni Sa Arey Karo Karo Zara Jalsa

http://www.youtube.com/watch?v=zJJSpuuOydo

2- Shankar Dada Zindabad - Akalesthe ... Telugu item song [High Quality] -.Daddy Mummy

http://www.youtube.com/watch?v=w9BV1CH04KE

3- ------மிக விரைவில் Link போடுறன்

4- ------மிக விரைவில் Link போடுறன்

5- ------மிக விரைவில் Link போடுறன்

2009-03-14

தூக்கத்தில் வாடா மாப்பிளை பாட்டு செய்த வேலை

Vaaranam Aayiram -ஓம் சாந்தி பாடல் சிறிதுகாலமாக எனக்கும் பிடித்த படியால் Phone Ringing tone ஆ வைத்துக்கொண்டு, இதுவரை காலமும் எனது கைத்தொலைபேசியில் Ringing Tone aaa இருந்த வில்லு வாடா மாப்பிளை பாடலை நான் நித்திரையால் எழுப்பும் Ringing tone ஆ மாற்றி வைத்து விட்டேன். பிறகு கேட்க வேணாம் ஏன் சாந்தி பாடல் உமக்கு நல்லா பிடிக்கும் என்று
அழுதிடுவன்

நேற்று வியாழன் நாள் முழுக்க வேலை செய்யும் இடத்தில் கடும் வேலை, அயல் நாட்டுக்கு மாலையில் திடீர் பயணம் என்று ஒரே அலுத்து போய்( Facebook இக்கு கூட வடிவா வர முடியவில்லை ), இரவு உணவும் உண்ணவில்லை ( Romba Feeling), வீடு வந்து சேரும் போது நள்ளிரவு 12 மணி. கைத்தொலை பேசியில் இன்டர்நெட் இருந்த படியால் நாள் முழுக்க என்னால் ஏதோ முடியுமான அளவு வாழ முடிஞ்சது. களைப்பால் உடனேயே தூக்கம் போட்டு விட்டேன். ( Alarm மை காலை 4 மணிக்கு வைத்து போட்டு, சிறு வயதில் இருந்து அதிகாலை 3-4 மணிக்கெல்லாம் எழும்பிய பழக்க தோஷம் தினமும் இன்று வரை அதையே பின் பற்றுகிறேன். )


சரி கதைக்கு வருவம். phone எனக்கு பக்கத்தில் வைத்து விட்டு தூக்கம் கொள்வது வழமை, இரவு phone வைத்த இடம் கூட தெரியாது. அவ்வளவு தூக்கம்.


எனது ரூமில் குறிப்பிட்ட இணைய வானொலி 24 மணி நேர - நேரடி ஒலி பரப்புச்சேவை, நான் இருக்கிறனோ இல்லையோ எனது அறையில் அது தனது சேவையை தொடர்ந்து செய்யும். எனது அறைக்கு வந்து போனவைக்கு தெரியும் எப்படி சத்தத்தில் இது வேலை செய்வது என்று!!!

இன்று அந்த வானொலியில் வழமை போல எனது நண்பர் Loshan காலையில் விடியல் நிகழ்ச்சியை தனது பாணியில் செய்து கொண்டு இருந்தார்.
என்னுடைய காலம் அவர் காலை 7.30 மணிக்கு(இலங்கை நேரப்படி)(எனது ஊரில் அதி காலை 3.00.மணி) வாடா மாப்பிளை பாடலை ஒலி பரப்பினார். நான் நித்திரையில் இருந்ததால் Alarm அடிக்குது என்று திடீர் என்று நித்திரையால் எழும்பி தூக்கத்தில் phone ஐ தேடி ஒருமாதிரி , நிற்பாட்டி போட்டு திரும்பி படுத்திட்டன். திருப்பியும் அது தொடர்ந்து அடிக்கிற மாதிரி ஒரு feeling ,சரி திருப்பியும் Alarm ai நிற்பாட்டி போட்டு தூங்கிட்டன்,( இதிலிருந்தே விளங்க வேணும் அவ்வளவு தூக்கமும் , களைப்பும் ) அது தொடர்ந்தே பாடிட்டே இருக்கு, என்ன கொடுமை இது என்று ஒரே ஆத்திரத்தில் நித்திரையில் phone னை உண்மையிலே தூக்கி எறிந்தே விட்டேன் , அது போய் எனது Cupboard இல அடி பட்டதால் வந்த சத்தத்தில் தான் உண்மையிலேயே நித்திரை கலைந்து எழுந்து பார்க்கும் போது , வாடா மாப்பிளை வானொலியில போகுது என்று தெரிய வந்தது . *&#*#&(#.





