2009-11-14

ராத்திரி வேளை-- எட்டு இதமான ராகங்கள்

ராத்திரி வேளை அலுவலகத்தில் நின்று வேலை செய்ய வேண்டி வந்ததால் நண்பிகள் தாங்கள் போடும் பாடல்களை இன்றைக்காவது( வழமையா நான் தான் போடுவது வழக்கம்) ஒரு முறை ரசிக்கும் படி சொன்னதால் அவர்களின் பாடல்களை எக்கேடு கெட்டாவது கேட்டு ரசிக்கலாம் என்ற முடிவோடு பிந்திய இரவு வேலையை ஆரம்பித்தோம்.
ஏறத்தாள மூன்று மணி நேரம் நேரம் போனதே தெரியாமல் வேலை செய்தோம்...

பல இதமான பாடல்களை போட்டார்கள் அதுக்குள் எனக்கு பிடித்த எட்டு பாடல்கள் இங்கே



பாடல் ஒன்று :-

ஜேசுதாஸ் ஜானகி அம்மா இணைந்து பாடி கலக்கி உள்ளார்கள் .. பார்த்தீபனின் ஆரம்ப கால படம்: உன்னை வாழ்த்தி பாடுகிறேன், இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி

ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி (2)
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிபோகும்
நாளும் காதல் ராகம் பாடும் பாடும்
இதழில் போடும் இதழின் காயம் இதழில் ஆரும் இனிமையாகும்
தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்
உன்னை வாழ்த்தி பாடும் பாடல் உதய ராகமோ
நம்மை வாழ்த்தும் நமது உலகம் உதயமாகுமோ
புது கனவு பாலம் தெரிந்ததே...நெஞ்சினில் இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை



இளமைக்காட்டில் இனிமைக்கூட்டில் இருக்கும் தேனை எடுக்கும்போது
காலம் நேரம் தேவை இல்லை இல்லை
மலையின் ஓரம் மலர்ந்த பூவை பறிக்கும் வேடன் இருக்கும்போது
காவல் தாண்டும் முல்லை முல்லை
மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி
வானம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா
அட மனதில் சாரல் அடித்ததா...கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
ஒரு ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை


பாடல் இரண்டு
துள்ளி துள்ளி நீ பாடம்மா

சிப்பிக்குள் முத்து படத்தில் கமலா பாலாவா பாடினது என்று காணொளியை பார்த்தால் குழம்பி போகும் பலர் இருக்கின்றனர்.. சூப்பர் நடிப்பு.. யவ்.. நேரம் கிடைத்தால் படத்தை பாருங்கள் சூப்பர்.. நினைக்கின்றேன் ராதிகா கமல் 50 இல் இந்த பாடலை நினைவு கூர்ந்ததாக..
பாடலை பாலுவும் ஜானகி அம்மாவும் கலக்கு கலக்கி இருக்கிறாங்கள்.. ராஜாவின் சுருதி பெட்டி .. இம்ம..


அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ ஆஆஆ
நிஸரிமபநிஸரிநிரிநிஸநிப நிஸாரிமரிமரிநிஸா
தானனனா தனானா ததரீ..னா..ஆஆஆஆ

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா




துள்ளி துள்ளி துள்ளீ
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

கட்டிய தாலி உண்மையென்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்


கட்டிய தாலி உண்மையென்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்

மன்னவன் உன்னை மறந்ததென்ன
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன

மன்னன் உன்னை மறந்ததென்ன

மன்னன் உன்னை மறந்ததென்ன
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன

தாயே தீயில் மூழ்கி
அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு

துள்ளி துள்ளி துள்ளீ
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

துன்பம் என்றும் ஆணுக்கல்ல
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே

துன்பம் என்றும் ஆணுக்கல்ல
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே

நீ அன்று சிந்திய கண்ணீரில்
இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா

நீ அன்று சிந்திய கண்ணீரில்
இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா

இரவென்றால் மறுநாளே விடியும்
உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்
அன்பு கொண்டு நீ ஆடு
காலம் கூடும் பூச்சூடு
அன்பில்லை நான் ஆட
தோளில்லை நான் பூப்போட

துள்ளி துள்ளி துள்ளீ


பாடல் மூன்றுதேடாத இடமெல்லாம் தேடினேன் ;

பலமுறை கேட்டாலும் ஒரு முறை கூட சலிக்காத பாடல். மீண்டும் பாலுவின் கைவண்ணம் விஜயகாந்தின் வசந்தராகம் படத்தில்..

இந்த படத்தில் விஜய் குழைந்தை நட்சத்திரமாய் நடிததாம்.. விஜய காந்தின் பில்டப் களை பார்த்துதான் பின்னாளில் .................????


தேடாத இடமெல்லாம் தேடினேன்
பாடாத பாட்டெல்லாம் பாடினேன்
ஆணாலும் நான் தேடும் பல்லவி
தாளாமல் வாடினேன்
தண்ணீரில் ஆடினேன்


இதுவரை பாட்டை பிறிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிறிந்த
வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது

லல்லலலல லலலலலலலாஆஆஆஆ

இதுவரை பாட்டை பிறிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிறிந்த
வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது

என்னுடைய பல்லவி கிடைத்தது
நல்லதொரு சரணம் கிடைத்தது
ஹே ஹே ஹே ஹேய்ய்ய்ய்ய்ய்

வெவ்வேறு திசைகளில் ஒடம் என்று
வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா
ஹ இவ்வாறு விழுந்து இங்கே இன்று
சந்திக்க நேர்ந்ததம்மா ஆஆஆஆ

