நம்முடைய வறு வல்களும் ; சிந்தனைகள் , மனதில செய்ய நினைத்தவை , செய்தவை ,நல்லதாக பார்த்து சுட்டவை ,சுடாமல் சொந்தமாய் தயாரிச்ச தலைப்புக்கள் என்று ஒரு மொக்கை போடும் இடம்
எதாவது எழுதுவம் என்றால் நேரம் இல்லை ; ரொம்ப பிஸி .. எனக்கு பிடிச்ச ஒரு காணொளி .. நல்ல ஒரு மசாலா கலவை .. பாருங்க .. பிறகு யார் தயாரிச்சது என்று கேட்க கூடாது ... :)
புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது - வேட்டைக்காரன் வரத பார்த்து
கொல நடுங்குது கொல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நிலைகுலையுது நிலை குலையுது வேட்டைக்காரன் வரத பார்த்து
என்னதான் இருந்தாலும் மொத்ததுல பாட்டு படு ஜோரு. இனி நீங்களே இந்த படத்தோட பாட்டை வெறுத்தாலும் உங்களை எங்கள் 'சன்' அடிக்கடி கேட்க வைப்பான்..
ஒரு விளம்பரம் :- சிவராத்திரி 2010 :-
" இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முதலாக திரைக்கு வந்து இரண்டு மாதமே ஆன வேட்டைக்காரன் சிவராத்திரி இரவுபத்து மணிக்கு உங்கள் சன் டீவியில் காணத்தவறாதீர்கள் " சிவராத்திரியை ஜோராக நித்திரை கொள்ளாமல் கொண்டாடுங்கள் !! என்று ஒரு பெரிய விளம்பரம் வரும். :) திரைப்படத்தின் முதல் பகுதியை வழங்குவோர் குட் நைட் நுளம்பு சுருள் . இறுதிப்பகுதியை வழங்குவோர் பனடோல் .. உங்கள் தலை வலிகளை போக்க .. படம் தொடங்கும் போதே அருந்துங்கள் .. !!
(திருவண்ணாமலை அடி வாரம் ) இன்று கார்த்திகை தீபத்திருநாள். ஆலயங்களில் , வீடுகளில் எல்லாம் தீபம் ஏற்றி வழிபாடும் நாள்.
தீப வழிபாடு பண்டைய காலந்தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது.
சைவர், வைஷ்ணர், ஜைனர் என்ற பாகுபாடு இன்றி எல்லா மதத்தினரும் தீப வழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர்.
இந்தியாவில் வடக்கில் தீப வழிபாடு ‘தீபாவளி’ என்றும் , தெற்கே தீப வழிபாடு ‘கார்த்திகை தீபம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.
தீப தானங்கள் பதினாறு வகை தென் நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது. தீப வழிபாட்டில் சிறப்பானது கார்த்திகை தீபம்.
கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது கார்த்திகை தீபம்.
தீப ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞானத்தைத் தருவதாகும். பண்டைய காலத்தில் ஞாயிறு, திங்கள், நெருப்பு இம் மூன்றையும்தான் தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள்.
”அன்பே தகழியா ஆ ர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - என்புருகி ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நான் ”
திருமூலர் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில்:
”விளக்கொளியாகிய மின் கொடியாளை விளக்கொளியாக விளங்கிடு நீயே ! விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே ! – என்று சிறப்பித்துக் கூறுகிறார்.
இவை தீப வழிபாட்டின் முக்கியம் சொல்லும் புராணங்கள்.
குறிப்பு: அத்துடன் தீபாவளி ஆரிய திருநாள் என்றும் கார்த்திகை திருநாளே தமிழர் திருநாள் . இத்தனை முக்கியம் வாய்ந்த தமிழர்திருநாளான இந்த நாளில் எல்லோரும் தீபம் ஏற்றி இன்றைய கார்த்திகை தீப திருநாளை கொண்டாடுவோமாக.
இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்தத் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று ,பஞ்ச பூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையின்( ஈசன்ஜோதிப்பிழம்பாய்நின்றஇடம் ) உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
இத்தனை இன்று பெரும்பாலான இந்திய தமிழ் ஒளிபரப்புகள் நேரடியாக வர்ணனை செய்யும்.( முன்னர் ஜெயா தொலைக்காட்சி செய்த ஞாபகம் ). மிக பலத்த பாதுகாப்புடன் நிகழும் இந்த நிகழ்ச்சியை காண பலர் கூடுவர். மிக நீண்ட தூரத்துக்கு இந்த காட்சியை காணலாம்.