என்ன Force இல நான் எறிஞ்சு இருக்க வேணும் என்று ஒருக்கா கற்பனை பண்ணி பார்க்கவும் - இதுதான்யா மொக்கன் Throw

சுதாகரித்து கொண்டு ஓடிப்போய் phone னை பார்த்தா சும்மா நினைத்த அளவு சேதாரம் இல்லாட்டியும் ஓரளவுக்கு Casing போய்ட்டு மாதிரிதான் , ஆனால் இன்னும் phone வேலை செய்யுது. phone புதுசு தம்பி புதுசு - E71.. ஆனாலும் பெரிசா வருத்தபடவில்லை ஏனென்றால் ஏற்கனவே Insurance செய்த படியால் கொண்டு போய் மாற்றி விடலாம் என்றபடியால் தான்.
வாடா மாப்பிளை என்று விடியவே யார்தான் என்னை கூப்பிட்டார்கள் என்று இப்போ புரியுது தானே ....ha ha...:)

2009-03-09

Frankfurt Airport



முதல் முதல் எனது உயர்கல்வி படிப்புக்காக ௨007 ஆம் ஆண்டு மேற்குலகம் நோக்கிய பயணத்தை தொடங்கிய போது நம் நாட்டில் இருந்து நேரடி விமானம் மூலம் இந்த விமான நிலையத்தை சென்று அடைந்தேன்.

மிகவும் நீண்ட ஒரு பயணம், விமானத்துக்குள் தொடர் தாக்குதல் ( உண்ட உணவை சொன்னேன்) களைப்பு, பாட்டு கேட்ட களைப்பு ( இதை விட நம்மளுக்கு யாருமே talk போட இல்லை, இதனால் வழமை போல நம்ம I-Pod & Phone Games தான்,) என்று ஒரு தொகை களைப்புகளுடன் ஒரு மாதிரி ஜேர்மன் மண்ணை தொட்டேன். என்னை விட எல்லாருமே ஜேர்மன் நாட்டவர் தான் இருந்த தால் பொழுதும் போகல )

விமானம் நிறுத்த பட்ட பின் ஜேர்மன் மொழியில் எல்லோருக்கும் அறிவித்தல் வழங்க பட்டது, இது வழமையான ஒன்று தானே என்று நினைத்து விட்டு, நானும் எனது பட்டிகளுடன் விமானத்தை விட்டு இறங்கலாம் எண்டு வெளிய வர, அந்த நாட்டு விமான நிலைய போலீசார் நிற்று கொண்டு எல்லாரினதும் Passport பார்த்து கொண்டு நின்றனர், ஆனால் என்னுடைய passport என் Bag இக்குள். என்ன செய்ய அதை எடுப்பம் என்று நினைக்க முதல் அவங்கள் என்னை பிடித்து வெருட்டி நீ எங்க வந்தனீ என்று எல்லாம் போட்டு ஒரு சல்லடை செய்தே போட்டார்கள். இதை விட ஏற்றி கொண்டு போய் அவர்களின் அறைக்குள் வைத்து விசாரிக்கிறார்கள், எனக்கு நிஜமா , இல்லை கனவா இல்லை வேற ஏதுமா என்று கூட தெரியாமல் நிக்குறன்.

விசாரணை நடந்தது , இதில் என்ன சோகமென்றால் அவன் ஜேர்மன் பாசையில் கதைக்கிறான் நான் ஆங்கிலத்தில் பதில், கேவலம் அரை மணி நேரம் கதைச்சு ஒரு முடிவிக்கு வந்தோம். நான் கொண்டு போன பல்கலை அனுமதி பத்திரம், விசா, மற்றும் எனது சொந்த தொழில் அடையாள அட்டை எல்லாமே பொய் என்றும், நீ சும்மா ஏறி வந்திட்டாய் என்றும் தான் வாதம், இதை விட , அவர்கள் சொன்னது , நீ அயல் நாடுக்கு போக வேண்டும் என்றால் ஏன் இங்கே இறங்கினாய் என்று, அதுவும் உண்மை தான், ஆனால் இந்த விமான ஒழுங்கை நான் செய்ய வில்லை, எனக்கு Netherlands Fellowships தந்த அந்த Organization ai தான் கேட்க வேனும்.

