
என்ன கந்தசாமி வந்துட்டாரா என்று புலம்புறீங்களா ?? இல்லை இல்லை
முன்னர் நான் பல்கலையில் படிக்கும் காலங்களில் விதம் விதமான Alarm வைத்து விட்டு தூங்குவதும் பின்னர் அறை நண்பர்கள் அதனை நிட்பாட்டுவதும். எங்கள் கழக வாழ்க்கையில் சாதாரணமான விஷயம் தான். எனது அறையில் கூடிய அளவு Alarm வைப்பது நான்தான். அதிகாலை 3மணி இல்லாட்டி 4 மணி என்று வைத்து எழும்பி படிப்பது வழமை.
இருந்தாலும் முதல் நாள் இரவு ஏற்படும் களைப்பு?? பிந்திய தூக்கம்?? போன்றவற்றால் எனது அறை நண்பர்களே தினமும் பாதிக்கப்படுவது.
இதனை நிவர்த்தி செய்ய இப்போது வழி இருகின்றது.
எப்படியா ?? அதுதான் இப்படி ???
எங்களை மாதிரி ஒரு சில நன்றே குறட்டை விட்டு மணித்தியால கணக்காக தூங்கும் நண்பர்கள் இதனால் கோவம் கொண்டாலும். தேவைப்படும் இடத்து அது தனது சேவையை செய்வதால் தூக்கத்தில் இருந்து எழும்பி சென்று வேலைகளில் ஈடுபட முடிகிறது.
எளிமையான அமைப்பை கொண்டதால் சுலபமாக நீங்கள் உறங்கும் கட்டிலில் பொருத்தி விடலாம்.

பார்த்தால் எதோ குண்டு சரி செய்து வைத்த மாதிரி இருந்தாலும் அது அவ்வாறு இல்லை.
PS1:- கட்டில் உங்களை எந்தகட்டத்திலும் தாங்கவல்லது என்பதை உறுதி செய்யவும் !!!
அதன் இயக்கத்தை பின்வரும் காணொளியில் கண்டு மகிழுங்கள்.
http://www.youtube.com/watch?v=kQ-l5PlDa-k
என்ன கொடுமை சரவணா இது???.!!!
PS2:பல பல Alarm என்னும் போது இப்பவும் ஞாபகம் வருவது எனது நண்பர் ஒருவர் தனது பீட சக மாணவிகளிடம் சொல்லி வைத்து தூங்குவார். அவர்கள் அதிகாலையில் எழுப்பி விடுவார்கள்.
நம்மளுக்கு அப்படி யாரும் உதவவில்லை :(
No comments:
Post a Comment