வாசித்தவற்றுள் பிடித்த கவிதை :
உகலமெல்லாம் தீப ஒளி பரவ நல்லன எல்லாம் நடக்க ஆளுவோர் மனம் மாற மக்கள் நலமொன்றே நினைக்க வீணாகும் தண்ணீரை சேமிக்க அதன் மூலம் நல்ல வளம் பெருக பொது ஜனமும் தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்க வன்முறை ஒழிய தீவிரவாதம் அழிய எங்கும் அமைதி நிலவ உலக மக்கள் நிம்மதியான வாழ்வு வாழ இந்நன்னாளில் எங்கும் ஒளி பரவட்டும் சாந்தி நிலவட்டும் அதற்கு ஏற்றுக தீபம்...போற்றுக தீபம்...கார்த்திகை தீபம்!!!!!!!!!!!!!!!!!!!
"சொக்கப்பனைகொளுத்துதல்".
கோவிலுக்கு அருகே, திறந்த வெளியில், ஒரு காய்ந்த மரத்துண்டை (அனேகமாக பப்பாளி மரத்தண்டு- ஊரில் என்றால் , சிலவேளைகளில் பெரிய மூங்கில் தடி ) நிறுத்தி அதனைச் சுற்றி காய்ந்த பனை மட்டைகளைக் கட்டி வைப்பார்கள். ( கிடுகும் பயன்படும் )இதற்கு சொக்கப்பனை என்று பெயர். சாயங்காலப் பூஜை முடிந்து சுவாமி வீதி உலா வந்தபின்( சுட்டி விளக்கு தரும் ஒளியில் சுவாமி வருதல் கண் கொள்ளாக்காட்சி.) ( பெரும்பாலும் ஆறுமுகசாமியே வள்ளி சமேத தெய்வானை யுடன் வலம் வருவார் ), கோவில் எல்லாம் விளக்கேற்றிய பின்னர், கோவில்குருக்கள் வெளியே வந்து, சொக்கப்பனைக்கு தீபாராதனைக் காட்டி அதைக் கொளுத்தி விடுவார். பனை மட்டையில் தீ பிடித்ததும் படபடவென்று ஒசையுடன் வெடித்துக் கொண்டே கொழுந்து விட்டு எரியும். மிகப்பிரகாசமான ஒளியை தருவது மட்டும் இல்லாமல் தத்துவத்தையும் பொலிந்து இருக்கும் இந்த காட்சி. நம்மவர்கள் உப்பு போட்டு வெடிக்க வைத்து கேலியாகுவதுதான் வழமையான ஒன்றே.
சுருக்கமாய் சொன்னால் ,கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கி, ஞான ஒளியை நம்முள் பெருக்க உகந்த விழாவாகும்.
இதமான சனி இரவு களைத்து போய் நண்பனின் வீட்டில் இருந்து வந்து சேரும் போது அதிகாலை 1 மணி .... வீட்டை சுத்தம் செய்து போட்டு படுப்பம் என்று .. சொல்லி கொண்டு வந்த களைப்புக்கு தேநீர் அருந்த தண்ணியை கொதிக்க வைத்து கொண்டு இருக்கும் போது, கொழும்பில் இருந்து உற்ற நண்பனின் அழைப்பு; காதல் தோல்வி.. அதுதான் மைய்யக்கருத்து..( இதை சொல்லி முடிக்க ஒரு மணித்தியாலம் போட்டுது )பெண் பகுதி எனக்கு தெரிந்த பகுதி.. எனது உதவி .. தேவை.. எப்படியோ பேசி எதாவது செய்,, என்று .. அழுது புலம்பல் .... எனக்கு இருக்கிற களைப்பு எல்லாமே போயிட்டு .. !!! பேசுகிறேன் என்று சொல்லி அந்த பகுதிக்கு தொலைபேசியை அதிகாலையே ( 2 மணி ஐரோப்பிய நேரம்- இலங்கை நேரம் ஞாயிறு காலை 6:30 மணி ) முறுக்கினால் .... இன்றைய ஞாயிறு நாள் எப்புடி .. போயினது என்று தெரியாது அத்தனை தடவை .. கால் எடுத்தாச்சு.. .,. .. பெண்பகுதியினர் ஏமாற்றி விட்டனரா இல்லை ..பெண்ணுக்கு விருப்பம் இல்லையா.. என்று நான் அறிய இன்று மாலை நான்கு மணி..