வெவ்வேறு திசைகளில் ஒடம் என்று
வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா
இவ்வாறு விழுந்து இங்கே இன்று
சந்திக்க நேர்ந்ததம்மா என் கண்ணம்மா
துண்பங்கள் தீர்ந்ததம்மா

நிஜமோஓஓ.. நிழலோ ஓஓஓஓ
உன்னை நான் பார்த்தது
பிறிந்தோம் இணைந்தோம்
விதிதான் சேர்த்தது

இதுவரை பாட்டை பிறிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிறிந்த
வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது

மெய் தொட்டு தழுவிய
மஞ்சள் நிலா உன்
கைவிட்டுப்போனதம்மா என் கண்ணம்மா
முன்னாளில் விலகிய வெள்ளைப்புறா உன்
இன்னாளில் தோன்றுதம்மா ஆஆஆஆ

மெய் தொட்டு தழுவிய
மஞ்சள் நிலா உன்
கைவிட்டுப்போனதம்மா என் கண்ணம்மா
முன்னாளில் விலகிய வெள்ளைப்புறா உன்
இன்னாளில் தோன்றுதம்மா என் கண்ணம்மா
என் செல்வம் தீர்ந்ததம்மா ஹ
அடடா இதுதான் இறைவன் நாடகம்
உறவும் பிறிவும் மனிதன் ஜாதகம்

இதுவரை பாட்டை பிறிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிறிந்த
வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது

என்னுடைய பல்லவி கிடைத்தது
நல்லதொரு சரணம் கிடைத்தது


பாடல் நான்கு -ஓ வசந்த ராஜா


படம் : நீங்கள் கேட்டவை
பாடியவர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
இசை : இசைஞானி இளையராஜா
இயற்றியவர் : வைரமுத்து
வெளியான ஆண்டு : 1984

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ...

வெண் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே
சூடிய பூச்சரம் வானவில்தானோ?



ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ

ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைபாயுதே தாகம் அனலாகுதே மோகம்
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
மன்மதக் கோயிலில் பாலபிஷேகம்

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ

பாடல் ஐந்து- சங்கீதஸ்வரங்கள் - அழகன்

இந்த பாடலை எங்கள் வகுப்பு தோழி ஒரு முறை பல்கலையில் பாடி .. கலக்கி இருந்தாள்.. நல்ல பாடல்.. " வாளியின் மகிமை" சொல்லும் பாடல்.. எப்படி எல்லாம் வைக்குறாரு .. என்று யோசிக்க வேண்டாம்.. இதை விட பல பேர் ,... வைச்சதை நாங்கள் பார்த்து களைத்து போயிட்டோம்..


சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா, என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு, அங்கே இரவா,
இல்லே பகலா, எனக்கும் மயக்கம்
நெஞ்ஞில் என்னவோ நெனச்சேன்,
நானும் தான் நினைத்தேன்
ஞாபகம் வரல,
யோசிச்சா தெரியும்,
யோசனை வரல
தூங்கினா விளங்கும்,
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு


.

என்னென்ன இடங்கள்,
தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லி தா
சொர்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல்கடிதம் இன்றுதான் வந்தது
சொர்கம் வெண்ணிலே திறக்க
நாயகன் ஒருவன், நாயகி ஒருத்தி
தேன்மழை பொழிய, பூவுடல் நனைய
காமனின் சபையில் காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்

பாடல் ஆறு - என் கண்ணுக்கொரு நிலவா - பாக்கியராஜ் பானுப்பிரியா
படம் - ஆராரோ ஆரிரரோ
பாடல் வரிகளை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை..





பாடல் ஏழு: முத்தமிழ் கவியே தர்மத்தின் தலைவன் - பெரிய அளவில் வெற்றி பெறாத படமாயினும் படத்தில் வந்த எல்லா பாடல்களும் சூப்பர் கிட். என்றும் ரசிக்கலாம்..




அதில் முத்தமிழ் கவியே யும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..




பாடல் எட்டு உடன் பிறப்பு


இந்த பாட்டு ஒருமுறை நான் எனது பாட்டு பெட்டிக்கு பாட்டு recording செய்யும் போது என்னையறியாமலே எனது லிஸ்ட் இக்குள் வந்து சேர்ந்து பிறகு எனக்கு இன்று வரை பிடித்து கொண்டு இருக்கும் பாடல்

நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே

ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போது
புதுமொழி நாளும் கேட்டு இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம் என விதி வழி நானும் ஓட
போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே




வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே
திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீதி தானே
நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே

2009-11-04

பேராதனைப்பல்கலைக்கழகத்தில் உள்ள குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் நான் கலந்து கொண்ட சூரன் போர்.- நினைவூட்டும் நினைவுகள்

வருடாவருடம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி விரதம் தொடங்கப்பட்டு ஆறு நாட்கள் ஆறுமுகப்பெருமானை வழிபடப்படுகின்றது. அந்த வகையில் சென்ற மாதமும் 19ம் திகதி தொடக்கம் 24ம் திகதி சனிக்கிழமை வரை கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்பட்டது


போரிட முன் சூரனின் விநாயாகர் வழிபாடு



இறுதி நாள் மாலை சூரன் போர் பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் களைகட்டும். குறிப்பாக முருகன் கோவில்களில் மக்கள் அலை மோத முருகன் சூரனுடன் போராடுவார்.