ஒரு மாதிரி அழுதும், உண்மைகளை சொல்லியும் , எனது கல்லூரி பத்திரங்கள் , பல்கலை மானியங்களால் வழங்கப்பட கல்வி சார் விடுமுறை பத்திரங்களையும் ( விரிவுரையாளர்களுக்கு வழமையாக வழங்கும் ஒன்று - குறிப்பாக அது ஆங்கிலத்தில் தயாரிக்க பட்டதால் எனது பெயர், தொழில் எல்லாமே தெளிவாக இருந்ததால் ) காட்டி ஒரு மாதிரி இவங்களால் விடு பட்டேன்.
எனது வாழ்க்கையில் மறக்க முடியாத இந்த விமான நிலையத்தில் அந்த போலீஸ் காரருடன் ஒரு புகைப்படமும் எடுத்து கொண்டேன்.

பிறகு அவர்களுடன் ஒரு கோப்பி அருந்திய பின் வழமை போல் சுங்க பிரிவினூடாக வெளிய நிம்மதியாக வந்தேன். (அழுததால் வந்த வினை போலும் )



என்ன செய்வது இரவு நேரம் நான் போகவேண்டிய அயல் நாட்டுக்கு என்னை அழைத்து செல்ல வந்தவரையும் தேடி அலைந்து ஒரு மாதிரி 1 மணி நேர வேட்டைக்கு பின் நமக்கு போக வேண்டிய இடத்துக்கு ஆன பயணத்தை ஆரம்பித்தேன்.

இதையெல்லாம் எங்கள் வீட்டுக்கு சொல்லி அம்மா வை மேலும் Tensionஆக்காமல் விட்டே விட்டேன், ஆனாலும் அந்த வலி எனக்கு இன்னும் இருக்கு .

ஜேர்மன் நாட்டவர்கள் தங்கள் மொழி தவிர்ந்த வேறு எந்த மொழியையும் கதைக்க விரும்புவது இல்லை.
ஆனாலும் இந்த விமான நிலையம் ஒரு Transit விமான நிலையம் ஒரு தொகை வெளிநாட்டவர்கள் வந்து போகும் இடம்.
எப்படித்தான் அவர்கள் சமாளிக்கிறார்களோ...:)

இதை விட நாம் இருக்கும் நாடு(NL) காய் கறி கடையில இருக்கிற அக்காவில இருந்து பிச்சை காரன் வரைக்கும் சரி , இல்லை உயர் பதவி உள்ளவர்கள் சரி ஆங்கிலத்தில் சராமரியாக பேசுவார்கள். நமக்கு அது போதும்.

எத்தினையோ ஐரோப்பா நாடுகள் சென்று வந்துள்ள போதும் , பிரான்சு, ஜேர்மன் நாட்டில் மொழியால் பெற்ற அனுபவங்கள் தான் அதிகம், குறிப்பாக நம் புலம் பெயர் உறவுகள் இந்த நாட்டில் தான் அதிகம் உள்ளனர். அவர்கள் புலம் பெயர்ந்து வந்த பின் இந்த நாட்டு பாஷைகளை வலிய படித்தவர்கள் தான்

இது இவ்வாறு இருக்க அண்மையில் கிழக்கு நோக்கிய பயணத்தில் இதே விமான நிலையம் ஊடாக தான் எனக்கு போகும் படியும் cheap ticket இருக்கு என்றும் சொல்லி போட்டார்கள். எனக்கு ஒருக்கா heart attack வந்த பீலிங் இருந்தது.

சரி இம்முறை எப்படியாவது இவர்களை துவம்சம் செய்யாமல் போவது இல்லை என்று நினைத்து கொண்டு போனால் பாது காப்பு நடைமுறைகளால் கெடு பிடிகள் மிகவும் அதிகம். நானும் பொறுமையா எல்லாம் தூக்கி காட்டி கொண்டு ஒரு மாதிரி போய் சேர்ந்தேன்.


திரும்பி வரும் போது கொஞ்சம் பயமாய் தான் இருந்தது, என்னுடன் எங்கள் உறவும் வந்ததால் வந்த இடமும் தெரியல , வீடு வந்ததும் தெரியல

2009-02-05

Time Factor

நண்பர் ஒருவரின் இடக்கு முடக்கான கேள்வி நீங்கள் எல்லாமே time factor பார்த்து கொண்டு இருப்பியல் ஏன் ஆக வேண்டியது ஆகல என்று.

