2009-09-30

ஐந்தறிவு ஜீவன்களுடன் சரி அன்பாய் இருப்போம்

சில மனிதர்களின் வெளிப்படுத்தப்படாத கோப உணர்ச்சிகளுக்கு வடிகால்களாக இருப்பது இந்த ஐந்தறிவு ஜீவன்கள் தான்... '

உதாரணமாக
அம்மாவுடன் வீட்டில் ஏதும் பிரச்சினை என்றால் அப்பா வீட்டில் கட்டி போட்டு இருகின்ற நாயுக்கு காலால் அடிப்பார். அந்த நாய் என்ன செய்யும், அடியை வாங்கும்!!
(யோவ்.. நீ தான இங்க கட்டி போட்ட, இப்போ நீயே உதைக்கிறியே.. இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...?', என்று அது கேட்டு இருக்கும் அனால் வாய் இல்லை கதைக்க....!! பின்னர் மாலையில் அவர் சாப்பாட்டு தட்டோடு வருகையில், வழக்கம் போல் வாலாட்டி நக்கி கொஞ்சும் !!!! அது வைத்து இருக்கும் பாசம் கூட சிலவேளைகளில் நாங்கள் வைச்சு இருப்பது இல்லை )

சிலபேரை பார்த்து உள்ளேன் வீட்டில நிக்குற மாட்டை பார்த்து சனியன் முதேவி என்று பேசி பலன் இல்லை. நீங்கள் எதோ ஒற்றை செய்யாத படியால் அது குறை பட்டு உங்களை கோவம் செய்ய வைக்கிறது. என்ன என்று ஆராயுங்கள்.அதை நிவர்த்தி செய்யுங்கள் . அது பின்னர் செய்ய முயற்சிக்காது.

கூட்டில் புலியை கட்டி வைச்சு போட்டு சேட்டை காட்டினால் புலியும் சேட்டை காட்டும் தானே. இவ்வாறே சிங்கத்துக்கும் ஏன் எல்லா ஐந்தறிவு படைத்த மிருகங்களுக்கும் பொருந்தும்.

ஒரு நாளும் மிருகங்களை துன்புறுத்தாதீர்கள். அவை படும் துன்பம் நீங்கள் படும் துன்பத்திலும் கூட. எத்தனயோ மிருக வதைகளை பார்த்து இருகின்றோம். அவற்றை எல்லாம் கட்டு படுத்த முடியாது. இருந்தாலும் நாங்கள் நாங்கள் மிருகங்களுடன் நன்றாகவே நடப்போம்.


சும்மா ஒரு மனசில பட்டிச்சு எங்கள் வீட்டு நாய் குட்டியின் பாசமான பண்பை பற்றி !! அடுத்த வீட்டில் இருக்கும் நாய் குட்டிக்கு அடி போடும் போது எங்கள் வீட்டு நாய் குட்டி அதற்கு support குடுக்கும் விதத்தில் குரல் எழுப்புது. ( நண்பன் சொல்லுறான் நாங்கள் அல்லது எங்கள் இனம் அழிகிறோம்/ அழிகிறது என்று தெரிஞ்சும் அடுத்தவன் குரல் எழுப்பாமல் இருந்த சாதி தானே இந்த மனித ஜாதி அதால இந்த சாதிக்கு எல்லாம் தத்துவம் எழுதாமல் நிப்பாட்டு என்றான்.free யா விட்டுடு என்றான் .. சரி நிப்பாட்டி போட்டன்)

இங்கே பாருங்கள் எவ்வளவு பாசம்மாக அந்த பெண்மணியும் அணிலும்!!!

லண்டன் St. James's Park

பாசமாக இருங்கள் கடைசி ஐந்தறிவு ஜீவன்களுடனாவது !!!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...