வரலாறு

அசுரகுல நாயகனாக இருந்த தொல்லைகள் அளவுக்கு மீறிய சமயத்தில், அவனுடைய ஆணவத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று தேவர்கள் முருகப் பெருமானிடம் வேண்டுகோள் வைத்ததாகவும், முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கடற்கரையில், சூரபத்மனுடன் முருகப் பெருமான் போரிட்டு சூரனை வென்றதாகவும், முருகப்பெருமான் சூரபத்மனுடன் போரிட்டு வென்றதை கந்த சஷ்டி விரதமாக பக்தர்கள் மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபடுவதாகவும், சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதத்தை நிறைவேற்றியதாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.




இது இவ்வாறு இருக்க .. எனக்கு தெரிந்த முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் பார்த்து இருந்தாலும், குறிப்பாக எனது பல்கலைக்காலங்களில் குன்றத்தில் உள்ள குறிஞ்சிக்குமரனில் கலந்து கொண்டு உடல் பயிற்சி செய்ததை நினைத்தால் எப்படா கெதியா தாயகம் சென்று மீண்டும் களத்தில் இறங்க வேண்டும் என்ற அவா தோன்றும்.

எனது அனுபவங்கள் ஒரு சில கதையம்சமும் , புகைப்பட தொகுப்பும் நிறைந்ததாக இங்கே வலம் வருகின்றது.

எங்கள் சூரன் சுமார் 4 அடி உயரம், பிதுங்கும் விழி, கையில் அம்பு வில்’ நீல நிறத்தில் ,அச்சுறுத்தும் பார்வையுடன் இருப்பார்.
தினமும் நாங்கள் முருகனை தூக்கி தூக்கி தோளில் வைத்து வீதி உலா வரும் இளம் சிங்கங்கள் அன்று மட்டும் எதிரியின் பக்கம்
சூரனை வழிப்படுத்தி முருகனுடன் போரிட செய்தல் எங்களின் கடமை.
மாலை நான்கு மணிக்கு சனம் வர தொடங்கும், பல்கலை மாணவர்கள் தவிர ஊரார் , விரதம் பிடிப்போர் என்று சனம் நிரம்பி வழியும்.


ஆரம்பமே அமர்க்களம் ..

சரியாக நான்கு மணி பிள்ளையார் பூசையுடன் சூரன் தன் படையணிகளுடன் தயாரகி விடுவான். எனக்கு தெரிந்த அளவில் தளபதிகள், பிராந்திய தளபதிகள், கட்டளை தளபதிகள் எல்லாம் முதலே திட்டங்களுடன் இருப்பதால் , இலகுவில் காலாட்படை , உளவறியும் படை, கிளைமோர் வைக்கும் படை என்று எல்லாம் பெயர் வைத்து இருக்கும் ஆட்களை வைத்து கொண்டு சூரன் போரை முன் நடத்த கூடி இருக்கும்.

ஒரு முறை உணர்ச்சி வசம் கொண்ட தோழர்கள்கள் வசந்த மண்டபத்துக்குள்ளேயே புகுந்து விட்டார்கள் சூரனுடன் . கோவில் குருக்களே பயந்து ஈடாடி போனார் :)



பெரும்பாலும் விரதம் பிடிப்போர், தொந்திகளுக்கு தொல்லை குடுக்காமல் இருப்போர் முருகனுடனையே நின்று கொள்ளவர்,

குறிப்பாக இந்தச் சூரன் சிங்கத்தலை,யானைத்தலை,எருமைத்தலை என பல தலைமாற்றங்கள்.

சூரன் ஆரம்பத்தில் யானை முகத்துடன் வந்து செய்யும் அட்டகாசமான நகர்வுகளை முருகன் நக்கலாக ;" என்ன சின்ன பிள்ளை தனமாய் இருக்கு என்று " பார்த்தாலும் , தொடரும் விறு விறுப்பான தாக்குதல் மூலம் முருகன் மட்டும் இல்லை பார்க்க வந்தவர்கள் சரி, குருக்கள் சரி திணறிபோடுவார்கள்.



முன்னுக்கு கொம்பு பிடிக்கும் என்னை போன்ற கொஞ்சம் உடம்பு மிக்கவர்கள் தங்கள் சாதுரியத்தை பாவித்து வேகமாக வந்து குதி அடிக்கும் ப்ரேக் சூரனை காவுறவர்கள் திக்கு முக்காடி போகும் அளவுக்கு அப்படி ஒரு கால் பிரேக். சட புட என்று அடிக்கும் வட்டம் , கீழே மேல என்று சடம் புடாம் என்று தூக்கி போட்டு கொண்டு பின்னுக்கு போகுதல் ,முன்னுக்கு வரல் , சடார் என்று எல்லாத்தையும் போட்டுட்டு ஓடி போதல் , எல்லாம் வியக்கும் ஆரம்பங்களே. இதிலும் இன்னொன்று ஒரு முறை கொம்பு பிடித்த நான் என்னை மீறி கொம்பு சென்றாதால் அருகில் உள்ள ரோஜா தோட்டத்துக்குள் தூக்கி எறியப்பட்ட சோகமான சம்பவங்களும் நடந்துள்ளது. எனக்கு மட்டும் இல்லை பலர் அப்படி மாட்டி உள்ளார்கள்.

களைப்பு என்பதற்கு இடமே இல்லை . போரை தோய்ய விடாமல் மாறி மாறி படையணிகளை சூரனுடன் அனுப்பி போரிடுதல் தான் எங்களை போன்ற மூத்த உறுப்பினர்களின் கடமை. ஆரம்பத்தில் ஒருக்கா களைத்தாலும் , பிறகு பழகி போடும்.

