2009-08-05

முருக பெருமானின் காட்சி

நானும் ஒரு முருக பத்தன் தான்.



நன்றி :- Nallur.tk

ஆனால் நான் அவரை நேரே கண்டு தரிசிக்கும் ஆற்றல் இது வரைக்கும் கிடைக்க வில்லை.
என்றோ ஒரு நாள் அவரை சந்திக்க துடிக்கிறேன்



சரி இப்போ கதைக்கு வருவோம் !!!!


இந்த அம்மாவுக்கு அது எட்டி இருக்கிறது

http://www.tamilwin.com/view.php?2aSWnVe0dHj0M0ec0G7D3b4D9EO4d3g2h2cc3DpY2d426QV2b02ZLu2e

கடவுள் இருக்காரா இல்லையா என்று எல்லாம் நான் சொல்ல மாட்டேன். இது எனக்கு தேவை இல்லாத வம்புக்குள் கொண்டு போய விடும்.
ஆனாலும் எதோ ஒரு ஷக்தி இருக்கிறது என்பது உண்மை. இது எனக்கு தெரிந்த அறிவு!!!
சரி அதை விடுவம்!!


நாங்க இந்த தலைப்பில் ஒரு மசாலா எழுத காரணம். இந்த முருகன் செய்தி வாசித்த பின் நண்பர்கள் சிலரில் ஏற்பட்ட மாற்றங்கள்/கூறிய எழுதிய கருத்துக்கள் !!!!

1

ஒரு நண்பன் தனது கருத்தை சொல்லும் போது; கடவுளுக்கு கண் இல்லை, எல்லாம் பேய்காட்டு என்று சடார் என்று பாய்ந்து கொண்டான். அவன் கூறுவதும் ஒரு சிலர் ஏற்பர். நாட்டில் நடை பெற்ற துன்பகரமான நிகழ்வுகளால் ஆகும் என்று நான் நினைக்கிறன்.

2

இன்னுமொருவன் சொன்னான், குடுத்தவர் கூரையை பிச்சிட்டு குடுக்காமல் பிச்சை காரன் மாதிரி சும்மா ஐயாயிரம் மட்டும் கொடுத்தார், Waste Fellow( vivek Style ila) என்றான்

3-
இன்னுமொருவன் தனது Facebook பதிவில்
தான் ஓர் நடமாடும் தெய்வம் எனவும், தான் இலங்கை ரூபாயில் வசூல் வாங்குவதால் தன்னால் மாத்திரமே இலங்கை ரூபாயில் பணமுடிப்பு கொடுத்திருக்க முடியும் என்றும் எழுதி இருந்தான் !!

4- இன்னுமொருவன் சர்ச்சையாக எழுதி விட்டான்!!
......... பகவான் இதை வன்மையாக கண்டிக்கிறார் , இது ............ பகவான் தான் அப்படி வந்து கொடுத்ததாகவும் சொல்லி இருக்கான்!!

நான் எந்த பகவான் என்று சொல்ல விரும்பவில்லை.

எனக்கு, முன்னர் கல்லூரியில் பயிலும் போது மாதா , பிதா , குரு, தெய்வம் என்று சொல்லி படிப்பிச்சவர் எண்கள் இணுவையூர் பஞ்சாட்சரம் ஆசிரியர்.
அப்போது ஓன்று சொல்லுவார். நீங்க உங்கள் பெற்றோரை மதியுங்கள். குருவை மதியுங்கள். தெய்வம் தானாக ஆசிர்வதிக்கும் என்று.
அதிலும் உண்மை இருக்கு. நாங்கள் , எங்களில் பலர், எங்கள் பெற்றோரை மதிப்பது அரிது. பொதுவாக ஏதாவது ஆகணும் என்பதற்காக நாங்கள் ஒரு ஐஸ் வைப்பம். மற்றும் படி சொல்வழி கேட்பது அரிது.. !!!

நீங்கள் எந்த கடவுளையும் குறையாக சொல்லாதீர்கள். உங்களுக்கு எந்த கடவுள் பிடிக்குதோ அவரை வழிபடுங்கள். அவர் பால் இருக்கும் தத்துவங்களை அறியுங்கள். படியுங்கள் வாழ்கையில் நடை முறை படுத்துங்கள்.
( பிறகு நான் முருக பத்தன் அதால வள்ளியை தேடலையோ என்று கேட்கவேனாம்) !!!

மேலும் நான் எந்த பகவான் பக்தனும் இல்லை. நான் எங்கள் சிவ குடும்பத்துடனே நிக்குறன். எனக்கு மற்ற பகவான்களை பற்றி எதுவுமே தெரியாது. தெரிந்து கொள்ள வேணும் என்ற ஆர்வமும் இல்லை. அதற்காக அவர்களை நான் குறையாக சொல்லவும் இல்லை.



5- இது மிகவும் ஜொள்ளு மாதிரி ஒன்றை எழுதி இருந்தான்

ம்..ம்.... பொது இடத்தில அரைகுறை ஆடையுடன் தோன்றிய குற்றத்தக்காக அந்த அம்மா கதிர்"காமக்" கந்தன் மீது வழக்கு போடலாம். அனால் அவர் தான் பொது இடத்தில இல்லை, இடுப்பிலதான் அரைகுறை ஆடையுடன் தோன்றினான் எண்டு மொக்ககையை போட்டாலும் போடுவார்.

6-
முருகனையே வம்பில் மாட்டி விடுற மாதிரி ஒரு நண்பன் எழுதி இருந்தான்!!!!
நோட்டு நம்பர பார்த்தா முருகன் எந்த வங்கில இருது எடுதிருகார் எண்டு தெரியும்.
இல்லாட்டி முருகன் கள்ள நோட்டு அடிக்கிறார் எண்டு அர்த்தம்!!!


தொடரும் !!!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...