2009-10-27

தொடரும் மிட் நைட் மசாலா

நண்பிகளின் ஆசைக்கு /வேண்டுதலுக்கு ஏற்ப, நான் என்ன மிட் நைட் மசாலாவில் அடுத்து என்ன பாட்டு. என்று கேட்டதிற்கு, ( முதல் பாட்டு நடந்து அடுத்த பாட்டிற்கு இடையில் விளம்பரம் வந்ததால் அவர்கள் விடைபெற்று சென்றார்கள்.. அதால எல்லாருக்கும் சேர்த்து ....பதில்..

கதவடியில் சென்று வழியனுப்பி போட்டு வந்து பார்த்தால் .. தொடரும் மிட் நைட் மசாலாவில் ..

வள்ளி படத்தில் இருந்து.. என்னுள்ளே என்னுள்ளே .. ஆகா நல்ல பாடல்.. என்னுடைய favorite ..

பாட்டை கேட்க முதல் ஒரு பொழிப்பு:

பெண்ணின் போராட்டம் பற்றி ரஜனி எழுதி தயாரித்த இந்த வள்ளி படம்.. பார்க்க தவறியோர் பாருங்கள். இதில் இருக்கும் வடிவேலுக்கும் இப்போதைய வடிவேலுக்கும் ஆயிரம் வேறுபாடுகள்..




சாரம்சம் :
ஒரு பெண்ணை காதலித்து, அவளை கர்ப்பிணியாக்கிவிட்டு தலைமறைவாகிறான் ஓர் இளைஞன்.அவன் அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பாவிப் பெண்களை ஏமாற்றுவது என்பது அவனுக்கு பொழுதுபோக்கு. ஆனால் அந்தப் பெண் உண்ணாவிரதம் இருந்து தங்கள் காதலை ஊருக்கே தெரிய வைத்து அவனை பணிய வைக்கிறாள். துரோகியான காதலன், கணவனான மறுநிமிடமே அவனை கத்தியால் குத்திச் சாய்க்கிறாள், கதாநாயகி பிரியாராமன். இந்த `வள்ளி' படத்தில்தான் பிரியாராமன் அறிமுகம் . புரட்சிகரமான கதை அமைப்பைக் கொண்ட இந்தப் படத்தை, கே.நட்ராஜ்( சிலோன் நடராஜா ) டைரக்ட் செய்தார். . "அன்புள்ள ரஜினிகாந்த்'' படத்தை டைரக்ட் செய்தவர் என்றும் முன்னர் ஒருமுறை சொல்லி இருந்தேன்.
இளையராஜா இசையமைத்தார். பெறும் வெற்றியை தராத போதும்( பாருங்க உண்மையை சொல்லுறன் - தீவிர ரஜனி ரசிகனாய் இருந்தும், இப்படி மற்றையோரும் இருங்களேன்..டண்டனக்கா..டண்டா...)குடும்பமாய் பார்க்க கூடிய கதையம்சமான படம்.
தனது மனைவி இதை செய்யவில்லை.. ஆனாலும் இன்னொருத்தி சாதித்து காட்டி விட்டாள் என்று கதையை முடித்து இருக்கார் சூப்பர் ஸ்டார்.

நீ விரும்பிறதிலும் பார்க்க உன்னை விரும்பிறவளை கட்டி கிட்டா வாழ்க்கை நல்லா இருக்கும் என்ற ஒரு punch dialog ஐ சொல்லி நம்ம இளையோரின் மனசை திருடி சென்றார் நம்ம சூப்பர் ஸ்டார் :)


"என்னுள்ளே என்னுள்ளே'', "வள்ளி வரப்போறா'', "கூக்குவென கூவும் குயிலக்கா'', "என்னென்ன கனவு கண்டாயோ'' என அத்தனை பாடல்களும் சிறப்பாக அமைந்தன.

கே.நட்ராஜ் இக்கு உதவி இயக்குனர்களாக பணியாற்றிய ஹரி (தற்போது சூர்யாவின் சிங்கம் தயாரிக்கிறார் . இதை விட சாமி , நயன்தாராவை உலகுக்கு கொண்டு வந்த ஐயா , சூரியாவின் வேல், ஆறு எல்லாமே சூப்பர் படம்.), மணிபாரதி இருவரும் உச்சத்தில் இப்பொது.

படத்தில் இந்த பாடலை பாடியவர் : ஸ்வர்ணலதா ,ராஜா அனுபவித்து பாடியுள்ளனர்.. .. என்ன ஒரு அற்புதமான பாடகி ஸ்வர்ணலதா .. இப்போது சான்ஸ் இல்லாமல் ..:(


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிளிட்டதேன்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்





கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்கமே தான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்


High Quality- Film Video Song

இதையும் பாருங்க ..



வள்ளி வர போறா பாடல்

இந்த பாட்டு எனது கல்லூரி காலத்தில் ஒரு தமிழ் தின விழாவில்( பெரும்பாலும் 1993 இல் ) எங்கள் கல்லூரி அண்ணா மார் பாடி கலாய்த்து இருந்தனர்.




குக்கூ கூ கூ கூவும் குயிலை பார்





டிங்கு டாங்கு ரப்பபோ ..




விறு விறுப்பான காட்சியான " அவளது ஆசையை தீர்த்தல் "

ராஜா அங்கிள் பாடின " என்ன என்ன கனவு கண்டாயோ .. வாழ்க்கை ஒரு கனவு தானையா .."பாடல்



இந்த பாட்டோட்டு அடியேனும் உறக்கம் கொண்டதால்... மிட் நைட் மசாலா முற்றும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...