களைக்கும் தோழர்களுக்கு விசேடமாக குளிர் பானங்கள்,தேநீர், கோப்பி, வடை , பிஸ்கட் என்று சாராமாரியாக குடுத்து உற்சாக படுத்த எங்களின் சமையல் படையணி , பின் புலத்தில் இயங்கும்.


எல்லாத்திலும் பாராட்ட வேண்டிய ஒருவர் சூரனை இப்படி எல்லாம் நாங்கள் வதை செய்யும் போது சூரனின் தலையை ஆட்டும் மகான் , படும் அவலமோ சொல்ல முடியாது. இருந்தாலும் அவரின் வல்லமையால் எல்லாம் சமாளிப்பது( களத்தில்), அடுத்த நாள் அவருக்கு அதன் பலன் தெரியும் என்று நினைக்கின்றேன்:)

ஏறத்தாள ஒரு மணி கடும் போருக்கு மத்தியில் பிள்ளையாரடியில் முதலாவது தலை விழும்.
விசேடமாக தவில் பிடித்து அடிக்க வைப்பது எங்களை போன்றோருக்கு ஒரு ஆசை.
மேளம் சரி இல்லாட்டி போர் சூடு பிடிக்காது. தவில் அடிக்கும் அடியில் பொடியன்கள் சிறப்பாக செயல்படுவான்கள்.

கந்த சஸ்டி கூட ஒரு fast track அடிதான்.
நாங்கள் சினிமா பாடல்களுக்கு தடை அதனால் எல்லாமே முருகன் பாட்டு தான். அதுவும் ஒரு கிக்கு தான்



வீதி எங்கும் சனம் நிரம்பி வழிய அவர்களுக்கும் சூரன் சென்று பிரேக் போடுவதும் அவர்களை ஒருக்கா கத்த செய்வதும் சூரன் செய்யும் ரீங்கார சேஷ்டைகள். அதுவும் மழை பெய்யும். எங்களுக்கு சொல்லியா குடுக்கணும் அடிக்கும் பிரேக் சேறு எல்லாம் கொண்டே எல்லாரிலும் பிரள செய்து பார்த்து கொண்டு நிற்பவர்கள் எல்லாம் களத்தில் இறக்குவதே நோக்கம்.




இதை விட பொடியல் எல்லாம் வேட்டியும் சால்வையுமா நிக்கும் போது, பெண்கள் யார் எல்லாம் கட்டுடம்பு பொடியல் என்று என்று ஒரு ஓரக்கனாலே பார்ப்பதும் இந்த சூரன் போர் இல் தான்.



சிங்க தலையுடன் திரியும் சூரன் காட்டும் வித்தைகள் பல, சாரமாரியான வித்தைகள். விறு விறுப்பானது சூரனை தாங்கியவாறு முழங்காலில் நடப்பது , கடினமான ஒன்றாயினும் அந்த நேரம் எல்லாம் போர் மயமாய் இருக்கும் போது செய்துபோடுவார்கள்.


இதை விட ஹலோவீன் ஸ்டைல் இல் வெளிக்கிட்டு வந்த காட்டும் மாஜா ஜாலங்கள் பல. எல்லாமே புதுசா இருக்கும்.





இறுதியாக உள் வீதியில் நடக்கும் பாரிய முறியடிப்பு தாக்குதால் தான் நெருப்புடன் வந்து தாக்குதல். இது முதன் முறை செய்யும் போது முருகனை தூக்கி கொண்டு முன்னுக்கு நிண்ட விடலை பசங்கள் எல்லாருமே ஓடியே போட்டாங்கள் நெருப்புக்கு பயத்தில. இதில இருந்தே தெரியும் யார் எல்லாம் முருகன் பக்கம் இருப்பாங்கள் என்று. வாயுக்குள் மண்ணெண்ணெய் நிரப்பி பந்தத்துக்கு ஊதி நெருப்பால் முருகனை வெருட்டல். உண்மையில் அதை செய்த நம்மட நண்பன் துளசிக்கு வாழ்த்துக்கள். உண்மையாவே அதை செய்வது கடினம் அந்த டென்ஷன் இல் நெருப்பு பரவி வர வேணும். வியக்கும் வித்தைகள்..










108 தடவைகள் சூரனை தூக்கி எறிந்து பிடித்தல், தோளில் நண்பர்களை ஏற்றியவாறு அவர்களின் மேல் சூரன் ஓடி திரிதல், இன்னும் என்னை வியக்கசெய்தவை.

இடும் கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றும் தோழர்கள். நினைக்கவே மெய் மறக்குது.



மூலஸ்தானத்துக்கு முன்பாக கோபுர வாசலில் நடை பெறும், மலைக்குள் இருந்து பதுங்கி தாக்குதல், சேவல் , மயில் எல்லாம் இல்லாடியும் எல்லாம் கொடிகளே. இருக்கும். இருந்தாலும் விறு விறுப்பாக செய்து வைப்பதில் முருக அடியார்கள்.

