2009-10-24

மீண்டும் மீண்டும் வா -Mid Night Masala..

என்ன தலைப்பே சரி இல்லை என்று யோசிக்காதையுங்க....
நேற்று ராத்திரி ( ஆஹா .. திரும்பவும்... ) சூரன் போர் முடித்து விட்டு வீடு வந்து சேரும் போது, நள்ளிரவு ஒரு மணி. உடல் சலிப்பு , களைப்பு என்று போட்டு என்னுடன் வேலை செய்யும் நண்பிகளும் ( எல்லாமே அயல் வீடுகள் தான் ) சூரன் போர் முடிச்சு வந்ததால் அவர்களும் என்னுடன் தேநீர் அருந்த ஆரம்பிக்கும்போது தொலைக்காட்சி பெட்டியை முறுக்கினால் அடுத்த நிகழ்ச்சியாக மிட் நைட் மசாலா ஆரம்பம் ஆக இருப்பதாக... விளம்பரம் .. இந்த நிகழ்ச்சியை நான் பார்த்து கூட இல்லை. உண்மையை சொன்னால் உந்த நேரம் யாரவது போய் மினக்கெட்டு பார்த்திட்டு இருப்பானோ... சரி போனால் போகுது என்று ஒன்று இரண்டு பாட்டை பார்ப்போம் என்று கொஞ்சம் பொறுமையுடன் இருந்தால், அதுக்குள்ளே ஒருத்தி சொல்லுறா " பிரியன் நீங்க எல்லாம் இதையா...", அப்புறம் நான் கேட்டேன் " பின்ன எதை ???" உடனே அவை " அதுதானே உங்க ஸ்டோர் இல் இருக்குமே... இருக்குமே..அதுகளை ..." ஐயோ அம்மா நீங்க எல்லாம் சின்ன புள்ள தனமா இருக்கீங்க என்று சொல்லி மாறி மாறி கலாச்சிட்டு இருக்கும் போது
ஆரம்பிச்சிட்டு நிகழ்ச்சி .. முதலாவது பாடல் விக்ரம் படத்தில் " மீண்டும் மீண்டும் வா.. " ... .. பாட்டு மட்டும் இல்லை படமே சூப்பர் படம்..

எனக்கு ஏற்கனவே இந்த பாடலை அடிக்கடி கேட்டு/ பார்த்து இருக்கேன்.. இருந்தாலும் இது எல்லாம் மிட் நைட் மசாலா பாடல்கள் ... என்னும் போது ...ம்ம்..


பயந்திடாதையுங்க...பாச முத்தம் மகள் ஸ்ருதிக்கு :)

விக்ரம் படம் பற்றிய தகவல்கள்

1986 ஆம் ஆண்டு வெளிவந்த விக்ரம் படம் அந்த காலத்தில் ஆங்கில படங்களுக்கு சவால் விடும் விதத்தில் பிரமாண்டமாக எடுக்க பட்ட படமும் சக்கை போட்டு ஓடிய படமும் என்று சொல்லலாம். இந்த படத்தை நான் வவுனியா வசந்தி திரையரங்கில் 1987 களில் பார்த்து இருக்கின்றேன்.. இளையராஜா வும் மிகவும் அழகாக இசையமைத்திருப்பார்
கமல் எடுக்கும் சிரமமான கதாபாத்திரத்துக்கு இந்த படமும் ஒரு சான்று..
உலங்கு வானூர்தியில் ஒரு சண்டை காட்சி என்று நினைக்கின்றேன் .. டூப் இல்லாமல் எடுத்ததாக ஒரு பேட்டியில் சொல்லி இருக்கின்றார் :)

மேலதீக தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Vikram_(film)

ஒருக்கா நீங்களும் அந்த பாட்டை .. பாருங்களேன்...
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி
அழகு ஏராளம்
அதிலும் தாராளம்
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா

ஆண்மையென்னும் வார்த்தை கேட்க
தோற்றம் நீ தானா
தேக்கு மரத்தில் ஆக்கிவைத்த
தேகம் இதுதானா


செந்நிறம் பசும்பொண்ணிறம்
தேவதை வம்சமம்
தேய்பிறை விரல் தீண்டினால்
சந்திரன் அம்சமம்

தொடங்க

மெல்லத்தொடங்க

வழங்க

அள்ளி வழங்க

இன்பப்போதைதான்
இந்த கீதைதான் அம்மம்மாஆஆஆஆ


மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா

விரகம் போலே உயிரை வாட்டும்
நரகம் வேறேது
சரச கலையை பழகிப்பார்த்தால்
விரசம் கிடையாது




Quality Good

தேன் தரும் தங்கப்பாத்திரம்
நீ தொட மாத்திரம்
ராத்திரி மறு????? பார்க்குமோ பாத்திரம்

கவிதை

குட்டிக்கவிதை

எழுது

அந்திப்பொழுது


கொஞ்சம் பாடல் தான்
கொஞ்சம் ஊடல் தான் அம்மம்மாஆஆஆஆ ஹாவ்

மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா


மீண்டும் மீண்டும் வ்வா
வேண்டும் வேண்டும் வா

பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி


அழகு ஏராளம்
அதிலும் தாராளம்


அழகு ஏராளம்
அதிலும் தாராளம்



இதை விட ஜேசுதாஸ் ஐயா பாடிய சிப்பிக்குள் ஒரு முத்து மலர்ந்தது இன்னுமொரு கிட் பாடல்


அன்றைய இளசுகளின் (இன்றைய பழசுகளின்) கனவு கன்னி .. அம்பிகாவுடன்
வனிதாமணி பாடல்




இன்னொரு பாட்டு என் ஜோடி மஞ்ச குருவி ; அந்த காலத்தில் வந்த ஒரு ஆட்டமான பாட்டு...

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...