ஹோ அதுவா, அதுக்கும் நம்மளுக்கும் வெகு தூரம், அம்மா விடம் தான் கேட்கணும். நானும் அவசரம் இல்லை. இருக்கிற பிரச்சனைகளை ( Hem.. எனக்குள் ஒரு பிரச்னையும் இல்லை பொதுவாக இந்த வயசில படிக்க வேனும் எண்டு ஒரு அவாவில் நிக்கிறன், முடிப்பம் அதை தான் சொன்னான்) தீர்த்து போட்டு செய்வம் எண்டு இருக்கிறம். இது தான் எனது பதில்.

உந்த பிரச்சனையை தீர்க்க ஒரு வழி இருக்கு என்று அடிக்கடி எனக்கு ஒரு நண்பர் சொல்லுவதை கேட்டு உள்ளேன். போய் Pettah இல ஒரு printer ஐ பிடிச்சு அவனுக்கு வீட்டு Address ai குடுத்து பிரிண்ட் இக்கு வார திருமண அழைப்பிதல் ஒவ்வொன்றிலும் ஒரு Copy யை எங்க வீட்டுக்கும் அனுப்பு. ஆகிற செலவையெல்லாம் கணக்கு போடு இப்பவே செட்டில் பண்ணுறன் எண்டு ஒரு பிடியாக சொல்லு, இதை வீட்டில receive பண்ணுற அம்மா ஒரு முடிவு எடுப்பா, கெதியா மகனுக்கும் பார்ப்போம் எண்டு.

தம்பி மாரே உதை யாருக்கும் செய்ய try பண்ண வேண்டாம், பிறகு வம்பில போய் முடியும்..

சரி சரி உந்த Time Factor கதையில கன அனுபவங்கள் இருக்கு. கன சோகமாய் முடிஞ்சும் இருக்கு. படிக்கிற காலத்தில் இருந்து எனக்கு ஏதோ எல்லாமே time இக்கு நடக்கணும், பொறுமையே இல்லை, வீட்டிலையும் அப்படி, படிப்பிலும் அப்படி, வேலை செய்யிற இடத்தில ஒரு படி கூட. அதுவும் நம்ம மாணவர்கள் சில வேலைகளில் பாவம்.

உதை விட பஸ் பயணங்கள் ஆஹா ஓஹோ. அதுவும் Campus ila படிக்கும் போது எனக்கு Bus ai கண்டால் வாழ்க்கையே வெறுக்கும் . நாங்கள் இருந்த இடம் Route கண்டி மகாகந்தை( கலகா வீதி) . இந்த பஸ் காரருக்கு நான் பேசாத பேச்சும் இல்லை சிலவேளைகளில். நான் மட்டும் அல்ல , என்னோடு சில பேர் சேர்த்தும் திட்டுவாங்கள், சில வேளை நான் மட்டும், இதுக்கு காரணம் அவங்கள் செய்யும் அநியாயமான வேலைகள் தான்.

ஒரு முறை நான் கண்டிக்கு போய் சாப்பிடுவம் என்று ஏறி இருந்தால் ( 10 AM - போயா தினம்) அதுவும் போகுது போகுது. போகும் பாதையில இந்த பஸ்ஸை விட யாரும் பஸ் ஓடுறதா தெரியவே இல்லை. Galaga சந்தியில யாருமே இல்லை , கண்டக்டர் இறங்கி நிண்டு rajwatte, ... உட பார , High school என்று போகுது .. ஒருக்கா சொன்னாலும் பரவாய் இல்லை , அதுவும் 5 தடவை சொல்லி இருப்பான் அந்த படு பாவி கண்டக்டர், யாரை பார்த்து சொன்னான் என்று தான் எனக்கும் பிரச்சனை, என்ன செய்ய பொறுமையா இருந்தன், யாரவது உதவிக்கு வருவாங்களா என்று திட்ட, சரி கொஞ்ச தூரம் போனால் பிறகாவது யாரும் தொடங்குவான்கள் என்றால் , ஒருத்தனும் இல்லையே.