வெளி வீதியில் நடக்கும் போரில் முதலில் மாமரக்கிளையுடனும் வருவார். அந்தக் கிளையில் தொங்கும் மாங்காய்க்கு நாங்கள் அலையா விட்டாலும் அந்த மாங்காய்க்கு, திருமணமான பெண்களிடமும், பலகாலம் குழந்தைப் பாக்கியமில்லாப் பெண்களிடமும் கேட்டால் சொல்வார்கள் இந்த மாங்காய் சாப்பிட்டால் குழந்தைப் பாக்கியம் கிட்டுமென்பது நம்பிக்கை.அது நடந்ததாகக் கூடப் பலர் கூறக் கேட்டுள்ளேன்

அதற்கு பிறகு நடை பெறும் இறுதி யுத்தத்தில் 108 தடவைகள் வட்டம் அடித்தல் சொல்லி முடிக்க்க இயலாது, முடியும் கையேடு மாறி மாறி மூன்று தடைவைகள் அடிக்கும் வட்டம், கீழே மேலே தூக்கி போட்டவாறு ஓடி திரிதல் தண்ணி விசிறியவாறு அங்கேயும் இங்கேயும் ஓடுதல், என்று பல வித்தைகளை காட்டி இறுதியாக முருகனின் காலில் இரவு 9 மணியளவில் சரண். ஐந்து மணி நேரம் நடந்த உக்கிர சண்டை முற்றும்பெறும்.
இதற்குள் இவ்வளவு நடந்தும் தொடர்ந்து விஷேட அபிஷேகம் அன்று சொல்லி இரவு 11.30 மணி செல்லும்.


அதிகாலையில் பாறணை சமையல் (2002)
இடம் இருந்து வலம் தேவர், பிரியன், பத்மநிருபன், அரவிந்தன்

இதிலும் சுவரஷியம் என்னவென்றால், பலர் இரவு கோவிலில் தங்கி அதிகாலை நடை பெறும் பாறணை பூசையில் கலந்து கொள்வார்கள். இரவு முழுக்க இருந்து அடிக்கும் அரட்டை அதிகாலை 3 மணிக்கு நிறைவுக்கு வரும். நீராடி போட்டு சமையலில் ஈடுபட்டு காலை 6 மணிக்கு பாறணை தயார். பிறகு அந்த பூசைக்கு பின் விரதம் முறிப்பவர்கள், முறிக்க எங்களை போன்றவர்கள் நல்லா ஒரு பிடி பிடித்து போட்டு தூக்கம் கொள்ள சரி. பகல் மீண்டும் திருக்கல்யாண தயார் படுத்தல்கள். அது இன்னொரு பெரிய நீண்ட கதை.

எல்லாம் முடிய இரவு போய் அறையில் படுத்தால் சொர்க்கம் தெரியும், முந்த நாள் போட்ட ப்ரேக், சுழட்டி அடிச்ச வட்டம், தூக்கி எறிந்த ஏறி ...எல்லாவற்றின் பின் விளைவுகள் பல,


முதல் நாள் அடிச்ச ப்ரேக் அடையாளங்கள்

எல்லாம் நன்மைக்கே என்று போட்டு பனடோல் தேவையாயின் அதனையும் போட்டு போட்டு பல்கலை சென்ற வரலாறுகளும் இருக்கு.


இங்கே பகிரப்பட்ட படங்கள் என்னிடம் இருந்தவை, பலர் எங்களை போல செய்தார்கள், செய்கிறார்கள்,செய்வார்கள் அவர்களுக்கு எல்லாம் குறிஞ்சிக்குமரன் அருள் கட்டாயம் கிடைக்கும் என்று சொல்லி எனது அனுபவங்களை நிறைவு செய்கிறேன்.

எனக்கு பிடித்த "இதயம்" சொல்லில் ஆரம்பிக்கும் "இதயம் வலிக்கும் " பாடல்கள்

இந்த தலைப்பில் எழுத எந்த பின் காரணங்களும் இல்லை. எனக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கும் அதனால் இந்த பாட்டுகளை விரும்புகிறேன் என்று நினைக்க வேண்டாம். பின்னடைவுகள் தான் பிறகு பாரிய வெற்றியை தரும் என்ற நம்பிக்கையில் ... !!!


ராத்திரி இணைய வசதி இல்லை அதனால் இருந்த காணொளி பாடல்களை வரிசைப்படுத்தி பார்த்தேன்.
அதில் ஒரு சில என்னை எப்பவோ கவர்ந்தவை. அதில் இதயம் என்று ஆரம்பிக்கும் பாடல்கள் மூன்று .
ஒருக்கா நீங்களும் கேளுங்கள். நிச்சயம் பிடிக்கும் என்று நம்புறேன்





பாடல் ஒன்று :-


மோகனின் சூப்பர் கிட் படங்களில் ஒன்று தான் தான் இந்த இதயக் கோவில், எத்தனை முறையும் பார்த்து கொண்டு இருக்கலாம். பாடல்கள், கௌண்டமணி பகிடிகள், காதலின் வலி என்று எல்லாமே நிறைந்த ஒரு நிறைவான படம். ஒரு சோகமான முடிவு.. என்ன செய்வது காதல் தோல்வி என்று வந்துவிட்டால் இது எல்லாம் விளைவுகள் தான் என்பதை புரிய வைத்த படம்.

படம்:- இதயக் கோவில்
பாடியோர்:- எஸ் பி பாலசுப்ரமணியம்,இளையராஜா
இசைஅமைத்தவர்:-இளையராஜா


இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்


(டூயட் )

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்

ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல
எனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்


(சோகம் )

காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதத்தால்
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்


பாடல் இரண்டு

நான் பிறந்த ஆண்டில் வந்து இன்று வரை இல்லை என்றுமே இந்த பாடல் மெகா ஹிட் தான். ஈழத்து வானொலிகளில் ராத்திரி வேளையில் நடக்கும் பழைய மெட்டுகளை மீட்டி தரும் நிகழ்ச்சிகளில் இந்த பாட்டு எப்படியும் ஒலிக்கும். எனக்கு அங்கே கேட்டு தான் விளைவால் தேடி பிடித்து வைத்து இருக்கேன்.