நானறிந்த அளவில்.. ஒரு தலைக்காதல் , நான் படித்து ( 4 வருடங்கள் ) முடித்து விட்டு வருகிறேன் அதுவரை wait பண்ணுவியா என்று நண்பன் கேட்டதுக்கு அவள் மௌனமாய் இருந்தது, அதுக்கு பிறகு நண்பன் அவளுடன் பழகிய விதங்கள் என்று எல்லாம்.. அவனை அவளும் ஏற்று க் கொண்டு விட்டாள் என்று கடந்த நான்கு வருடமாக அவனது படிப்பை நன்றே செய்து முடித்து விட்டு வந்த போது அது அவ்வாறு இல்லை என்று .. புரிந்ததும்.. அவனது மனமும் உடைந்தது.. வாழ்வும் பாழாய் போனது என்று புலம்பல்.. ;
சரி பெண் பகுதியினரை ... ஒரு மாதிரி சமாளித்து கதைத்தால் .. சாத்திரம் பார்த்து "சரி" என்றால் திருமணம் செய்து வைக்க தயார் என்று .. சொன்னது கொஞ்சம் ஆறுதல் . அது நடக்காது.. என்று எனக்கு நன்றே தெரியும் . அவர்களுக்கும் தான் .செவ்வாய் குற்றம் தான் .. தடை செய்யுது.. என்று பெண் பகுதியினர் சொல்லி விட்டனர்.. அதால பேசாமல் வேறு பெண்ணை பார்க்கவும் என்று அறுத்து உறுத்து சொல்லி தொலைபேசியை வைத்து விட்டனர்.. எனக்கு கடைசியில் கதைக்க ஒரு chance கூட குடுக்கவில்லை.. :(
பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்று சொன்ன பிறகு .. என்னதான் செய்யலாம்.. பேசாம குடித்து கும்மாளம் போடாமல் வீரமாய் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டியது தானே.. என்று ஒரு உறுதியான ஆறுதல்கள் சொன்னதுதான் ...
ஒன்று போனால் இன்னொன்று .. இனியாவது .. காதலிக்கும் போது confirmation letter ஐயும் சேர்த்து வாங்குங்க பசங்களா.. இல்லாட்டிஇப்படித்தான் .. நடக்கும்..:)
சாத்திரம் உண்மையா .. கடவுள் இருக்காரா .. சாத்திரம் பார்த்து செய்த திருமணம் எல்லாம் சரியான திசையில் குடும்ப வாழ்கையை கொண்டு செல்கின்றனவா.. அல்லது காதல் திருமணங்கள் சரியானதிசையில்குடும்பவாழ்கையைகொண்டுசெல்கின்றனவா?? இதுக்கெல்லாம் இருந்து யோசித்தால் ஒரு பெரிய சபையே வைக்கலாம்.. வேணாம் விடுங்க .. இந்த தலைப்புகளில் ஒன்றால் ..நானே நன்றே பாதிக்கப்பட்டு இருக்கின்றேன்.. :)
யப்பாடி கடந்த ஒரு நாள் நான் நித்திரை கூட கொள்ளவில்லை,..இந்த ஆரவாரத்துக்க எனது பாட்டு பெட்டியில் ஒரு பாட்டு போயிச்சு.. அதுவும்.. situation song.. :) கேளுங்க நீங்களும் ,..
கடைசியில் suriya வரும் காட்சி பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்ப வில்லை
ஆசைக்காதல்கைகளில்சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம்ஆகுமே
"True love does not come by finding the perfect person, but by learning to see an imperfect person perfectly."
நான் அந்த மாதிரி சுவாமிகள் இல்லை. நல்லவேளை ஒரு அப்பாவியை கள்ளச்சாமியார் ஆக்காத குறை.
வரலாறு : ஒரு காலத்தில் நான் சுவாமியார் வேடம் போட்டு நடித்ததன் விளைவு தான் இன்றும் என்னுடன் அதே சுவாமியார் பெயர் அடி படுகின்றது. ஒரு நாடகத்தில் ஒரு வேடம் சுவாமியார். அதில் இந்தியாவில் இருக்கும் அட்டகாச சாமியார்கள் மாதிரி நானும் நடிக்கணும். மது, மாது சூதாட்டம் என்று பலவற்றை செய்து காட்ட சொல்லி நாடகத்தை இயக்கிய எனது நண்பன் சொல்லிட்டான். இது எதுவுமே தெரியாத பாலகனாய் இருந்த என்னை நடிக்க சொன்னால் எப்புடி. ஏதோ ஓரிரண்டு சினிமா படத்தை பார்த்து போட்டு நடித்தேன். காவி உடை அணிந்து தாடி எல்லாம் வளர்த்து ஒரு சாக்கு பையுடன் ( பைக்குள் ஒரு அரைப்போத்தல் plain dee, பழைய சிகரெட் பெட்டி, சாம்பிராணி புகை வெளியே வரும் வகையில் ஒரு டப்பாக்குள் தணல் + சாம்பிராணி, ஒரு பாட்டு பெட்டி -" பக்தி பாட்டுகள் " - பாடும் ) வீதி வீதி எல்லாம் அலைந்து தெரியும் சாமியார நாடகத்தில் நான் வந்த பகுதி எல்லாம் சூப்பர் கிட். அதால என்னை கொஞ்சம் decend ஆ சாமியாரை மாத்தி சுவாமியார் என்று அழைக்க தொடங்கியாச்சு. இதை வலுச்சேர்க்க நான் கோவில் குளம் என்று அடிக்கடி மினக்கெடுவதால் இன்னும் பெயரை நிலைக்க செய்தது.