சரி சரி பொறுமையா இருப்பம் என்று நினைக்க ஒரு மாதிரி 45 mins aala High School சந்தி வந்துட்டு. இப்போ இந்த பஸ் மேல போற பாதியில poka வேனும், அதுக்குள்ள யாரை யாவது கூட எடுத்திட்டு போகலாம் எண்டு 15 நிமிஷமாய் கூப்பிடுறான், யாருமே வாறதா காணவே இல்லை. சரி நான் முடிவெடுத்தாச்சு இறங்கி போவம் என்று சடார் எண்டு எழும்ப முன்னுக்கு இருந்த மாத்தையா தொடங்கினார் தன் வேட்டையை , அவர் நினைத்தார் போலும், நான் வேட்டைக்கு தான் போறன் என்று , அவர் பேசாத பேச்சு இல்லை, but Conductor o Good shed , உட பாறை எண்டு கூபிட்றான். சரி மாத்தையா தனிய என்று நமக்கு தெரிஞ்ச மொழியில அவனை ஒரு பிடி பிடிச்சா அவன் சொன்னான் ' மல்லி உமக்கு அவசரம் எண்டால் இறங்கி நடவும்' நானும் விடுறதா இல்லை, பேசி பேசி ஒரு கட்டம் Bus னுள்ளே ஒரே அமர்க்களம் ,எல்லாரும் திட்ட தொடங்கிட்டாங்கள், ஓட்டுனர் இதுதான் chance endu Bus aiye நிப்பாட்டி போட்டு சொன்னான் , பஸ் போகாது , என்ஜின் பிரச்சனை என்று , 10 நிமிஷம் இருக்கட்டாம் எல்லாரையும் என்று . பஸ் ஒருக்கா அதிர்ந்துது ..ஓஒ என்ற Sound aale.....

அவனவன் போயிட்டான் திரும்பி வரேக்க அதே பஸ் , என் நிலைமையை யோசித்து பாருங்கோவன்.சாப்பிட்ட சாப்பாடு செமிச்சது மட்டும் இல்லாமல் ஒரு குட்டி தூக்கம் கூட போட்டு பார்த்தேன்

இதுக்குள்ள நம்ம Engineer நண்பர்களுக்கு ஆகா ஓகோ என்று கம்பலை பஸ், அந்த பஸ் இல காலையில 8 மணிக்கு குருந்து வத்தையில ஏறி அக்பர் இல இறங்கினாலே போதும், எதோ கண்டி போய் வந்த மாதிரி பீலிங் இதுக்கும்.. இல்லையா பசங்களா???

கண்டியில் இருந்து கொழும்பு போகும் போது கடவத்தையில தொடங்கி களனி பாலம் வரும் வரைக்கும் 2 மணித்தியாலம் பாதையில இருக்கிற கடையும் சனமும் பார்க்கிறது தான் எனக்கு வேலை.

புகை வண்டிதான் எல்லாத்துக்கும் மேலால கொஞ்சம் பரவாய் இல்லை .

அதுவும் உந்த கொழும்பு- பதுளை .. train வேணாம் விட்டுடுவம்...

கொழும்பு நண்பர்களுக்கு 155, 102, 154, ( (141 சிலவேளைகளில்) ஏறி இருந்தா பொறுமையின் எல்லை விளங்கும், நானும் 155 kku facebook ila ரசிகர் கூட்டம் இருப்பதை பார்த்தும் உள்ளேன். வாழ்க பஸ் காரரும் அவங்க பஸ் களும்!!!

2008-10-16

போதை வஸ்து பாவனை , சிகப்பு விளக்கு, களியாட்ட கூடங்கள் என்று எல்லாம் பெயர் போன " Amsterdam" - in Netherlands











வாழ்க்கை

வாழ்க்கை ஒரு சவால் - அதனை சந்தியுங்கள்
வாழ்க்கை ஒரு பரிசு - அதனை ஏற்று கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் - அதனை பயணியுங்கள்
வாழ்க்கை ஒரு சோகம் -அதனைக்கடந்து வாருங்கள்
வாழ்க்கை ஒரு துயரம் - அதனைத்தாங்கி கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு கடமை - அதனை நிறைவேற்றுங்கள்
வாழ்க்கை ஒரு விளையாட்டு - அதனை விளையாடுங்கள்
வாழ்க்கை ஒரு வினோதம் - அதனைக்கண்டு அறியுங்கள்
வாழ்க்கை ஒரு பாடல் -அதனைப்பாடுங்கள்
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் - அதனைப்பயன்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு பயணம் - அதனை முடித்து விடுங்கள்
வாழ்க்கை ஒரு உறுதி மொழி- அதனை நிறைவேற்றுங்கள்
வாழ்க்கை ஒரு காதல் -அதனை அனுபவியுங்கள்
வாழ்க்கை ஒரு அழகு - அதனை ஆராதியுங்கள்
வாழ்க்கை ஒரு உணர்வு - அதனை உணர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு போராட்டம் - அதனை எதிர் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு விடுகதை - அதற்கு விடை காணுங்கள்
வாழ்க்கை ஒரு இலக்கு - அதனை எட்டிப்பிடியுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...