படம் : புதிய வார்ப்புகள்
பாடல் : பஞ்சு அருணாசலம்
பாடியவர் : ஜென்சி
இசை : இளையராஜா
வெளியான ஆண்டு : 1979
பாரதிராஜா, பாக்யராஜ், ரத்தி அக்னி ஹோத்ரி


இதயம் போகுதே
இதயம் போகுதே எனையே பிரிந்து
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ
இதயம் போகுதே

மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று
கைகள் தட்டிய காலை சென்றதெங்கே
அரும்பான என் காதல் மலராகுமோ
மலராகி வாழ்வில் மனம் வீசுமோ
இதயம் போகுதே எனையே பிரிந்து



லாலல லாலல லாலல லாலல
லால லால லால லால.....

சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன்போல்
தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா
குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ
வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ
இதயம் போகுதே எனையே பிரிந்து

மலைசாரல் ஓரம் மயிலாடும் நேரம்
பாடல் சொல்லவும் தேவன் இல்லையம்மா
நிழல் போல உன்னோடு நான் சங்கமம்
தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்

இதயம் போகுதே எனையே பிரிந்து
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ
இதயம் போகுதே

பாடல் மூன்று

எல்லாருக்கும் தெரிந்த முரளியின் இதயம் படத்தில் இடம் பெற்ற இதயமே இதயமே பாடல் .

காட்சியும் அதன் பின் பாடலும்



சரிங்க இப்போ பாடல்


இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே



பனியாக உருகி நதியாக மாறி
அலை வீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர்க் காதல் உறவாடிக் கலந்தேன் இன்றே
இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்

இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே

என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சைத் தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்

இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே

2009-11-03

வடிவேலுவுக்குமா ??


ஆகா இப்படியும் செய்யுறாங்கள் .................
நல்ல ஒரு தேர்வு ....எடிட்டிங்..





முக்கியமாக இதையும் பாருங்க உள் கருத்து உள்ள ஒரு நகைச்சுவை ( காலத்துக்கு ஏற்றது)



இதுதான் உள் கருத்து :
அமெரிக்காவில் நிக்கும் ..................... இடம் விசாரிக்கும் போது இந்த போலீஸ் இக்கு ஏற்பட்ட நிலவரம் தான் அமெரிக்காவின் சீ ஐ எ இக்கும்..
நீங்களே பாத்திரங்களை தெரிவு செய்யுங்க

2009-11-01

பிந்தி கொண்டு போகும் வேட்டை காரனும் .. பின்னால் பரவும் வதந்திகளும் கதைகளும்

ஒரு புறம் விஜையை மறு புறம் தயாரிப்பாளர் கலா நிதி மாறனையும் சேர்த்து வைச்சு ரௌண்டு கட்டி அடிக்கிறாங்கள்.. ஒரு முறை சொன்ன விஜய் ஜோக்ஸ் பின்னால (ஏற்கனவே அடிக்க திரியுறாங்கள் என்று கேள்வி ..) இருந்தாலும் என்னும் ஒரு பகுதி தரலாம் என்று இருக்கேன்.

வேட்டைக்காரன் படக்கதை:

பண்டிக் காய்ச்சல் நோயால விஜய்யோட குடும்பமே மாண்டு போகுது. அதுக்குப் பழிவாங்க விஜய் உலகத்தில உள்ள எல்லாப் பண்டிகளையும் வேட்டையாடுகிறார். கிளைமாக்ஸ்ல நூறு பண்டிகளை ஒரே நேரத்தில் ஒரே ஒரு பன்ச் டயலாக் சொல்லி கொல்ல முயற்சிக்கிறார். தொண்ணூற்று ஒன்பது பண்டிகள் உடனே செத்து விழ, மீதி ஒரு பண்டி மட்டும் செவிடு எண்டு கண்டு பிடிப்பதுதான் விஜயின் மதியூகம். அந்த ஒரு பண்டியையும் த்ரில்லா ஒரு டான்ஸ் ஆடி கொன்று விடுவது படத்தைப் பார்பவர்கட்கு நுனிக் குண்... இருக்க வைக்கிறது! ஆல் இன் ஆல் தியேட்டரில கதிரையே தேவைப் படாது! - நன்றி சனா ...

முக்கியம் : வெளியில சொல்லி போடாதிங்க அடுத்த படத்துக்கு கதையா எடுத்தாலும் எடுதிடுவான்கள். கவனம் :)




அடேங்க் கொய்யால வேட்டை காரனுக்கு பின்னால இவ்வளவு ரண களம் நடந்து இருக்கு ....இல்லைங்க இன்னும் இருக்கு .. கலாய்க்க..


1. மாறன் :நம்மளோட படம் 100நாள் ஓடனும்
விஜய்: இல்லை 200நாள் ஓடனும்
மாறன் :ஜோக் அடிக்காதிங்க சார்
விஜய்: ங்கொய்யால முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?


2.ரிப்போர்ட்டர் : சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்?
விஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.


நன்றி loshan:)

3.முதல் பரிசு அடையார்ல பிளாட், ரெண்டாவது பரிசு கார்
போட்டி நடக்கும் இடம் சேப்பாக்கம் கிரவுண்டு.
தகுதி: எதையும் தாங்கும் இதயம்
போட்டி என்னன்னா விஜய் நடிச்ச குருவி படம் 10 முறை பாக்கனும்
போட்டியின் விதிகள் : படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது,அவர் என்ன பண்ணினாலும் திட்டாம படம் பாக்கனும்...முக்கியமா உயிரோட இருக்கனும்..