அதுசரி இப்பவும் அப்படி ஒரு ரோல் செய்தால் கட்டாயம் கலக்குவேன். கொஞ்சம் மேலதிகமாக அறிவு வளர்ந்து இருக்கு.
(நன்றி : சஞ்சீவன் )
இருந்தாலும் நான் ரொம்ப நல்லவன். பழகி பாருங்க தெரியும்.
தென் ஆபிரிக்காவில் வரும் 2010ல்(ஜூன் 11-ஜூலை 11) 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்க உள்ளது. இதற்கான இரண்டாவது லீக் போட்டிகள் தற்போது நடை பெற்று முடிந்தன. இதில் இறுதியாக இந்த வாரம் நடந்த போட்டிகளில் ( இறுதிப்போட்டி அல்ல )
விறு விறுப்பாக்கிய பிரான்ஸ் -அயர்லாந்து FIFA உலக கோப்பை
இந்த போட்டியை வென்றால் தான் தென்னாபிரிக்கா செல்லலாம் என்று இருந்த பிரான்சுக்கு அயர்லாந்தின் Robbie Keane 32வது நிமிடத்தில் அடித்த கோல் பிரஞ்சு ரசிகர்களை ஒரு கணம் ஆட செய்தது.
Robbie Keane
திறமையான, முதல் தரமான பல வீரர்களை தனகத்தே கொண்ட பிரான்ஸ் இறுதி வரை போராடிய போதும் , வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் இறுதி நிமிடத்தில் வெளியே சென்ற பந்தை ஹென்றி யின் கை மறித்தது மட்டும் இன்றி ஹென்றியே அதே பந்தை வில்லியம் காலாஸ் இக்கு பாஸ் செய்ய வில்லியம் காலாஸ் அடித்த கோலுடன் பிரான்ஸ் இம் தகுதி கண்டது.
நடுவர் ஹென்றியின் கையில் பந்து பட்டத்தை கவனிக்கவில்லை யாதலால் பெரும் சர்ச்சை போட்டி முடிந்த பிறகு ;
ஹென்றியின் கையில் பந்து படும் போது நடுவர் கவனிக்க வில்லையாதலால் இது நடுவரின் தவறே தவிர வேறு யாரும் எதுவும் செய்ய முடியாது என்று FIFA ம் அயர்லாந்தின் கோரிக்கையை கால வாரி விட்டது.
அவர்கள் வழங்கிய அறிக்கையின் ஒரு பகுதி ஆங்கிலத்தில்:
FIFA said in a statement: "FIFA has replied to the request made by the Football Association of Ireland to replay the 2010 FIFA World Cup play-off match held on 18 November 2009 between France and the Republic of Ireland in Paris.
"In the reply, FIFA states that the result of the match cannot be changed and the match cannot be replayed. As is clearly mentioned in the Laws of the Game, during matches, decisions are taken by the referee and these decisions are final."
உண்மையும் அதுதானே நடுவர்கள் சிலவேளைகளில் விடும் தவறால் பாரிய இழப்புகள் எந்த விளையாட்டிலும் இடம்பெறுதல் வழமை. :)
2.ரஷியாவை வீழ்த்திய ஸ்லோவானியா
வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ரஷ்யா ச்லோவானியா விற்கு எதிராக களமிறங்கியது. கடந்த 2002ல் தென் கொரிய அணியை உலக கோப்பை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற Guus Hiddink , இம்முறை ரஷ்யாவின் பயிற்சியாளராக இருந்தார். இதனால் எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 44வது நிமிடத்தில் ஸ்லோவேனிய வீரர் ஸ்லாட்கோ டெடிக், ஒரு சூப்பர் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். இதற்கு ரஷ்யாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இறுதியில் ஸ்லோவேனிய அணி 1-0 என வெற்றி பெற்று உலக கோப்பை தொடருக்கு முன்னேறியது. கால்பந்து ரேங்கிங் பட்டியலில் தற்போது 12வது இடத்தில் உள்ள ரஷ்யா, கடந்த 1994, 2002ல் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. 2006ல் தகுதி பெறாத இந்த அணி, மீண்டும் ஏமாற்றம் அளித்துள்ளது.