போட்டிக்கு வந்த ஒருத்தன்: கொய்யால ஒருக்கா பார்த்தே குடல் இல்லாமல் போற அளவுக்கு வாந்தி .. அப்புறம் ௰ தரமா .. ஐயோ அம்மாடி வேணாம்டா.. எஸ்கேப் ..


4.விஜய் அரசியலில் சேர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தன்னுடைய முதல் பட்ஜெட்டைஎப்படி தயாரிப்பார்.
ஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுப்பார்( ரீமேக்)

5.விஜயின் அடுத்த 7 படங்கள்
வேட்டைக்காரன், சமையல்காரன், குடிகாரன்,பைத்தியக்காரன்,பிச்சைக்காரன்,குடுகுடுப்பைக்காரன்..
(கதை தெரிந்தோர் தொடர்பு கொள்ளவும்.. )


6 எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?.
விஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.
எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா நீ என்ன கொல்ல பாக்குறியே.......எஸ்கேப்

அம்மாடி இன்னொரு ,,,, காரனில் சந்திக்கும் வரை .. பாய்..........................................

2009-10-31

எனக்கு பிடிச்ச சினி திரையில் வராத பைலா பாடல்கள்



பல பாடல்களை கேட்டும் பார்த்தும் உள்ளேன் .. இருந்தாலும் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள்.

ரசித்து பாருங்கள் ..


1. ஏய் மாமா ..





2. வேம்படியில என் குருவி ( அம்மாடி அது அந்த குருவி இல்ல .... சபார் .. எனக்கு அடிக்கடி இந்த குருவி மட்டர் கிராஸ் பண்ணுது .... )
நன்றி - மெல்போர்ன் கமல் ( வரிகளை சுட்டேன்)

குரல்: ‘என்ரை மனுசி சண்டை போட்டால் சாரயம் கேட்குதடா. அந்தச் சாரயம் உள்ள போனால் பைலா கேட்குதடா....


குரல் 02: ஊத்தடா......மச்சான்.. சுதியேத்தினது போதும்டா..டேய்.... பாடடா....தோடா...


பாடல்:
வேம்படியிலை என் குருவி ஏ. எல் படிச்சவா
தாவடியிலை என் மனசை கொள்ளை அடிச்சவா
சில்லாலை கிழக்காலை தையல் படிச்சவா-ஒரு
சொல்லாலை தெல்லிப்பளை லூசர் அடிச்சவா

‘’ஏ...கந்சாமி கானா... கேளு கரவெட்டி மைனா’
நாவாந்துறை மீனு என்கிட்ட ஆட்டாதே வாலு!
(வேம்படியிலை என் குருவி...)


( கலவை பொருத்தம் இல்லை இருந்தாலும். பாட்டை ....ரசியுங்கள் ...)


சுன்னாகம் சந்தைக்கு நான் அன்றாடம் போகையிலே
பன்னாகம் பஸ்ஸுக்குள்ளே பார்த்துச் சிரிச்சவளே
வட்டுக்கோட்டை மேஸ்திரியார் கட்டினது கந்தர்மடம்
காங்கேசன் சீமெந்திலை கட்டினேண்ட்டி காதல் மடம்
சுண்டுக்குளி வந்ததுமே நெஞ்சுக்குளி நோவுதடி..
நாவற்குழி அண்டங் காகம் நாவறண்டு பாடுதடி.....
கந்சாமி உனக்கு காதல் கண்றாவி எதற்கு
நெஞ்சோடு சோகம் தீரும்... அண்ணாந்து ஊத்து
((வேம்படியிலை என் குருவி...)



உண்ணாமல் உறங்காமல் உடுப்பிட்டி பஸ்ஸெடுத்து
அச்சுவேலி, ஆவரங்கால் புத்தூரில் நான் தவிக்க
இணுவில் மாம்பழத்தை, கோண்டாவில் கொய்யாவை
கொக்குவில் அணில் பார்த்துக் கொட்டாவி விட்ட கதை
நல்லூர் கந்தனுக்கு நாநூறு பழத் தேங்காய்
கீரிமலை வேந்தனுக்கு கேணி ஏறித் தீர்த்தம் வைத்தேன்
கந்சாமி உனக்கு காதல் கண்றாவி எதற்கு
நெஞ்சோடு சோகம் தீரும்... அண்ணாந்து ஊத்து
((வேம்படியிலை என் குருவி...)






அரியாலை ஊருக்குள்ளே மரியாதை உள்ளவனை
சரசாலைத் தவறணையில் குடிகாரன் ஆக்கிவிட்டாய்
கொட்டடியில் கோட்டை வைச்ச வெள்ளையனைக் கலைச்சது போல்
நாயன்மார்க்கட்டில் வைச்சு நாயே என்று கலைச்சு விட்டாய்
நவாலிப் புலவனுக்கு மீசாலைத் தாடியடி
கிளாலிக் கடலுக்குள்ளை பலாலி ஆமியடி.....
கந்சாமி உனக்கு காதல் கண்றாவி எதற்கு
நெஞ்சோடு சோகம் தீரும்... அண்ணாந்து ஊத்து
((வேம்படியிலை என் குருவி...)



3. இப்போது பிரபல்யமாகி வரும் யாழ் தேவி பாடல் ..






4.. போனால் போகுது நம்மட SL Night :)
எத்தனையோ தாங்குறீங்க இதையும் சேர்த்துகுங்க

2009-10-27

தொடரும் மிட் நைட் மசாலா

நண்பிகளின் ஆசைக்கு /வேண்டுதலுக்கு ஏற்ப, நான் என்ன மிட் நைட் மசாலாவில் அடுத்து என்ன பாட்டு. என்று கேட்டதிற்கு, ( முதல் பாட்டு நடந்து அடுத்த பாட்டிற்கு இடையில் விளம்பரம் வந்ததால் அவர்கள் விடைபெற்று சென்றார்கள்.. அதால எல்லாருக்கும் சேர்த்து ....பதில்..

கதவடியில் சென்று வழியனுப்பி போட்டு வந்து பார்த்தால் .. தொடரும் மிட் நைட் மசாலாவில் ..

வள்ளி படத்தில் இருந்து.. என்னுள்ளே என்னுள்ளே .. ஆகா நல்ல பாடல்.. என்னுடைய favorite ..

பாட்டை கேட்க முதல் ஒரு பொழிப்பு:

பெண்ணின் போராட்டம் பற்றி ரஜனி எழுதி தயாரித்த இந்த வள்ளி படம்.. பார்க்க தவறியோர் பாருங்கள். இதில் இருக்கும் வடிவேலுக்கும் இப்போதைய வடிவேலுக்கும் ஆயிரம் வேறுபாடுகள்..




சாரம்சம் :
ஒரு பெண்ணை காதலித்து, அவளை கர்ப்பிணியாக்கிவிட்டு தலைமறைவாகிறான் ஓர் இளைஞன்.அவன் அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பாவிப் பெண்களை ஏமாற்றுவது என்பது அவனுக்கு பொழுதுபோக்கு. ஆனால் அந்தப் பெண் உண்ணாவிரதம் இருந்து தங்கள் காதலை ஊருக்கே தெரிய வைத்து அவனை பணிய வைக்கிறாள். துரோகியான காதலன், கணவனான மறுநிமிடமே அவனை கத்தியால் குத்திச் சாய்க்கிறாள், கதாநாயகி பிரியாராமன். இந்த `வள்ளி' படத்தில்தான் பிரியாராமன் அறிமுகம் . புரட்சிகரமான கதை அமைப்பைக் கொண்ட இந்தப் படத்தை, கே.நட்ராஜ்( சிலோன் நடராஜா ) டைரக்ட் செய்தார். . "அன்புள்ள ரஜினிகாந்த்'' படத்தை டைரக்ட் செய்தவர் என்றும் முன்னர் ஒருமுறை சொல்லி இருந்தேன்.
இளையராஜா இசையமைத்தார். பெறும் வெற்றியை தராத போதும்( பாருங்க உண்மையை சொல்லுறன் - தீவிர ரஜனி ரசிகனாய் இருந்தும், இப்படி மற்றையோரும் இருங்களேன்..டண்டனக்கா..டண்டா...)குடும்பமாய் பார்க்க கூடிய கதையம்சமான படம்.
தனது மனைவி இதை செய்யவில்லை.. ஆனாலும் இன்னொருத்தி சாதித்து காட்டி விட்டாள் என்று கதையை முடித்து இருக்கார் சூப்பர் ஸ்டார்.

நீ விரும்பிறதிலும் பார்க்க உன்னை விரும்பிறவளை கட்டி கிட்டா வாழ்க்கை நல்லா இருக்கும் என்ற ஒரு punch dialog ஐ சொல்லி நம்ம இளையோரின் மனசை திருடி சென்றார் நம்ம சூப்பர் ஸ்டார் :)


"என்னுள்ளே என்னுள்ளே'', "வள்ளி வரப்போறா'', "கூக்குவென கூவும் குயிலக்கா'', "என்னென்ன கனவு கண்டாயோ'' என அத்தனை பாடல்களும் சிறப்பாக அமைந்தன.

கே.நட்ராஜ் இக்கு உதவி இயக்குனர்களாக பணியாற்றிய ஹரி (தற்போது சூர்யாவின் சிங்கம் தயாரிக்கிறார் . இதை விட சாமி , நயன்தாராவை உலகுக்கு கொண்டு வந்த ஐயா , சூரியாவின் வேல், ஆறு எல்லாமே சூப்பர் படம்.), மணிபாரதி இருவரும் உச்சத்தில் இப்பொது.

படத்தில் இந்த பாடலை பாடியவர் : ஸ்வர்ணலதா ,ராஜா அனுபவித்து பாடியுள்ளனர்.. .. என்ன ஒரு அற்புதமான பாடகி ஸ்வர்ணலதா .. இப்போது சான்ஸ் இல்லாமல் ..:(


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிளிட்டதேன்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்





கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்கமே தான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்


High Quality- Film Video Song

இதையும் பாருங்க ..



வள்ளி வர போறா பாடல்

இந்த பாட்டு எனது கல்லூரி காலத்தில் ஒரு தமிழ் தின விழாவில்( பெரும்பாலும் 1993 இல் ) எங்கள் கல்லூரி அண்ணா மார் பாடி கலாய்த்து இருந்தனர்.




குக்கூ கூ கூ கூவும் குயிலை பார்





டிங்கு டாங்கு ரப்பபோ ..




விறு விறுப்பான காட்சியான " அவளது ஆசையை தீர்த்தல் "

ராஜா அங்கிள் பாடின " என்ன என்ன கனவு கண்டாயோ .. வாழ்க்கை ஒரு கனவு தானையா .."பாடல்



இந்த பாட்டோட்டு அடியேனும் உறக்கம் கொண்டதால்... மிட் நைட் மசாலா முற்றும்.
Related Posts Plugin for WordPress, Blogger...